உச்சநீதிமன்ற வழக்குகளுக்காக தமிழ்நாடு அரசின் புதிய மூத்த வழக்கறிஞர்களுக்கு வரிசைப்பட்டியல் வெளியானது
தமிழ்நாடு மாநிலம் சார்பாக உச்சநீதிமன்ற வழக்குகளுக்காக தமிழ்நாடு அரசின் புதிய மூத்த வழக்கறிஞர்களுக்கு வரிசைப்பட்டியல் வெளியானது
தமிழ்நாடு அரசு, உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு சார்பில் நடக்கும் வழக்குகளை நடத்துவதற்கான புதிய மூத்த வழக்கறிஞர் வரிசை பட்டியலை அங்கீகரித்து அரசாணை வெளியிட்டது.
அரசாணை G.O.(Ms.) No.276, Home (Courts-IV) Department, dated 14.08.2026 மூலம், அரசு தலைமை வழக்கறிஞர் மூலம் பரிந்துரைத்த 35 மூத்த வழக்கறிஞர்கள் கொண்ட புதிய வரிசைப் பட்டியலை அரசு ஏற்றுக்கொண்டுள்ளது.
இந்த புதிய வரிசைப் பட்டியலில் Attorney General for India, Solicitor General of India மற்றும் அனைத்து Additional Solicitors General உட்பட மொத்தமாக பரிந்துரைக்கப்பட்ட மூத்த வழக்கறிஞர்கள் இடம்பெற்றுள்ளனர்.
மேலும், உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசின் வழக்குகளை நடத்த மூத்த வழக்கறிஞர்களை நியமிப்பதற்கான Standard Operating Procedure (SOP) பின்பற்றப்பட வேண்டும் என்றும், அவர்களுக்கான கட்டணங்கள் ஏற்கனவே நடைமுறையில் உள்ள அரசாணைகளின் படி செயல்படுத்தப்படும் என்றும் அரசு அந்த அரசாணை மூலம் தெரிவித்துள்ளது .தமிழ்நாடு அரசின் புதிய அரசுத் தலைமை வழக்கறிஞரின் ( பரிந்துரையின் அடிப்படையில், முந்தைய வழக்கறிஞர்கள் குழுவின் ராஜினாமாவை ஏற்றுக்கொண்டு, உச்ச நீதிமன்றத்தில் மாநிலத்தைப் பிரதிநிதித்துவப்படுத்த புதிய வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட்டதில்
ரூபாலி பிரான்செஸ்கா, சாமுவேல், பி. கருணாகரன், விருந்தா பண்டாரி, ஜெயஸ்ரீ நரசிம்மன், கனிகா கலையரசன், ஆகியோரும் நியமனம் இந்த வழக்கறிஞர்களுக்கு தற்போதைய அரசாணைகளின்படி மாதாந்திரத் தக்கவைப்புக் கட்டணமும்மற்றும் வழக்குக் கட்டணங்களும் வழங்கப்படும். நியமிக்கப்பட்ட வழக்கறிஞர்கள் எவரும் தமிழ்நாடு அரசுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் ஆஜராகக் கூடாது. அரசின் முன் அனுமதி பெறாமல் குற்றவியல் வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்காகவோ அல்லது அரசுக்கு எதிரான தனியார் தரப்பினருக்கோ ஆலோசனைகள் வழங்கக் கூடாது. என்ற கட்டுப்பாடுகளை முன் வைத்து அரசாணை வெளிவந்துள்ளது.







கருத்துகள்