முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

துரை தயாநிதி அழகிரிக்கு மத்திய அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்து உண்மை அறிய நீதிமன்றம் உத்தரவு

ஒலிம்பஸ் கிரானைட் குவாரி  கீழவளவு பகுதியில் செயல்பட்ட கிரானைட் சுரங்கமாகும்.


2012 ஆம் ஆண்டில் மதுரையில் வெளிச்சத்திற்கு வந்த ரூபாய் . 13,000 கோடிக்கும் அதிப்படியான பிரம்மாண்ட கிரானைட் முறைகேடு வழக்குகளில் இந்த நிறுவனமும் முக்கியப் பங்கு வகித்தது. மதுரை மாவட்டம் மேலூர் தாலுகா, கீழவளவு கிராமத்தில் சுமார் 1.21 ஹெக்டேர் பரப்பளவில் இந்த குவாரி அமைந்திருந்தது, கடந்த 2008 ஆம் ஆண்டில், அங்கிருந்த நிலங்களில் 20 ஆண்டுகள் குத்தகைக்கு கிரானைட் கற்களை வெட்டி எடுக்க இந்த நிறுவனம் அரசிடம் அனுமதி பெற்றது. முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரியின் மகன் துரை தயாநிதி இந்த ஒலிம்பஸ் கிரானைட்ஸ் நிறுவனத்தில் ஒரு பங்குதாரராக  இருந்தார்.

2011-12 ஆம் ஆண்டு காலகட்டங்களில், இந்த நிறுவனம் தனக்கு ஒதுக்கப்பட்ட எல்லைகளைத் தாண்டி, அரசுக்குச் சொந்தமான புறம்போக்கு நிலங்கள் மற்றும் கனிம வளங்களைச் சட்டவிரோதமாக வெட்டி எடுத்ததாகப் புகார்கள் எழுந்தன. 2012  ஆம் ஆண்டில் மதுரை மாவட்ட ஆட்சியராக இருந்த உ.சகாயம் ஐ.ஏ.எஸ், கிரானைட் கொள்ளை குறித்து விசாரணை நடத்தினார். அதன் தொடர்ச்சியாக வந்த மாவட்ட ஆட்சியர் அன்சுல் மிஸ்ரா முன்னிலையில் ஒலிம்பஸ் கிரானைட் நிறுவனத்தில் அதிரடி சோதனைகளும் நடத்தப்பட்டு, குவாரிக்கு சீல் வைக்கப்பட்டு மூடப்பட்டது. சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் (PMLA) அமலாக்கத்துறை ஒலிம்பஸ் கிரானைட் நிறுவனத்தின் மீது தனியாக வழக்கு பதிவு செய்து, அந்நிறுவனத்தின் பல கோடி மதிப்புள்ள சொத்துக்களை முடக்கியது.

இந்தக் குவாரி தொடர்பான முறைகேடு மற்றும் பண மோசடி வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையிலும், சிறப்பு நீதிமன்றங்களிலும் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வருகின்றன. முன்னாள் மத்திய அமைச்சரும் முன்னாள் திமுக தலைவர் மு. கருணாநிதி மகனுமான மு.க.அழகிரி அவரது பேரன் துரை தயாநிதி மீது ரூபாய் .256.44 கோடி மதிப்பிலான சட்டவிரோதப் பணப்பரிவர்த்தனை வழக்கு தற்போது நிலுவையில் உள்ளது. மதுரை கிரானைட் முறைகேடு புகார்களைத் தொடர்ந்து, அமலாக்கத்துறை (ED) மற்றும் சிபிஐ (CBI) இந்த வழக்கை விசாரித்து வருகின்றன.மதுரையைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்ற கிரானைட் குவாரி முறைகேட்டில், துரை தயாநிதி பங்குதாரராக இருந்த 'ஒலிம்பஸ் கிரானைட்ஸ்' நிறுவனம் அரசுக்கு ரூபாய் .259 கோடி இழப்பு ஏற்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்ட இவ்வழக்கில் 2018-ஆம் ஆண்டு மேலூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில்

