வங்கி மேலாளரின் கன்னத்தில் அறைந்த மு.க.அழகிரி மகள் கயல்விழி கைதாகி ஜாமீனில் விடுதலை
சென்னை அடையார் சாஸ்திரி நகரில் திமுக முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகள் கயல்விழிக்கு சொந்தமான வணிக வளாகத்தில் எஸ்.பி.ஐ. வங்கி கிளை இயங்கி வருகிறது.
20-ஆம் தேதி அந்தக் கட்டிடத்தில் உள்ள மின்தூக்கி பழுதடைந்ததாக கூறப்படுகிறது. இதனால் வங்கிக்கு வந்த முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும்
வாடிக்கையாளர்கள் படிக்கட்டுகளைப் பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டதால் சிரமம் ஏற்பட்டது.
இதுதொடர்பாக வங்கிக் கிளை மேலாளர் ஹர்ஷீன்சிங், கட்டிடப் பராமரிப்பு பொறுப்பில் இருந்த கயல்விழியின் வீட்டு பணியாளரைத் தொடர்புகொண்டு மின்தூக்கியை உடனடியாக சீரமைக்குமாறு கண்டிப்புடன் வலியுறுத்தியதை தையடுத்து கயல்விழி நேரடியாக வங்கிக்கு சென்று வாக்குவாதத்தின் போது ஆத்திரமடைந்து, கிளை மேலாளர் ஹர்ஷீன் சிங்கின் கன்னத்தில் அறைந்துள்ளார்.
இந்தச் சம்பவம் மேலாளர் அறையில் பொருத்தப்பட் டிருந்த கண்காணிப்புக் கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளை ஆதாரமாகக் கொண்டு, செய்தி சமூக வலைத்தளங்களில் பரவிய நிலையில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு வங்கியின் முதன்மை மேலாளர் நமச்சிவாயம் சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
அதன் அடிப்படையில் சாஸ்திரி நகர் காவல் நிலையத்தில் கயல்விழி மீது கொலை மிரட்டல் உள்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசார ணையை தொடங்கினர். பாரதிய நியாய சன்ஹிதா (BNS) சட்டத்தின் கீழ் ஆபாசமாகப் பேசுதல் (296-b), அத்துமீறி நுழைதல் (329-4), தன்னிச்சையாகக் காயம் ஏற்படுத்துதல் (115-2) மற்றும் குற்றவியல் மிரட்டல் (351-2) ஆகிய 4 பிரிவுகளின் கீழ் அடையாறு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். விசாரணையின் முடிவில் அவர் முறைப்படி கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் உள்ள பிரிவுகளுக்கு 3 ஆண்டுகளுக்குக் குறைவான தண்டனையே உள்ளதால், சட்ட நடைமுறைகளின்படி அவர் உடனடியாக காவல் நிலைய ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். எனினும், அனுமதியின்றி சென்னையை விட்டு வெளியேறக் கூடாது என அவருக்கு நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தைக் கண்டித்து, கயல்விழி அழகிரி மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கக் கோரி எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் மற்றும் அலுவலர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். இதற்கிடையில், காவல்துறை அனுப்பிய சம்மனின் பேரில் கயல்விழி நேற்று மதியம் 1 மணியளவில் சாஸ்திரி நகர் காவல் நிலையத்தில் ஆஜரானவரிடம் சுமார் 3 மணி நேரம் நடத்தப் பட்ட விசாரணையின் போது, சம்பவம் தொடர்பாக அவர் அளித்த விளக்கங்கள் அனைத்தும் எழுத்துப்பூர்வமாகவும், வீடியோ காட்சிகள் மூலம் பதிவாகவும் பதிவு செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டது.
