தஞ்சாவூர் மாநகராட்சிச் சாலையில்
அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த விசிக வின் ஃப்ளக்ஸ் பேனர்கள், நீதிமன்றம் வழங்கிய உத்தரவுப்படி மாநகராட்சி ஊழியர்களால் அகற்றப்பட்டது. தமிழ்நாடு அரசின் கூட்டணிக் கட்சியாக ஆட்சியில் பங்கெடுத்துள்ள விசிகவினர், அவர்கள் ஆட்சிக்கு எதிராகவே ஆர்ப்பாட்டம் செயகின்றனர், இதுவே முரணாகும், எங்கள் கட்சியின் பேனரைக் கிழித்துவிட்டார்கள் என விசிகவினர் சாலைமறியல் செய்கிறார்கள். அதற்கு எப்போதுமே காவல்துறை அனுமதி கொடுக்க மாட்டார்கள், எனவே அனுமதி இல்லாமல் நடந்த அந்த மறியலைக் கலைக்கவே காவல்துறையினர் அங்கு வருகின்றனர், ஒரு இளைஞன்,சாலை மறியல் கூட்டத்தை விலக்கிக்கொண்டு வெளியேற பைக்கில் இருந்தபடியே முன்னேற என்ன அவசரவேலையோ ! அல்லது மாற்று வழி இல்லையோ தெரியவில்லை! அவன் விளார் பகுதியைச் சேர்ந்த ஆகாஷ் (வயது 26) மற்றும் திருக்கனூர்பட்டியைச் சேர்ந்த ஐயப்பன் (வயது 27) மறியலுக்கு ஆதரவு தரப்பு, அந்த இளைஞனோடு ஏதோ வம்பாகப் பேச, பதிலுக்கு இளைஞனும் பேச,
மையமாக நுழைந்த காவலர்களும் ஏதோ பேச. அந்த ஏதோ அது ஏதோ என்ற ஹம்மிங்கின் பின்னணி தான் எப்போதுமே F.I.R. ன் நேரமும் அங்கு மறைந்திருக்கும்.
அதன்பிறகு ஒரு கூட்டத்தைக் களைக்க வந்த காவல்துறை எஸ்.எஸ்.ஐ யான அப்துல் ரஹீம் முன் அப்போது கையை நீட்டியும் குரலை உயர்த்தியும் பேசுகிறார், அந்த இளைஞர். பொது வெளியில் உடுப்பில் உள்ள காவலருக்கு கொஞ்சம் சறுக்கல் போல தெரிந்தாலும் எதிர்வினை அங்கே உண்டாகி விடும். அது நடந்தது. மன்னர் காலம் தொட்டு மக்கள் ஆட்சி வரை இதை நிலைதான்,
அந்த இளைஞனின் கன்னத்தில் ஓங்கி
ஒரு அறை விடுகிறார், காவல் அலுவலர் அவரிடம் வாங்கியதை அதே வேகத்தில் திருப்பிக் கொடுக்கிறான் அந்த இளைஞன்.
பின்னர் அங்கிருந்த மொத்தக் காவலரும் கும்பலாய் அந்த இளைஞனை அமுக்கிப் பிடித்துப் பிதுக்கி திமிறியவனை வாகனத்தில் திணிக்கிறார்கள்.
நடந்தது இதுதான். இதில் யார் சரி, இதில் யார் தவறு என்பதை அவரவர் ஒரு கோணத்தில் பார்த்ததை விட நீதிமன்றத்தின் பார்வையில் தான் பார்க்க வேண்டும், இந்த நிலையில் 17.08.2026 ஆம் தேதியில் தஞ்சாவூர்மாவட்டக் காவல்துறை அளித்த மறுப்புச் செய்தியில் உள்ளபடி
'சாலை மறியலின் போது காவல்துறையினருடன் ஏற்பட்ட தகராறு குறித்த உண்மை நிலை இன்று 17 8 2026 காலை 12 மணி அளவில் வி சி கட்சியை சேர்ந்த சுமார் 40 பேர் சாலை மறியலில் ஈடுபட்டதால் அவ்வழியில் போக்குவரத்து தடை ஏற்பட்டிருந்தது. அப்போது, ஆகாஷ் (வயது 26) என்பவர் இருசக்கர வாகனத்தில் அவ்வழியாக வந்தபோது, தொடர்ந்து ஹாரன் அடித்துள்ளார். இதனால், அரசியல் கட்சியினருக்கும் ஆகாஷுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
வாக்குவாதம் மேலும் முற்றி இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்படாமல் தடுக்கும் வகையில், பாதுகாப்புப் பணியில் இருந்த SSI 928 ரஹீம் அவர்கள் தலையிட்டு, ஆகாஷை அமைதிப்படுத்தி அங்கிருந்து செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளார். அப்போது, ஆகாஷ் போலீசாரை நோக்கி தொடர்ச்சியாக ஒருமையில் மரியாதையற்ற மற்றும் தகாத வார்த்தைகளை பயன்படுத்தியுள்ளார்.
