சென்னையில் வெறும் 10 சதவீதம் மட்டுமே பசுமைப் பகுதியாக உள்ளது.. நிலத்தடி நீர் மட்டம் 1000 அடிக்கும் கீழே செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது
என்பது கவலை தரும் நிலை,த.வெ.க ஆட்சியைக் கவிழ்க்கும் சதி அரசியலை எதிர்க்கட்சிகள் செய்கிறது. சில அமைச்சர்கள் கமிஷன் வாங்கத் தொடங்கியுள்ளனர் என அண்ணாமலை குற்றச்சாட்டு, இயற்கை வளங்களைப் பாதுகாக்க வலியுறுத்தி அண்ணாமலை தலைமையில் நடைபெற்ற பேரணி திரளாக பங்கேற்ற வீ தி லீடர்ஸ் அமைப்பினர்..!" த.வெ.க அரசில் லஞ்சம், ஊழல் மீண்டும் ஆரம்பித்துள்ளது..!
சில அமைச்சர்கள் 2 சதவீதம் , 3 சதவீதம் கமிஷன் கேட்கும் எல்லா ஆடியோவும் என்னிடம் இருக்கு..! " ஊழல் விவகாரத்தில் நீங்கள் எப்படி இருக்கீங்களோ அதை உங்கள் அமைச்சர் பெருமக்களுக்கும் அறிவுறுத்துங்கள் முதல்வர் விஜய் அவர்களே..! ஓராண்டுக்கு பின் நான் பிரச்சனையைக் கிளப்புவதற்குள் அதனைக் கவனியுங்கள்..! கொஞ்சம் கடிவாளம் போடுங்க.. லூஸ் விட்ராதீங்க..என அண்ணாமலை பேசிய போது வலியுறுத்தினார்
ஒரு பக்கம் த.வெ.க மறுபக்கம் வீ த லீடர்ஸ்.. நம்முடைய காலத்தில் ஊழலை ஒழிப்போம் என்றும் அண்ணாமலை பேச்சு அதோடு அமித்ஷா என்னை டெல்லியில் வந்து பொறுப்பேற்கச் சொன்னது உண்மை தான்..! தமிழக பாரதிய ஜனதா கட்சிக்கு நம்பிக்கை இல்லை என்றால் தமிழகம் வரவுள்ள அமித்ஷாவிடம் போய் கேளுங்கள்.
நான் பா.ஜ.கவை விட்டு இன்னும் வெளியே வரலயா..? அந்த கட்சியின் B டீமா நான்..? அமித்ஷாவின் பிளானைத் தான் நான் செய்கிறேனா..? அமித்ஷா என் காதில் என்ன சொன்னார் தெரியுமா..? பல்வேறு தரப்பினரின் விமர்சனத்திற்கு மொத்தமாக போட்டு உடைத்த அண்ணாமலை. இன்று மாலை, We the Leaders அமைப்பின் சார்பில் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே நடைபெற்ற சுற்றுச்சூழல் விழிப்புணர்வுப் பேரணியில், பெரும் திரளெனக் கூடியிருந்தவர்களுடன் பங்கேற்றதில் பெரும் மகிழ்ச்சியடைந்த கே.அண்ணாமலை . இந்தப் பேரணியில் பங்கேற்றுச் சிறப்பித்த, சின்னக் கலைவாணர், அண்ணன் அமரர் நடிகர் விவேக் மனைவி அருள்செல்விக்கு, எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்,
இயற்கையைப் பாதுகாப்பது என்பது வெறும் மரங்களை நடுவது மட்டும் அல்ல. நமது நீர்வளம், கிராமப்புற வளர்ச்சி, கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் எதிர்காலத் தலைமுறையின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதும் தான். காவிரி நதி நீர் பிரச்சினை, மேகதாது அணைத் திட்டம் போன்ற விவகாரங்களில் தமிழ்நாட்டின் நீர்வள உரிமைகளைப் பாதுகாப்பது அவசியம். அதேபோல், நமது கிராமங்களில் உள்ள ஏரிகள், குளங்கள், ஊரணிகள், கால்வாய்கள் உள்ளிட்ட நீர்நிலைகளைப் பாதுகாத்து, மழைநீரை சேமிக்கும் வகையில் அவற்றை மேம்படுத்த வேண்டியதும் நமது கடமை.
