முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஜவுளிக் கடை உரிமையாளரிடம் 5 லட்சம் லஞ்சம் டி எஸ் பி கைது

5 லட்சம் லஞ்சம் பெற்ற காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் கைது.

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் வட்டம் வழக்கை சாதகமாக முடித்துக் கொடுத்த வகையில் ரூபாய் .ஐந்து லட்சம் லஞ்சம் வாங்கிய கன்னியாகுமரி மாவட்டக் குற்றப்பிரிவுத் துணை கண்காணிப்பாளர்  தங்கவேலு (வயது 55), ஊழல் தடுப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் கைது செய்தனர்.

நாகர்கோவிலில் ஜவுளிக்கடை நடத்தும் சிவகுரு குற்றாலம் (வயது 66). சொத்து வாங்ககித் தருவது போல இவரிடம் சிலர் வெள்ளிச்சந்தை பகுதியில் உள்ள நிலத்தை விலை பேசி ரூபாய் .1.5 கோடி வாங்கியதாக கூறப்படுகிறது. ஆனால் அந்த 2 பேரும் வாங்கிய பணத்தைக் கொடுக்காமல், நிலத்தையும் பத்திரப் பதிவு செய்து கொடுக்காமல் மோசடி செய்ததாகத் தெரிகிறது.ரூபாய்.1.25 கோடியை மோசடி செய்ததுது குறித்து மாவட்டக் குற்றப்பிரிவு காவல்துறையில் புகார் செய்தார். துணை கண்காணிப்பாளர் தங்கவேலு சம்பந்தப்பட்ட மோசடி செய்த நபர்களிடம் விசாரணை நடத்திய நிலையில் அந்த மோசடி நபர்கள் இருவரும் விசாரணைக்கு பின்னர் சிவகுரு குற்றாலத்துக்கு சொத்தைப் பத்திரப்பதிவு செய்து கொடுத்ததைத் தொடர்ந்து சிவகுரு குற்றாலத்தை அழைத்த துணைக் கண்காணிப்பாளர் 'என்னால் தான் உங்களுக்கு சொத்து கிடைத்தது. இதற்காக ரூபாய் பத்து லட்சம் தர வேண்டும்,'' எனக் கேட்டார். கொடுக்க விரும்பாத சிவகுரு குற்றாலம் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறையினரிடம் புகார் செய்தார்.துணைக் கண்காணிப்பாளர் பீட்டர்பால் ஆலோசனையின் படி நேற்றிரவு குற்றப்பிரிவு  அலுவலகத்தில் வைத்து ரூபாய்.ஐந்து லட்சம் கொடுத்த போது அதை வாங்கிய துணை கண்காணிப்பாளர்., தங்கவேலுவை லஞ்ச ஒழிப்புத் துறையினர் கைது செய்தனர். அவரது சொந்த ஊர் கோயம்புத்தூர் மாவட்டம் சூலுார் ஆகும்



இதற்கிடையே இந்த விசாரணை நடந்து கொண்டிருந்தபோது, சிவகுருகுற்றாலத்திடம் பணம் வாங்கி மோசடி செய்த நபர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு நிலத்தை எழுதிக்கொடுத்ததாக கூறப்படுவதையறிந்த துணைக் கண்காணிப்பாளர் தங்கவேல், தான் இந்த புகாரை விசாரித்து பேசி முடித்ததால் தானே உங்களுக்கு சேரவேண்டிய நிலம் கிடைத்தது.

இதனால் எனக்கு ரூபாய்.5 லட்சம் லஞ்சமாக தர வேண்டும் என சிவகுரு குற்றாலத்திடம் ஒரு வாரமாகக் கேட்டு தொல்லைப்படுத்தியதாகத் தெரிகிறது.

ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாதவர் இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத் துறையினரிடம் புகார் செய்ததையடுத்து லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்குப் பதிவு செய்து

அங்கிருந்த துணை சூப்பிரண்டு தங்கவேலிடம் ரூ.5 லட்சத்தை லஞ்சமாக ஜவுளி கடை உரிமையாளர் கொடுத்தார். அப்போது மறைந்திருந்த லஞ்சஒழிப்புத் துறையினர் அவரைப் பிடித்துக் கைது செய்தனர். மேலும் அவரிடம் கொடுக்கப்பட்ட லஞ்ச பணம் ரூபாய்.5 லட்சத்தையும் பறிமுதல் செய்தனர்.

பின்னர் லஞ்ச ஒழிப்பு துறையினர் அவரிடம் நள்ளிரவு வரை விசாரணை மேற்கொண்டனர். மேலும் அவர் தங்கியிருந்த நாகர்கோவில் ராமன்புதூர் பகுதியில் உள்ள வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது.

பின்னர் கைது செய்யப்பட்ட துணைக் கண்காணிப்பாளர் தங்கவேலுவை நாகர்கோவிலிலுள்ள மாவட்டத் தலைமைக் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் சிறைக்கு அனுப்பப்பட்டார்.

இவர் சில மாதங்களுக்கு முன்பு தான் வெளி மாவட்டத்திலிருந்து கன்னியாகுமரி மாவட்டத்துக்கு மாற்றலானார் என்பது குறிப்பிடத்தக்கது.             


 மிரட்டியே லஞ்சம் வாங்க முயன்ற காவல்துறை துணை கண்காணிப்பாளர் தங்கவேலு தற்போது சிறையில் 

எவ்வளவோ முறை எச்சரிக்கைகள் விடப்பட்டும் விடாமல் அடம்பிடித்து லஞ்சம் வாங்கியே தீருவேன் என பணத்தாசையால் மதி இழந்து, அடாவடியாக லஞ்சம் வாங்க முற்பட்ட டிஎஸ்பி தங்கவேலு சிறைக்குள் அடைக்கப்பட்டுள்ள சம்பவம் மற்ற அதிகாரிகளுக்கு பாடமாக அமையட்டும்.

இவர்  ஈரோடு மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை துணைக் கண்காணிப்பாளராகப் பணியாற்றிய பொழுது அப்போதைய கைத்தறி துணிநூல் துறை மாவட்ட உதவி இயக்குனர் இருபத்தி ஐயாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக கைது செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.


பணம் கொடுத்தால் எத்தகைய பாதகத்தையும், தனது பணிக்காலத்தில் துணிந்து செய்தவர் இந்த காவல்துறை துணை கண்காணிப்பாளர் தங்கவேலு. கோவை, திருப்பூர் மாவட்டங்களில் இவர் வாங்கி குவித்துள்ள பல கோடி ரூபாய்  சொத்துக்களையும் லஞ்ச ஒழிப்புத்துறை தனது வழக்கில் சேர்க்க வேண்டும். பட்டியலிட வேண்டும்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த