போலி வைத்தியர் சிகிச்சைக்கு போலீஸ் மாமூல் ஆய்வாளர் மற்றும் காவலர் பணியிடை நீக்கம்.
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி காவல் ஆய்வாளர் சீனிபாபு மற்றும் காவலர் ஜெயராஜ் ஆகியோர் லஞ்சம் வாங்கிய புகார் அடிப்படையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். சிவகங்கை மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.
புத்தூர் கட்டு பாண்டி என மாற்றுப் பெயரில் மருத்துவம் படிக்காமல் நுட வைத்தியம் பார்க்கும் நாட்டு மருத்துவர் நெடுஞ்செழியன் என்பவர் சமீபத்தில் போலி மருத்துவர் என கைது ஆனார் பின் ஜாமீனில் வெளிவந்தார் தற்போது சமூக வலைதளங்களில் ஒரு வீடியோவை அவர் வெளியிட்டதில், தன்னிடம் மக்கள் மருத்துவம் பார்க்க அனுமதிப்பதற்கு
காவல் ஆய்வாளர் சீனிபாபு ஒவ்வொரு மாதமும் லஞ்சம் கேட்டு மிரட்டுவதாகவும், தராவிட்டால் பொய் வழக்குப் போடுவதாக மிரட்டுவதாகவும் குற்றம் சாட்டியிருந்தார். அத்துடன் நான்கு மாதங்களுக்கு முன்பு காவலர் ஜெயராஜ் தன்னிடம் லஞ்சம் வாங்கியதற்கான CCTV பதிவு காட்சிகளையும் அவர் ஆதாரமாக வெளியிட்டார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானதைத் தொடர்ந்து மாவட்டக் காவல் துறையின் அதிகாரிகள் நடத்திய முதற்கட்ட விசாரணையில் குற்றச்சாட்டு உறுதியானதையடுத்து காவல்துறை ஆய்வாளர் சீனிபாபு மற்றும் தற்போது கல்லல் காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் காவலர் ஜெயராஜ் ஆகிய இருவரையும் தற்போது பணியிடை நீக்கம் செய்து மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளர் உத்தரவிட்டார். இந்த நடவடிக்கைகளின் பின்னணி விபரம் மற்றும் உண்மை நிலவரம் :- அதிமுகவைச் சேர்ந்த ஆ. தெக்கூர் நாகலிங்கம் மகன்
நெடுஞ்செழியன் இவர் பள்ளிக் கல்வியை சரியான முறையில் தொடராமல் துவரங்குறிச்சியில் உள்ள போலி புத்தூர் நுட வைத்திய மருத்துவமனை என்ற பெயரில் ஒருவர் நடத்திய நிலையில் அவரிடம் கம்பவுண்டர் போல பயிற்சி எடுத்து பின் இவரே மருத்துவராக மாறி உதயகீதம் படத்தில் நடிகர் கவுண்ட மணி வைத்த உண்டியல் போல பல கிளைகள் திறந்த போதே காவல்துறை வருமான வரித்துறை மற்றும் சுகாதாரத்துறை சுதாரித்து இவர்மீது நடவடிக்கை எடுத்திருந்தால் இது போன்ற போலி நபர்களைத் தடுத்திருக்க முடியும், ஆனால் இதுவரை எடுக்காமல் இருக்கக் காரணம் விசாரணை முடிவில் இனிமேல் தானே தெரியும்.
