முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மேகமலை மக்களுக்கு அரசு தீர்வு காண வலியுறுத்த அணைத்துக் கட்சிகளை அழைக்கும் கே.சி.திருமாறன் ஜி,

மாஞ்சோலை மற்றும் மேகமலை



பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற தமிழ்நாடு அரசுக்கு உச்சநீதிமன்றம் கடுமையான உத்தரவு ‘தமிழ்நாட்டிற்கு ராணுவத்தை அனுப்புவோம். தமிழ்நாடு அரசுக்கு எச்சரிக்கை! 



என 
மாஞ்சோலை, மேகமலை அதை சுற்றியுள்ள பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரிய மனு மற்றும் மாஞ்சோலையில் வசித்து வரும் மக்களுக்கு மாற்று ஏற்பாடு செய்யக்கோரி ஜான் கென்னடி என்பவர் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்த போது நீதிபதிகள், ஆக்கிரமிப்புகளை அகற்ற இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? எனக் கேள்வி எழுப்பினர்.



தமிழ்நாடு அரசின் சமூக நீதி அமைச்சகம் தரப்பு வழக்கறிஞர் ஜெய்தீப் குப்தா வை நியமித்து அவர் ஆஜராகி, மேகமலை புலிகள் சரணாலய வனப்பகுதியில் 4600 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருவதாகவும், அங்கு பல ஏக்கர் நிலங்களில் இலவம்பஞ்சு மரம் பயிரிடப்பட்டுள்ளது.அந்த மக்களை அங்கிருந்து அப்புறப்படுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இவர்களில் சில குடும்பங்கள் பல தலைமுறையாக அந்தப் பகுதியிலேயே வசித்து வருபவர்கள், எனவே அவர்களுக்கான மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டு அதன் பின்னர் அவர்களும் அங்கிருந்து அப்புறப்படுத்தப்படுவார்கள்.

பழங்குடியினர் அல்லாமல் நூறாண்டுகளுக்கு மேலாக அங்கு ஆக்கிரமித்து வசித்து வருபவர்களுக்கு சில தளர்வுகள் தேவைப்படுகிறது அதனையும் கருத்தில் கொள்ள வேண்டும். மேலும் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் இயங்கி வந்த சுற்றுலா விடுதிகள் முழுமையாக மூடப்பட்டுள்ளன, ஆக்கிரமிப்பு உள்ள இடங்களைக் கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கான உச்ச நீதிமன்ற உத்தரவை முழுமையாக செயல்படுத்த கால அவகாசம் தேவைப்படுகிறது, எனவே அதற்காக மூன்று மாத காலம் அவகாசம் வழங்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தார்.

அதற்கு நீதிபதிகள், பாதுகாக்கப்பட்ட வனப் பகுதிகளில் உள்ள விடுதிகளை மூடினால் மட்டும் போதாது முழுவதுமாக இடித்து அப்புறப்படுத்த வேண்டும். எந்த ஒரு ஆக்கிரமிப்பையும் வனப்பகுதியில் அனுமதிக்க முடியாது எனத்  தெரிவித்தனர். அதைப்போல் இலவம்பஞ்சு மரம் பயிரிடப்பட்டுள்ள அந்த நிலங்கள் முழுமையாக கையகப்படுத்தப்பட வேண்டும் அதில் உள்ள ஆக்கிரமிப்புகள் முழுமையாக அகற்றப்பட்டு இலவம்பஞ்சுத் தோட்டங்கள் முழுமையாக அகற்றப்பட வேண்டும் என்று திட்டவட்டமாக தெரிவித்தனர். ஏனெனில் இலவம் பஞ்சுத் தோட்டங்களில் பணிபுரிவதற்காக வேலையாட்களை குடி அமர்த்தும் நடவடிக்கையில் இருந்து தான் ஆக்கிரமிப்பு என்பது முதலில் தொடங்குகிறது. எனவே இந்த விஷயத்தில் எந்த ஒரு சலுகையும் காட்டக்கூடாது பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி புலிகள் சரணாலயம் பகுதியிலிருக்கும் இந்தத் தோட்டங்கள் முழுவதுமாக அப்புறப்படுத்தப்பட வேண்டும் இதில் எந்த மாற்றமும் இருக்கக் கூடாது.




