தமிழ்நாடு முதலமைச்சர் C. ஜோசப் விஜய், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா முன்னிலையில் தமிழ்நாடு மற்றும் தென் மாநிலங்களின் உரிமைகளைப் பேசியவர் ஆற்றிய உரையில்
" தென் மாநிலங்கள் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 30 சதவீதத்திற்க்கும் அதிகமாகப் பங்களிக்கின்றன. எனவே, அவற்றுக்கு முன்னுரிமைச் சலுகை தேவையில்லை; மாறாக நிதி தன்னாட்சியை மதிக்கும் சமமான மற்றும் நியாயமான பகிர்வை மட்டுமே மத்திய அரசிடம் இருந்து எதிர்பார்க்கிறோம், மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தி, சிறந்த நிதி ஒழுக்கத்துடன் செயல்படும் மாநிலங்கள், வரவிருக்கும் நிதிக்குழுப் பகிர்வுகளில் பாதிக்கப்படக் கூடாது என வலியுறுத்தினார்.
தொகுதி மறுவரையறை மக்கள் தொகையைக் வெற்றிகரமாகக் கட்டுப்படுத்தியதற்காகத் தென் மாநிலங்கள் தண்டிக்கப்படக் கூடாது. நாடாளுமன்றத்தில் தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் மற்றும் எம்பிக்களின் எண்ணிக்கை குறையாத வண்ணம் மத்திய அரசு சட்டப்பூர்வமான உத்தரவாதத்தை வழங்க வேண்டும், நீட் தேர்வால் கிராமப்புற மற்றும் ஏழை எளிய மாணவர்கள் கடுமையாகப் பாதிக்கப்படுகிறார்கள் . தமிழகத்தின் நிரூபிக்கப்பட்ட கல்வி முறையின்படி, MBBS, BDS மற்றும் ஆயுஷ் படிப்புகளுக்கான மாநில ஒதுக்கீட்டு இடங்களை பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையிலேயே நிரப்ப மத்திய அரசு அனுமதிக்க வேண்டும்.
காவிரி மேலாண்மை வாரியத்தின் முடிவுகளையும், உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளையும் கர்நாடகா உரியக் காலத்தில் முழுமையாகச் செயல்படுத்த வேண்டும் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்துவது தொடர்பான நீதிமன்றத் தீர்ப்புகளின்படி பாதுகாப்பு வழிமுறைகள் அமைய வேண்டும். மேகதாது அணை கட்டப்பட்டால் தமிழகத்திற்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், கீழ்மடை மாநிலங்களின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் விரிவாகப் பேசினார். தென் மாநிலங்கள் அனைத்தும் இணைந்து ஒரே பொருளாதாரப் பிராந்தியமாகச் செயல்பட்டு வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க வேண்டும். பெங்களூரு மெட்ரோ பாதையை ஓசூர் வரை நீட்டிப்பது போன்ற மாநில எல்லை கடந்த கூட்டு உள்கட்டமைப்புத் திட்டங்களைக் குறிப்பிட்டார், கடல்சார் பொருளாதாரத்தை பிராந்திய வளர்ச்சியின் மையப் புள்ளியாக மாற்ற வேண்டும் என உரைத்தார்.
இளைஞர்களின் எதிர்காலம்: இந்தியாவின் எதிர்காலத் தூண்களான இளைஞர்கள் போதைப்பொருட்களுக்கு அடிமையாவதைத் தடுக்க தென் மாநிலங்கள் அனைத்தும் ஒன்றிணைந்து ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.உளவுத்துறை ஒருங்கிணைப்பு: உள்நாட்டுப் பாதுகாப்பைப் பலப்படுத்த தென் மாநிலங்களின் உளவுத்துறைத் தலைவர்கள் தங்களுக்குள் நிகழ்நேரத் தகவல்களைப் பகிர்ந்துகொண்டு செயல்பட வேண்டும் எனத் தெரிவித்தார், தென் மாநிலங்களின் தென் மண்டல கவுன்சில் கூட்டத்தை தெலுங்கானா மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி, பாண்டிச்சேரி யூனியன் பிரதேச முதல்வர் ரங்கசாமி ஆகியோர் பங்கேற்கவில்லை.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தமிழ்நாடு முதல்வர் சி.ஜோசப் விஜய், ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு, கேரளா மாநில முதல்வர் சதீஷன், கர்நாடகா மாநில முதல்வர் டி.கே.சிவகுமார் பங்கேற்றனர்.தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டிக்குப் பதில் தெலுங்கானா மாநிலத் துணை முதல்வர் மல்லு விக்ரமார்கா பங்கேற்றார்.
