முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஆயிரம் வழக்குகளுக்கும் குறைவாக நடத்தும் மாவட்ட நுகர்வோர் மன்றங்களான ஆணையங்களைக் கலைக்க உச்ச நீதிமன்றம் அனுமதி

ஆயிரம் வழக்குகளுக்கும் குறைவாக நடத்தும் மாவட்ட நுகர்வோர் மன்றங்களான ஆணையங்களைக் கலைக்க உச்ச நீதிமன்றம் அனுமதி  அதனால் நுகர்வோர்களன் நீதி பாதிக்கப்படுமா? என்பது குறித்த பார்வை 

குறைந்த வழக்குகள் உள்ள மாநிலங்களில் மாவட்ட நுகர்வோர் ஆணையங்களை கலைத்து,  நடுவர்களிடம் வழக்குகளை ஒப்படைக்கலாம்; அதற்கு உயர்நீதிமன்ற ஒப்புதல் அவசியம்.

மொத்தம் 1,000-க்கும் குறைவான நுகர்வோர்களின் வழக்குகள் நிலுவையில் உள்ள மாநிலங்கள், சில மாவட்ட நுகர்வோர் ஆணையங்களைக் கலைத்து, அந்த வழக்குகளை பணியில் உள்ள நீதித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கலாம் என உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. இருப்பினும், இந்த நடவடிக்கைக்கு அந்த மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தின் முன் ஒப்புதல் பெறப்பட வேண்டும் என்பதை நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது. தலைமை நீதிபதி சூர்யா காந்த், நீதிபதிகள் ஜோய்மல்யா பாக்ச்சி மற்றும் வி. மோகனா ஆகியோர்கள் அடங்கிய அமர்வு, கடந்த பிப்ரவரி மாதம் 11-ஆம் தேதி பிறப்பித்த உத்தரவின் தொடர்ச்சியாக இந்த தெளிவுபடுத்தலை வழங்கியுள்ளது.

இந்த உத்தரவு, நாடு முழுவதுமுள்ள நுகர்வோர் ஆணைய உறுப்பினர்களின் ஊதியம் மற்றும் பணி நிலைமைகளில் உள்ள ஏற்றத்தாழ்வுகள் குறித்து உச்ச நீதிமன்றம் தானாக  (suo motu) முன்வந்து எடுத்த வழக்கின் ஒரு பகுதியாகும். கடந்த 2025 ஆம் ஆண்டு மே மாதத்தில், பல்வேறு மாநிலங்களில் நுகர்வோர் ஆணைய உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தில் பெரும் வேறுபாடுகள் இருப்பதைக் கண்டறிந்த நீதிமன்றம், அனைத்து மாநில மற்றும் மாவட்ட நுகர்வோர் ஆணையங்களின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு ஒரே மாதிரியான ஊதியம் மற்றும் கொடுப்பனவுகளை வழங்க உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து, பிப்ரவரி மாதம் 11, 2026 ஆம் தேதி அன்று, மிகக் குறைந்த எண்ணிக்கையிலான வழக்குகள் நிலுவையில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள், முழு அளவிலான நுகர்வோர் ஆணையங்களை பராமரிப்பதற்கு பதிலாக, மாற்று ஏற்பாடுகளைச் செய்ய அனுமதி வழங்கப்பட்டது.

தற்போதைய உத்தரவில், நீதிமன்றம் பின்வரும் முக்கிய அம்சங்களை தெளிவுபடுத்தியுள்ளது:

மொத்தம் 1,000-க்கும் குறைவான நுகர்வோர் வழக்குகள் நிலுவையில் உள்ள மாநிலங்கள் மட்டுமே மாவட்ட நுகர்வோர் ஆணையங்களை கலைக்க முடியும். இந்த கலைப்பு நடவடிக்கைக்கு அந்த மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தின் முன் ஒப்புதல் (prior concurrence) பெறப்பட வேண்டும்.

 கலைக்கப்படும் ஆணையங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள், பணியில் உள்ள நீதித்துறையினரிடம் (serving judicial officers) ஒப்படைக்கப்படும்.

