முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

CJI க்கு எதிராக NALSAR மாணவர்களின் விரோதப் பிரச்சாரம் BCI பதிவுத் தடையை திரும்பப் பெற்றது

CJI க்கு எதிராக NALSAR மாணவர்களின் விரோதப் பிரச்சாரம் BCI பதிவுத் தடையை திரும்பப் பெற்றது.


ஹைதராபாத் NALSAR தேசிய சட்டப் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் தலைமை விருந்தினராக இந்தியத் தலைமை நீதிபதி சூர்யா காந்த் அழைக்கப்பட்டதற்கு எதிராக 450-க்கும் மேற்பட்ட மாணவர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். டெல்லி ஜந்தர் மந்தர் காவல்துறை அடக்குமுறை தொடர்பான வழக்கு விசாரணை மற்றும் இளைஞர்கள் குறித்த அவரது கருத்துகள்



அரசியலமைப்புச் சட்ட நெறிமுறைகளுக்கு முரணாக உள்ளதாகக் கூறி மாணவர்கள் இந்திய தலைமை நீதிபதிக்கு எதிராக நடத்திய இந்தப் பிரச்சாரம். கரணமாக இந்திய தலைமை நீதிபதி சூர்யா காந்த் கலந்து கொள்ளவிருந்த பட்டமளிப்பு விழா அழைப்பை எதிர்த்து NALSAR சட்டப் பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் நடத்திய பிரச்சாரத்தைத் தொடர்ந்து, 2026 ஆம் ஆண்டு தொகுதி மாணவர்களின் வழக்கறிஞர் பதிவை இந்திய பார் கவுன்சில் (BCI) தற்காலிகமாகத் தடை செய்தது. ஆனால், பெரும்பாலான மாணவர்கள் அப்பாவிகள் என்று கூறி அந்தத் தடை உத்தரவை BCI சில மணி நேரங்களிலேயே திரும்பப் பெற்றது. NALSAR ஹைதராபாத் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவிற்கு தலைமை விருந்தினராக வரவிருந்த CJI சூர்யா காந்த்தை எதிர்த்து மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.இந்தச் சம்பவத்தையடுத்து மாநில பார் கவுன்சில்கள் NALSAR 2026 மாணவர்களைப் பதிவு செய்யக் கூடாது என BCI ஆரம்பத்தில் தடை விதித்தது.மாணவர்களில் பெரும்பாலோர் தவறு செய்யாதவர்கள் என்றும், முழுத் தொகுதியையும் தண்டிப்பது சரியல்ல என்றும் BCI தலைவர் தெரிவித்தார்.இதனால் மாணவர்கள் வழக்கறிஞராகப் பதிவு செய்வதற்கான தடை நீக்கப்பட்டது.எனினும், இந்தப் பிரச்சாரத்தின் பின்னணியில் வெளிப்புற நபர்கள் அல்லது ஆசிரியர்களின் தாக்கம் உள்ளதா என்பது குறித்த விசாரணை தொடர்ந்து நடக்கும் என BCI அறிவித்துள்ளது.2026-ல் NALSAR சட்டப் பட்டம் பெற்ற மாணவர்களை வழக்கறிஞர்களாக பதிவு செய்வது தொடர்பாக இந்திய பார் கவுன்சில் (BCI) முக்கிய நடவடிக்கை எடுத்தது.

13.08.2026 ஆம் தேதி அன்று இந்திய பார் கவுன்சில் தலைவர் மனன் குமார் மிஸ்ரா, மூத்த வழக்கறிஞர் NALSAR சட்டப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் மற்றும் அனைத்து மாநில பார் கவுன்சில்களின் செயலாளர்களுக்கும் கடிதம் அனுப்பியுள்ளார். 





NALSAR பல்கலைக்கழகத்தில், இந்தியத் தலைமை நீதிபதி மாண்புமிகு நீதியரசர் சூர்ய காந்த் அவர்கள் Convocation நிகழ்ச்சியில் பங்கேற்பது தொடர்பாக நடைபெற்றதாகக் கூறப்படும் பிரச்சாரம் குறித்து, உண்மையான நிலவரத்தை பல்கலைக்கழகத்திடமிருந்து இந்திய பார் கவுன்சில் கோரியுள்ளது.

ஊடகம், சமூக வலைதளப் பதிவுகள் அல்லது பிற இரண்டாம் நிலை தகவல்களை மட்டும் அடிப்படையாகக் கொள்ளாமல், பல்கலைக்கழகத்திடமிருந்து அங்கீகரிக்கப்பட்ட உண்மை அறிக்கையைப் பெற வேண்டும் என BCI தெரிவித்துள்ளது.

