நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் வட்டம் நாமகிரிப்பேட்டை அசோக் சரவணன் சிவில் இன்ஜினியரிங் முடித்த பட்டதாரி,
தனக்கு நிச்சயம் செய்த பெண்ணுக்காக சந்திரமண்டலமான நிலவில் 1 ஏக்கர் நிலம் வாங்கியுள்ளதாக ஒரு வைரல் செய்தி தற்போது பேசப்படுகிறது. மதுரை ராதிகா வர்ஷிணியுடன் இவருக்குத் திருமணம் நிச்சயமாகியுள்ளது. தனது நிச்சயம் ஆன எதிர்கால மனைவிக்கு வித்தியாசமான ஒரு பரிசு அசோக், சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம் மூலமாக நிலவில் ஒரு ஏக்கர் சந்திரப்பரப்பை 23,000 செலுத்தி வாங்கியுள்ளதாகவும், அதற்கான உரிமைச் சான்றிதழையும் அவர் பெற்றுள்ளதாகவும் இந்த விவகாரம் குறித்து அறிவியல் அறிஞர்கள் மற்றும் வின்வெளி மையங்கள் பின்வரும் முக்கிய விளக்கங்களை அளித்துள்ளனர், சர்வதேச விண்வெளி ஒப்பந்தம் (Outer Space Treaty - 1967) ஐநா சபையின் 1967 விண்வெளி ஒப்பந்தத்தின்படி, பிரபஞ்சத்தில் உள்ள பொது வெளி நிலா அல்லது எந்தவொரு கோள்களும் ஒட்டுமொத்த மனித குலத்திற்கும் பொதுவானதில் எந்தவொரு நாடோ, உலக அரசாங்க அமைப்போ அல்லது தனிநபரோ சொந்தமாக உரிமை கொண்டாட எந்த விதமான சட்டப்பூர்வமாக அனுமதியில்லை.
இந்தியா உட்பட 100-க்கும் மேற்பட்ட நாடுகள் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. இவ்வாறு இருக்க இந்த பித்தலாட்ட விளம்பரப் பிரியர் குறித்து உண்மைத்தன்மை என்ன? நிலவில் இடம் விற்பதாகக் கூறும் தனியார் இணையதளங்கள் வழங்கும் இத்தகைய சான்றிதழ்கள் அனைத்தும் உண்மை இல்லை வெறும் நினைவுப் பரிசுகள் மட்டுமே தவிர, அவை செல்லாது, மனநலம் பாதித்த நிலை அவற்றுக்கு எந்தவிதமான சட்டப்பூர்வ அங்கீகாரமும் கிடையாது. எதிர்காலத்தில் நிலவுக்குச் சென்று அந்த இடத்தை யாரும் உரிமை கொண்டாடவும் முடியாது என்றும், மக்கள் தங்களின் மகிழ்ச்சிக்காகவும், அன்பை வெளிப்படுத்தவும் மட்டுமே இதைச் செய்கிறார்கள் என்றும் விஞ்ஞானி த.வெங்கடேஸ்வரன் போன்ற நிபுணர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர்.
Lunar Registry, Lunar Society போன்ற சில தனியார் வெளிநாட்டு இணையதளங்கள் நிலவில் இடங்களை விற்பனை செய்வதாகக் கூறி போலியானப் சான்றிதழ் பத்திரங்களை வழங்கி வருகின்றன. இவை வெறும் விளையாட்டுப் பொருட்கள் அல்லது வேடிக்கையானப் பரிசுகள் போன்ற மதிப்பை மட்டுமே கொண்டவையே தவிர, உண்மையான சொத்துரிமைப் பத்திரங்கள் அல்ல. சந்திர மண்டலம் என்பது பூமியின் ஒரே இயற்கை துணைக்கோளான சந்திரனின் ஈர்ப்பு விசைக்கு உட்பட்ட விண்வெளிப் பகுதி மற்றும் அதன் மேற்பரப்பைக் குறிக்கும் சொல்,
அறிவியல்பூர்வமாக, சந்திரனுக்கு பூமியைப் போல அடர்த்தியான வளிமண்டலமோ அல்லது திரவ நிலை தண்ணீரோ கிடையாது சந்திரனில் காற்று இல்லாததால், அங்கு சத்தமும் கேட்காது. வானம் எப்போதும் இருட்டாகவே காட்சியளிக்கும். பூமியின் ஈர்ப்பு விசையை விட இது 6 ல் 1 பங்கு மட்டுமே அதிகம். எனவே, மனிதர்களால் அங்கு மிக உயரத்திற்கு குதிக்க முடியும். பகலில் கடுமையான வெப்பமான 120 டிகிரி செல்சியஸ் அளவில், இரவில் உறைபனி குளிரும் சுமார் -130 டிகிரி செல்சியஸ் நிலவுகிறது, 1969 ஆம் ஆண்டு அமெரிக்காவின் அப்போலோ 11 விண்கலம் மூலம் மனிதர்கள் நீல் ஆம்ஸ்ட்ராங் முதன்முதலில் சந்திர மண்டலத்தில் கால் பதித்தார். நாசாவின் ஆர்ட்டிமிஸ் திட்டம் மூலம் மீண்டும் மனிதர்களை சந்திரனுக்கு அனுப்பும் முயற்சிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இந்தியாவின் சந்திரயான் போன்ற திட்டங்கள் நிலவின் தென் துருவத்தை ஆராய்ந்து வருகின்றன.