பிப்ரவரி மாதம் 11 ஆம் தேதி உத்தரவுப் படி அந்தத் தேதியில் நிலுவையிலிருந்த வழக்குகளுக்கு மட்டுமல்ல, எதிர்காலத்தில் பதிவாகும் புதிய வழக்குகளுக்கும் இது பொருந்துமென நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.  வழக்குகளின் எண்ணிக்கை மிகக் குறைவாக உள்ள அனைத்து வடகிழக்கு மாநிலங்களுக்கும் இந்த உத்தரவு பொருந்தும் என்று நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

 நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட ஆணையங்கள், பொதுமக்களுக்கு விரைவான நீதி வழங்கும் நோக்கத்துடன் செயல்பட வேண்டும். ஆனால், வழக்குகளின் எண்ணிக்கை குறைவு என்ற காரணத்திற்காக ஆணையங்களை கலைப்பது, நுகர்வோரின் அடிப்படை உரிமையை பாதிக்குமா எனும் கேள்வியும் எழுகிறது. ஆயிரம் வழக்குகள் என்ற எண்ணிக்கை எந்த அட இது ஒரு தன்னிச்சையான முடிவா? மாற்று ஏற்பாடாக நீதித்துறை அதிகாரிகளிடம் வழக்குகளை ஒப்படைப்பது, அவர்களின் ஏற்கனவே உள்ள பணிச்சுமையை அதிகரிக்கும். நுகர்வோர் வழக்குகளுக்கு தனி நிபுணத்துவம் தேவைப்படும் போது,  நுகர்வோர் ஆணைய உறுப்பினர்களின் ஊதிய பிரச்சனையே இந்த வழக்கின் மூல காரணம். ஊதிய சீரமைப்பு செய்யாமல், ஆணையங்களையே கலைக்க அனுமதிப்பது, பிரச்சனைக்கு தீர்வாகுமா .

இந்த உத்தரவின் பேரில், 1,000-க்கும் குறைவான வழக்குகள் உள்ள மாநிலங்கள், தங்கள் மாவட்ட நுகர்வோர் ஆணையங்களை கலைக்கும் முன், உயர்நீதிமன்ற ஒப்புதலைப் பெற வேண்டும். இதனால், பல மாநிலங்களில் மாவட்ட நுகர்வோர் ஆணையங்கள் மூடப்பட வாய்ப்புள்ளது. இதற்கிடையில், மாநில அரசுகள் பிப்ரவரி 11 உத்தரவிற்கு இணங்க தாங்கள் மேற்கொண்ட ஏற்பாடுகள் குறித்து நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். உத்தரபிரதேசம் உள்ளிட்ட சில மாநிலங்களில், ஓய்வு பெற்ற உறுப்பினர்களின் ஊதியப் பிரச்சனைகளும் தொடர்ந்து விசாரணையில் உள்ளன.

 இந்தச் செய்தியானது, உச்ச நீதிமன்றத்தின் `In Re: Pay and Allowances of members of the UP State Consumer Disputes Redressal கமிஷன் (Suo Motu) வழக்கில் ஜூலை 26, 2026 ம் தேதி அன்று பிறப்பிக்கப்பட்ட உத்தரவின் அடிப்படையில் உள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

திருப்புத்தூர் வேட்பாளருக்கு விதித்த உயர் நீதிமன்றத் தடையை விலக்கிய உச்சநீதிமன்றம்

ஒரு வாக்கில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் திருப்பத்தூர் தொகுதி சட்டமனற உறுப்பினர் சீனிவாச சேதுபதிக்கு எதிராக தோல்வியடைந்த தி.மு.க வேட்பாளர் முன்னால் அமைச்சர் கே. ஆர். பெரியகருப்பன் தொடர்ந்த சென்னை உயர் நீதிமன்ற வழக்கில் சட்டமன்றத்தில் நடக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பில் த.வெ.க. எம்.எல்.ஏ பங்கேற்கக் கூடாது என்று உயர்நீதிமன்ற உத்தரவுக்கு நேற்று உச்ச நீதிமன்றம் உடனடியாகத் தடை. விதித்தது,  திருப்பத்தூர் திமுக வேட்பாளர் கே. ஆர்.பெரிய கருப்பனுக்கு ஒரு உண்மை தற்போது புரிந்திருக்கும் அது கண்ணைக் கட்ட வைத்த தேர்தல் ஆணையத்தின் சிறப்பான வாதம் தான், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை மே மாதம் 4 ஆம் தேதி காரைக்குடியில் நடந்த நிலையில் ஏமாற்றி வெற்றி பெற நினைத்து மாலையில் திமுகவினர் அராஜகம் செய்ய நினைத்த நிலையில் அதே தொகுதியில் பாஜகவின் கூட்டணிக் கட்சி சார்பாக போட்டியிட்ட தென்னிந்திய பார்வேடு பிளாக் கட்சியின் வேட்பாளர் கே. சி. திருமாறன் ஜி களமிறங்கி கடைசி வரை தவெக வேட்பாளர் அருகில் இருந்து திமுகவினரின் கடைசி நேர முறைகேடுகளுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்பட...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலயக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...