தொடர்ந்து வாக்குவாதத்தில் அந்த நபர் ஈடுபட்டதாலும் நிலைமை மேலும் மோசம் அடையாமல் கட்டுக்குள் கொண்டு வரவும் குறைந்தபட்ச பல பிரயோகத்தை SSI ரஹீம் பயன்படுத்தியுள்ளார். அதனைத் தொடர்ந்து, அந்த நபர் உடனடியாக SSI ரஹீமை கன்னத்தில் அறைந்துள்ளார். உடனடியாக போலீசார் தலையிட்டு, நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். இந்த சம்பவத்தில் அந்த நபரின் செயல் மேலும் சட்ட ஒழுங்கு பிரச்சனை உருவாக்காமல் தடுக்கும் நோக்கத்திலேயே குறைந்தபட்சம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், ஆகாஷ் மீது ஏற்கனவே தஞ்சாவூர் தாலுகா காவல் நிலையத்தில் கடந்த ஆண்டு பெண் ஒருவரை தாக்கியது தொடர்பாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது தெரிய வருகிறது. மேலும், சில மாதங்களுக்கு முன்பு அவர் பணிபுரியும் இடத்தில் தனது மேற்பார்வையாளரிடம் தகாத மற்றும் அவதூறான வார்த்தைகளைப் பயன்படுத்தியதாக அவருடைய Supervisor மூலம் புகார் அளிக்கப்பட்டு, பின்னர் இருதரப்பினரிடையே சமரசம் ஏற்பட்டதாகவும் தெரிய வருகிறது.
போலீசார் ஆகாஷை தேவையின்றி தாக்கியதாக கூறப்படும் தகவல் உண்மைக்கு மாறானது. அரசியல் கட்சியினருக்கும் ஆகாஷுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் மேலும் முற்றி சட்டம்-ஒழுங்கு பிரச்சினையாக மாறாமல் தடுப்பதே போலீசாரின் முதன்மையான நோக்கமாக இருந்தது. சம்பவத்தின் போது போலீசார் தலையிட்டு நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்துக்கு பத்திரிகையாளர்கள் அல்லாத சமூக வலைத்தளங்களில் எழுதும் நபர்கள் சொந்தக்கதை அல்லது திரைக்கதையை முடிவு செய்கிறார்கள். அந்த பையன் முனைவர் ம. நடராஜன் ஊரான தஞ்சாவூர் விளார் பையன்,
நமக்கு ஒரு கேள்வியும் கோணமும் இதில் இருக்கிறது. யாரைக் கண்டித்து அல்லது எதிர்த்து விசிகவினரின் இந்த சாலைமறியலை நடத்தினர், அல்லது நடந்தது? நடப்பது என்னவே தவெக ஆட்சி, அந்தக் கூட்டணி- அமைச்சரவையில் விசிக இருக்கிறது. சொந்த ஆட்சியைக் கண்டித்தா இந்த மறியல்? அந்தப் பையனின் ஆவேசம் ஒரு கேமரா வெளிச்சத்தில் நடந்த தாக்குதல் என்பதால் சிதைத்துத் துப்ப அவன் பாதிக்க அதில் வாய்ப்பில்லை, அதை இனி நீதிமன்றம் பார்த்துக்கொள்ளும் ஆனால் வழக்கால் அலையவிட்டு விடுவார்கள். செல்வாக்கும் பணமும் இருந்தால் மட்டுமே வழக்கை சுமூகமாக முடிக்க முடியும். ரிமாண்ட் செய்துவிட்டால், ஜாமீனில் வந்து பின் குற்றப்பத்திரிக்கை தாக்கலாகி கண்டிப்பா ஒரு நாலு வருடம் அலைய விட்டுவிடுவார்கள்..
அடிச்சா உடல் வலிமையால் திருப்பி அடிக்கவேண்டும் என்ற எண்ணத்தை கட்டுபடுத்தும் மனவலிமையே நம்மைத் தற்காக்கும். 1990 க்குப் பின் பிறந்த பிள்ளைகளில் 90 சதவீதம் பெற்றோர்களால் புத்தி சொல்லி கடடுப்பாடுகளுடன் பொது வெளியில் நடக்கும் பிள்ளைகள் இல்லை,இனி வரும் காலங்களில், இளைஞர்கள் பலத்தை விட புத்தியால் வெல்வதே சரியாக இருக்கும்.
வள்ளுவர் வாக்கின் படி "தீயவை தீயபயத்தால் தீயவை தீங்கினும் அஞ்சப்படும்..." குறல் 202, கூறுகிறபடி
தீயது செய்தோரை பொறுத்திருந்து வஞ்சம் தீர்ப்பதே தீரனுக்கு அழகு ஆனால் வீரன் விவேகத்தடன் கடந்து செல்லுதலே வழக்கு இல்லாமல் வாழ்க்கையை வளமாக்கும். தற்போது SSI- சிறப்பு உதவி ஆய்வாளர் அப்துல் ரஹீம் கன்னத்தில் அறைந்த ஆகாஷ் என்ற அந்த இளைஞர் கைது.அவர் மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு எனத் தகவல்








கருத்துகள்