முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தமிழ்நாடு முழுவதும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் (DVAC) நடத்திய சோதனையில், ரூபாய் 1.18 கோடி பணம் கூகுள் பே பரிவர்த்தனைகள் கண்டறியப்பட்டது

தமிழ்நாடு முழுவதும் 38 அரசு அலுவலகங்களில் ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் (DVAC) நடத்திய சோதனையில்,



ரூபாய் 1.18 கோடிக்கும் அதிமான கணக்கில் வராத பணம் மற்றும் சந்தேகத்திற்கிடமான கூகுள் பே (G-Pay) பரிவர்த்தனைகள் கண்டறியப்பட்டு அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டது. பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட தொடர் புகார்களின் அடிப்படையில், அனைத்து மாவட்டங்களிலும் உள்ள சார்பதிவாளர் அலுவலகங்கள், வட்டார வளர்ச்சி அலுவலகங்கள், மின்சார வாரிய அலுவலகங்கள் மற்றும் தாலுகா அலுவலகங்களில் இந்த கூட்டுத் திடீர் சோதனை நடத்தப்பட்டது. கைப்பற்றப்பட்ட கணக்கில் காட்டப்படாத ரொக்கப் பணம்: ரூபாய் 28,24,945 (சுமார் ரூபாய் 28.24 லட்சம்).சந்தேகத்திற்கிடமான G-Pay பரிவர்த்தனைகள்: ₹89,89,663 (சுமார் ரூபாய் 89.89 லட்சம்).கண்டறியப்பட்ட மொத்த தொகை: ரூபாய் 1,18,14,608 (ரூபாய் 1.18 கோடி) முக்கிய இடங்களான சென்னை (கிண்டி): அரசு தலைமை மின் ஆய்வாளர் அலுவலகத்தில் மட்டும் அதிகபட்சமாக ரூபாய் 31.52 லட்சம் மதிப்பிலான சந்தேகத்திற்குரிய G-Pay பரிவர்த்தனைகள் கண்டுபிடிக்கப்பட்டன.திருச்சிராப்பள்ளி (தென்னூர்): மின்சார வாரிய (TNEB) அலுவலகத்தில் ரூபாய் 1 லட்சம் ரொக்கமும், ரூபாய் 13.58 லட்சம் மதிப்பிலான ஆன்லைன் பரிவர்த்தனைகளும் கண்டறியப்பட்டன. அரியலூர்: வட்டாட்சியர்  அலுவலகத்தில் தற்காலிக ஊழியர் ஒருவரின் வங்கி கணக்கு மூலம் கடந்த இரண்டு மாதங்களில் ரூபாய் 7.24 லட்சம் கூகுள் பே பரிவர்த்தனை நடந்துள்ளது


அம்பலமாகியுள்ளது.கள்ளக்குறிச்சி: வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ரூபாய் 15,100 ரொக்கம் மற்றும் ரூபாய் 6.69 லட்சம் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் கண்டறியப்பட்டன.சென்னை (பல்லாவரம்): சார்பதிவாளர் அலுவலகத்தில் கணக்கில் வராத ரூபாய் 1.50 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. லஞ்சப் பணத்தை நேரடியாக ரொக்கமாக வாங்காமல், தற்காலிக ஊழியர்கள் அல்லது புரோக்கர்களின் G-Pay, PhonePe கணக்குகள் மூலம் டிஜிட்டலாக வாங்கும் புதிய முறையை அலுவலர்கள் கையாண்டது இந்தச் சோதனையில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இது தொடர்பாக ஊழவ் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது துறை ரீதியான விசாரணை மற்றும் சட்ட நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.  இந்த நிலையில் நேற்று சிவகங்கை மாவட்டம் காரைக்குடி வட்டம்  அமராவதிபுதூரில் ரூபாய் .5,000 லஞ்சம் வாங்கிய குற்றத்திற்காக கிராம நிர்வாக அலுவலர் மற்றும் தலையாரி  ஆகியோரை ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நிலத்திற்கு அடங்கல் திருத்தம் சரி செய்து தர ரூபாய் .5,000 லஞ்சப் பணம் பெற்ற கையுடன் கைது

