பாட்டாளி மக்கள் கட்சியின் தலைமைப் பொதுக்குழுக் கூட்டம் இன்று சென்னை மாமல்லபுரத்தில் பூஞ்சேரியில் உள்ள கான்ஃப்ளுயன்ஸ் அரங்கில்
தற்போதய தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தலைமையில் நடைபெற்றது. பொதுக்குழு கூடி பா.ம.க தலைவராகத் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தேர்ந்தெடுக்கப்பட்ட உடன் உற்சாகத்துடன் கைதட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்திய தமிழ்நாடு பாமக சட்டமன்றக் கட்சித் தலைவர் மருத்துவர் செளமியா அன்புமணி மற்றும் அவரது மகள்கள், நாம் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு தெரிவித்த படி ஜி.கே. மணி இல்லாத பாமக தற்போது உறுவனது, பாமக தலைவராக நடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் மீண்டும் ஏகமனதாகத் தேர்வு. பாமக பொதுக்குழு கூட்டத்தில், கட்சியின் பொதுச்செயலாளராக மீண்டும் வடிவேல் ராவணனும், பொருளாளராக மீண்டும் திலகபாமாவும் தேர்வு.
மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் பா.ம.க நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் ஓய்வு அறிவிப்பிற்கு பின்னர் நடந்த பா.ம.க.வின் முக்கியமான பொதுக்குழுக் கூட்டத்தில் 31 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அரசியலிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து, முழுமையாக மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற முதல் முக்கியப் பொதுக்குழு இது தலைமைப் பதவிகளுக்கு ஒருமனதாகத் தேர்வாகனார்கள்
பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக மருத்துவர் அன்புமணி ராமதாஸ் மீண்டும் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்
கட்சி விதிகள் மற்றும் அதிகாரங்கள்
இனி வரும் காலங்களில் கட்சிக்குள்ளோ அல்லது தேர்தல்களிலோ சட்டச் சிக்கல்கள் ஏற்படாத வண்ணம், கட்சித் தலைவருக்கு முழுமையான அதிகாரங்களை வழங்கும் வகையில் கட்சியின் விதிகள் திருத்தி அமைக்கப்பட்டன.
பா.ம.க-வில் 'நிரந்தரத் தலைவர்' என்று யாரும் இல்லை என்றும், கட்சி முழுக்க முழுக்க ஜனநாயக வழியிலேயே இயங்கும் எனவும் கூட்டத்தில் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தெளிவுபடுத்தியுள்ளார்.
தமிழ்நாட்டில் ஜாதி சமூகநீதி, இடஒதுக்கீடு, பூரண மதுவிலக்கு மற்றும் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உள்ளிட்ட மக்கள் நலன் சார்ந்த முக்கியக் கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் இயற்றப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டின் நீர் மேலாண்மை மற்றும் விவசாயிகளின் நலன்களைப் பாதுகாப்பது குறித்து முக்கிய செயல்திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு கோரும் சட்டத்தை மீண்டும் இயற்றி, மத்திய அரசின் ஒப்புதலைப் பெற அனைத்து அரசியல் கட்சிகளும் கைக்கோர்த்து செயல்பட வேண்டும். எனவும்
8.கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மீண்டும் மாற்ற வேண்டும்; 50 ஆண்டு கால அநீதிக்கு இப்போதாவது மத்திய அரசு முடிவு கட்ட வேண்டும். எனவும்
9.தமிழ்நாட்டை வறட்சி பாதித்த மாநிலமாக அறிவிக்க வேண்டும்: விவசாயிகள் செலுத்த வேண்டிய நிலவரியை முழுமையாக ரத்து செய்வதுடன், பாதிப்புகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். எனவும்,
10.வறட்சியால் குறுவை சாகுபடி செய்ய முடியாத உழவர்களுக்கு ஏக்கருக்கு ரூபாய் .10 ஆயிரம் வீதம் நிவாரண உதவி வழங்க வேண்டும்.மக்களை சந்தித்து ஆதரவைத் திரட்ட வேண்டும். எனவும்,
26.தனியார் மருத்துவக் கல்லூரிகள் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களாக மாற்றப்பட்டதில் நடந்த முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும்; 6 மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகளை உடனடியாகத் தொடங்க வேண்டும். எனவும்,
27.மத்திய அரசின் கல்வி, வேலைவாய்ப்பில் ஓ.பி.சி.களுக்கு உள்இடஒதுக்கீடு வழங்குவதற்கான ரோகிணி ஆணையத்தின் பரிந்துரை அறிக்கையை மத்திய அரசு வெளியிட வேண்டும்: உடனடியாக செயல்படுத்த வேண்டும். எனவும்,
28.காவிரி நதிநீர் பிரச்சினையில் பாண்டிச்சேரியின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்; மேகதாது அணைக்கு எதிராக பாண்டிச்சேரி சட்டப்பேரவையைக் கூட்டி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். எனவும்,
29.பாண்டிச்சேரியில் கல்வி நிலையங்கள், வழிபாட்டுத் தலங்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் செயல்பட்டு வரும் மதுக்கடைகள், சாராயக்கடைகளை மூட வேண்டும். எனவும்,
30.பாண்டிச்சேரியில் தனியார் தொழிற்சாலைகள் மற்றும் வணிக நிறுவனங்களின் வேலைவாய்ப்பில் 75 விழுக்காட்டை உள்ளூர் மக்களுக்கு ஒதுக்கீடு செய்து சட்டம் இயற்ற வேண்டும். எனவும்,
31.பாட்டாளி மக்கள் கட்சியின் வரவு செலவு கணக்குத் தணிக்கையாளர் அரங்க. சுப்புரத்தினம் மறைவுக்கு இரங்கல்; தெரிவித்து புதிய தணிக்கையாளர் நியமனம்
பாட்டாளி மக்கள் கட்சியின் வரவு - செலவு கணக்குகளை தணிக்கை செய்ய சென்னை அடையாறு பி.எஸ்.மூர்த்தி அசோசியேட்ஸ் நிறுவனம் நியமிக்கப்பட்டனர். அந்த நியமனத்திற்கு பொதுக்குழு ஒருமனதாக ஒப்புதல் அளித்தது. கடந்த ஒரு வருடப் போராட்டம், பொது நீதி :- பாமகவில் இருந்த சில பதறுகளை சரியான நேரத்தில் தூற்றி தற்போது சரியான நெல்மணிகளாக புத்துயிர் பெற்ற புது "பாமக"வை..!
மகன் மருத்துவர் அன்புமணியிடம் ஒப்படைத்து விட்டார் சமூக நீதிப் போராளி நிறுவனர் மருத்துவர் ச.ராமதாஸ்,


































கருத்துகள்