பாண்டிச்சேரி யூனியன் பிரதேச முதல்வர் ரங்கசாமி புறக்கணித்துள்ளார் இக்கூட்டத்தில் காவிரி நதிநீர் பங்கீட்டுப் பிரச்சனை, நாடாமன்றத் தொகுதி மறுவரையறை பிரச்சனை குறித்து விவாதிக்கப்பட்டது. 2026 பாண்டிச்சேரி சட்டப்பேரவை தேர்தலில் என்.ஆர் காங்கிரஸ்-பாஜக கூட்டணி அரசு வெற்றி பெற்று முதலமைச்சராக ரங்கசாமி
பதவியேற்றவருடன் அமைச்சர்களும் பதவியேற்ற நிலையில் 85 நாட்கள் கடந்த நிலையில் அவர்களுக்கு இதுவரை எந்தத் துறையும் ஒதுக்கப்படாமல் இருந்ததால் மக்கள் நலத்திட்டங்களைச் செயல்படுத்த முடியவில்லை என எதிர்கட்சிகள் குற்றம் சாட்டும் சூழல் . தொகுதி வளர்ச்சிப் பணிகள், துறை சார்ந்த நிர்வாக நடவடிக்கைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி எதிர்கட்சிகள் அரசை கடுமையாக விமர்சித்தன.மேலும் அமைச்சர்களுக்கு உடனடியாக இலாகாக்கள் ஒதுக்கப்பட வேண்டும் என பாண்டிச்சேரி துணை நிலை ஆளுநர் கைலாசநாதனை சந்தித்து மனு அளிக்கப்பட்டது. தொடர்ந்து புதுச்சேரி துணை நிலை ஆளுநர் மாளிகையில் முதலமைச்சர் ரங்கசாமி துணைநிலை ஆளுநர் கைலாசநாதனை நேரில் சந்தித்து சுமார் ஒரு மணி நேரம் ஆலோசனை நடத்தினார்.
இந்தச் சந்திப்பில் அமைச்சர்களுக்கான இலாகா ஒதுக்கீடு தொடர்பாக முடிவு எடுக்கப்பட்டு, 85 நாட்களாக நீடித்து வந்த இழுபறி முடிவுக்கு வந்தது. பின்னர் அமைச்சர் நமச்சிவாயத்துக்கு மீண்டும் உள்துறை ஒதுக்கப்பட்டது. அதே நேரத்தில் சபாநாயகர் விவகாரம் தொடர்பாக பாஜகவுக்கும் ரங்கசாமிக்கும் இடையே மோதல் நிலவி வரும் நிலையில், பாண்டிச்சேரி முதல்வர் ரங்கசாமி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் நடைபெறும் தென்மாநில முதல்வர்கள் மாநாட்டை புறக்கணித்தாகத் தெரிகிறது 31-வது தென்மாநில முதல்வர்கள் மாநாடு சென்னையை அடுத்த கோவளத்தில் இரண்டு நாட்கள் நடக்கும் நிகழ்வுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமை வகிக்கிறார். இதில் தமிழ்நாடு , கேரளம், கர்நாடகம், தெலுங்கானா, ஆந்திரம் மற்றும் புதுச்சேரி முதல்வர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டது.