சர்வதேச விண்வெளிச் சட்டம் (International Space Law) என்பது புவியின் வளிமண்டலத்திற்கு அப்பாற்பட்ட விண்வெளி மற்றும் நிலவு உள்ளிட்ட விண்வெளிப் பொருட்களில் நாடுகளின் செயல்பாடுகளை முறைப்படுத்தும் சர்வதேச விதிகளின் தொகுப்பாகும். ஐக்கிய நாடுகள் சபையின் விண்வெளியின் அமைதியான பயன்பாடுகள் குறித்த குழு (UNCOPUOS) இந்தச் சட்டங்களை உருவாக்குவதிலும் கண்காணிப்பதிலும் முதன்மைப் பங்கு வகிக்கிறது.அவுட்டர் ஸ்பேஸ் ஒப்பந்தம், 1967 (The Outer Space Treaty)விண்வெளி வீரர்கள் மீட்பு ஒப்பந்தம், 1968 (The Rescue Agreement)சர்வதேசப் பொறுப்பு ஒப்பந்தம், 1972 (The Liability Convention) என உலக அளவில் சட்டம் உள்ளது அதை விடுத்து நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சரவணன் (வயது 32) என்ற மென்பொருள் பொறியாளர், தனது வருங்கால மனைவிக்கு வித்தியாசமான பரிசு கொடுக்க இணையதளத்தில் தேடி ரூபாய் 23,000 கட்டணம் ஒஓரு மோசடி இணையத்தில் செலுத்தி நிலவில் ஒரு ஏக்கர் நிலம் வாங்கியதாக ஏமாற்றப்பட்டுள்ளார்.
இதற்கான போலி பத்திரங்களையும், 'சந்திரயான் விண்கலம்' தரையிறங்கிய பகுதியான 'ஸ்டேடியா' பகுதியில் நிலம் ஒதுக்கப்பட்டதாக ஒரு போலி வரைபடத்தையும் அந்த மோசடி இணையதளம் அவருக்கு வழங்கியுள்ளது. நிலவில் நிலம் விற்க யாருக்கும் உரிமை இல்லை சர்வதேச விண்வெளி ஒப்பந்தம் (Outer Space Treaty, 1967): ஐக்கிய நாடுகள் சபையின் (UN) சர்வதேச விண்வெளி ஒப்பந்தத்தின்படி, நிலவு மற்றும் விண்வெளியில் உள்ள எந்தவொரு கோளும் ஒட்டுமொத்த மனிதகுலத்திற்கும் பொதுவான சொத்தாகும். எந்தவொரு நாடோ, தனிநபரோ அல்லது தனியார் நிறுவனமோ நிலவில் தனியுரிமை கொண்டாடவோ, அதை விற்கவோ சட்டப்படி தகுதியே கிடையாது.
