முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

டாஸ்மாக் முறைகேடு வழக்கில் ரத்திஸ்ராஜுக்கு DVAC-யின் லுக்-அவுட் நோட்டீஸ்

டாஸ்மாக் முறைகேடு வழக்கில் S.சர்வேஷ்ராஜ் ஐ.பி.எஸ் சகோதரர்


S.ரத்திஸ்ராஜுக்கு DVAC-யின் லுக்-அவுட் நோட்டீஸ். டாஸ்மாக் முறைகேடு வழக்கில் ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையால் (DVAC) தேடப்படும் முக்கியக் குற்றவாளியும், தமிழ்நாடு கேடர் ஐபிஎஸ் அதிகாரியின் சகோதரருமான ரத்தேஷ் ராஜ் சண்முகவேலுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் எனும் Look-out Circular பிறப்பிக்கப்பட்டுள்ளது.வழக்குப்பதிவு கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் 2025 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் TASMAC நிறுவனத்தில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக ஊழல் தடுப்புக் ஙண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை ஜூலை மாதம் 28 ஆம் தேதி அன்று முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, முன்னாள் டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் எஸ். விசாகன் உள்ளிட்ட 7 பேர் மீது வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கில் ஆறாவது குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ள ரத்தேஷ் ராஜ், டாஸ்மாக் நிர்வாகத்தில் அதிகாரப்பூர்வமற்ற இடைத்தரகராகச் செயல்பட்டதாகக் கூறப்படுகிறது.

மதுபான பிராண்டுகளுக்கான அனுமதி, பார் உரிம ஒப்பந்தங்கள் மற்றும் அதிகாரிகள் இடமாற்றம் ஆகியவற்றில் இவர் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி முறைகேடுகளில் ஈடுபட்டதாக முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாகத் தமிழ்நாடு முழுவதும் 40-க்கும் மேற்பட்ட இடங்களில் ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அண்மையில் சோதனை நடத்தினர். அநன் பின் இவரைக் கைது செய்யத் தீவிரமாகத் தேடி வரும் நிலையில், ரத்தேஷ் ராஜ் தலைமறைவாகியுள்ளார். அவர் கைது நடவடிக்கைக்குப் பயந்து வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்றிருக்கலாம் என விஜிலன்ஸ் அதிகாரிகள் பலமாகச் சந்தேகிக்கின்றனர். இதன் காரணமாக, அவர் சர்வதேச விமான நிலையங்கள் வழியாகத் தப்பிச் செல்வதைத் தடுக்கவும், அவரைப் பிடிக்கவும் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டு தேடுதல் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது,

தலைமறைவான ரத்தேஷ்ராஜை மது கொள்முதலில் முறைகேடுகள், பார் லைசென்ஸ் குறுக்கீடு, அதிகாரி இடமாற்றங்களில் தலையிடுதல் போன்ற புகார்கள். டாஸ்மாக் முறைகேடு குறித்து துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகிறது.


அதே ரதீஷின் தொழில் பங்குதாரர்களாக பேசப்படும் சுஜய் ரெட்டி, அனில் ரெட்டி, விஷ்ணு ரெட்டி ஆகியோருக்கு நெருக்கமானவர்கள் என்றும் வெளியே கூறுகிற நிலை. தற்போதுள்ள நடைமுறையில், இந்திய அரசின் மத்திய உள்துறை அமைச்சகத்தின் 25022/13/78-F.I நாள்: 5.9.1979 மற்றும் OM number 25022/20/98-F.IV நாள் 27.12.2000 கடிதங்களில் தெரிவிக்கப்பட்டிருக்கும் நடைமுறைகளின்படி, கவன ஈர்ப்பு சுற்றறிக்கைகள் வெளியிடப்படுகின்றன.

இந்தியக் குடிமகனைப் பொறுத்த வரை, கவன ஈர்ப்பு சுற்றறிக்கைக்கான கோரிக்கை அனைத்துக் குடிவரவு சோதனைச் சாவடிக்கும் பரிந்துரைக்கப்பட்டிருக்கும் வடிவில், முழுமையான தகவல்களுடன் அனுப்பப்படும்.

