முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொதுமக்கள் காவல்துறை புகார்களைத் தெரிவிக்க, மாவட்டம், மாநகரம் வாரியாக தனி Mobile Phone WhatsApp எண்கள்

தமிழ்நாடு காவல்துறையின் அனைத்து மாவட்டங்கள் மற்றும் மாநகர காவல் ஆணையரகங்களிலும் Internal Vigilance Cells அமைக்கப்பட்டது

 காவல்துறை அலுவலர்கள் மற்றும் ஆளிநர்களுக்கு எதிரான லஞ்சம் ஊழல், முறைகேடு, அதிகாரத் துஷ்பிரயோகம் மற்றும் பிற ஒழுங்கீனச் செயல்கள் தொடர்பான புகார்களைத் தடுப்பது, கண்காணிப்பது மற்றும் விசாரிப்பது தான் முக்கிய நோக்கம்.

பொதுமக்கள் புகார்களை எளிதில் தெரிவிக்க, மாவட்டம் மற்றும் மாநகரம் வாரியாக தனி Mobile Phone WhatsApp எண்கள் வழங்கப்பட்டன.

 புகார்தாரர்கள் மற்றும் சாட்சிகளின் அடையாளம் இரகசியமாக பாதுகாக்கப்படும் என்ற வாக்குறுதியுடன் 

புகார் அளித்ததற்காக எந்தவிதமான துன்புறுத்தல், அச்சுறுத்தல் அல்லது பழிவாங்கும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாது எனவும் அதில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.


பெறப்படும் அனைத்து புகார்களும் நியாயமான மற்றும் பாரபட்சமற்ற முறையில் உரிய காலக்கெடுவுக்குள் விசாரிக்கப்பட்டு, தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்.

Internal Vigilance Cell-ன் செயல்பாடுகள் உயர் காவல்துறை அதிகார அலுவலர்களால் தொடர்ந்து கண்காணிக்கப்படும்.

 எனவே, பொதுமக்கள் எந்த அச்சமும் இன்றி காவல்துறையினர் தொடர்பான ஊழல் அல்லது முறைகேடு புகார்களைத் தெரிவிக்கலாம் என DGP/HoPF தகவல் மூலம் கேட்டுக்கொண்டுள்ளார்.காவல்துறை மீதான ஆதாரமான ஊழல் புகாருக்கு 46 வாட்ஸ் ஆப் எண்கள் - மாநிலம் முழுவதும் வழங்கியது 

ஊழல், அதிகார துஷ்பிரயோகம் குறித்து புகார் அளிக்க மாவட்ட வாரியாக தனி செல்லுலர் தொலைபேசி எண்களின் மூலம் புகார்தாரர்களின் ரகசியம் பாதுகாக்கப்படும் என காவல்துறை தலைமை இயக்குனர் உறுதி, காவல்துறையினரின் ஊழல், முறைகேடு, அதிகார துஷ்பிரயோகம் மற்றும் ஒழுங்கின்மை ஆகிய புகார்களை பொது மக்கள் நேரடியாகத் தெரிவிக்கும் வகையில், தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்கள் மற்றும் ஆணையர் அலுவலகங்களிலும் உள் விழிப்புணர்வு கலங்கள் (Internal Vigilance Cells) அமைக்கப்பட்ட கலங்களுக்கு மாவட்ட வாரியாக தனி செல்லுலர் தொலைபேசி வாட்ஸ்அப் எண்கள் ஒதுக்கப்பட்டன.

காவல்துறையினர் மீதான ஊழல் புகார்கள் அடிக்கடி எழுந்தாலும், அவற்றை புகார் அளிக்க பொதுமக்கள் அஞ்சும் சூழல் நிலவி வந்தது. இந்த நிலையை மாற்றும் வகையில், காவல்துறை தலைமை இயக்குநர் டாக்டர் மகேஷ் குமார் அகர்வால், ஐ.பி.எஸ்.,  அறிவுறுத்தலின் பேரில், அனைத்து மாவட்டங்களிலும் உள் விழிப்புணர்வு கலங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஊழல், ஒழுக்கக்கேடு, அதிகார துஷ்பிரயோகம் மற்றும் பிற ஒழுங்கின்மைகளை தடுக்கவும், கண்காணிக்கவும், விசாரணை செய்யவும் இந்த கலங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

பொதுமக்கள் தங்கள் மாவட்டம் அல்லது நகரத்திற்கான உள் விழிப்புணர்வுக் கலத்தை தொடர்பு கொள்ள, 46 இடங்களுக்கான தனி எண்கள் வழங்கப்பட்டுள்ளன. அந்த எண்களின் பட்டியல்:


 1 சென்னை மாநகரம் 7871723000, 

 2 தாம்பரம் மாநகரம்  6374514428,

3 அவடி மாநகரம்  9840018110,

4 சேலம் மாநகரம், 9626207262,

5 திருப்பூர் மாநகரம்  8438761616, 

6 திருச்சிராப்பள்ளி மாநகரம் 7871202100,

7 மதுரை மாநகரம்  8300021100,

8 கோயம்புத்தூர் மாநகரம் 8148919100,

9 திருநெல்வேலி மாநகரம் 9952540100,

10 காஞ்சிபுரம்  9940031700,

11 செங்கல்பட்டு 9500779100,

12 திருவள்ளூர்  9498181359,

13 விழுப்புரம்  9944889161,

14 கள்ளக்குறிச்சி 8870353799,

15 கடலூர்  9677100551,

16 வேலூர்  8807258532,

17 ராணிப்பேட்டை  7305877732,

18 திருப்பத்தூர்  9600903373,

19 திருவண்ணாமலை 7695878100,

20 திருச்சிராப்பள்ளி 7448878100,

21  புதுக்கோட்டை  9500550543,

22 கரூர் 8807709299,

23 பெரம்பலூர் 8903631122,

24 அரியலூர் 7904932100,

25 தஞ்சாவூர்  9840438678,

26 திருவாரூர் 9944336551,

27 நாகப்பட்டினம்  9489901106,

28 மயிலாடுதுறை  9087755100,

29 கோயம்புத்தூர் 7540083100,

30 ஈரோடு  9655220100, 

31 திருப்பூர்  9042227100,

32 |நீலகிரி  9789800100,

33 சேலம் 9629390203,

34 நாமக்கல் 9566637105,

35 |தர்மபுரி  7604904492,

36 கிருஷ்ணகிரி 9025552100

37 மதுரை 9003719004, 

38  விருதுநகர்  9600975100,

39 திண்டுக்கல்  7904300491,

40 தேனி 9626207262,

41 இராமநாதபுரம்  7904114100,

42 சிவகங்கை  7598788108,

43 திருநெல்வேலி 9498101740,

44 தென்காசி  9385678039,

45  தூத்துக்குடி  9489929270,

46 |கன்னியாகுமரி  7358776100,

இந்த உள் விழிப்புணர்வுக் கலங்கள் மூலம் புகார் அளிப்பவர்கள் மற்றும் சாட்சிகளின் அடையாளம் முழுமையாக ரகசியமாக பாதுகாக்கப்படும் என்று காவல்துறை தரப்பில் உறுதியளிக்கப்பட்டுள்ளது. மேலும், புகார் அளித்ததற்காக எவ்வித தொல்லை, மிரட்டல் அல்லது பழிவாங்கும் நடவடிக்கைகளுக்கும் எந்த புகார்தாரரும் உட்படுத்தப்பட மாட்டார்கள்.

இந்த கலங்களின் செயல்பாடுகள், காவல் கண்காணிப்பாளர், கூடுதல் காவல் கண்காணிப்பாளர், காவல் ஆணையர், கூடுதல் டிஜிபி மற்றும் டிஜிபி ஆகியோரால் வழக்கமான முறையில் கண்காணிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஊழலற்ற, வெளிப்படையான, பொறுப்புள்ள காவல் துறையை உறுதி செய்வதற்காக, பொதுமக்கள் இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளுமாறு டிஜிபி அலுவலகம் கேட்டுக்கொண்டுள்ளது.

 சென்னையில் மட்டும் சோதனை அடிப்படையில் தொடங்கப்பட்ட உள் விழிப்புணர்வு கலங்கள், இப்போது மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தப்பட்டுள்ளன. இது வரவேற்கத்தக்க நடவடிக்கை.  ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தனி எண்கள் ஒதுக்கப்பட்டிருப்பது, புகார் அளிப்பதை எளிமையாக்கும். ஆனால், இந்த எண்கள் பொதுமக்களுக்கு எளிதில் கிடைப்பது அவசியம், புகார்தாரர்களின் ரகசியம் பாதுகாக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், கடந்த கால அனுபவங்கள் பொதுமக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன. அந்த அச்சத்தை போக்க நேரடி நடவடிக்கைகள் தேவை. உயரதிகாரிகள் முதல் டிஜிபி வரை இந்த கலங்களை கண்காணிப்பது, இதன் முக்கியத்துவத்தை காட்டுகிறது. ஆனால், இந்த கண்காணிப்பு வெறும் முறையானதா அல்லது உண்மையானதா என்பதை காலம் தான் சொல்லும்  இதற்கு முன்னதாக, சென்னை பெருநகர காவல் துறையில் இந்த பிரிவு மூலம் ஒரு சார்பு ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. இப்போது அது மாநிலம் முழுவதும் விரிவாக்கப்பட்டுள்ளது, இந்த முயற்சி வெற்றி பெற, விசாரணைகள் விரைவாகவும், வெளிப்படையாகவும் நடத்தப்பட வேண்டும். மேலும், உண்மையான குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