அதுபோல ரிசர்வ் வனப் பகுதிகளில் அதாவது காப்புக்காடு எந்தக் காரணம் கொண்டும் எவருக்கும் நிலத்துக்கான பட்டாவை வழங்கக் கூடாது. மேலும் ஆக்கிரமிப்புகளை கட்டுப்படுத்த முடியவில்லை என்றால், துணை ராணுவப்படையை அனுப்ப வேண்டியது வரும் என எச்சரித்தனர்.

அப்போது ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரிய மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பரமேஸ்வர், புலிகள் சரணாலயம் அமைந்துள்ள இந்த காட்டுப் பகுதிகளில் இன்னும் பல ஆக்கிரமிப்புகள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றன. பல ஒய்வு பெற்ற அதிகாரிகள் நிலங்களை ஆக்கிரமித்துள்ளனர். இது தொடர்பாக அந்த அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அளித்தும் எந்த ஒரு பதிலும் தருவதில்லை. ஆக்கிரமித்துள்ள நிலங்கள் தொடர்பாக ஒய்வு பெற்ற அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்ட நோட்டீஸ் திரும்ப வந்துள்ளன என சுட்டிக்காட்டினார்.

இதனை தொடர்ந்து நீதிபதிகள், மேகமலை புலிகள் சரணாலயம் மற்றும் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்ற வேண்டும். இலவம் பஞ்சு மரத் தோட்டங்கள் முழுமையாக அப்புறப்படுத்தப்பட்டு இருக்க வேண்டும், ஏனெனில் ஆக்கிரமிப்புக்கான மிக முக்கிய காரணமானவர்களே அந்தத் தோட்ட உரிமையாளர்கள் தான் என திட்டவட்டமாக மீண்டும் தெரிவித்தனர். மேலும் நிலங்களை ஆக்கிரமித்துள்ள யாராக இருந்தாலும் அவர்களின் கட்டிடங்களுக்கான மின்சாரம், நீர் இணைப்பு உள்ளிட்டவத்தை துண்டியுங்கள் எனவும் அறிவுறுத்தினர். இதனை அடுத்து மேகமலை புலிகள் சரணாலயம் மற்றும் அதை சுற்றிய பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கை தொடர்பாக நிலை அறிக்கையை இரண்டு வார காலத்தில் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை செப்டம்பர் மாதம் 8 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர். இந்த நிலையில் மேகமலை மக்களின் அடிப்படை உரிமைக்காக மாபெரும் அனைத்துக் கட்சி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தென்னிந்திய பார்வேர்ட் பிளாக் சார்பாக 12. செப்டம்பர் 2026 சனிக்கிழமை மாலை 3.00 மணிக்கு : மதுரையில்  மேகமலை மக்களின் உரிமைக்காக மதுரையில் அரசியல் கட்சிகள் சங்கமம்!  என 


மேகமலை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து வரும் மக்களின் அடிப்படை உரிமைகள், குடியிருப்பு உரிமை, வாழ்வாதார உரிமை, விவசாய உரிமை மற்றும் சுதந்திரமான வாழ்க்கை உரிமை தொடர்ந்து பல்வேறு கட்டுப்பாடுகளாலும் நிர்வாக நடவடிக்கைகளாலும் கேள்விக்குறியாக்கப்பட்டு வருகிறது.

ஒருபுறம் வனப்பகுதி பாதுகாப்பு என்ற பெயரில் மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்படுகிறது.

மறுபுறம், பல ஆண்டுகளாக அப்பகுதியில் வாழ்ந்து வரும் மக்களின் நில உரிமை, குடியிருப்பு பாதுகாப்பு, சாலை வசதி, கல்வி, மருத்துவம், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் தொடர்பாக பல்வேறு பிரச்சினைகள் நீடித்து வருகின்றன.