விசாரணை முடிவில் கயல்விழி கைது செய்யப்பட்டு, பின்னர் காவல் நிலையத்தில் சுய ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்த வழக்கின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், விசாரணை நிறைவடைந்ததும் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய காவல்துறை நட வடிக்கை மேற்கொண்டு வருகின்றனர் கடந்த கால நிகழ்வு ஒரு பார்வை:திமுக முன்னால் தலைவர் கலைஞர் மு. கருணாநிதி மகன்
முன்னாள் மத்திய அமைச்சரான மு.க.அழகிரி மீது கடந்த காலங்களில் பல்வேறு குற்றவியல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு வழக்குகளில் இருந்து அவர் நீதிமன்றங்களில் வழக்கு வாதம் மூலம் விடுவிக்கப்பட்டுள்ளார். ஆட்சி அதிகாரம் தந்த பலம் மற்றும் எதிர்த்து நிற்கும் நபர்கள் பலஹீனம் முன்னால் அமைச்சர்
தா.கிருஷ்ணன் கொலை வழக்கு 2003ஆம் ஆண்டு மதுரையில் நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்த போது படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் மு.க.அழகிரி முதன்மைக் குற்றவாளியாக சேர்க்கப்பட்டு, அப்போதைய அதிமுக அரசால் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கு ஆந்திரப்பிரதேச மாநிலம் சித்தூர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்றது. போதிய ஆதாரங்கள் இல்லை என 2008-ஆம் ஆண்டு மு.க.அழகிரி உள்ளிட்ட அனைவரும் இந்த வழக்கில் இருந்து முற்றிலுமாக விடுவிக்கப்பட்டனர்.
அடுத்ததாக தினகரன் நாளிதழ் அலுவலகத்தில் நடந்த தாக்குதல் குற்றச்சாட்டு: 2007-ஆம் ஆண்டு, திமுக தலைவர் கலைஞர் மு கருணாநிதியின் அரசியல் வாரிசு யார் என்ற கருத்துக்கணிப்பை தினகரன் நாளிதழ் வெளியிட்டதில் மு.க.ஸ்டாலினுக்கு ஆதரவாக முடிவுகள் இருந்ததால் ஆத்திரமடைந்த மு. க.அழகிரியின் ஆதரவாளர்கள், மதுரையில் உள்ள தினகரன் அலுவலகத்தின் மீது வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தினர். இச்சம்பவத்தில் மூன்று ஊழியர்கள் உயிரிழந்தனர். இந்த வழக்கை சிபிஐ விசாரித்ததில் குற்றம் சாட்டப்பட்ட மு. க.அழகிரியின் ஆதரவாளர்கள் உள்ளிட்ட 17 பேரையும் நீதிமன்றம் விடுவித்தது.
அடுத்து தேர்தல் அதிகாரியான தாசில்தார் மீதான தாக்குதல் வழக்கு 2011 சட்டமன்றத் தேர்தலின் போது, மதுரை மேலூர் அருகே தேர்தல் பிரசாரத்தை வீடியோ எடுத்த உதவித் தேர்தல் நடத்தும் அலுவலரான தாசில்தார் காளிமுத்தை அழகிரியும் அவரது ஆதரவாளர்களும் தடுத்துத் தாக்கியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. நீண்ட காலம் வழக்கை விசாரித்த மதுரை நீதிமன்றம், பிப்ரவரி மாதம் 2024- ஆம் ஆண்டில் மு.க.அழகிரி உள்ளிட்ட 16 பேரையும் விடுவித்தது.
அடுத்ததாக நில அபகரிப்பு வழக்கு 2014 ஆம் ஆண்டு மதுரை சிவரக்கோட்டையில் உள்ள விநாயகர் கோயிலுக்குச் சொந்தமான 44 சென்ட் நிலத்தை, போலி ஆவணங்கள் மூலம் அழகிரிக்குச் சொந்தமான கல்வி அறக்கட்டளைக்கு அபகரித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
தற்போதைய நிலை: இந்த வழக்கில் அவர் முன்பிணை பெற்றார். இந்த வழக்கிலிருந்து தன்னை விடுவிக்கக் கோரி அவர் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து, வழக்கை எதிர்கொள்ள உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில்
தற்போது சென்னை அடையாறில் உள்ள இவரது மகள் கயல்விழிக்கு சொந்தமான கட்டடத்தில் லிப்ட் பழுதானது தொடர்பான தகராறில், எஸ்பிஐ வங்கி மேலாளரை தாக்கியதாக கயல்விழி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்
இதில் பொதுநீதி ...... "முன்பு ஏசு வந்தார், பின்பு காந்தி வந்தார் இந்த மானிடர் திருந்திடப் பிறந்தார் இவர் திருந்த வில்லை மனம் வருந்தவில்லை அந்த மேலோர் சொன்னதை மறந்தார்"......... இந்தப்பாடல் தான்








கருத்துகள்