முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தையூரில் கூலிப்படையை ஏவி ஒரே ஜாதியில் நடந்தது ஆணவக் கொலையா? விசாரணை தீவிரம்

தையூரில் கூலிப்படையை ஏவி ஒரே ஜாதியில் நடந்தது ஆணவக் கொலையா? போராட்டம் பின் விசாரணை,     


 மகளின் காதலனைக் கொன்றதாக தவெக நிர்வாகியுடன் சிலர் கைது செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் தாலுகா தையூரில்  பிரவீன்குமார் (வயது 23) என்ற அட்டவணை பட்டியல் சமூக இளைஞர் அதே சமூக நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியதாகத் தகவல்  மேற்கண்ட சம்பவத்தின் பின்னணி   

  தையூரைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியரான பிரவீன்குமாருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ஓர் இளம்பெண்ணுக்கும் இடையே பழக்கம் இருந்துள்ளது.  பெற்றோர் எதிர்ப்பு: இதற்கு பெண்ணின் வீட்டார் தரப்பில் கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ஆகஸ்ட் 16-ஆம் தேதி இரவு, பெண்ணின் உறவினர்கள் மற்றும்  கூட்டாளிகள் பிரவீன்குமாரைக் கத்தியால் சரமாரியாக வெட்டிவிட்டுத் தப்பியோடிய நிலையில்  படுகாயமடைந்த பிரவீன்குமார் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டு ஐந்து நாட்கள் சிகிச்சை பலனின்றி ஆகஸ்ட் 21 ஆம் தேதியில் உயிரிழந்தார். பிரவீன்குமாரின் மரணத்தைத் தொடர்ந்து, குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்ய வலியுறுத்தி அவரது உறவினர்கள் மற்றும் 300 க்கும் மேற்பட்ட நபர்கள் புதிய பைபாஸ் சாலையில் சடலத்துடன் சுமார் 2 மணி நேரம் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்தக் கொலை வழக்கு தொடர்பாகக் கேளம்பாக்கம் காவல் நிலையத்தினர் தீவிரமாக விசாரணை நடத்தி,  பெண்ணின் தந்தை ஏழுமலை (வயது 48), மணிகண்டன் (வயது 31), நந்தீஸ் ( வயது 19) மற்றும் கௌதம் (வயது 30) ஆகிய 4 நபரைக் கைது செய்துள்ளனர். சம்பவத்தில் தொடர்புடைய மேலும் சிலரைத் தனிப்படை அமைத்துக் காவல் துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.


கேளம்பாக்கம் அருகே தையூரில் தவெக நிர்வாகியான ஏழுமலை என்பவர் தனது மகளின் காதலனை கூலிப்படை ஏவி கொலை செய்துள்ளதாக தகவல் வெளியான செய்திகள்  அதிர்ச்சியளிப்பதாக உள்ளது.செங்கல்பட்டு மாவட்டம் தையூரில் காதல் விவகாரத்தில் இருவரும் அட்டவணை பட்டியல் ஜாதி எதிர்ப்பு தெரிவித்து காதலனை வெட்டிக் கொன்ற  பெண்ணின் தந்தை ஏழுமலை கொன்றவர் தவெகவில் ராஜினாமா செய்த சடடமன்ற உறுப்பினர் மரகதம் குமாரவேலுடன் நெருக்கமாக இணைந்து செயல்படும் நிர்வாகி எனக் கூறப்பட்ட நிலையில் இறந்தவர் விசி கட்சியின் நபராம் மீண்டும் ஒரே அட்டவணை பட்டியல் ஜாதி ஆணவக் கொலை அரங்கேறியது 


கேளம்பாக்கம் தையூரில் உள்ள பிரவீன் என்ற அட்டவணை பட்டியல் ஜாதி இளைஞன்  தையூர் புதியகாலனியில் உள்ள அதே அட்டவணை பட்டியல் ஜாதி தவெகவில் புதிதாக இணைந்து நபர் ஏழுமலையின் மகளான xxxxx யை காதலித்து வந்ததால் ஏழுமலை மற்றும் அவர் மகன் மற்றும் நண்பர்கள் கௌதம் மணிகண்டன் நந்திஷ் இவர்கள் அனைவரும் சேர்ந்து பிரவீனை வெட்டிப் படுகொலை செய்ததாக கூறப்பட்ட நிலையில் பிரவீன் ஏழை என்பதாலும், ஏழுமலை பணம் படைத்த ஆளும்கட்சி நபர் என்பதாலும் துணிகரமாக இந்தக் கொலை நடந்தேறியுள்ளது என வெளியில் பேசப்படுகிறது 

உயிரிழந்த பிரவீனுக்கு நீதி வேண்டும்..அநீதி இழைத்து கொலை செய்த குடும்பத்தினர் சட்டப்படி தண்டிக்கபட வேண்டும்.என சாலைமறியல் போராட்டம் நடந்தது. ஆனால் இதில் அந்த பெண்ணுக்கு தொந்தரவு செய்த நபர் கொலை என்பதே உண்மை நிலை என பலர் பேசும் நிலை. காணலாம்,

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...

சோழப் பேரரசி வானதி எழுப்பிய மூவர் கோவில்

முதலாம் இராஜேந்திர சோழரின் தாய்  வானவன் மாதேவி எனும் அரசி வானதி, சோழர்களின் வரலாற்றில் பெரும் புகழ் மாமன்னர் அருள்மொழித் தேவன் எனும் இராஜராஜசோழச் சக்கரவர்த்தி மீது இணையில்லாத காதல் மங்கை கொடும்பாளூர் இளவரசி வானதியை "பொன்னியின் செல்வன்" கதை படித்த யாரும் மறக்க முடியாது. சோழர் கடற்படையின் பரப்பை இலங்கை வரை  சென்று வென்று வந்த வரலாற்று நிகழ்வுகளின் மூலம் குறுநில மன்னர்கள் அல்லது வேளிர்  துணை நின்றார்கள் அதில் ஈழத்துப் பட்டம்  வென்ற கொடும்பாளூர் வேளிர் மகளான வானதி இளம் வயதிலேயே தாய் தந்தையை இழந்தவர். கொடும்பாளூர் சிற்றரசன் அதாவது வேளிர் சோழ சாம்ராஜ்யத்தின் சேனாதிபதி யாகவும் இருந்த சிறிய தந்தை குறுநில மன்னர் பூதி விக்ரமகேசரியால் வளர்க்கப்பட்டவர் தான் வானவன் மாதேவி எனும் அரசி வானதி. கொடும்பாளூர் பிறந்து திருக்கோவிலூரை பின்னர் ஆண்ட மலையமானின் மகள்  “மேலும் வானவன்மாதேவி மன்னர் ராஜராஜ சோழர் மறைந்த உடன் பிரிவாற்றாமல் உடன்கட்டை ஏறி தன் உயிரை மாய்த்துக் கொண்டாள். இதை திருவாலங்காட்டுச் செப்பேடுகள் மூலம் அறியலாம் ஈழத்தில் நடைபெற்ற யுத்தத்திற்காக கொடும்பாளூர்  வேளிர் கடல...