தலைமுறை தலைமுறையாக வாழ்ந்த மக்களுக்கு பாதுகாப்பு எங்கே? மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பது யாருடைய பொறுப்பு?

வனத்தை பாதுகாப்பதோடு, வனத்தை சார்ந்து வாழும் மக்களின் உரிமைகளையும் பாதுகாக்க வேண்டாமா?

மேகமலை மக்களின் பிரச்சினைக்கு நிரந்தரமான சட்டபூர்வமான தீர்வு காண வேண்டும். மக்களை அவர்களது பாரம்பரிய வாழ்விடங்களில் இருந்து அச்சுறுத்தும் எந்த நடவடிக்கையும் ஏற்றுக்கொள்ள முடியாது.

மக்களையும்  இயற்கையையும் பாதுகாப்போம்!  இந்த முக்கியமான கோரிக்கைகளை வலியுறுத்தி, மதுரையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுநல அமைப்புகளின் நிர்வாகிகள் மற்றும் மேகமலை மக்களின் உரிமைக்காக குரல் கொடுக்கும் எதிர்காலத்திற்கான, வாழ்வாதாரத்திற்கான, அடிப்படை உரிமைக்கான, நியாயத்திற்கான போராட்டம்!  எனவே, அரசியல் வேறுபாடுகளை கடந்து அனைத்து பொதுமக்களும் இந்த மாபெரும் ஆர்ப்பாட்டத்திற்கு முழுமையான ஆதரவு அளித்து, பெருந்திரளாக கலந்து கொண்டு மேகமலை மக்களின் உரிமைக்காக குரல் கொடுக்குமாறு தென்னிந்திய பார்வர்ட் பிளாக் கட்சிநிறுவனத் தலைவர்   K.C. திருமாறன் ஜி  அழைப்பு விடுத்துளளார். சட்டமன்றத்திலும்  இந்த விவகாரம் எதிரொலித்த போதிலும், உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு மற்றும் வனத்துறை சட்டங்கள்  தடுப்பது கடினம் மேலும் சுதந்திர இந்தியா வருவதற்கு முன் இந்த மாஞ்சோலை சிங்கம்பட்டி சமஸ்தானத்தின் ஜமீன் வரம்பில் உள்ள பகுதி சிலகாலம் முன் தேயிலை தோட்டக் கூலி விவசாயிகள் போராட்டம் மற்றும் துப்பாக்கிச் சூடு தாமிரபரணி ஆற்றை சிவப்பாக்கிய வரலாறு பழைய கதை,  தற்போது ஆக்கிரமிப்பு மேகமலை மக்கள் அரசின் நல்ல தீர்வுக்காக காத்திருக்கும் நிலை,



ஸ்ரீ வில்லிபுத்தூர்-மேகமலை புலிகள் காப்பகம்  பிப்ரவரி 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் உருவான தமிழ்நாட்டின் 5-வது மற்றும் இந்தியாவின் 51-வது புலிகள் காப்பகம். தேனி மற்றும் விருதுநகர் மாவட்டங்களின் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் அமைந்துள்ள வனப்பகுதி சாம்பல் நிற ராட்சத அணில் சரணாலயம் மற்றும் மேகமலை வனவிலங்கு சரணாலயம் ஆகியவற்றை இணைத்து உருவாக்கப்பட்டுள்ள சுமார் 1,016 சதுர கிலோமீட்டரில் 1,01,000 ஹெக்டேர் மலை நிலப் பரப்பளவைக் கொண்டுள்ளது. கேரளாவின் பெரியார் புலிகள் காப்பகம் மற்றும் தமிழ்நாட்டின் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் ஆகியவற்றுக்கு இடையே ஒரு முக்கிய வனப் பகுதியாக உள்ளது  வைகை, சுருளியாறு மற்றும் சண்முகநதி போன்ற ஆறுகள் இங்கிருந்து தான் உற்பத்தியாகின்றன.விலங்குகள் மற்றும் தாவரங்கள்விலங்குகள்: புலிகள், யானைகள், சிறுத்தைகள், இந்தியக் காட்டெருமைகள், நீலகிரி வரையாடுகள் மற்றும் சாம்பல் நிற அணில்கள் பசுமை மாறாக் காடுகள், இலையுதிர் காடுகள் மற்றும் புல்வெளிகள் நிறைந்த பகுதி. 

