வீ த லீடர்ஸ் இயக்கம் முன்னாள் பாஜக மாநிலத் தலைவர் கே.அண்ணாமலையால் தொடங்கப்பட்ட தமிழ்நாட்டில்
அடித்தள மக்கள் தொடர்பு மற்றும் சமூக இயக்கம். இதன் பணி சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நீர்நிலை மற்றும் கடற்கரை தூய்மைப் பணிகளை பல பகுதிகளில் நடத்துவது. எனினும், காரைக்குடியில் இந்த அமைப்பு சார்பில் தூய்மைப் பணி சிறப்பாக நடந்தது, திருச்செந்தூர், கடலூர், கடற்கரைப்பகுதி மதுரை வைகை ஆற்றுப் பகுதிகளிகளில் ஏற்கனவே தீவிரமாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இயக்கத்தின் தூய்மைப் பணிகள் மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மற்றும் பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தவிர்த்தல்
மற்றும் குப்பைகளை உரிய இடத்தில் அகற்றுதல். இளைஞர்களைக் கொண்டு மரக்கன்றுகள் நடுதல் மற்றும் துப்புரவுப் பணிகள்.அடிமட்ட விழிப்புணர்வு மூலம் கிராம மற்றும் நகர்ப்புறங்களில் தூய்மை குறித்த உறுதிமொழிகள் மற்றும் பிரச்சாரங்களை காரைக்குடி மற்றும் சிவகங்கை நகரின் முக்கிய அடையாளங்களாக விளங்கும் அரண்மனை வாசல் போன்ற பொது இடங்கள், நீர்நிலைகளின் ஓரங்கள் மற்றும் ஆற்றங்கரைகளில் தேங்கியுள்ள பிளாஸ்டிக் மற்றும் இதர குப்பைகளை அகற்றும் பணிகளைத் தன்னார்வலர்கள் மேற்கொண்டனர்,
இந்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு அமைச்சகம் நேரு யுவ கேந்திரா எனது பாரதம் சிவகங்கை, மற்றும் வீ தி லீடர்ஸ் காரைக்குடி இணைந்து நடத்திய என் மண் என் மக்கள் காரைக்குடி தூய்மை பணி. அய்யனார் கோவில் தண்ணீர் தொட்டி விநாயகர் கோவில் தெப்பக்குளம் மற்றும் அதன் சுற்றுப் பகுதியில் தூய்மைப் பனியை மேற் கொண்டனர்,
இது கடந்த காலங்களில் காலமான மூதாதையர்களுக்கு தர்ப்பணம் மற்றும் கிரிகை செய்யும் பகுதி இந்தக் குளத்தை சுற்றி முட்செடிகள் மற்றும் தீர்த்தத்திற்குள் பாசிப்படர்ந்து கிடந்தது. இதில் சில சமூக விரேதிகளின் தற்காலிக தங்குமிடமாக மாறி பொதுமக்கள் மற்றும் நடைப்பயிற்சி செய்த பலர் செல்ல அஞ்சிய நிலையில் இதனை நேற்று பசுமை காரைக்குடி , வீ த லீடர்ஸ் அமைப்பினர் அய்யனார்புரம் ஊரணி மற்றும் ஊரணி சுற்றுவட்டாரப் பகுதிகளில் தேங்கியிருந்த கழிவுகள், மது பாட்டில்கள் மற்றும் பிளாஸ்டிக் குப்பைகள் அகற்றப்பட்டு, மாநகராட்சி உதவியுடன் குப்பைக் கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டன.
மேலும், சிறுவர் பூங்கா எம்-Sand கல்தூசி மண் மூலம் சீரமைக்கப்பட்டு, ஊரணியைச் சுற்றிலும் மரக்கன்றுகள் நடப்பட்டன.
இந்த நிகழ்வில் ஆர்வத்துடனும் சமூக அக்கறையுடனும் கலந்து கொண்டு, தன்னார்வலர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது முள்செடி, சுற்றிலும் குப்பை பாசிகளை அகற்றி உழவாரப் பணி செய்து தீர்த்த குளத்தை புதுப்பித்தனர். இதில் குளத்தில் நீர் இருந்ததால் உட்ளே தண்ணீர் வற்றிய பின் செய்ய உள்ளதாகவும் தெரிவித்தனர், நிகழ்ச்சியில் வீ த லீடர்ஸ் அமைப்பை சேர்ந்த திருப்பத்தூர் ஆ.பி. சீ. அ. கலைக்கல்லூரி தாளாளர் என். ரமேஷ்வரன், காரைக்குடி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சோழன் கே. பழனிசாமி, காரைக்குடி பகுதி ஒருங்கிணைப்பாளர்கள் முருகு சரவணன், கார்த்திகேயன் பாலசுப்பிரமணியன், விநாயகம், சிவா, கிருஷ்ணா எலக்ட்ரிகலஸ் உரிமையாளர் , இரவுசேரி காசிராஜா, மகளிர் நிர்வாகிகள் வி த லீடர்ஸ் அமைப்புத் தொண்டர்கள், மற்றும் இயந்திரங்கள் வாகனங்கள் உதவியுடன் சுத்தம் செய்யும் பணியில் கலந்து கொண்டனர், மாநகராட்சி செம்ய வேண்டிய பணியை சரிவரச் செய்யாத நிலையில் இதை இந்த அமைப்பு சார்பில் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது, அதேபோல் இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் அருகில் தங்கச்சிமடம் ஏகாந்த ராமர் கோயில் எதிரே ருணவிமோசன தீர்த்த குளம் பழமையானது ஆதி காலத்திலிருந்தே பக்தர்கள் தீர்த்தத்தில் நீராடி ராமேஸ்வரம் கோயிலுக்குச் செல்வது வழக்கம். இதனை பசுமை ராமேஸ்வரம் அமைப்பினர் புதுப்பித்து பராமரித்து வந்த நிலையில்,
சமீப காலமாக தீர்த்த குளத்தை சுற்றி முட்செடிகள் மற்றும் தீர்த்தத்திற்குள் பாசிப்படர்ந்து கிடந்தது. இதனை நேற்று பசுமை ராமேஸ்வரம், வீ த லீடர்ஸ் அமைப்பினர் முள்செடி, பாசிகளை அகற்றி உழவாரப் பணி செய்து தீர்த்த குளத்தை புதுப்பித்தனர். இதில் வீ த லீடர்ஸ் அமைப்பை சேர்ந்த ராமேஸ்வரம் நகராட்சி கவுன்சிலர் சங்கர், ராமேஸ்வரம் கம்பன் கழக பொருளாளர் ராமு, பசுமை ராமேஸ்வரம் அமைப்பு நிர்வாகி சரஸ்வதியம்மா உட்பட பலர் பங்கேற்றனர்.






.jpg)




.jpg)














கருத்துகள்