5,191 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது. அதில் மூன்றாவது குற்றவாளி துரை தயாநிதி உடல்நிலையைக் காரணம் காட்டி இந்த வழக்கிலிருந்து தன்னை விடுவிக்கக் கோரி துரை தயாநிதி தரப்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதிக்கு மத்திய அரசின் பாண்டிச்சேரி ஜிப்மர் (JIPMER) மருத்துவமனையில் மீண்டும் மருத்துவப் பரிசோதனை செய்ய மதுரை சிபிஐ நீதிமன்றம் தற்போது உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆகஸ்ட் 29, 2026 இன்று நீதிமன்றம் பிறப்பித்த இந்த உத்தரவின் பின்னணி பண மோசடி வழக்காகும், மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் கீழவளவு பகுதியில் சட்டவிரோதமாக கிரானைட் கற்கள் வெட்டி எடுத்ததன் மூலம் ரூபாய் .256.44 கோடி பணமோசடி செய்ததாக அமலாக்கத்துறை (ED) தொடர்ந்த வழக்கில் துரை தயாநிதி 3-வது குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ளார்.  கடந்த 2023-ஆம் ஆண்டில் ஏற்பட்ட மூளை ரத்தக் கசிவு பாதிப்பால், தமக்கு பக்கவாதம் மற்றும் ஞாபகசக்தி மறதி உள்ளதாகவும், இதனால் விசாரணையை எதிர்கொள்ளும் நிலையில் தான் இல்லை என்றும் துரை தயாநிதி தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டு வந்தது. ஆனால் இந்த நிலையில் நீதிமன்ற உத்தரவிற்கான காரணம்    சென்னை சேப்பாக்கம் விளையாட்டு மைதானத்தில் துரை தயாநிதி நேரில் சென்று கிரிக்கெட் போட்டியைப பார்த்த வீடியோவும், அவர் தேர்தலில் வாக்களித்த வீடியோவும் அண்மையில் வெளியானது. இதனைச் சுட்டிக்காட்டிய அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ தரப்பு, அவருக்கு மீண்டும் மருத்துவப் பரிசோதனை நடத்த வேண்டும் என மனு தாக்கல் செய்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சண்முகவேல், "கிரிக்கெட் போட்டி பார்ப்பதும், வாக்களிப்பதும் சாத்தியப்படும் போது, விசாரணையை எதிர்கொள்வதில் என்ன தடை இருக்க முடியும்?" எனக் கேள்வி எழுப்பினார். இதனடிப்படையில், துரை தயாநிதியின் உடல் மற்றும் மனநிலையைத் துல்லியமாக ஆய்வு செய்ய பான்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் மீண்டும் மருத்துவப் பரிசோதனை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.  ஒரு  முன்கதை:- காலஞ்சென்ற திமுகவின் முன்னாள் முதல்வர் மு. கருணாநிதிக்கு ஏற்பட்ட முதல் அவமானம்  அவரது முதல் மனைவி மகன் மு. க.முத்து, காலஞ்சென்ற முன்னால் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவைச் சந்தித்தது. வறுமையில் தான் வாடுவதாகச் சொல்லி 5 லட்சம் பணத்தைப் பெற்றுக்கொண்டார்! அடுத்து மதுரை மாநகராட்சி கவுன்சிலர் கம்யூனிஸ்ட் கட்சியின் சௌராஷ்ட்ரா பெண்மணி லீலாவதி படுகொலையில் சிலர் கைது செய்யப்பட்டதும், அவர்கள் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டதும் நடந்தது. தண்டனைக்கைதிகளான அவர்கள் முன்கூட்டியே விடுதலை ஆனது வரை சர்ச்சைகளாகத் தொடர்ந்தது!

தென் மாவட்டத்தில் தன்னுடைய பேச்சைக் கேட்காமல் மு. க.அழகிரி தன்னிச்சையாகச் செயல்பட்டதாகச் சொல்லி, அவரைக் கட்சியை விட்டே 2000-ம் ஆண்டில் நீக்கினார் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி. அதிமுக ஆட்சி மாறி மு.கருணாநிதி கைது செய்யப்பட்ட பிறகு தான் மீண்டும் மு.க.அழகிரி குடும்பத்துக்குள் சேர்த்துக்கொள்ளப்பட்டார்!

