தென்னிந்தியத் திரைப்பட பழமையான நடிகை சௌகார் ஜானகி 94 வயதில் முதுமை மற்றும் உடல்நலக் குறைவு காரணமாகச் சென்னையில் காலமானார்.
அவரது வயது முதிர்வு மற்றும் சுவாசக் கோளாறு காரணமாகச் சென்னை ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு பெற்ற சிகிச்சை பலனின்றி இன்று பிற்பகல் காலமானார், 1950-ஆம் ஆண்டு எல்.வி.பிரசாத் இயக்கத்தில் வெளியான ‘ஷாவுகாரு’ எனும் தெலுங்கு மொழித் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி, அதன் வெற்றியால் 'சௌகார்' ஜானகி என அழைக்கப்பட்டார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம, ஹிந்தி மொழிகளில் 387-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் புதிய பறவை, நீர்க்குமிழி, எதிர்நீச்சல், இரு கோடுகள், தில்லுமுல்லு உள்ளிட்ட படங்கள் இவருக்குப் பெரும் புகழைத் தேடித்தந்தன. இவரது கடைசித் தமிழ் திரைப்படம் 2020- ஆம் ஆண்டில் வெளியான 'பிஸ்கோத்' ஆகும் இவர் திரைத்துறைக்கு ஆற்றிய பங்களிப்பிற்காக இந்திய அரசின் உயரிய பத்மஸ்ரீ விருது 2022 ஆம் ஆண்டு மற்றும் தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார், இவரது மறைவுக்குத் திரையுலகினரும், ரசிகர்களும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், இவரது மறைவு திரைத்துறையினருக்குப் பேரிழப்பு எனக் குறிப்பிட்டுள்ளார். சங்கமரஞ்சி ஜானகி என்பது இயற்பெயர்
12 டிசம்பர் 1931 ல் தற்போது ஆந்திரப் பிரதேசம் ராஜமுந்திரி, அப்போது பிரிட்டிஷ் ஆட்சி மெட்ராஸ் பிரசிடென்சியில் பிறந்தவர் நடிகை வைஷ்ணவி இவரது பேத்தி, நடிகை கிருஷ்ண குமாரி சகோதரி ஆவார், சங்கமரஞ்சி சீனிவாச ராவ் உடன் திருமணம் 1947 ஆம் ஆண்டில் நடந்தது பெற்றோர் சசிதேவி, டி.வெங்கோஜி ராவ் இவர் நடித்த திரைப்படங்கள் மஞ்சி மனசுலு, சௌகார், குமுதம், தெய்வம், வானவராயன் வல்லவராயன் ஆகும்
இவர் நடிகை கிருஷ்ண குமாரி, இசையமைப்பாளர் கே வி மகாதேவன், எம் எஸ் விஸ்வநாதன், தடிகை சாவித்திரி, இயக்குனர் கே பாலச்சந்தர் ஆகியோர் 1975 வரை சமகாலத்தில் பிரபலமானவர்கள் சங்கமரஞ்சி ஜானகி எனும் சௌகார் ஜானகி 387 க்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மற்றும் மலையாளத் திரைப்படங்களில் நடித்துள்ள தென்னிந்திய நடிகை அவர் 300 க்கும் மேற்பட்ட நிகழ்ச்சி மற்றும் மேடை நாடகங்களில் நடித்துள்ளார் மற்றும் அவர் முன்பு ஆண்டுகளில் வானொலி கலைஞராக இருந்தார்.அவரது திருமணத்திற்குப் பிறகு திரைப்பட வாழ்க்கை துவங்கியது. அவர் 1949 மற்றும் 1975 க்கு இடையில் சௌகார் (தெலுங்கு), வளையாபதி, தெலுங்கில் ரோஜுலு மராயி போன்ற படங்களில் முன்னணி கதாநாயகிகளாகவும், பின்னர் தமிழில் நான் கண்ட சொர்கம், காவியத் தலைவி, பாக்ய லட்சுமி, பாலும் பழமும், பார் மகளே பார், தாய்க்கு தலைவணங்கு , போன்ற படங்கள் தமிழ் மொழியில் வெற்றி பெற்று பிரபலமான நடிகையானார். பாமா விஜயம், ஒலி வில்லு, எதிர் நீச்சல், மாணவன், உயர்ந்த மனிதன், நிமிர்ந்து நில், துணைவன், நீதி மற்றும் இரு கோடுகள் (தமிழ்), தேவகாணிகா, சாகு மகளு, சதாரமே, தாய்கே தக்க மக போன்ற கன்னடப் படங்களுடன், மலையாளத்தில் அறிமுகமான ஸ்கூல்மாஸ்டர், தாதா மிராசி மற்றும் கே பாலச்சந்தர் போன்ற பிரபல இயக்குனர்களுடன் பணிபுரிந்தார். அவர் 1975 க்குப் பிறகு துணை ஜனரஞ்சக வேடங்களுக்கு மாறினார் மற்றும் சினிமா பைத்தியம், தீ, தில்லு முல்லு, வெற்றி விழா, ஆகிய படங்களில் அவரது நடிப்பு பரவலாகப் பாராட்டப்பட்டது. அவர் தேசிய இந்திய திரைப்பட விருதுகள் குழுவின் நடுவர் உறுப்பினராகவும், மாநில தெலுங்கு திரைப்பட விருதுகள் குழுவின் தலைவராகவும் பணியாற்றினார்.




கருத்துகள்