முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தேசத் தலைவர் நேதாஜி அஸ்தியை ஜப்பானிலிருந்து இந்தியாவுக்கு கொண்டுவர உத்தரவிடக் கோரி உச்சநீமன்றத்தில் மகள் மனு அரசுக்கு நோட்டீஸ்

சுதந்திரப் போராட்ட வீரர் தேசத் தலைவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் அஸ்தியை ஜப்பானிலிருந்து இந்தியாவுக்கு கொண்டுவர உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவில், மத்திய அரசு பதில் அளிக்குமாறு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. 


நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் 1945-ஆம் ஆண்டு நடைபெற்ற விமான விபத்தில் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. அவரது அஸ்தி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உள்ள ரெங்கோஜி ஆலயத்தில் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள தாகவும் தெரிகிறது. 

இந்த நிலையில், ரெங்கோஜி ஆலயத்தில் பாதுகாக்கப்பட்டு வரும் நேதாஜியின் அஸ்தியை அங்கிருந்து இந்தியாவுக்குக் கொண்டு வர மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி, அவரது மகள் அனிதா உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு மீதான விசாரணையின் போது, அனிதா சார்பில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி வாதிட்டார்.




இதையடுத்து, மனுவுக்கு பதில் அளிக்குமாறு மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் ஒரே மகள் அனிதா போஸ் பிஃபாஃப் ஆவார். இவர் 1942-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பிறந்தார் எமிலி ஷென்கல் இவரது தய் ஆவார். இவர் ஜெர்மனியில் உள்ள ஆக்ஸ்பர்க் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரப் பேராசிரியராகப் பணியாற்றியுள்ளார். ஜெர்மனியில் நவம்பர் மாதம் 29 ஆம் தேதி , 1942 ஆம் ண்டு பிறந்தவர நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் - எமிலி ஷென்கல் மகளாவார்,ஜப்பானில் இருக்கும் தன் தந்தையின் அஸ்தியை இந்தியாவுக்குக் கொண்டு வரக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மகள் மூத்த வழக்கறிஞர் வைத்து மனு தாக்கல் செய்துள்ளார், தனது தந்தைக்கு இந்திய மண்ணில் கண்ணியமான முறையில் இறுதிச் சடங்குகளைச் செய்ய விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார். உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு, இம்மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்டு,  இது குறித்து பதிலளிக்குமாறு மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சகங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.



அதிகாரப்பூர்வ தகவல்களின்படி, 1945 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 18 ஆம் தேதி அன்று தைவானில் நடந்த விமான விபத்தில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், நேதாஜி விபத்தில் இறக்கவில்லை என்றும், அவர் தொடர்ந்து தலைமறைவாக வாழ்ந்தார் என்றும் அவரது ஆதரவாளர்களும், பசும்பொன். உ. முத்துராமலிங்க தேவர் உள்ளிட்ட ஐ என் ஏ வீரத் தியாகிகள் மற்றும் தலைவர்களும் உறுதியாகவே நம்பினர். ரெங்கோஜி கோயிலில் இருப்பது உண்மையில் நேதாஜியின் அஸ்திதானா என்பதை உறுதிப்படுத்த டிஎன்ஏ சோதனை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையும் நீண்ட காலமாக இருந்து வருகிறது. இந்திய அரசு இந்த விவகாரத்தில் எடுக்கப் போகும் அடுத்தகட்ட நடவடிக்கை மற்றும் நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பைப் பொறுத்தே அஸ்தி இந்தியாவுக்குக் கொண்டுவரப்படுவது உறுதியாகும். இந்த நிலையில் 1982-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட சிறப்புக் குழுவின் மூலம் மன்னர் மருது பாண்டியர் சகோதரர்களுக்கு நேரடியாக வாரிசுகள் துரைசாமி தவிர யாரும் இல்லாத நிலையில் அவர் வழி உறவு இரண்டாம் மூன்றாம் வழித்தோன்றல்கள் அடையாளம் காணப்பட்டனர்.



அதில் பெண் வாரிசுகளுக்கு ஓய்வூதியம் வழங்க கோரிய வழக்குகளில் நீதிமன்றங்கள் வாரிசு உரிமையை உறுதி செய்து உத்தரவிட்டுள்ளன. இந்த நிலையில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தலைமையில் இருந்த தேசப் படை வீரர்களின் மனைவிக்கு மட்டுமே குடும்ப ஓய்வுதியம் வழங்கிய நிலையில் மற்றும் படை வீரர்களின் அடுத்த தலைமுறை வாரிசுகளுக்கும் மருதுபாண்டியர்கள் வாரிசுக்கு வழங்கப்படும் சுதந்திரப் போராட்ட கருணை ஓய்வூதியம் போல வழங்க வேண்டும் அதுவே அவர்களின் தியாகத்திற்கு செய்யும் நாட்டு மரியாதை இது குறித்து மத்திய உள்துறை நடவடிக்கை எடுத்தால் அதுவே பாஜக அரசு செய்யும் சிறப்பு.


நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உருவாக்கிய இந்திய தேசிய ராணுவம் (INA - Azad Hind Fauj), பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராடிய புகழ்பெற்ற சுதந்திரப் படை. இரண்டாம் உலகப் போரில் வெளிநாடுகளில் இருந்த இந்தியர்களைத் திரட்டி இப்படையை அவர் பலப்படுத்தினார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...

சோழப் பேரரசி வானதி எழுப்பிய மூவர் கோவில்

முதலாம் இராஜேந்திர சோழரின் தாய்  வானவன் மாதேவி எனும் அரசி வானதி, சோழர்களின் வரலாற்றில் பெரும் புகழ் மாமன்னர் அருள்மொழித் தேவன் எனும் இராஜராஜசோழச் சக்கரவர்த்தி மீது இணையில்லாத காதல் மங்கை கொடும்பாளூர் இளவரசி வானதியை "பொன்னியின் செல்வன்" கதை படித்த யாரும் மறக்க முடியாது. சோழர் கடற்படையின் பரப்பை இலங்கை வரை  சென்று வென்று வந்த வரலாற்று நிகழ்வுகளின் மூலம் குறுநில மன்னர்கள் அல்லது வேளிர்  துணை நின்றார்கள் அதில் ஈழத்துப் பட்டம்  வென்ற கொடும்பாளூர் வேளிர் மகளான வானதி இளம் வயதிலேயே தாய் தந்தையை இழந்தவர். கொடும்பாளூர் சிற்றரசன் அதாவது வேளிர் சோழ சாம்ராஜ்யத்தின் சேனாதிபதி யாகவும் இருந்த சிறிய தந்தை குறுநில மன்னர் பூதி விக்ரமகேசரியால் வளர்க்கப்பட்டவர் தான் வானவன் மாதேவி எனும் அரசி வானதி. கொடும்பாளூர் பிறந்து திருக்கோவிலூரை பின்னர் ஆண்ட மலையமானின் மகள்  “மேலும் வானவன்மாதேவி மன்னர் ராஜராஜ சோழர் மறைந்த உடன் பிரிவாற்றாமல் உடன்கட்டை ஏறி தன் உயிரை மாய்த்துக் கொண்டாள். இதை திருவாலங்காட்டுச் செப்பேடுகள் மூலம் அறியலாம் ஈழத்தில் நடைபெற்ற யுத்தத்திற்காக கொடும்பாளூர்  வேளிர் கடல...