முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

எம் எல் ஏ காடடுமன்னார் கோவில் எல் இ. ஜோதிமணி கோரிக்கை முதல்வர் கவனம் பெற்றது

காட்டுமன்னார் கோவில் சட்டமன்றத் தனித் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரான  ஜோதிமணி,

சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அரசு வாகன வசதி கார் தர வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.ஆகஸ்ட் 12, 2026 அன்று நடைபெற்ற சட்டமன்றக் கூட்டத்தொடரின் போது அவர் பேசிய உரையில் " சொந்த வாகனம் இல்லை: தான் தலைமைச் செயலகத்திற்கு 280 கிலோ மீட்டர் தூரத்திலிருந்து வருகிறேன். சட்டமன்றத்திற்கு வர பயணப்படிகள் வழங்கப்பட்டாலும், தனக்கு சொந்தமான வாகனம் இல்லை. வாடகை வாகனத்தில்தான் வந்து போகிறேன். தனது காட்டுமன்னார்கோவில் தொகுதி 40 கிலோ மீட்டர் சுற்றளவு கொண்டது. அங்கு மக்களைச் சந்தித்து நேரில் பணியாற்ற தன்னிடம் வாகன வசதி இல்லை. தனிச் செயலாளரை நியமித்து, அவருக்கு ஊதியம் வழங்கி வேலை வாங்குவதற்குக் கூட தன்னிடம் போதிய வசதி இல்லை. தற்போதைய சூழலில் முக்கால்வாசி எம்.எல்.ஏ-க்களின் நிலைமை இதுதான். காலணி அதாவது செருப்புக் கூட அணிய முடியாத அளவிற்கு எளிய நிலையில் இருக்கும் உறுப்பினர்களும் இந்த அவையில் இருக்கிறார்கள்,

மாநிலத்தில் லஞ்ச லாவண்யம் இல்லாத, தூய்மையான அரசு அமைய வேண்டும் என்றால், மக்கள் பிரதிநிதிகளான சட்டமன்ற உறுப்பினர்களை அரசு நலமுடன் வைத்துக் கொள்வது அவசியம். எனப் பேசினார் சபாநாயகரின் பதிலாக  ஜோதிமணி எம்.எல்.ஏ-வின் உரையைத் தொடர்ந்து பேசிய பேரவைத் தலைவர் (சபாநாயகர்), "முதலமைச்சருக்கு கிள்ளிக் கொடுக்கும் கரங்கள் அல்ல, அள்ளிக் கொடுக்கும் கரங்கள்தான்" என்று குறிப்பிட்டார். சட்டமன்ற உறுப்பினர்களின் இந்த நியாயமான கோரிக்கையை முதலமைச்சரின் கவனத்திற்கு நேரடியாகக் கொண்டு சென்று உரிய பரிசீலனை செய்யப்படும் என்று அவர் உறுதியளித்தார். சட்டமன்றத்தில் தேர்தல் நேரத்தில் இணைந்து விசிகவின் சார்பாக எம்.எல்.ஏ ஆன ஜோதிமணி பிரபலமான நபரின் மகன் இனி உண்மை நிலவரம் குறித்துக் காணலாம். எல். ஈ. ஜோதிமணி எம் எல் ஏ வின்
 தந்தை எல். இளையபெருமாள்  தமிழ்நாட்டின் புகழ்பெற்ற சமூகநீதிப் போராட்டவாதியாகவும், பட்டியலின மக்களின் உரிமைகளுக்காகப் பாடுபட்ட மூத்த காங்கிரஸ் தலைவராகவும் திகழ்ந்தவர்.

​சிதம்பரம் நாடாளுமன்ற மக்களவைத் தொகுதி உறுப்பினராக  1952 ஆம் ஆண்டு முதல் 1967 ஆம் ஆண்டு வரை தொடர்ந்து 3 முறை பணியாற்றினார்.

​1962- ஆம் ஆண்டில் பிரதமர் ஜவஹர்லால் நேரு அரசால் அமைக்கப்பட்ட அகில இந்திய தீண்டாமை ஒழிப்புக் கமிட்டியின் முதல் தலைவராக நியமிக்கப்பட்டார்.

​1979- ஆம் ஆண்டில் தமிழ்நாடு இந்திரா காங்கிரஸ் கமிட்டியின் தலைவராகப் பணியாற்றினார்.

​1980- ஆம் ஆண்டில் சென்னை எழும்பூர் தனித் தொகுதி சட்டமன்ற உறுப்பினராகவும்  தேர்ந்தெடுக்கப்பட்டார்.

​ 'L. E.'ஜோதிமணி என்பது லட்சுமணன் இளையபெருமாள் (எல். இளையபெருமாள்  மகன்) என்பதாகும்.