கவன ஈர்ப்பு சுற்றறிக்கைக் கோரிக்கை விண்ணப்பத்தில் கையொப்பமிடும் அதிகாரியின் பெயர், பதவி தவறாமல் குறிப்பிட்டிருக்கும். இவையில்லாத கோரிக்கைகள் நிராகரிக்கப்படும்.

கவன ஈர்ப்பு சுற்றறிக்கைக் கோரிக்கையில் இணைக்கப்படும் படிவத்தில் கோரிக்கை விடுப்பவரின் தொடர்பு விவரங்கள் முழுமையாக வழங்கப்படும், முறையான தொடர் நடவடிக்கைகளுக்காக, தொடர்புடைய கட்டுப்பாட்டு அறையின் தொலைபேசி மற்றும் அலைபேசி எண்கள் இடம் பெற்றிருக்கும்.

கவன ஈர்ப்பு சுற்றறிக்கை விடுக்கப்படும் நபரின் முழுமையான தகவல்கள் இணைப்பில் இடம் பெற்றிருக்கும். குறைந்தபட்சம் மூன்று அடையாளம் காணும் அளவுருக்கள் அளிக்கப்பட்டிருக்கும். அவை இல்லாத நிலையில், கோரிக்கை ஏற்கப்படாது. பெயர், ஒளிப்படம், கடவுச்சீட்டுத் தகவல்கள் போன்றவை இருக்கும். உண்மையான பயணிகளுக்கு இடையூறு இல்லாத வகையில் கூடுதல் அளவுருக்களை முன்பே வழங்குவது கோரிக்கை அளிப்பவரின் பொறுப்பாகும்.

கவன ஈர்ப்பு சுற்றறிக்கைக்கேற்ப குடிவரவு அதிகாரிகளால் எடுக்கப்பெற்ற நடவடிக்கையின் சட்டப்பூர்வப் பொறுப்பு அதனைத் தோற்றிவித்த நிறுவனம் மற்றும் அமைப்புக்குத்தான் உண்டு.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...

சோழப் பேரரசி வானதி எழுப்பிய மூவர் கோவில்

முதலாம் இராஜேந்திர சோழரின் தாய்  வானவன் மாதேவி எனும் அரசி வானதி, சோழர்களின் வரலாற்றில் பெரும் புகழ் மாமன்னர் அருள்மொழித் தேவன் எனும் இராஜராஜசோழச் சக்கரவர்த்தி மீது இணையில்லாத காதல் மங்கை கொடும்பாளூர் இளவரசி வானதியை "பொன்னியின் செல்வன்" கதை படித்த யாரும் மறக்க முடியாது. சோழர் கடற்படையின் பரப்பை இலங்கை வரை  சென்று வென்று வந்த வரலாற்று நிகழ்வுகளின் மூலம் குறுநில மன்னர்கள் அல்லது வேளிர்  துணை நின்றார்கள் அதில் ஈழத்துப் பட்டம்  வென்ற கொடும்பாளூர் வேளிர் மகளான வானதி இளம் வயதிலேயே தாய் தந்தையை இழந்தவர். கொடும்பாளூர் சிற்றரசன் அதாவது வேளிர் சோழ சாம்ராஜ்யத்தின் சேனாதிபதி யாகவும் இருந்த சிறிய தந்தை குறுநில மன்னர் பூதி விக்ரமகேசரியால் வளர்க்கப்பட்டவர் தான் வானவன் மாதேவி எனும் அரசி வானதி. கொடும்பாளூர் பிறந்து திருக்கோவிலூரை பின்னர் ஆண்ட மலையமானின் மகள்  “மேலும் வானவன்மாதேவி மன்னர் ராஜராஜ சோழர் மறைந்த உடன் பிரிவாற்றாமல் உடன்கட்டை ஏறி தன் உயிரை மாய்த்துக் கொண்டாள். இதை திருவாலங்காட்டுச் செப்பேடுகள் மூலம் அறியலாம் ஈழத்தில் நடைபெற்ற யுத்தத்திற்காக கொடும்பாளூர்  வேளிர் கடல...