இணையதளங்களில் நிலவின் நிலப்பத்திரங்களை விற்கும் நிறுவனங்கள் வழங்குவது சட்டப்பூர்வமாக எந்த மதிப்பும் இல்லாத வெறும் அலங்காரக் காகிதம் மட்டுமே. அமெரிக்காவைச் சேர்ந்த டென்னிஸ் ஹோப் என்ற நபர், 1980-களில் ஐநா ஒப்பந்தத்தில் உள்ள சில சட்டத்தின் குறைகளைப் பயன்படுத்தி நிலவு தனக்குச் சொந்தம் என்று உரிமை கோரி, 'லூனார் எம்பஸி' (Lunar Embassy) என்ற ஒரு நிறுவனத்தைத் தொடங்கி, உலகளவில் கோடிக்கணக்கான ஏக்கர் நிலவு நிலங்களை விற்று மில்லியன் கணக்கில் மோசடியாக பணம் சம்பாதித்தார். அவரைப் பின்பற்றி தற்போது பல போலி இணையதளங்கள் மற்றும் சமூக ஊடக மோசடி நபர்களாக கர்நாடகாவில் 'ஆகாஷ் நாராயணா' என்பவர் நிலவில் நிலம் தருவதாகக் கூறி பொதுமக்களிடம் ஆன்லைன் மூலம் பணத்தை ஏமாற்றி வருகின்றனர். எனவே, இதுபோன்ற போலி விளம்பரங்களை நம்பி பொதுமக்கள் யாரும் தங்களது பணத்தை இழக்க வேண்டாம் என சைபர் கிரைம் காவல்துறையும் விண்வெளி ஆய்வாளர்களும் எச்சரிக்கின்றனர்.
படித்த முடடாள்களான இவர்கள் தங்களது பொழுதுபோக்கு மற்றும் வீன் விளம்பரம் இவர்கள் திருமணம் பிரபலமாக செய்த பணத்திமிர் தந்திரம் இவர்களை நினைத்தால் நிஈர நிலம் திரைபடத்தில் நடிகர் வடிவேலு - நடிகர் சிங்கமுத்து கூட்டணியின் "ஏப்பா... அப்படியே அந்த மலையையும் கொஞ்சம் சாணை பிடிச்சுத் தாரியா? எனக் கேட்ட சிங்கமுத்துவை வம்புக்கு இழுத்த வடிவேலு, "சாணை பிடிக்க எவ்வளவு வாங்குவ?" என்று கேட்பார். அதற்கு அவர் கத்திக்கு 2 ரூபாய், அரிவாளுக்கு 5 ரூபாய் என சிங்கமுத்து சொல்ல, உடனே வடிவேலு தூரத்தில் இருக்கும் ஒரு பெரிய மலையைக் காட்டி, "அப்படியே அந்த மலையை கொஞ்சம் சாணை பிடிச்சு தாரியா... எவ்வளவு கேட்பாய்?" அதற்கு சற்றும் சளைக்காத சிங்கமுத்து, "மலையை சாணை பிடிக்கலாம் தம்பி... ஆனா அதைத் தூக்கி என் மிஷின்ல வைக்கிறதுக்கு ஆள் வேணுமே, நீ தூக்கி வைப்பியா?" என்று திருப்பி அடித்துப் பேசிய நிலைமை தான் இங்கு நிலவை வாங்கியவன் விற்றவன், அதை நம்பி கேட்கும் பத்திரிகை நபர்கள் உண்மை ஆராய வேண்டாமா, இங்கு தான் படுகுழியில் விழுந்து கிடக்கும் பத்திரிகை தர்மம் பத்திரிகையாளர்களின் தர்மம் படுகுழியில் விழுந்து சில தலைமுறைகள் கடந்து விட்டது ! சமுதாய அக்கறை கொண்ட பத்திரிகையாளர்களை அத்தி பூப்பது போல் அபூர்வமாகத்தான் காணமுடிகிறது இன்று ! தேவையே இல்லாத போலியான பிரச்சனைகளை தலை மேல் வாரிப் போட்டுக் கொண்டு பிறகு அது விபரீதத்தில் போய் முடியும் பொழுது விழி பிதுங்கி நிற்பது அவர்களை வாடிக்கையாகிவிட்டது !
நாட்டையே உலுக்கும் எத்தனையோ நாச சக்திகள் இன்னும் நடமாடிக்கொண்டு தான் இருக்கிறது ! ஆனால் பெரும்பாலான மீடியாக்கள் மலிவான பிரச்சனைகளுக்கு தான் முக்கியத்துவம் கொடுத்துக் கொண்டு , பரபரப்பை தேடிக் கொள்கின்றன !
1980 களில் 10 க்கும் மேற்பட்ட பத்திரிகைகளே சமுதாயத்திற்கு செய்திகளை சேகரித்துக் கொடுத்துக் கொண்டிருந்தன ! 1990 களின் இறுதியில் தான்
தொலைக்காட்சிகள் துறையில் காட்சி உஊடகமாக அடியெடுத்து வைக்கத் தொடங்கியது ! அன்று அரசின் அத்தனை துறைகளுடனும் அத்தனை இணக்கமாக இருந்திருக்கின்றன பத்திரிகைகள் !
