மதுரை மேலஅனுப்பானடி வீட்டு வசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்புப் பகுதியில் வசித்து வந்த பரமசிவம் 52 வயதுடைய ஒரு கோவில் பூசாரி,
அவர் செய்ததாகக் கூறப்படும் குற்றம் வாகனம் நிறுத்துவதில் பரமசிவத்திற்கும் அவரது அண்டை வீட்டாரான மற்றொரு தரப்பினருக்கும் இடையே வண்டி நிறுத்துவது தொடர்பாக முன்விரோதம் இருந்ததன் காரணமாக இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு, அது தொடர்பாக சிந்தாமணி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த சிறிய தகராறு வழக்கு விசாரணைக்காகவே அவர் காவல் நிலையத்திற்கு அழைக்கப்பட்டுச் சென்றார்.தற்போதைய சர்ச்சை கடந்த ஜூலை மாதம் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட பரமசிவத்தை, சிந்தாமணி காவல் நிலைய காவல்துறை கடுமையாகத் தாக்கியதாகவும், இதனால் ஏற்பட்ட மூளை ரத்தக்கசிவு காரணமாக ஆகஸ்ட் 16, 2026 அன்று அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டுகின்றனர்.
ஆனால், காவல்துறை இக்குற்றச்சாட்டை மறுத்துள்ளனர் பரமசிவம் தனது வீட்டில் தற்செயலாகக் கீழே விழுந்து காயமடைந்ததால் ஏற்பட்ட உடல்நலக் குறைவால் தான் உயிரிழந்தார் என காவல்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.இந்தச்சம்பவம் குறித்து தற்போது மதுரையில் வருவாய்க் கோட்டாட்சியர் விசாரணை நடைபெற்று வருகிறது. இச்சம்பவம் காரணமாக சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை அமர்வில் தொடுக்கப்பட்ட வழக்கின் அடிப்படையில், வழக்கை மேஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவிட்டு நீதிமன்றம் ஆணை பிறப்பித்தது.
நீதிமன்ற உத்தரவின்படி இன்று 18.08.2026, செவ்வாய்க்கிழமை மேஜிஸ்திரேட் விசாரணை நிறைவடைந்ததைத் தொடர்ந்து, மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் உடற்கூராய்வு செய்து முடிக்கப்பட்டுள்ளது.
மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று, மறைந்த பரமசிவம் குடும்பத்தினரைச் சந்தித்து அவர் சார்ந்த சமுதாயத் தலைவரான கே. கே. செல்வக்குமார் அவரது குடும்பத்தினரிடம் இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொண்ட நிலையில் அவரது மரணம் குறித்து பல கட்சிகளின் சார்பில் காவல்துறை நடவடிக்கை குறித்து கண்டனம் தெரிவித்து அறிக்கைகள் வெளயிடப்படடுள்ளது,






கருத்துகள்