கர்நாடக மாநிலம் சாம்ராஜநகர் மாவட்டம் ஹானூர் தாலுகா சாக்யா காப்புக்காடு
வனப்பகுதியில் 15 ஆகஸ்ட் 2026 சுதந்திரதினத்தன்று மான் வேட்டையில்
ஈடுபட்டதாகக் கூறி கர்நாடக மாநில வனத்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் தமிழ்நாட்டைச் சேர்ந்து கர்நாடகா மாநிலத்தில் நீண்ட காலமாக வசிக்கும் ஜகன்னாததொட்டி அந்தோணிசாமி (வயது 50), மரியமங்கலம் ஜான்ரோஸ் பீட்டர் (வயது 42), லாசர்தொட்டி குமார் (வயது 33) ஆகிய மூன்று பேர் கொல்லப்பட்டனர். மேலும் லாசர்தொட்டி கிராமம் மகிமைதாஸ் (வயது 48) துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்து மைசூரு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் குறித்து மாஜிஸ்திரேட் விசாரணைக்கு கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது. இறந்தவர்கள் அனுமதியின்றி துப்பாக்கி மற்றும் மான் இறைச்சியுடன் வனப்பகுதியில் சுற்றித் திரிந்ததாகவும், சுயமதப்புக்காகவே சுட்டதாகவும் கர்நாடக மாநில வனத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இறந்தவர்களின் உறவினர்கள் கூறும் போது காணாமல் போன மாடுகளைத் தேடி அவர்கள் காட்டிற்குச் சென்றனர் என்றும், வேட்டையாடவில்லை என்றும் வனத்துறையின் குற்றச்சாட்டு பொய் எனவும் மறுத்துள்ளனர்.
இச்சம்பவத்திற்கு தமிழ்நாடு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர், வனத்தில் சுட்டுக் கொல்லப்பட்டவர்கள் வேட்டையில் ஈடுபட்டதாகவும் அவர்கள் ஆயுதங்கள் வைத்திருந்ததாகவும் கர்நாடக மாநில வனத்துறை அமைச்சர் இராமலிங்கா ரெட்டி தெரிவித்துள்ளார்.
அதில், வனத்துறை அதிகாரி ஒருவர் படுகாயமடைந்ததாகவும் கர்நாடக வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.தொடர்பாக மாஜிஸ்டிரேட் விசாரணைக்கு கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் தி.மு.க பா.ம.க உள்ளிட்ட கட்சிகள் இந்த வழக்கை சிபிஐ (CBI) விசாரணைக்கு மாற்ற வேண்டும் எனவும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூபாய் 1 கோடி இழப்பீடும், அரசு வேலையும் வழங்க தமிழ்நாடு அரசு வலியுறுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இந்தச் சம்பவத்தால் ஆத்திரமடைந்த தமிழ்நாடு - கர்நாடக மாநில எல்லையோரத்தில் வசிக்கும் தமிழ் பேசும் மக்கள் ஹானூர் வனத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால், அசம்பாவிதங்களைத் தவிர்க்க கொள்ளேகால் - மாதேஸ்வரன்மலை சாலையில் கர்நாடக மாநில ஆயுதப்படை (KSRP) காவல்துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் மாவட்டத்தின் ஹானூர் அருகே உள்ள காவிரி வனவிலங்கு சரணாலயக் காப்புக்காடு ஷாக்யா வனப்பகுதியில் ஒரு குழுவினர் சட்டவிரோதமாக நுழைந்து நாட்டுத் துப்பாக்கிகளுடன் மான் வேட்டையில் ஈடுபட்டதாக வனத்துறை தரப்பில் கூறப்படுகிறது. ரோந்துப் பணியில் இருந்த வனத்துறை அதிகாரிகள் அவர்களைப் பிடிக்க முயன்றபோது, வேட்டைக் கும்பல் துப்பாக்கியால் தாக்கியதாகவும், இதில் வனத்துறை ஊழியர் ஒருவர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தற்காப்பிற்காக வனத்துறையினர் திருப்பிச் சுட்டதில் (என்கவுன்டர்) மூவர் உயிரிழந்ததாக கர்நாடக வனத்துறை அமைச்சர் இராமலிங்கா ரெட்டி கருத்து தெரிவித்துள்ளார். சம்பவ இடத்திலிருந்து மான் இறைச்சி மற்றும் நாட்டுத் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. ஆனால் கொல்லப்பட்டவர்கள் வேட்டைக்காரர்களில்லை, அவர்கள் தங்களது காணாமல் போன நாட்டு மாடுகளை காடுகளில் தேடி இரவு நேரத்தில் வனப்பகுதிக்குச் சென்ற அப்பாவியான விவசாயிகள் என அவர்களது குடும்பத்தினர் மற்றும் உள்ளூர் மக்கள் மறுத்துள்ளனர். வனத்துறையினர் எந்தவொரு முன்னெச்சரிக்கையும் இன்றி உறங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது கொடூரமாகச் சுட்டுக்கொன்று விட்டு, அதை மறைக்க வேட்டையாடியதாகப் பொய் வழக்குப் போடுகிறார்கள் என்றும் குற்றம்சாட்டியுள்ளனர். இறந்த அந்தோணிசாமியின் மனைவி லூர்து மேரி, சம்பந்தப்பட்ட வனத்துறை அதிகாரிகள் மீது கொலை வழக்கு (FIR) பதிவு செய்யக் கோரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் இது தற்போது கர்நாடக நிலை ஆனால் ஆந்திரப் பிரதேச மாநிலம் திருப்பதி தொகுதி சேஷாசலம் வனப்பகுதியில், ஏப்ரல் 7-2015 ஆம் தேதி செம்மரங்களை வெட்டிக் கடத்த முயன்றதாக தமிழ்நாட்டின் வடமாவட்ட கூலித் தொழிலாளிகள் 20 பேரை ஆந்திரப் பிரதேச மாநில காவல்துறை மூலம் சுட்டுக் கொல்லப்பட்டனர். செய்தி சேகரிப்புக்காக ஆந்திரப் பிரதேசத்தின் சேஷாசலம் ஏரியாவுக்குப் போன கேமராமேன்கள் பலரின் லென்சுகள் உடைக்கப்பட்டது அந்தச் சம்பவத்தைக் கண்டித்து பெரிய அளவில் எதிர் வினையாற்றினர். மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, சம்பவ இடத்துக்கே நேரில்போய் எதிர்ப்பைப்பதிவு செய்திருந்தார். செத்தது மொத்தமும் ஏழைபாழைகள்.