தி.மு.க-வின் முன்னாள் அமைச்சர் தா.கிருஷ்ணன் கொலை வழக்கில் மு. க.அழகிரி சேர்க்கப்பட்டு, கைது செய்யப்பட்டார். அந்த வழக்கு விசாரணையின் இறுதியில் மு. க.அழகிரி விடுதலை செய்யப்பட்டார். நீதிமன்றம் விடுவித்தாலும்   இன்று வரை தென் மாவட்டங்களில் மறக்க முடியாத குற்றச்சாட்டு இது!

முன்னாள் முதல்வர், தற்போது திமுக தலைவர் மு. க.ஸ்டாலினுக்கு மிக நெருக்கமாக இருந்த அண்ணா நகர் ரமேஷின் தற்கொலை இன்று வரை மர்மம் உடைபடாத ரகசியம். அந்தத் தற்கொலைக்குப் பரிகாரமும் செய்யப்படவில்லை. பச்சைக் குழந்தைகள் மூவரும் மனைவியுமாக ரமேஷுடன் இறந்த ஐந்து மரணங்களுக்கான குற்றவாளிகளை ஆட்சியிலிருந்த ஐந்து ஆண்டுகளில் திமுக சார்பாக கண்டுபிடிக்கவும் இல்லை. அதனால தண்டிக்கப்படவும் இல்லை!

மதுரை தினகரன் நாளிதழில் வெளியான கருத்துக் கணிப்பைத் தொடர்ந்து அந்த அலுவலகம் எரிக்கப்பட்டது. வினோத்குமார், கோபிநாத், முத்துராமலிங்கம் ஆகிய மூவரது மரணங்கள் தொடர்பான வழக்கு மேல்முறையீடு இன்று வரைக்கும் இருக்கிறது! திமுக சார்பாக மத்திய அமைச்சர் பதவியை மு. க.அழகிரி, தயாநிதி மாறன், கனிமொழி ஆகிய மூவருக்கும் வாங்குவதற்காக முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி அப்போது டெல்லிக்குச் சென்று காத்திருந்ததும், அதைவைத்து ஆங்கில, ஹிந்தி செய்தி ஊடகங்கள் கமென்ட் அடித்ததும் நடந்தது. அதுவரை மரியாதைக்குரிய மனிதராக டெல்லி ஊடகங்களில் சொல்லப்பட்ட திமுக முன்னாள் தலைவர் மு.கருணாநிதி, முதன்முதலாக அப்போது தான் ஏளனம் செய்யப்பட்டார், இந்த நிலைக்கு யார்? காரணம், மேலும் திருப்பத்தூர், மேலூர் இடையில் இருந்த மலைகளை முழுங்கிய மஹாதேவன்கள் யார் யார் என்பதை மூத்த ஐஏஎஸ் அதிகாரியாக இருந்த உ.சகாயம் அறிவார், தற்போது உள்ள கனிமவளத்துறை அமைச்சரும் அறிவார், மக்களும் அறிவார்கள், ஆனால் சட்டம் சில ஊழல் பணக்கார அரசியல் வாதிகளுக்கு ஆதரவாக உள்ளதோ என்ற சந்தேகம் பல மூத்த வழக்கறிஞர்களுக்கே இருக்கும் போது நமக்கு இருப்பதில் தவறில்லை, என்ன தான் சட்டத்தை இவர்கள் தவறாக வளைத்தாலும் ஒருநாள் நீதி கிடைக்கும் அதுவே சாமானியன் நீதி தேவன் மீதான நம்பிக்கை, அது ஆரம்பம் தான் தற்போது வந்த உத்தரவு.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பாண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார்கள் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும்   இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதம்  ஐந்தாம் தேதியில் துவக்கம். ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, சன்னதிகளில் வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்றிரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...