ஹிந்து சமய அறநிலையத்துறை கோயில் பரம்பரை சாரா அறங்காவலர் தேர்வுக் குழுவின் தலைவராக மயிலம ஆதினம் நியமனம்
ஹிந்து சமய அறநிலையத்துறை கோயில் பரம்பரை சாரா அறங்காவலர் தேர்வுக் குழுவில் திரைப்படத் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரம் உறுப்பினர் ஆக நியமனம்.
பொம்மபுரம் ஆதீனம் சிவஞான பாலய சுவாமிகள் தலைமையில் 7 பேர் கொண்ட குழுவை அமைத்து அரசு உத்தரவு ; ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சம்பத், சொற்பொழிவாளர் சுமதி ஸ்ரீ ஆகியோரும் குழுவில் இடம்பெற்றனர் கோயில் பரம்பரை சாரா அறங்காவலர் தேர்வுக் குழுவில் திரைப்படத் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரம் உறுப்பினர் மயிலம் பொம்மபுர ஆதீனம் தலைமைமில் குழு தமிழ்நாட்டில் விழுப்புரம் மாவட்டம், மயிலம் அமைந்துள்ள ஒரு பழமையான வீரசைவ சமய மரபைச் சார்ந்த ஆதீனம் புதுச்சேரி மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் சைவ சமயத்தையும், தமிழ் மொழியையும் வளர்ப்பதில் இந்த ஆதீனம் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது.
சிவபெருமானின் கணங்களில் ஒருவரான சங்குகன்னர் என்பவரின் அவதாரமாக கருதப்படும் பாலசித்தர் என்பவரால் இந்த ஆதீனம் தோற்றுவிக்கப்பட்டது. புகழ்பெற்ற மயிலம் முருகன் கோயில் இந்த ஆதீனத்தின் நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வருகிறது, தற்போது 19-ஆவது பட்டமாக ஸ்ரீலஸ்ரீ சிவஞான பாலய சுவாமிகள் ஆதீனத் தலைவராகப் பொறுப்பேற்று ஆன்மிகப் பணிகளை வழிநடத்தி வருகிறார். அவர் தற்போது அறங்காவலர் தேர்வுக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார் கிராமப்புற மாணவர்கள் பயன்பெறும் வகையில் கல்வி நிறுவனங்களையும்,
தமிழ்க் கல்லூரிகளையும் ஆதீனம் நடத்தி வருகிறது.நூல் வெளியீடு: வீரசைவ ஆகமங்கள், சமய இலக்கியங்கள் மற்றும் தமிழ் நூல்களை அச்சிட்டுப் பரப்பும் பணிகளைத் தொடர்ந்து மேற்கொள்கிறது. மேலும் தேர்வுக்குழு உறுப்பினராக நியமிக்கப்படட அர்ச்சனா கல்பாத்தி, பிரபல தமிழ் திரைப்படத் தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனர் கல்பாத்தி எஸ். அகோரத்தின் மகளாவார். இவர் ஏஜிஎஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாகவும் (CEO),
பல படங்களின் படைப்புத் தயாரிப்பாளராகவும் இருந்து வருகிறார்.ஏஜிஎஸ் மற்றும் அர்ச்சனா கல்பாத்தி நிறுவனம் சார்பாக பிகில்', மற்றும் விஜயின் 'தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்' (GOAT) லவ் டுடே', 'டிராகன்' மற்றும் அண்மையில் வெளியான 'பிளாஸ்ட்' உட்பட பல முன்னணி தமிழ்த் திரைப்படங்களை அர்ச்சனா கல்பாத்தி தயாரித்துள்ளார், கல்பாத்தி' என்பது கேரளா மாநிலம் பாலக்காட்டில் உள்ள கிராமத்தின் பெயராகும். அங்கு புகழ்பெற்ற விஸ்வநாதசுவாமி கோவில் (கல்பாத்தி ரதோர்சவம் திருவிழா புகழ்பெற்றது) அமைந்துள்ளது. எனினும், அந்த கோவிலின் நிர்வாகத்திலோ அல்லது தமிழகத்தின் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களிலோ இவர் அறங்காவலராக இதுவரை இருந்ததில்லை எனினும் தற்போது தேர்வுக் குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்,
மேலும் இந்து சமய அறநிலையத்துறை அறங்காவலர் தேர்வுக்குழு அங்கீகாரத்தை வழங்கிய தமிழ்நாடு முதல்வருக்கும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருக்கும், அதிகாரிகளுக்கும் மிக்க நன்றி. " என்னை நன்றாக இறைவன் படைத்தனன், தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே"..பர்மா விற்கு, ஆன்மிகச் சொற்பொழிவாற்ற வந்துள்ள சுமதி ஸ்ரீ தகவல்,
மேலும் நாட்டுப்புறத் திரைப்பாடகர் வேலுமுருகனுக்கும் உறுப்பினர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது, இவர் விருத்தாசலம் அருகில் ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் ஆவார்








கருத்துகள்