இப்போது கர்நாடகா வனத்துறையால் கர்நாடகத் தமிழர்கள் மூன்றுபேர் குண்டடிபட்டு செத்துப் போயிருக்கிறார்கள். வனஉயிரினங்களை வேட்டையாடிய குற்றத்துக்காக சுட்டோம், செத்தனர் என்று ஃபைலை மூடியுள்ளது கர்நாடக மாநில அரசு. அவர்களை நீதிமன்றத்தில் நிறுத்தத் தவறியது, ,தமிழ்நாட்டில் இருந்து எதிர்க்குரல் எழுந்ததா என்றால் இல்லை.
கர்நாடகா அரசுமீது தங்களுக்கு எந்தவொரு கோபமும் எப்போதும் எந்த நிலையிலும் இல்லை, இல்லை எனும் மனநிலை இது.
என்ன குற்றம், குற்றத்தின் உண்மைத் தன்மை என்ன, வழக்கு, விசாரணை தண்டனை என்ற எதுவுமே இல்லையா? இதற்கு முன் கர்நாடக மாநில வனத்துறையால் இப்படி யாராவது சுடப்பட்டு செத்துப் போயிருக்கிறார்களா? ஏன் இப்படியான கேள்வி வருகிறது என்றால், ஆந்திரப்பிரதேசத்தின் சேஷாசல வனப்பகுதியில் 20 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டது தான், செம்மரக் கடத்தல் தடுப்பு நடவடிக்கையாக ஆந்திரப்பரதேச காவல்துறை நடத்திய முதல் என் கவுன்ட்டர். இதுவரை ஆந்திரப் பிரதேச காவல்துறை குண்டுகளில் ஆந்திரக்காரர்கள் ஒருவர் கூட செத்ததில்லை. இப்போது கர்நாடகா மாநில வனத்துறை இப்படி இறங்கியிருக்கிறது. வனத்துறைக்கே சட்டம் வழங்கிய எவ்வளவு ஃபவர் என்றால் கர்நாடகா அரசுக்கு இன்னும் எவ்வளவு ஃபவர் இருக்கும் என்பது தான் மக்கள் எழுவினா? எதற்கானதறகோ எச்சரிக்கையா இந்த துப்பாக்கி சூடு? ன்பதே நமக்குப் புரியவில்லை. இந்த நிலையில்.வனத்துறை அலுவலகங்களுக்கு தீ வைப்பு நடந்ததாகத் தகவல் துப்பாக்கிச் சூடு தகவலை அறிந்த இறந்தவர்களின் குடும்பத்தினரும், கிராம மக்களும் அதிர்ச்சியடைந்து தீவிரப் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோபமடைந்த சில மக்கள் ஷக்யா மற்றும் தோமையார்பாளையத்தில் உள்ள வனத்துறை அலுவலகங்களுக்குள் புகுந்து, அங்கிருந்த பொருட்களை அடித்து உடைத்துச் சூறையாடினர்.போராட்டத்தின் ஒரு பகுதியாக, அங்குள்ள வனத்துறை அலுவலகத்திற்கு மர்மநபர்கள் தீ வைத்தனர். இதனால் வனத்துறை சொத்துக்கள் பெருமளவில் சேதமடைந்தன. சட்டம் அடிப்படையில் நீதி விசாரணை மூலம் தான் தீர்வு வரவேண்டும், மரத்திற்காகவும், மிருகங்களுக்காகவும் மனித உயிரை எடுக்க அதிகாரம் சட்டத்தின் வழி இவர்களுக்கு உண்டா எனபதே தற்போதய எழுவினா?












கருத்துகள்