முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஆற்றங்கரை நாகரீகத்தின் பண்பாட்டு அடிச்சுவடு தமிழ்நாடே

ஆடிப்பெருக்கு ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் காவிரி ஆற்றங்கரையில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடி வழிபாடு செய்தனர்.  ஆடி மாதத்தில் 18 ஆம் தேதி 

மேற்குத் தொடர்ச்சி மலையும் மலை சார்ந்த இடங்களிலும்  தென்மேற்குப் பருவக்காற்றின் மழை பெய்து நிலம் நோக்கி ஆறுகளிலும் ஓடைகளிலும் புதுப்புனல் பொங்கி வரும் நாளின்று

காவேரி ஆறு பெருகி இன்று பெரு வெள்ளமாக தமிழ்நாடு ஆற்றுப்பகுதிகளைப் பாய்ச்சலுடன் கடக்கிறது. தமிழர் வாழ்வில் நீங்கா இடம் பிடித்த காவேரி!   இதோடு வைகை, தாமிரபரணியும் உண்டு,

மேலும் இந்த விசாலமான வரிசையில், அடையாறு, அமராவதி ஆறு - காவிரியின் துணையாறு, அரசலாறு, அர்ச்சுணன் ஆறு, பவானி ஆறு - காவிரியின் துணையாறு, சிற்றாறு, சின்னாறு, செஞ்சி ஆறு, செய்யாறு ஆறு ,கபினி ஆறு, கடனாறு - தாமிரபரணியின் துணையாறு, கல்லாறு, காவிரி ஆறு - தமிழகத்தின் பெரிய ஆறு, கெடிலம் ஆறு, கொள்ளிடம் ஆறு, குடமுருட்டி ஆறு, குண்டாறு, குந்தா ஆறு, குதிரையாறு - அமராவதியின் துணையாறு, நங்காஞ்சி ஆறு - குடகனாற்றின் துணையாறு, கெடிமலம், கோமுகி ஆறு, கோதையாறு, மலட்டாறு, மஞ்சளாறு, மணிமுத்தாறு - தாமிரபரணியின் துணையாறு, மணிமுக்தா ஆறு, மோயாறு, முல்லை ஆறு, நொய்யல் ஆறு - காவிரியின் துணையாறு, பச்சை ஆறு - தாமிரபரணியின் துணையாறு, பரளி ஆறு, பாலாறு, பரம்பிக்குளம் ஆறு, பைக்காரா ஆறு, சங்கரபரணி ஆறு, சண்முகா ஆறு, சிறுவாணி ஆறு, தென்பெண்ணை ஆறு, தாமிரபரணி ஆறு, உப்பாறு, வைகை ஆறு, வராக ஆறு, வைப்பாறு, வெண்ணாறு, வெட்டாறு, ஜனத்குமார ஆறு- காவிரியின் துணையாறு, மார்கண்ட ஆறு, பாம்பாறு, வாணியாறு, கம்பையநல்லூர் ஆறு-தென்பெண்னையாற்றின் துணையாறுகள் எனத் தமிழ்நாடு முழுவதும் நரம்பு மண்டலம் போல ஆறுகளிருந்தன. 

எனினும், இந்த ஆறுகள் யாவும் எல்லாப் பருவங்களிலும் வற்றாமல் ஓடிக்கொண்டிருந்தவையல்ல. மழைக்காலங்களில் மட்டுமே இந்த ஆறுகள் நீர்புரண்டு  கிடந்தன. 

கடந்த 10 நாட்களுக்கு முன்பாகவே விவசாயிகள்  நிலத்தையும் விதைகளையும் பண்படுத்தும்  நாளாகவும் இந்த ஆடிப்பெருக்கு விவசாய நிலங்களை நனைத்து பசும்பயிர்களை உருவாக்கும் நாளாகவும் இருந்த காரணத்தால். 

ஆடிப்பட்டம் தேடி விதை என்றார்கள்! 

இந்த ஆடியில் விதைத்தால் தான் தையில் அறுவடை முடியும்.


ஆண்டுதோறும் இந்த புதுப்புனல் அன்று பெண்கள் அம்மனுக்கு கூழ்  ஊற்றுவார்கள். ஆடித் திருவிழா ஆடி நோம்பி என்றெல்லாம் அழைக்கப்படும் இந்த நாட்களில் புது வெள்ளம் பாய்ந்து வருவதை வேடிக்கை பார்க்க சமைத்த உணவுகளுடன் ஆற்றோரங்களில் மக்கள் கூடுவது கால காலமாகத் தொடரும் அழகான ஏற்பாடு! அந்த நேரங்களில் நதிகள் ஓடைகளின் மீது பூக்களைத்தூவி நதியை வரவேற்பது தமிழ்நாடு மக்களின் கலாச்சாரப் பண்பாட்டுச் செயல்பாடு.