புதுச்சேரியை பொறுத்தவரை மத்திய உள்துறை கட்டுப்பாட்டில் உள்ள யூனியன் பிரதேசம்.தென்மாநில முதல்வர்கள் மாநாட்டில் பாண்டிச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் பங்கேற்ற நிலையில் மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் மாநிலங்களுக்கு இடையேயான குழுச் செயலகம் ஏற்பாடு செய்துள்ள இந்தக் கூட்டத்தைத் தமிழ்நாடு மாநில அரசு நடத்துகிறது. நாட்டின் தென்பகுதியில் உள்ள உறுப்பு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் முதல்வர்கள் மற்றும் துணைநிலை ஆளுநர்கள் / நிர்வாகிகள், ஒவ்வொரு மாநிலம், யூனியன் பிரதேசங்களிலிருந்தும் தலா இரண்டு அமைச்சர்கள், மாநில அரசுகளின் தலைமைச் செயலாளர்கள் மற்றும் ஆலோசகர்கள், பிற உயர் அதிகாரிகள், மத்திய அரசின் உயர் அதிகாரிகளும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கின்றனர்.
இந்த மண்டலக் குழுவில் அந்தந்த மாநிலத் தலைமைச் செயலாளர்கள் நிலையில் தலா ஒரு நிலைக்குழுவையும் அமைத்துள்ளது. மாநில அரசுகளால் முன்வைக்கப்படும் விவகாரங்கள், மண்டலக் குழுவால் அமைக்கப்பட்டுள்ள நிலைக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டு, ஆலோசிக்கப்படுகின்றன. எஞ்சிய விவகாரங்கள் மண்டலக் குழுவின் கூட்டத்தில் பரிசீலனைக்காக முன் வைக்கப்படுகின்றன. நாட்டின் முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு, பிரதமர் நரேந்திர மோடியின் கூட்டுறவு கூட்டாட்சித் தத்துவத்தின் அடிப்படையில், “பாரதக் குழு” என்ற தொலைநோக்குப் பார்வையுடன், மண்டலக் குழுவில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளித்து வருகின்றன. வலுவான மாநிலங்களால் மட்டுமே உறுதியான வலிமையான நாட்டைக் கட்டமைக்க முடியும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில், இந்த மண்டலக் குழு செயல்பட்டு வருகின்றன.
இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்கள் அல்லது மத்திய - மாநில அரசுகளுக்கு இடையேயான விவகாரங்கள் குறித்து கலந்தாலோசிப்பதற்கும், விவாதிப்பதற்கும், மண்டலக் குழுக்கள் ஒரு கட்டமைக்கப்பட்ட வழிமுறையை வழங்குகின்றன. இதன் மூலம் பரஸ்பர ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான ஒரு தளமாகவும் இவை செயல்படுகின்றன. பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், கலந்துரையாடல்கள் மூலம் தீர்வு காண்பதற்கான ஒரு வலுவான தளமாக இத்தகைய மண்டலக் குழுக் கூட்டங்கள் அமைந்துள்ளன.இதில் கலந்து கொண்டு கர்நாடக முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் பேசியதாவது:-
தண்ணீர் நம்மை ஒன்று சேர்க்க வேண்டும்; பிரித்து விடக்கூடாது. நதி நீர் பங்கீடு என்ற நிலையில் இருந்து நதிநீர் ஒத்துழைப்பு என்ற நிலைக்கு நகர வேண்டிய நேரம் இது. ஒத்துழைப்பு அடிப்படையில் நதிநீர் பிரச்சினைகளை அணுகவேண்டும். ஆறுகளுக்கு அரசியல் எல்லை தெரியாது. கர்நாடகா எப்போதும் பிற மாநிலங்களின் உரிமைகளை மதித்து செயல்படுகிறது.
கர்நாடகாவின் சட்டப்பூர்வ நீர்ப்பங்கை மதிக்க வேண்டும். நாங்கள் புகார் கூற வரவில்லை; இந்தியாவின் வளர்ச்சியில் பங்குதாரர்களாக வந்துள்ளோம். எங்களுக்குத் தேவை நியாயம் மட்டுமே. சமத்துவம், வெளிப்படைத் தன்மை, ஒத்துழைப்பு கர்நாடகாவின் கொள்கைகள். மேகதாது அணை கர்நாடகாவிற்கு மட்டுமல்ல, தமிழகத்துக்கும் முக்கிய திட்டம். உங்களுக்கு உதவ எங்களுக்கு உதவுங்கள். ஒவ்வொரு துளிநீரும் தமிழ்நாடு, புதுச்சேரி விவசாயிகளுக்கும் உதவும். இவ்வாறு அவர் கூறினார்.












கருத்துகள்