இந்தியாவில் காப்புக்காடுகளான Reserved Forests மற்றும் வனங்களை நிர்வகிக்க இந்திய வனச் சட்டம், 1927 எனும் Indian Forest Act, 1927 காடுகளின் பாதுகாப்பு, வனப் பொருட்களின் போக்குவரத்து மற்றும் வனக் குற்றங்களுக்கான தண்டனைகளை ஒழுங்குபடுத்துகிறது. காப்புக்காடுகளை உருவாக்கும் நடைமுறை அல்லது வனப் பாதுகாப்புச் சட்டம் (1980) ம் இணைகிறது அதோடு முக்கியமாக

இந்திய வன உரிமைச் சட்டம், 2006 எனும் Forest Rights Act - FRA என்பது காடுகளில் தலைமுறை தலைமுறையாக வாழும் பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் மற்றும் பிற பாரம்பரிய வனவாசிகளின் சட்டப்பூர்வ உரிமைகளை அங்கீகரிப்பதற்காகக் கொண்டுவரப்பட்ட  சட்டமாகும். பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சிக்காலம் முதல் தொடர்ந்த வரலாற்று அநீதிகளைச் சரிசெய்வதே இச்சட்டத்தின் முதன்மையான நோக்கமாகும். இந்தச் சட்டம் பழங்குடி வனவவாசி மக்களுக்கு மட்டுமே  ஆக்கிரமிப்பு செய்தவர்கள் என உச்சநீதிமன்றம் மேகமலை மக்கள் குறித்து கூறுவது இங்கு கவனிக்கத் தக்கது,

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...

சோழப் பேரரசி வானதி எழுப்பிய மூவர் கோவில்

முதலாம் இராஜேந்திர சோழரின் தாய்  வானவன் மாதேவி எனும் அரசி வானதி, சோழர்களின் வரலாற்றில் பெரும் புகழ் மாமன்னர் அருள்மொழித் தேவன் எனும் இராஜராஜசோழச் சக்கரவர்த்தி மீது இணையில்லாத காதல் மங்கை கொடும்பாளூர் இளவரசி வானதியை "பொன்னியின் செல்வன்" கதை படித்த யாரும் மறக்க முடியாது. சோழர் கடற்படையின் பரப்பை இலங்கை வரை  சென்று வென்று வந்த வரலாற்று நிகழ்வுகளின் மூலம் குறுநில மன்னர்கள் அல்லது வேளிர்  துணை நின்றார்கள் அதில் ஈழத்துப் பட்டம்  வென்ற கொடும்பாளூர் வேளிர் மகளான வானதி இளம் வயதிலேயே தாய் தந்தையை இழந்தவர். கொடும்பாளூர் சிற்றரசன் அதாவது வேளிர் சோழ சாம்ராஜ்யத்தின் சேனாதிபதி யாகவும் இருந்த சிறிய தந்தை குறுநில மன்னர் பூதி விக்ரமகேசரியால் வளர்க்கப்பட்டவர் தான் வானவன் மாதேவி எனும் அரசி வானதி. கொடும்பாளூர் பிறந்து திருக்கோவிலூரை பின்னர் ஆண்ட மலையமானின் மகள்  “மேலும் வானவன்மாதேவி மன்னர் ராஜராஜ சோழர் மறைந்த உடன் பிரிவாற்றாமல் உடன்கட்டை ஏறி தன் உயிரை மாய்த்துக் கொண்டாள். இதை திருவாலங்காட்டுச் செப்பேடுகள் மூலம் அறியலாம் ஈழத்தில் நடைபெற்ற யுத்தத்திற்காக கொடும்பாளூர்  வேளிர் கடல...