5 லட்சம் லஞ்சம் பெற்ற காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் கைது.
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் வட்டம் வழக்கை சாதகமாக முடித்துக் கொடுத்த வகையில் ரூபாய் .ஐந்து லட்சம் லஞ்சம் வாங்கிய கன்னியாகுமரி மாவட்டக் குற்றப்பிரிவுத் துணை கண்காணிப்பாளர் தங்கவேலு (வயது 55), ஊழல் தடுப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் கைது செய்தனர்.
நாகர்கோவிலில் ஜவுளிக்கடை நடத்தும் சிவகுரு குற்றாலம் (வயது 66). சொத்து வாங்ககித் தருவது போல இவரிடம் சிலர் வெள்ளிச்சந்தை பகுதியில் உள்ள நிலத்தை விலை பேசி ரூபாய் .1.5 கோடி வாங்கியதாக கூறப்படுகிறது. ஆனால் அந்த 2 பேரும் வாங்கிய பணத்தைக் கொடுக்காமல், நிலத்தையும் பத்திரப் பதிவு செய்து கொடுக்காமல் மோசடி செய்ததாகத் தெரிகிறது.ரூபாய்.1.25 கோடியை மோசடி செய்ததுது குறித்து மாவட்டக் குற்றப்பிரிவு காவல்துறையில் புகார் செய்தார். துணை கண்காணிப்பாளர் தங்கவேலு சம்பந்தப்பட்ட மோசடி செய்த நபர்களிடம் விசாரணை நடத்திய நிலையில் அந்த மோசடி நபர்கள் இருவரும் விசாரணைக்கு பின்னர் சிவகுரு குற்றாலத்துக்கு சொத்தைப் பத்திரப்பதிவு செய்து கொடுத்ததைத் தொடர்ந்து சிவகுரு குற்றாலத்தை அழைத்த துணைக் கண்காணிப்பாளர் 'என்னால் தான் உங்களுக்கு சொத்து கிடைத்தது. இதற்காக ரூபாய் பத்து லட்சம் தர வேண்டும்,'' எனக் கேட்டார். கொடுக்க விரும்பாத சிவகுரு குற்றாலம் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறையினரிடம் புகார் செய்தார்.துணைக் கண்காணிப்பாளர் பீட்டர்பால் ஆலோசனையின் படி நேற்றிரவு குற்றப்பிரிவு அலுவலகத்தில் வைத்து ரூபாய்.ஐந்து லட்சம் கொடுத்த போது அதை வாங்கிய துணை கண்காணிப்பாளர்., தங்கவேலுவை லஞ்ச ஒழிப்புத் துறையினர் கைது செய்தனர். அவரது சொந்த ஊர் கோயம்புத்தூர் மாவட்டம் சூலுார் ஆகும்
இதற்கிடையே இந்த விசாரணை நடந்து கொண்டிருந்தபோது, சிவகுருகுற்றாலத்திடம் பணம் வாங்கி மோசடி செய்த நபர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு நிலத்தை எழுதிக்கொடுத்ததாக கூறப்படுவதையறிந்த துணைக் கண்காணிப்பாளர் தங்கவேல், தான் இந்த புகாரை விசாரித்து பேசி முடித்ததால் தானே உங்களுக்கு சேரவேண்டிய நிலம் கிடைத்தது.
இதனால் எனக்கு ரூபாய்.5 லட்சம் லஞ்சமாக தர வேண்டும் என சிவகுரு குற்றாலத்திடம் ஒரு வாரமாகக் கேட்டு தொல்லைப்படுத்தியதாகத் தெரிகிறது.
ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாதவர் இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத் துறையினரிடம் புகார் செய்ததையடுத்து லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்குப் பதிவு செய்து
அங்கிருந்த துணை சூப்பிரண்டு தங்கவேலிடம் ரூ.5 லட்சத்தை லஞ்சமாக ஜவுளி கடை உரிமையாளர் கொடுத்தார். அப்போது மறைந்திருந்த லஞ்சஒழிப்புத் துறையினர் அவரைப் பிடித்துக் கைது செய்தனர். மேலும் அவரிடம் கொடுக்கப்பட்ட லஞ்ச பணம் ரூபாய்.5 லட்சத்தையும் பறிமுதல் செய்தனர்.
பின்னர் லஞ்ச ஒழிப்பு துறையினர் அவரிடம் நள்ளிரவு வரை விசாரணை மேற்கொண்டனர். மேலும் அவர் தங்கியிருந்த நாகர்கோவில் ராமன்புதூர் பகுதியில் உள்ள வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது.
பின்னர் கைது செய்யப்பட்ட துணைக் கண்காணிப்பாளர் தங்கவேலுவை நாகர்கோவிலிலுள்ள மாவட்டத் தலைமைக் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் சிறைக்கு அனுப்பப்பட்டார்.
இவர் சில மாதங்களுக்கு முன்பு தான் வெளி மாவட்டத்திலிருந்து கன்னியாகுமரி மாவட்டத்துக்கு மாற்றலானார் என்பது குறிப்பிடத்தக்கது.
மிரட்டியே லஞ்சம் வாங்க முயன்ற காவல்துறை துணை கண்காணிப்பாளர் தங்கவேலு தற்போது சிறையில்
எவ்வளவோ முறை எச்சரிக்கைகள் விடப்பட்டும் விடாமல் அடம்பிடித்து லஞ்சம் வாங்கியே தீருவேன் என பணத்தாசையால் மதி இழந்து, அடாவடியாக லஞ்சம் வாங்க முற்பட்ட டிஎஸ்பி தங்கவேலு சிறைக்குள் அடைக்கப்பட்டுள்ள சம்பவம் மற்ற அதிகாரிகளுக்கு பாடமாக அமையட்டும்.
இவர் ஈரோடு மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை துணைக் கண்காணிப்பாளராகப் பணியாற்றிய பொழுது அப்போதைய கைத்தறி துணிநூல் துறை மாவட்ட உதவி இயக்குனர் இருபத்தி ஐயாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக கைது செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பணம் கொடுத்தால் எத்தகைய பாதகத்தையும், தனது பணிக்காலத்தில் துணிந்து செய்தவர் இந்த காவல்துறை துணை கண்காணிப்பாளர் தங்கவேலு. கோவை, திருப்பூர் மாவட்டங்களில் இவர் வாங்கி குவித்துள்ள பல கோடி ரூபாய் சொத்துக்களையும் லஞ்ச ஒழிப்புத்துறை தனது வழக்கில் சேர்க்க வேண்டும். பட்டியலிட வேண்டும்
கருத்துகள்