​சென்னை பச்சையப்பன் கல்லூரியில் புகுமுக வகுப்பையும் (PUC), 1984- ஆம் ஆண்டில்  சென்னை துறைமுகப் பொறுப்புக் கழகத்தில் டீசல் மெக்கானிக் பயிற்சியையும் முடித்துள்ளார்.

​ஓய்வுபெற்ற அரசு ஊழியரானவர், தற்சமயம் தேர்தல் நேரத்தில் வி சி கட்சியின்  சார்பில் காட்டுமன்னார்கோவில் தொகுதி சட்டமன்ற உறுப்பினராகச் செயல்பட்டு வருகிறார்.வெற்றி பெற்ற எல்.ஈ. ஜோதிமணி, தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தின்படி ரூபாய் . 85.5 லட்சம் சொத்து மதிப்பினைக் கொண்டுள்ளார். மொத்த சொத்து மதிப்பு:  ரூபாய் 85,47,835 கடன்கள் மற்றும் பொறுப்புகள்: ரூபாய் 3,42,000  தமிழ்நாட்டில் ஒரு சட்டமன்ற உறுப்பினருக்கு  அடிப்படைச் சம்பளம் மற்றும் படிகள் சேர்த்து மாதமொன்றுக்கு மொத்தம் ரூபாய் . 1,05,000 வழங்கப்படுகிறது.  தமிழ்நாட்டின் தற்போதைய அடிப்படைச் சம்பளம்  ரூபாய் . 30,000 தொகுதிப் படி  ரூபாய் . 25,000 வாகனப் படி: ரூபாய் . 25,000  ஈடுசெய்தல் படி ரூபாய் . 10,000 தொகுப்புப் படி ரூபாய் . 5,000 தொலைபேசிப் படி  ரூபாய் . 7,500 அஞ்சல் படி ரூபாய் . 2,500 மொத்த மாத ஊதியம்: ரூபாய் . 1,05,000 இதர சலுகைகளாக  தினசரிப் படி சட்டமன்றக் கூட்டத்தொடர் மற்றும் குழுக்கூட்டங்களில் பங்கேற்கும் நாட்களில் கூடுதல் தினப்படியாக ரூபாய் . 500 வழங்கப்படுகிறது. அது அல்லாது ஓய்வூதியம்  முன்னாள் எம்.எல்.ஏ-க்களுக்கு மாத ஓய்வூதியமாக ரூபாய் . 35,000 வழங்கப்படுகிறது. அரசு விதிமுறைப்படி இலவச மருத்துவ உதவிகள் மற்றும் பயணப்படி சலுகைகளும் உண்டு. சென்னை சட்டமன்ற உறுப்பினர்  வசிக்கும் வீடு உண்டு,

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...

சோழப் பேரரசி வானதி எழுப்பிய மூவர் கோவில்

முதலாம் இராஜேந்திர சோழரின் தாய்  வானவன் மாதேவி எனும் அரசி வானதி, சோழர்களின் வரலாற்றில் பெரும் புகழ் மாமன்னர் அருள்மொழித் தேவன் எனும் இராஜராஜசோழச் சக்கரவர்த்தி மீது இணையில்லாத காதல் மங்கை கொடும்பாளூர் இளவரசி வானதியை "பொன்னியின் செல்வன்" கதை படித்த யாரும் மறக்க முடியாது. சோழர் கடற்படையின் பரப்பை இலங்கை வரை  சென்று வென்று வந்த வரலாற்று நிகழ்வுகளின் மூலம் குறுநில மன்னர்கள் அல்லது வேளிர்  துணை நின்றார்கள் அதில் ஈழத்துப் பட்டம்  வென்ற கொடும்பாளூர் வேளிர் மகளான வானதி இளம் வயதிலேயே தாய் தந்தையை இழந்தவர். கொடும்பாளூர் சிற்றரசன் அதாவது வேளிர் சோழ சாம்ராஜ்யத்தின் சேனாதிபதி யாகவும் இருந்த சிறிய தந்தை குறுநில மன்னர் பூதி விக்ரமகேசரியால் வளர்க்கப்பட்டவர் தான் வானவன் மாதேவி எனும் அரசி வானதி. கொடும்பாளூர் பிறந்து திருக்கோவிலூரை பின்னர் ஆண்ட மலையமானின் மகள்  “மேலும் வானவன்மாதேவி மன்னர் ராஜராஜ சோழர் மறைந்த உடன் பிரிவாற்றாமல் உடன்கட்டை ஏறி தன் உயிரை மாய்த்துக் கொண்டாள். இதை திருவாலங்காட்டுச் செப்பேடுகள் மூலம் அறியலாம் ஈழத்தில் நடைபெற்ற யுத்தத்திற்காக கொடும்பாளூர்  வேளிர் கடல...