முறையான மருத்துவப் படிப்பு படிக்காமல், மருத்துவக் கவுன்சிலில் பதிவு செய்யாமல் மருத்துவம் பார்ப்பது சட்டப்படி கடுமையான ஜாமீனில் வெளிவர முடியாத குற்றமாகும். இத்தகைய போலி மருத்துவர்கள் மீது தேசிய மருத்துவ ஆணையச் சட்டம், 2019 (National Medical Commission Act) தேசிய மருத்துவ ஆணையச் சட்டத்தின் பிரிவு 34 மற்றும் 54-ன் கீழ், அங்கீகரிக்கப்பட்ட மருத்துவப் படிப்பு படிக்காமல் அலோபதி மருத்துவம் பார்ப்பது சட்டவிரோதமாகும். சட்டப்பிரிவு: Section 34(2).தண்டனை: 1 ஆண்டு வரை சிறைத் தண்டனை அல்லது ரூபாய் 5 லட்சம் வரை அபராதம், அல்லது இவை இரண்டும் சேர்த்து விதிக்கப்படலாம். மேலும் பாரதிய நியாய சன்ஹிதா அதற்கு முன் இந்திய தண்டனைச் சட்டம் போலி மருத்துவர்கள் மீது காவல் துறையினர் பொதுவாகப் பதிவு செய்யும் முக்கிய குற்றவியல் பிரிவுகள்:ஆள்மாறாட்டம் செய்தல் மருத்துவர் இல்லை என்றாலும், தன்னை ஒரு மருத்துவர் போலக் காட்டி ஏமாற்றுவதற்கு
BNS பிரிவு 319 (பழைய IPC 419)-ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்படுகிறது. இதற்கான தண்டனை 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை ஆகும்.ஏமாற்றுதல் நோயாளிகளை ஏமாற்றிப் பணம் பறித்தல் மற்றும் உயிருக்கு ஆபத்தான சிகிச்சை அளிப்பதற்கு BNS பிரிவு 318 (பழைய IPC 420)-ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்படுகிறது. இதற்கான தண்டனை 7 ஆண்டுகள் வரை கடுமையான சிறைத் தண்டனை மற்றும் அபராதம் ஆகும்.போலி ஆவணங்களை உருவாக்குதல் போலி மருத்துவச் சான்றிதழ்கள் அல்லது பட்டங்களைப் பயன்படுத்தினால் BNS பிரிவு 336 & 340 (பழைய IPC 465, 468, 471) ஆகியவற்றின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.3. உயிரிழப்பு அல்லது அலட்சியம் ஏற்பட்டால்தகுதியற்ற நபர் அளித்த தவறான சிகிச்சையால் நோயாளிக்கு ஏதேனும் உயிரிழப்பு ஏற்பட்டால், அது சாதாரண மருத்துவ அலட்சியமாக கருதப்படாது. சட்டப்பிரிவு: BNS பிரிவு 106 (பழைய IPC 304A) - அலட்சியத்தால் மரணம் விளைவித்தல்.தண்டனை: போலி மருத்துவராக இருக்கும் பட்சத்தில், அது திட்டமிடாத கொலைக் குற்றமாக (Culpable Homicide) மாற்றப்பட்டு 5 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை கடுமையான சிறைத் தண்டனை விதிக்கப்பட வாய்ப்புகள் அதிகம். மருந்துகள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் சட்டம், 1940 ஆம் ஆண்டு முறையான தகுதி மற்றும் உரிமம் இல்லாமல் நோயாளிகளுக்கு ஆங்கில மருந்துகளை அல்லது ஊசிகளைப் பரிந்துரைப்பதும், விற்பனை செய்வதும் இச்சட்டத்தின் கீழ் குற்றமாகும். இதற்கும் தனியாகச் சிறைத் தண்டனையும் அபராதமும் உண்டு. தேசிய மருத்துவ ஆணையச் சட்டம், 2019 ன் பிரிவு 34 மற்றும் 54-ன்படி, இதற்கு 1 ஆண்டு வரை சிறை தண்டனை அல்லது ரூபாய் . 5 லட்சம் வரை அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படலாம். தேசிய மருத்துவ ஆணையச் சட்டம் (NMC Act, 2019 - பிரிவு 34 & 54): உரிய தகுதியோ அரசிடம் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவப் பதிவோ இல்லாமல் மருத்துவம் பார்ப்பவர்களுக்கு 1 ஆண்டு சிறை தண்டனை அல்லது ரூபாய் 5,00,000 வரை அபராதம், அல்லது இவை இரண்டும் விதிக்கப்படும். இந்த நிலையில் காவல்துறை ஆய்வாளர் லஞ்சம் கேட்டு தொந்தரவு,
ஒரு மாதம் லஞ்சம் கொடுத்ததாகவும், மாதம் மாதம் லஞ்சம் கொடுத்தால் தான் தொழில் செய்ய முடியும் கொடுக்காவிட்டால் பெய் வழக்கு போட்டு தொழில் செய்ய விடாமல் தடுத்து விடுவேன் என ஆய்வாளர் மிரட்டியதாக புத்தூர் கட்டு பாண்டி என்ற அடைமொழி கொண்ட நெடுஞ்செழியன் என்பவர் வீடியோ வெளியிட்டார்