தடுக்கி விழும்போது அரசை குட்டவும் செய்யும் , நல்ல செயல்களை அரங்கேற்றும் போது பாராட்டி கை தட்டவும் செய்யும் பத்திரிகைகள் ! ஆனால் இன்று தொழில் நுட்பத்தின் அசுர வளர்ச்சியால் புற்றீச்சல் போல் புறப்பட்டு கொண்டிருக்கின்றன பத்திரிகைகளும் , சமூக வலைத்தளங்களும் , you tube மேடைகளும் !
இப்படி மத்திய அரசு RNI அனுதி நீதிமன்றம் மூலம் பதிவு விளம்புகை இல்லாத போலிகளின் ஆக்கிரமிப்பு பத்திரிகை துறையில் ஒரு புறம் படையெடுக்க , தரமான மீடியாக்களும் பல தருணங்களில் தடுக்கி விழுந்து கொண்டிருக்கின்றன ! இரு தலைமுறைக்கு முன்னால்
" தமிழகப் பெண்களின் தாலி " குறித்து ஒரு தொலைக்காட்சி நடத்திய டிபேட் பரபரப்புள்ளாகியது
இந்துக்களின் மனதை புண்படுத்துவதாக சொல்லி போராட்டம் , மறியல் என்று மாநகரை உலுக்கி இருக்கிறது ! பெண்களின் மாங்கல்ய பெருமையை பட்டிமன்றத்தில் பகடை பொருளாக வைத்து , கருத்து சுதந்திரம் என்ற பெயரில் கலாச்சார சீரழிவுக்கு சிவப்பு கம்பளம் விரித்திருந்தது ஒரு தரமான மீடியா நிறுவனம் !
அடிதடி , தள்ளுமுள்ளு , கேமரா உடைப்பு , கேமரா மேன் படுகாயம் தனியார் தொலைக்காட்சி நிலையத்தில் டிபன் பாக்ஸ் வெடிகுண்டு வீச்சு என்று தேசிய அளவில் பரபரப்பான செய்தியானது அன்று ! அந்த டிவி சேனல் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க காரணமாக இருந்திருக்கிறது என்கிறார்கள் காவல்துறையினர் !
இது போன்ற தரம் தாழ்ந்த நிகழ்ச்சிகளை தொகுத்தளிப்பது தேவையே இல்லாத ஒன்று !
IIT நாட்டின் தலைசிறந்த அறிவுப் பட்டறை ! அன்று IIT யின் பேராசிரியர் ஒருவர் ஒரு பத்திரிகையின் போட்டோகிராபரை அடித்துவிட்டார் என்று அபாண்டமாக பழி போட்டு கேம்பஸை கதி கலக்கி , அவரை மண்டியிட வைத்திருக்கிறார்கள் !
செய்தி வெளியிடும் தரமான சேனல்கள் , தகாத செயல்களில் ஈடுபடக்கூடாது என்கின்றனர் மகளிர் கூட்டமைப்பினர் ! என்ன செய்வது ? போட்டி சேனல்களை புறந்தள்ளி தான் பிழைப்பு நடத்த வேண்டி இருக்கிறது இன்று ! குற்றம் நடந்த அடுத்த நொடியே காவல்துறைக்கு செய்தி சேரும் முன்பே இன்பார்மர்கள் உள்ள செய்தியாளருக்கு தான் முதல் தகவல் கொடுக்கப்படுகிறது ! ஆனால் தற்போது
மீடியாக்கள் மீது பொதுமக்கள் கொண்டுள்ள நம்பிக்கை நாளுக்கு நாள் நலிவடைந்து கொண்டே வருகிறது ! வெறும் பரபரபரப்புக்காகவும் , சர்க்குலேஷனில் சாகசத்தை காட்டவும் , TRP ரேட்டை தக்க வைத்துக் கொள்வதற்காகவும் , நம்பர் ஒன் என்ற அந்தஸ்தை எட்டிப் பிடிப்பதற்காகவும் பத்திரிகைகள் தங்கள் தர்மத்தை மீறி தரம் தாழ்ந்து சென்று கொண்டு விடக் கூடாது என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது !
பொதுவாகவே போலீசாரின் பெர்ஃபார்மன்ஸ்சை கேவலமாக கமெண்ட் அடிக்கும் பெரிய பேனர் பத்திரிகைகளின் கட்டிங்கை கவனத்தோடு சேகரித்து வைப்பார்கள் ஐஎஸ் காரர்கள் ! கைகளில் என்றாவது ஒருநாள் சிக்காம போய் விடுவார்களா என்று கங்கணம் கட்டிக்கொண்டு காத்திருப்பார்கள் உயர் அதிகாரிகள் !