நீர் மேலாண்மை நாளாக பண்பாடு உருப்பெற்று உள்ளதை சூழலியல் வாதிகள் மக்களிடம் நீராதாரம் பகுதிகளை விழிப்புணர்வுடன் காக்க இந்த நாள் நிகழ்வுகளை சமய விழாக்கள் என முன்னெடுத்த காரணமாக இது இப்போதும் தொடர்கிறது.                  முல்லைப் பேரியாறு அணை கட்டப்பட்டது

பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பனி ஆண்ட ஆட்சியில்  - 1895 ஆம் ஆண்டில்.   அப்போது அணை கட்டுமிடம் திருவாங்கூர் சமஸ்தானத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது,       சங்க இலக்கியத்தில் கூட பல நூற்களில் மேற்கோள் கட்ட பட்டு உள்ளது ,எடுத்துகாட்டாக சிலப்பதிகாரம் வர்ணிக்கும் முல்லையாறும் பேரியாறும் சிவன் கழுத்தில் ஆரம் போல எனக் கூறுகிறது.                                "பெருமலை விலங்கிய பேரியாற் றடைகரை" (சிலப்பதிகாரம். 25, 22) என மேற்கோள் காட்ட பட்ட இடம்,(பெரியார் என்பது தவறு பேரியாறு என்பதுதான் சரி என ஆய்வளர்கள் விளக்கம்.                                      பல்லுயிர் ஓம்புதல் – இயற்கை வழிபாடு – இயற்கையோடு இயைந்த வாழ்வியல் கொண்ட தமிழர் மற்றும் இந்தியர் மரபு என்றெல்லாம் காலங்காலமாக ஜம்பமடித்து வரும் நாம் என்ன செய்தோம் என்பதே வருடத்தில் 35.3 சதவீதம் அழிந்தேவிட்டது. இத்தனைக்கும் இது அரசு துறை சார்ந்த அமைப்பு வெளியிட்ட ஸ்டடி. இழப்பு மேலும் அதிகம் என்று வேறு சில ஆராய்ச்சிகள் கூறுகின்றன.முல்லை பேரியாறு அனையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த சட்டப் போராட்டம் நடத்துவோம்— தமிழக முதலமைச்சர் அவர்கள்


152 அடி உயர்த்துவது ஓரு புறம் இருக்கட்டும்,1979 ஆம் ஆண்டில் 152 அடியிலிருந்து 136 அடியாக குறைத்ததால் தமிழ்நாட்டிற்கு ஏற்பட்ட இழுப்புகள் ஏராளம்.

தரிசாக மாறிய நிலப்பரப்பு 38000 ஏக்கர்

இருபோக சாகுபடியாக இருந்து ஓரு போக சாகுபடி நிலமாக மாறிய நிலப்பரப்பு -26000 ஏக்கர்

ஆற்று நீர் பாசன சாகுபடியிலிருந்து நீர்வரத்து இல்லாமையால் ஆழ்குழாய் சாகுபடியாக மாறிய நிலப்பரப்பு 53000 ஏக்கர்

விவசாய உற்பத்தி இழுப்பு - ஆண்டுக்கு ரூபாய்.55 கோடி

மின் உற்பத்தி இழப்பு -ஆண்டுக்கு ரூபாய்.75 கோடி

1980 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டு வரை மொத்த இழுப்பு = ரூபாய்.4346 கோடிக்கு மேல்.


சிலப்பதிகாரத்தில் கூறப்பட்டதன்படி :"வான ஊர்தி ஏறினள் மாதோகானமர் புரிகுழற் கண்ணகி - தாண் - எண்.         வெண்பா தெய்வம் தொழாஅள், கொழுநன் தொழுவாளைத் தெய்வம் தொழுந்தகைமை திண்ணிதால் - தெய்வமாய் மண்ணக மாதர்க்கு அணியாய கண்ணகி விண்ணக மாதர்க்கு விருந்து.                      கட்டுரை முடிகெழு வேந்தர் மூவருள்ளும் படைவிளங்கு தடக்கைப் பாண்டியர் குலத்தோர் அறனும், மறனும், ஆற்றலும், அவர்தம் பழவிறல் மூதுார்ப் பண்புமேம்படுதலும், விழவுமலி சிறப்பும், விண்ணவர் வரவும். ஒடியா இன்பத்து அவருடை நாட்டுக் குடியும், கூழின் பெருக்கமும், அவர் தம் வையைப் பேரியாறு வளஞ்சுரந்து ஊட்டலும், பொய்யா வானம் புதுப்பெயல் பொழிதலும், ஆரபடி, சாத்துவதி என்றிரு விருத்தியும், நேரத் தோன்றும் வரியும், குரவையும், என்றிவை அனைத்தும் பிறபொருள் வைப்போடு ஒன்றித் தோன்றும் தனிக்கோள் நிலைமையும், வடஆரியர் படைகடந்து: தென் தமிழ்நாடு ஒருங்குகானப், புரைதீர் கற்பின் தேவி தன்னுடன் அரைசு கட்டிலில் துஞ்சிய பாண்டியன் நெடுஞ் செழியனோடு ஒரு பரிசா நோக்கிக் கிடந்த மதுரைக் காண்டம் முற்றிற்று..".. என்பதே. 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலயக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...