பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில், இந்திய அரசிடம் மெட்டா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக மன்னிப்புக் கோரியுள்ளது தேர்வுத் தாள் வெளியானதற்கு எதிரான கடுமையான நடவடிக்கை குறித்து, கடந்த ஜூலை மாதம் 23 ஆம் தேதி அன்று பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்ட வீடியோ செய்தி, தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களிலிருந்து தவறுதலாக நீக்கப்பட்டது.
நாடாளுமன்ற நிலைக்குழு கெடு விதித்த நிலையில் பேஸ்புக்கில் இருந்து பிரதமர் நரேந்திர மோடியின் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவன தலைவர் மார்க் ஜூகர்பெர்க் 3 நாளில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டுமென நாடா ளுமன்ற நிலைக்குழு நேற்று கெடு விதித்திருந்தது. 3 நாளில் ஜூகர்பெர்க் மன்னிப்பு கேட்காவிட்டால், அவருக்கு வழங்கப்படும் சட்ட பாதுகாப்பு ரத்து செய்யப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்பட லாம் என மக்களவை செயலகத்தின் இயக்குநர் ஜோதிர்மயி, தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தில் செயலாளருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தார்.
அரசு நடவடிக்கை: நாட்டின் பிரதமரின் வீடியோ நீக்கப்பட்டதற்கு மெட்டா கூறிய "தொழில்நுட்பக் கோளாறு" என்ற விளக்கம் போதுமானதாக இல்லை என மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகம் (MeitY) தெரிவித்தது. இதனால் மெட்டா நிறுவனத்தின் உயர்மட்ட அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இதைத்தொடர்ந்து, மெட்டா நிறுவனத்தின் உலகளாவிய விவகார அதிகாரி (Chief Global Affairs Officer) ஜோயல் கப்லான் தலைமையிலான குழுவினர், புதுடெல்லியில் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவை நேரில் சந்தித்துப் பேசினார், இந்தச் சந்திப்பின் போது, தற்செயலாக நடந்த இந்தத் தவறுக்காக மெட்டா தலைவர் மார்க் ஜுக்கர்பெர்க் தரப்பிலிருந்து அமைச்சரிடம் பகிரங்க மன்னிப்புக் கோரப்பட்டது. மேலும், அந்த வீடியோ உடனடியாக மீண்டும் தளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டதாகவும் விளக்கமளிக்கப்பட்டது. கரப்பான்பூச்சிகளின் ஆதரவு காரணமாக
மெட்டா நிறுவனம் தனது தவறை ஒப்புக்கொண்டதுடன், ஒரு குறிப்பிட்ட பார்வையாளர்களை இலக்காகக் கொண்ட கட்டண விளம்பரங்கள் மூலம் ஏராளமான சட்டவிரோத நடவடிக்கைகள் தங்களது சமூக ஊடக ஆப்கள் மூலம் பரப்பப்பட்டதை ஒப்புக்கொண்டது.
ஊடக செய்தி அறிக்கைகளின் படி, பணத்தைக் கொடுத்து தவறான செய்திகளை முன்னிறுத்தி மக்களைத் திசைதிருப்ப முயன்றதாகக் கூறப்படும் 180 இன்ஃப்ளூயன்சர்களையும் 3 ஏஜென்சிகளையும் டெல்லி காவல்துறை அடையாளம் கண்டுள்ளது.
பாரதப் பிரதமர் நரேந்திர மோடியை அவதூறாகப் பேசிய பல போராட்டக்காரர்களும், இது போன்ற கோஷங்களை போட தாங்கள் கட்டாயப்படுத்தப்பட்டதாகக் கூறியுள்ளனர்.
இது உண்மையாக நிரூபிக்கப்பட்டால், அபிஜீத் திப்கேவும் ஒட்டுமொத்தமாக கரப்பான் பூச்சிகள் குரூப் நபர்கள் மீது நடவடிக்கை பாயலாம்,
அதுமட்டுமில்லாமல் உள்துறை அமைச்சர் , அமித் ஷா அவர்கள் FCRA சட்ட திருத்தத்தை இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யவுள்ளார்.
ஏன் FCRA வேணும் என விவாதம், இதை பலர் எதிர்க்கும் காரணம் அவர்கள் இதுவரை செய்த தவறுகள் இனி சட்டப்படி தடுக்கும் நோக்கம் என்பது தேசப்பற்றாளர்களுக்குத் தெரியும் ஆனால் cjp நடத்தும் அவர்களுக்குத் தெரியவில்லை,




கருத்துகள்