ஆனால் ஏதாவது ஒரு வழியில் இவர்களது வலையில் வலிய வந்து விழுந்து விடுவார்கள் பத்திரிகையாளர்கள் ! அடுத்த நொடியே IPC செக்க்ஷன்கள் அதிரடியில் வேகம் பிடிக்கும் ! பிரபலமான பல பத்திரிகைகளையும் பதம் பார்த்திருகிறது !
2021 ஆம் ஆண்டில் கடற்கரை சாலையில் திமுக நடத்திய பேரணியில் கலவரம் வெடித்தது ! பிரபல சில செய்தி நாளிதழ்கள் எதிராக செய்திகளை தொடர்ந்து வெளியிட்டிருந்த காலம் அது ! கலவரத்தில் செய்தி சேகரிக்கச் சென்ற அந்த நிருபரையும் ஆஜ் தக் டிவியின் பெண் நிருபரையும் சுட்டிக்காட்டி கண் சிமிட்டினார் ஒரு காவல்துறை உயர் அதிகாரி !
அடுத்த நொடியே தடியோடு ஓடிவந்த DSP காவலர்கள் இரண்டு செய்தியாளர்களையும் ரவுண்டு கட்டி அடிக்க தொடங்கினார்கள் ! பெண் நிருபரின் கன்ணம் வீங்கிவிட்டது ! தினப் பத்திரிகை நிருபரின் முதுகு தோல் உரிந்து விட்டது ! அப்போது கமிஷனர் முத்துகருப்பன் அவரிடம் காட்டி முறையிட்டபோது , அய்யய்யோ சாரி ! தெரியாம நடந்து போச்சு ! என்று உள்ளுக்குள் சிரித்துக் கொண்டே ஆழ்ந்த அனுதாபத்தை அள்ளி தெளித்தார் !
2000 ஆண்டின் துவக்கத்திலிருந்தே ஆணையருடன் பல்வேறு தருணங்களில் கருத்து வேறுபாடு கொண்டு, காரசாரமான மோதலை வளர்த்துக் கொண்டனர் நிருபர்கள் ! விமர்சனங்களை தாங்கிக் கொள்ள முடியாமல் சில ஆணையர்கள் நிருபர்களை விரோதிகளாகவே பார்க்கத் தொடங்கினர் ! இரு தரப்பினர்களுக்கும் இடையே இருந்த இதய பூர்வமாக உறவு எரிமலையாய் வெடிக்க ஆரம்பித்தது !
எழுத்தறிவித்தவன் இறைவன் எனப்படும் " கல்வித் துறையிலும்" காமுகர்கள் ! கடவுளுக்கு நிகராக மக்கள் கையெடுத்து கும்பிடும் " "மருத்துவத்துறையிலும் ", கருப்பாடுகள் " கண்ணீர் சிந்தும் மக்களின் கடைசி நம்பிக்கையான "நீதித்துறையிலும் " சில குமாரசாமிகள் ! ஜனநாயகத்தின் தூண்களில் ஒன்றான " பத்திரிகை துறையிலும் " பல புல்லுருவிகள் என்று மூன்று புனிதமான துறைகளுமே என புதைக் குழியில் சிக்கி சீரழிந்து கொண்டிருக்கிறது !
கடந்த தேர்தலில் கணிசமான மீடியாக்கள் காசுக்கு ஆசைப்பட்டு தன் கண்ணியத்தை இழந்திருக்கிறது ! தங்களின் தொழில் தர்மத்தையும் தொலைத்திருக்கிறது !
"உலகம் இதிலே அடங்குது ! உண்மையும் பொய்யும் விளங்குது ! கலகம் வருது தீருது ! அச்சு கலையால் உலகம் மாறுது !"என்று பத்திரிகை குறித்து கவிஞரின் பாடல்லொன்று
தென்றலாய் வெளிப்பட்டு நம்முடைய கருத்தை சரி என்றது, நிலவு ரசனைக்காண பூமிக்கு அறிவியல் ஆன்மீக நம்பிக்கை அதில் கூட மோசடி மனிதர்கள், எதை நம்புவது, எதை நம்பக்கூடாது என சிந்திக்கப் பழகாத இரண்டு தலைமுறை மக்கள், இருக்கும் வரை நாமகிரிப்பேட்டை சரவணன் செவ்வாய் கிரகத்தில் நிலம் வாஙகியதாக போலியாகப் பெருமைப் படலாம். ஆனால் உண்மை இதழ்கள் என்றும் உறங்காது,






















கருத்துகள்