இந்த உள் விழிப்புணர்வு கலங்கள் மூலம் வரும் புகார்களின் அடிப்படையில், காவல்துறையினர் மீது ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட வாய்ப்புள்ளது. முதல் சில மாதங்களில் புகார்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம். அவற்றை முறையாக விசாரித்து, உரிய நடவடிக்கை எடுப்பது இந்த கலங்களின் மீதான நம்பிக்கையை உறுதி செய்யும். மேலும், இந்த கலங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த அரசு ஊடகங்கள் மூலம் பிரச்சாரம் மேற்கொள்ளலாம். இந்த முயற்சி வெற்றி பெற்றால், மற்ற மாநிலங்களும் இதனை பின்பற்ற வாய்ப்புள்ளது.தமிழ்நாடு காவல்துறையின் அனைத்து மாவட்டங்கள் மற்றும் மாநகர காவல் ஆணையரகங்களிலும் Internal Vigilance Cells அமைக்கப்பட்டுள்ளன.

காவல்துறை அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு எதிரான ஊழல், முறைகேடு, அதிகார துஷ்பிரயோகம் மற்றும் பிற ஒழுங்கீன செயல்கள் தொடர்பான புகார்களைத் தடுப்பது, கண்காணிப்பது மற்றும் விசாரிப்பது இதன் முக்கிய நோக்கம்.

பொதுமக்கள் புகார்களை எளிதில் தெரிவிக்க, மாவட்டம் மற்றும் மாநகரம் வாரியாக தனி Mobile/WhatsApp எண்கள் வழங்கப்பட்டுள்ளன.

புகார்தாரர்கள் மற்றும் சாட்சிகளின் அடையாளம் ரகசியமாக பாதுகாக்கப்படும்.

புகார் அளித்ததற்காக எந்தவிதமான துன்புறுத்தல், அச்சுறுத்தல் அல்லது பழிவாங்கும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாது என உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...

சோழப் பேரரசி வானதி எழுப்பிய மூவர் கோவில்

முதலாம் இராஜேந்திர சோழரின் தாய்  வானவன் மாதேவி எனும் அரசி வானதி, சோழர்களின் வரலாற்றில் பெரும் புகழ் மாமன்னர் அருள்மொழித் தேவன் எனும் இராஜராஜசோழச் சக்கரவர்த்தி மீது இணையில்லாத காதல் மங்கை கொடும்பாளூர் இளவரசி வானதியை "பொன்னியின் செல்வன்" கதை படித்த யாரும் மறக்க முடியாது. சோழர் கடற்படையின் பரப்பை இலங்கை வரை  சென்று வென்று வந்த வரலாற்று நிகழ்வுகளின் மூலம் குறுநில மன்னர்கள் அல்லது வேளிர்  துணை நின்றார்கள் அதில் ஈழத்துப் பட்டம்  வென்ற கொடும்பாளூர் வேளிர் மகளான வானதி இளம் வயதிலேயே தாய் தந்தையை இழந்தவர். கொடும்பாளூர் சிற்றரசன் அதாவது வேளிர் சோழ சாம்ராஜ்யத்தின் சேனாதிபதி யாகவும் இருந்த சிறிய தந்தை குறுநில மன்னர் பூதி விக்ரமகேசரியால் வளர்க்கப்பட்டவர் தான் வானவன் மாதேவி எனும் அரசி வானதி. கொடும்பாளூர் பிறந்து திருக்கோவிலூரை பின்னர் ஆண்ட மலையமானின் மகள்  “மேலும் வானவன்மாதேவி மன்னர் ராஜராஜ சோழர் மறைந்த உடன் பிரிவாற்றாமல் உடன்கட்டை ஏறி தன் உயிரை மாய்த்துக் கொண்டாள். இதை திருவாலங்காட்டுச் செப்பேடுகள் மூலம் அறியலாம் ஈழத்தில் நடைபெற்ற யுத்தத்திற்காக கொடும்பாளூர்  வேளிர் கடல...