பிரச்சாரத்தை தொடங்குதல், ஏற்பாடு செய்தல், ஒருங்கிணைத்தல், மாணவர்களைத் திரட்டுதல், ஊடகங்களுடன் தொடர்பு கொள்ளுதல் அல்லது boycott மற்றும் obstruction மற்றும் disruption போன்ற நடவடிக்கைகளுக்கு அழைப்பு விடுத்தவர்கள் யார்? என்பது குறித்து NALSAR சட்டப் பல்கலைக்கழகம் விரிவான தகவல் அளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது.




மேலும், Student Bar Council, Students’ Union அல்லது பிற மாணவர் அமைப்புகளின் அலுவலகப் பொறுப்பாளர்கள் இதில் தொடர்புடையிருந்தால் அவர்களின் பெயர் மற்றும் பதவியையும் தெரிவிக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. 

முக்கியமாக, மேலும் உத்தரவு வரும் வரை NALSAR University of Law-ல் 2026 ஆம் ஆண்டு சட்டப் பட்டம் பெற்ற எந்த மாணவரையும் எந்த மாநில பார் கவுன்சிலும் வழக்கறிஞராக பதிவு செய்யக்கூடாது என முன்பு BCI தெரிவித்துள்ளது.

அதேவேளை, ஒரு representation அல்லது campaign-ல் கலந்து கொண்டதற்காக மட்டும் ஒருவர் Advocates Act, Section 24A-ன் கீழ் தகுதி நீக்கம் செய்யப்பட்டவர் என இந்த கட்டத்தில் BCI முடிவு செய்யவில்லை என்றும் கடிதம் தெளிவுபடுத்துகிறது.

ஒருவரின் பெயர் குறிப்பாக BCI-யால் State Bar Council-க்கு தெரிவிக்கப்பட்டால், அந்த நபரின் enrolment குறித்து விசாரணை நடைபெறும் காலத்தில் முடிவு எடுக்காமல் defer செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே Enrolment Committee முன் விண்ணப்பம் இருந்தால், அந்த விண்ணப்பதாரரின் பெயர், enrolment application number, விண்ணப்ப தேதி, பரிசீலனைக்கான முன்மொழியப்பட்ட தேதி மற்றும் தற்போதைய நிலை ஆகிய விவரங்களை BCI-க்கு State Bar Council தெரிவிக்க வேண்டும். 

NALSAR சட்டப் பல்கலைக்கழகத் துணைவேந்தரிடமிருந்து உண்மை நிலவர அறிக்கை கிடைத்த பின்னர், 19.08.2026 அன்று இந்த விவகாரத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்று இந்திய பார் கவுன்சில் தெரிவித்துள்ளது.

அனைத்து State Bar Councils-ம் இந்தத் தகவலை தங்களது Chairman, Vice-Chairman, Secretary மற்றும் Enrolment Committee முன் வைத்து, தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...

சோழப் பேரரசி வானதி எழுப்பிய மூவர் கோவில்

முதலாம் இராஜேந்திர சோழரின் தாய்  வானவன் மாதேவி எனும் அரசி வானதி, சோழர்களின் வரலாற்றில் பெரும் புகழ் மாமன்னர் அருள்மொழித் தேவன் எனும் இராஜராஜசோழச் சக்கரவர்த்தி மீது இணையில்லாத காதல் மங்கை கொடும்பாளூர் இளவரசி வானதியை "பொன்னியின் செல்வன்" கதை படித்த யாரும் மறக்க முடியாது. சோழர் கடற்படையின் பரப்பை இலங்கை வரை  சென்று வென்று வந்த வரலாற்று நிகழ்வுகளின் மூலம் குறுநில மன்னர்கள் அல்லது வேளிர்  துணை நின்றார்கள் அதில் ஈழத்துப் பட்டம்  வென்ற கொடும்பாளூர் வேளிர் மகளான வானதி இளம் வயதிலேயே தாய் தந்தையை இழந்தவர். கொடும்பாளூர் சிற்றரசன் அதாவது வேளிர் சோழ சாம்ராஜ்யத்தின் சேனாதிபதி யாகவும் இருந்த சிறிய தந்தை குறுநில மன்னர் பூதி விக்ரமகேசரியால் வளர்க்கப்பட்டவர் தான் வானவன் மாதேவி எனும் அரசி வானதி. கொடும்பாளூர் பிறந்து திருக்கோவிலூரை பின்னர் ஆண்ட மலையமானின் மகள்  “மேலும் வானவன்மாதேவி மன்னர் ராஜராஜ சோழர் மறைந்த உடன் பிரிவாற்றாமல் உடன்கட்டை ஏறி தன் உயிரை மாய்த்துக் கொண்டாள். இதை திருவாலங்காட்டுச் செப்பேடுகள் மூலம் அறியலாம் ஈழத்தில் நடைபெற்ற யுத்தத்திற்காக கொடும்பாளூர்  வேளிர் கடல...