முன்னாள் காவல்துறை ஆய்வாளர் தயாளனுக்கு பணம் கொடுத்ததாக சிசிடிவி காட்சி வெளியிட்ட நிலையில் சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி காவல் நிலைய ஆய்வாளர் சீனிபாபு, அங்கு தொழில் செய்பவர்களிடம் லஞ்சம் கேட்டு மிரட்டிய வீடியோவும், மற்றொரு முன்னாள் காவல்துறை ஆய்வாளருக்கு ரூபாய் . 1 லட்சம் லஞ்சம் கொடுத்த சிசிடிவி (CCTV) காட்சியும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியது. இந்த லஞ்ச விவகாரத்தின் வைரல் வீடியோவின் பின்னணி மாதாந்திர மாமூல் மிரட்டல் என்பது நாட்டு மருத்துவத் தொழில் செய்து வரும் 'புத்தூர் கட்டு' பாண்டி ன்ற நெடுஞ்செழியன் என்ற போலி வைத்தியரிடம் , லஞ்சப் பணம் தர மறுத்தால் பொய் வழக்குப் போட்டு, தொழிலை செய்ய விடாமல் முடக்கி விடுவேன் என ஆய்வாளர் மிரட்டியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதற்கிடையே, அங்கு பணியாற்றிய முன்னாள் ஆய்வாளர் ஒருவருக்கு, வழக்கை முடிக்க ரூபாய் . 1 லட்சம் லஞ்சம் கைமாறியதாக அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சியும் தற்போது அடுத்தடுத்து வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த விவகாரம் விஸ்வரூபம் காட்டியதைத் தொடர்ந்து, சிவகங்கை மாவட்ட ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் மற்றும் மாவட்டக் காவல்துறை இணைந்து பொதுமக்கள் மற்றும் வணிகர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டனர்.காவல்துறையினர் யாராவது லஞ்சம் கேட்டால், பொதுமக்கள் உடனடியாக கீழே உள்ள எண்களைத் தொடர்பு கொண்டு ரகசியமாகப் புகார் அளிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது: புகார் எண் WhatsApp 7598788108 புகார் அளிப்பவர்களின் விபரங்கள் முற்றிலும் ரகசியமாக வைக்கப்படும். என்பதே . ஆனால் தற்போது நிலைமை வேறு, உண்மையான ஆந்திராவில் சித்தூர் அருகில் உள்ள புத்தூர் ராஜபாளையம் கிராமத்தில் பாரம்பரிய ஜமீன் கே. கேசவ ராஜு என்பவரால் 1881-ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்ட பாரம்பரிய எலும்பு முறிவு மருத்துவ மூலிகை முறையில் தான் புத்தூர் கட்டு உண்மை உள்ளது, அது அந்தக் குடும்பம் தவிர வேறு யாரும் அறியாத மூலிகை ஆகும். இது ஒரு பாரம்பரிய மருத்துவ முறை என்பதால், இதற்கு எந்த ஒரு தனி நபருக்கும் காப்புரிமை அல்லது பிரத்யேகப் பெயர் உரிமை கிடையாது. பல குடும்ப வாரிசுகளும் பாரம்பரிய மருத்துவர்களும் இந்த முறையைப் பயன்படுத்தி போலியாக பல ஊர்களில் சிகிச்சை அளிக்கின்றனர். ஆந்திரப் பிரதேசம், சித்தூர் மாவட்டம், புத்தூர் அருகில் உள்ள ராஜப்பாளையம் (ஈசலாபுரம்). மூலிகைகள் மற்றும் பிரத்யேக இலைகளை அரைத்து எலும்பு முறிவு உள்ள இடத்தில் கட்டுவது. பொதுவான பாரம்பரிய முறை என்பதால் பலரும் தங்கள் பெயரில் சம்பந்தா சம்பந்தம் இல்லாத பலநபர்கள் தமிழ்நாட்டு ஐயங்கார் பேக்கரி போல கிளைகளை நடத்தி வருகின்றனர். எலும்பு முறிவு ஏற்பட்ட பிறகு உடைந்த எலும்புகள் சேர்ந்திருந்தால் அவை தானாகவே ஒட்டிக்கொள்ளும். முறிந்த எலும்புகளை சரியான பொசிஷனில் வைப்பது மட்டுமே நாம் செய்ய வேண்டியது. இதற்காகத்தான் எலும்பு முறிவுக்கு கட்டு போடப்படுகிறது. புத்தூர் கட்டைப் பொறுத்தவரை இந்த ஒழுங்குமுறை இருக்காது. பல்வேறு வைத்திய சாலைகள் முளைத்திருக்கின்றன. இவை அனைத்திலும் பாரம்பர்ய புத்தூர் கட்டின் தொழில்நுட்பம் பின்பற்றப்படுகிறதா... எலும்புமுறிவின் தன்மைக்கேற்ப சிகிச்சை வழங்கப்படுகிறதா? என்று பல கேள்விகள் இருக்கின்றன. முறைப்படுத்தப்படாத வைத்திய முறையாக அவை இருக்கின்றன என்பதால் கவனம் தேவை" என எச்சரிக்கிறார்கள் அலொபதி சித்தா, ஆயுர்வேதா, யுனானி மருத்துவர்கள் பலர் இதில் அடங்காத இந்தப் போலிகள் யார் என்பதை தமிழ்நாடு அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.












கருத்துகள்