கடந்த 16 நாட்களில் WTLFoundation சார்பில், 6,25,760 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. ஆகஸ்ட் மாதத்திற்கான நமது இலக்கு 20 லட்சம் மரங்கள். இன்னும் 15 நாட்களில் 14 லட்சம் மரங்களை நட்டு இந்த இலக்கை எட்ட வேண்டும். அண்ணன், சின்னக் கலைவாணர் அமரர் விவேக் அவர்களின் பசுமைப் பணியை நாம் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும். அவர் ஏற்கனவே 37 லட்சம் மரக்கன்றுகளை நட்டு உருவாக்கிய பசுமைப் பாதையை, வரும் மாதங்களில் மீதமுள்ள மரங்களை நட்டு, அவரது 1 கோடி மரங்கள் என்ற கனவை நிறைவேற்றும் பணியில் நாமும் பங்கெடுப்போம். என்றவர் மேலும்
தமிழக முதலமைச்சர் விஜய் அவர்களிடம் ஒரு வேண்டுகோள். ஊழலற்ற, நேர்மையான ஆட்சியை வழங்க வேண்டும் என்ற உங்கள் நிலைப்பாட்டை வரவேற்கிறோம். ஆனால், உங்கள் அமைச்சரவையில் சிலர் லஞ்சம் பெறுவதாக வரும் குற்றச்சாட்டுகளை விசாரித்து, தவறு நடந்திருந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். உங்கள் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையைக் காப்பாற்றுவது உங்கள் பொறுப்பு.
இன்றைய இளைஞர்களின் குரலை நாம் கேட்க வேண்டும். அவர்களிடம் இருந்து கற்றுக்கொண்டு, அவர்களின் எதிர்காலத்திற்கு ஏற்ற வகையில் நம்மை நாமே புதுப்பித்துக் கொள்ள வேண்டும். பிறர் குடும்பத்தைப் பற்றி தரக்குறைவாகப் பேசுவது, தனிப்பட்ட தாக்குதல்கள் செய்வது போன்ற, அநாகரிக அரசியலை, இன்றைய இளைஞர்கள் விரும்புவதில்லை. கல்வி, வேலைவாய்ப்பு, தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் மற்றும் நல்லாட்சி குறித்து பேசும் புதிய அரசியலை நாம் முன்னெடுத்துச் செல்வோம்.
நீர்நிலைகளை காப்போம்; மரங்களை வளர்ப்போம்; அரசுப் பள்ளிகளை மேம்படுத்துவோம். கிராமங்களை முன்னேற்றுவோம். நம் குழந்தைகளின் எதிர்காலத்தை சிறப்பாக்குவோம்.
மாறுவோம், மாற்றுவோம்!எனத் தெரிவித்து பேரணியைத் துவக்கி வைத்தார், ஆளுங்கட்சியை ஆதரிக்க வேண்டுமென்றால் ஒன்று அதோடு கூட்டணியில் இருக்கவேண்டும். அல்லது கட்சியை வளர்க்க வேண்டும் என்றால் ஆளும் கட்சியை எதிர்க்கவேண்டும். இப்போது ஆளும்கட்சியை ஆதரித்துவிட்டு சில ஆண்டுகளுக்குப் பின் எதிர்த்தால் மக்கள் ஏற்றுக்கொள்வார்களா? மாட்டார்களா? என்பதைத் தீர்மானம் செய்யவேண்டிய நிலை தற்போது உள்ளது .. ஆகவே கே.அண்ணாமலை இப்போது எடுத்திருக்கும் நிலைப்பாடு புத்திசாலித்தனமானதா என்பதே பலரது எழுவினா?..
















கருத்துகள்