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி வட்டம் அமராவதிபுதூரில், நிலத்திற்கு அடங்கல் பதிவை சரி செய்து தருவதற்காக ரூபாய் .5,000 லஞ்சம் வாங்கியதாக கிராம நிர்வாக அலுவலர் ராஜகோபால் மற்றும் தலையாரி சாந்தி ஆகிய இருவரையும் ஊழல் தடுப்புக்  கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை  கைது செய்தனர் 

சக்திவேல்  தனது  நிலம் தொடர்பான அடங்கல் பதிவை சரி செய்து தருவதற்காக சம்பந்தப்பட்ட வருவாய்த்துறை அலுவலகத்தை  அனுகவே

ரூபாய் .5,000 லஞ்சம் கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது.


லஞ்சம் கொடுக்க விரும்பாத சக்திவேல், இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறையினரிடம் புகார் அளித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் திட்டமிட்டு கண்காணிப்பு நடவடிக்கையை மேற்கொண்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து சக்திவேலிடமிருந்து ரூபாய் .5,000 லஞ்சப் பணம் பெறப்பட்டபோது, ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை   நடவடிக்கையில்: கிராம நிர்வாக அலுவலர்  ராஜகோபால் தலையாரி சாந்தி ஆகிய இருவரையும் லஞ்ச ஒழிப்புத்துறை பணம் பெற்றபோது பிடித்துக் கைது செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பட்டா, சிட்டா, அடங்கல் உள்ளிட்ட வருவாய்த்துறை சார்ந்த சட்டப்பூர்வமான சேவைகளை வழங்குவதற்காக அரசு ஊழியர்கள் சட்டவிரோதமாக பணம் கோருவது அல்லது பெறுவது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்ற நடவடிக்கைக்கு வழிவகுக்கும்.

பொதுமக்களிடம் அரசு சேவைகளுக்காக லஞ்சம் கேட்டால், அதற்கு உடன்படாமல் உரிய லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளிடம் புகார் அளிக்கலாம் இப்போதெல்லாம் லஞ்ச ஒழிப்புத்துரிடம் சிக்க கூடாது என்பதற்காக போன் பே கூகுள் பே இது போன்ற பண பரிவர்த்தனை செய்யும் ஆப் மூலம் செய்வதில்லை பணம் கையில் வாங்குகிறார்கள் இதே கூட கைதேர்ந்த திருடன் இருப்பார்கள் அவர்கள் அப்படி செய்வதில்லை மூன்றாவது நபரிடம் கொடுக்க சொல்கிறார் மெதுவாக பேசுகிறார் ஏனென்றால் குரல் பதிவு செய்து விடுவார்களோ என்ற அச்சத்தில் மெதுவாக பேசுகிறார்கள் நீங்கள் வீடியோ எடுக்கின்றீர்களா என்று அதையும் கூர்ந்து கவனிக்கிறார்கள் மூன்றாவது நபர் இடைத்தருகிற ஒருவரை வைத்து உள்ளார்கள் அதிகாரிகள் அவர்களிடம் கொடுக்க சொல்கிறார்கள் அவ்வளவுதான் அவர் வாங்கிவிட்டு அதன் பிறகு பேச சொல்கிறார்கள் உஷாராக இருக்கிறார்கள் அரசு அதிகாரிகளில் சில லஞ்சவாதிகள்  இதை முதலில் சரி செய்ய வேண்டும் லஞ்சம் வாங்குறவனுக்கு அரசு வேலை எதற்கு  நிரந்தரமாக வேலையை பறிமுதல் செய்வதே காலச்சிறந்தது

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பாண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார்கள் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும்   இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதம்  ஐந்தாம் தேதியில் துவக்கம். ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, சன்னதிகளில் வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்றிரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...