முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மத்திய புள்ளியியல், திட்ட அமலாக்க அமைச்சகத்தால் உருவாக்கப்பட்ட பைமானா பகுப்பாய்வு இணையதளம்

பைமானா தளம்: தரவு அடிப்படையிலான உள்கட்டமைப்பு நிர்வாகத்தை வலுப்படுத்துதல்

மத்திய அரசின் உள்கட்டமைப்புத் திட்டங்களை நிகழ்நேரத்தில் திறம்படக் கண்காணிக்கும் நோக்கில் 'பைமானா' எனப்படும் தேசியக் கட்டமைப்பிற்கான திட்ட மதிப்பீடு, உள்கட்டமைப்புக் கண்காணிப்பு, பகுப்பாய்வு இணையதளம் 2025 செப்டம்பர் 25 அன்று தொடங்கப்பட்டு வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மத்திய புள்ளியியல், திட்ட அமலாக்க அமைச்சகத்தால் உருவாக்கப்பட்டுள்ள இத்தளம், 150 கோடி ரூபாய் அல்லது அதற்கும் அதிக மதிப்பிலான மத்திய அரசுத் துறைகளின் உள்கட்டமைப்புத் திட்டங்களை ஒருங்கிணைந்த முறையில் கண்காணிக்கிறது. இதற்கு முன்னதாகப் பயன்பாட்டில் இருந்த கண்காணிப்பு அமைப்புகளுக்கு மாற்றாகக் கொண்டுவரப்பட்ட இத்தளத்தில், உள்கட்டமைப்புத் திட்டங்களின் மத்தியக் களஞ்சியமாக இதனை விரிவுபடுத்தும் வகையில் பைமானா-சிஆர்ஐபி என்ற புதிய பிரிவு 2026 ஜூலை 8 அன்று இணைக்கப்பட்டது. தற்போது 20-க்கும் மேற்பட்ட மத்திய அமைச்சகங்கள், அரசுத் துறைகள், திட்ட அமலாக்க முகமைகள் இத்தளத்தின் மூலம் திட்டப் பணிகளின் விவரங்களைத் தொடர்ச்சியாகப் பதிவேற்றம் செய்து வருகின்றன.

நாட்டின் உள்கட்டமைப்புத் திட்டங்களின் செயல்திறனைத் துல்லியமாகக் கண்காணிப்பதற்காக 2026 ஏப்ரல் 16 அன்று பிரத்தியேகச் செயல்திறன் கண்காணிப்புத் தகவல் பலகை தொடங்கப்பட்டது. இத்தகவல் பலகையானது சிவில் விமானப் போக்குவரத்து, சாலைகள், மின்சாரம், துறைமுகங்கள், கப்பல் & நீர்வழிகள், தொலைத்தொடர்பு, ரயில்வே ஆகிய 6 முக்கிய உள்கட்டமைப்புத் துறைகளின் கீழ் 165 செயல்திறன் அம்சங்களைக் கொண்டு தீவிரக் கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்கிறது. இக்கண்காணிப்பு முறையானது வெறும் உற்பத்தித் திறனை மட்டும் கணக்கிடாமல், உள்கட்டமைப்பு வசதிகளின் பயன்பாடு, தரம், நிதியாதாரங்கள், மக்களின் அணுகல் தன்மை ஆகியவற்றை விரிவாக மதிப்பீடு செய்து, ஆதாரங்களின் அடிப்படையில் கொள்கை முடிவுகளை எடுக்கப் பெரிதும் உதவுகிறது.

2026 ஜூன் நிலவரப்படி, 17 மத்திய அமைச்சகங்கள், துறைகளின் கீழ் 40.54 லட்சம் கோடி ரூபாய் திருத்தப்பட்ட மதிப்பில் 1,847 உள்கட்டமைப்புத் திட்டங்கள் இத்தளத்தின் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. இத்திட்டங்களுக்காக இதுவரை 21.97 லட்சம் கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. இவற்றுள் 709 திட்டங்களில் 80 சதவீதப் பணிகள் முடிக்கப்பட்டு நிறைவடையும் தருவாயில் உள்ளன. தற்போது நடைபெற்று வரும் பணிகளில் போக்குவரத்து, தளவாடத் துறையானது 22.32 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான 1,341 திட்டங்களுடன் முதலிடத்தில் உள்ளது. இவற்றுள் 1,000 கோடி ரூபாய்க்கும் அதிக மதிப்பைக் கொண்ட 769 மிகப்பெரிய திட்டங்களும் அடங்கும்.

மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் அமைச்சகம் 9.89 லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் 1,022 திட்டங்களையும், ரயில்வே அமைச்சகம் 8.69 லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் 255 திட்டங்களையும் இத்தளத்தின் மூலம் முன்னெடுத்து வருகின்றன. மேலும் பெட்ரோலியம் & இயற்கை எரிவாயு அமைச்சகம், மின்சார அமைச்சகம், வீட்டுவசதி, நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம், ஜல் சக்தி அமைச்சகம் ஆகியவையும் திட்டங்களைச் செயல்படுத்தி வருகின்றன. உள்கட்டமைப்புத் திட்டங்களின் தொடர்ச்சியான கண்காணிப்பு நடவடிக்கைகள் மூலம் வெளிப்படைத்தன்மை, செயல்திறன், பொறுப்புடைமை ஆகியவை உறுதி செய்யப்பட்டு, தற்சார்பு இந்தியாவின் உள்கட்டமைப்பு வளர்ச்சியை விரைவுபடுத்துவதில் பைமானா இணையதளம் மிக முக்கியப் பங்காற்றி வருகிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...

சோழப் பேரரசி வானதி எழுப்பிய மூவர் கோவில்

முதலாம் இராஜேந்திர சோழரின் தாய்  வானவன் மாதேவி எனும் அரசி வானதி, சோழர்களின் வரலாற்றில் பெரும் புகழ் மாமன்னர் அருள்மொழித் தேவன் எனும் இராஜராஜசோழச் சக்கரவர்த்தி மீது இணையில்லாத காதல் மங்கை கொடும்பாளூர் இளவரசி வானதியை "பொன்னியின் செல்வன்" கதை படித்த யாரும் மறக்க முடியாது. சோழர் கடற்படையின் பரப்பை இலங்கை வரை  சென்று வென்று வந்த வரலாற்று நிகழ்வுகளின் மூலம் குறுநில மன்னர்கள் அல்லது வேளிர்  துணை நின்றார்கள் அதில் ஈழத்துப் பட்டம்  வென்ற கொடும்பாளூர் வேளிர் மகளான வானதி இளம் வயதிலேயே தாய் தந்தையை இழந்தவர். கொடும்பாளூர் சிற்றரசன் அதாவது வேளிர் சோழ சாம்ராஜ்யத்தின் சேனாதிபதி யாகவும் இருந்த சிறிய தந்தை குறுநில மன்னர் பூதி விக்ரமகேசரியால் வளர்க்கப்பட்டவர் தான் வானவன் மாதேவி எனும் அரசி வானதி. கொடும்பாளூர் பிறந்து திருக்கோவிலூரை பின்னர் ஆண்ட மலையமானின் மகள்  “மேலும் வானவன்மாதேவி மன்னர் ராஜராஜ சோழர் மறைந்த உடன் பிரிவாற்றாமல் உடன்கட்டை ஏறி தன் உயிரை மாய்த்துக் கொண்டாள். இதை திருவாலங்காட்டுச் செப்பேடுகள் மூலம் அறியலாம் ஈழத்தில் நடைபெற்ற யுத்தத்திற்காக கொடும்பாளூர்  வேளிர் கடல...