முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நீதிமன்றங்களில் நிலுவை வழக்குகள் குறித்து நாடாளுமன்ற மாநிலங்களவையில் மத்திய அரசு அதிகாரப்பூர்வமான தகவல் வெளியீடு

இந்தியாவில் நீதிமன்றங்களில் நிலுவை வழக்குகள் குறித்து நாடாளுமன்ற மாநிலங்களவையில் மத்திய அரசு அதிகாரப்பூர்வமான தகவல் வெளியீடு

நாடாளுமன்ற மாநிலங்களவை கேள்வி எண் 597-க்கு பதிலளித்த சட்டம் மற்றும் நீதித்துறை இணை அமைச்சர் (தனிப்பொறுப்பு) அர்ஜுன் ராம் மேக்வால், National Judicial Data Grid (NJDG)-இன் 16.07.2026 நிலவரத்தின் அடிப்படையில், இந்தியாவின் உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றங்கள் மற்றும் மாவட்ட மற்றும் கீழமை நீதிமன்றங்களில் நிலுவையிலுள்ள வழக்குகளின் விவரங்களைத் தாக்கல் செய்துள்ளார். 

உச்சநீதிமன்றத்தில் 16.07.2026 ஆம் தேதி நிலவரப்படி, இந்திய உச்சநீதிமன்றத்தில் மொத்தம் உள்ள நிலுவை வழக்குகள் 96,024 ஆகும், 

30 ஆண்டுகளுக்கும் மேலாக 26 வழக்குகள்,

20 ஆண்டுகளுக்கும் மேலாக – 558 வழக்குகள்,

10 ஆண்டுகளுக்கும் மேலாக – 10,094 வழக்குகள்,

5 ஆண்டுகளுக்கும் மேலாக – 24,611 வழக்குகள்,

1 ஆண்டுக்கும் மேலாக – 49,248 வழக்குகள்,

நாடு முழுவதும் உள்ள 25 உயர்நீதிமன்றங்களில்: மொத்த நிலுவை வழக்குகள் – 64,72,536 ஆகும்,

30 ஆண்டுகளுக்கும் மேலாக – 80,660 வழக்குகள்,

20 ஆண்டுகளுக்கும் மேலாக – 4,52,152 வழக்குகள்,

10 ஆண்டுகளுக்கும் மேலாக – 16,14,657 வழக்குகள்,

5 ஆண்டுகளுக்கும் மேலாக – 29,75,161 வழக்குகள்,

1 ஆண்டுக்கும் மேலாக – 52,43,328 வழக்குகள், 

நாடு முழுவதும் உள்ள மாவட்ட மற்றும் கீழமை நீதிமன்றங்களில்: மொத்த நிலுவை வழக்குகள் – 4,98,45,538,


30 ஆண்டுகளுக்கும் மேலாக – 81,275 வழக்குகள்,

20 ஆண்டுகளுக்கும் மேலாக – 7,21,357 வழக்குகள்,

10 ஆண்டுகளுக்கும் மேலாக – 54,37,032 வழக்குகள்,

5 ஆண்டுகளுக்கும் மேலாக – 1,48,45,848 வழக்குகள்,

1 ஆண்டுக்கும் மேலாக – 3,74,95,558 வழக்குகள், 


வழக்குத் தேக்கத்தை குறைக்க மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து, 

மத்திய அரசு தனது பதிலில், வழக்குத் தேக்கத்தை குறைக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டுள்ள முக்கிய நடவடிக்கைகளையும் விளக்கியுள்ளது.

அவற்றில்: eCourts Phase-III திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

Fast Track Special Courts (FTSCs) மூலம் பாலியல் வன்கொடுமை மற்றும் POCSO வழக்குகள் விரைவாக விசாரிக்கப்படுகின்றன.

அனைத்து உயர்நீதிமன்றங்களிலும் Arrears Committees அமைக்கப்பட்டுள்ளன.

புதிய குற்றவியல் சட்டங்கள் மற்றும் பல்வேறு சட்டத் திருத்தங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன.

Alternative Dispute Resolution (ADR) மற்றும் Lok Adalat போன்ற மாற்று தீர்வு முறைகள் ஊக்குவிக்கப்படுகின்றன. 

தமிழ்நாடு நிலை:-மத்திய அரசு வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களின்படி, சென்னை உயர்நீதிமன்றத்தில் மட்டும் 5,67,814 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

அவற்றில்: 30 ஆண்டுகளுக்கும் மேலாக – 3,118 வழக்குகள்,

20 ஆண்டுகளுக்கும் மேலாக – 76,298 வழக்குகள்,

10 ஆண்டுகளுக்கும் மேலாக – 1,19,699 வழக்குகள்,

5 ஆண்டுகளுக்கும் மேலாக – 2,05,815 வழக்குகள்,

1 ஆண்டுக்கும் மேலாக – 4,17,639 வழக்குகள், 

மேலும், தமிழ்நாட்டின் மாவட்ட மற்றும் கீழமை நீதிமன்றங்களில் மொத்தம் 17,81,234 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

அவற்றில்: 30 ஆண்டுகளுக்கும் மேலாக – 450 வழக்குகள்,

20 ஆண்டுகளுக்கும் மேலாக – 4,173 வழக்குகள்,

10 ஆண்டுகளுக்கும் மேலாக – 63,962 வழக்குகள்,

5 ஆண்டுகளுக்கும் மேலாக – 2,68,543 வழக்குகள்,

1 ஆண்டுக்கும் மேலாக – 10,91,674 வழக்குகள், 

இந்திய நீதித்துறையில் வழக்குத் தேக்கம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் 5.67 லட்சத்திற்கும் அதிகமான வழக்குகளும், தமிழ்நாடு மாவட்ட மற்றும் கீழமை நீதிமன்றங்களில் 17.81 லட்சத்திற்கும் அதிகமான வழக்குகளும் நிலுவையில் இருப்பது கவலைக்குரியதாகவே பார்க்கப்படுகிறது,.

நீதிபதிகள் காலிப்பணியிடங்களை விரைந்து நிரப்புதல், நீதிமன்ற உள்கட்டமைப்பை மேம்படுத்துதல், தொழில்நுட்ப வசதிகளை விரிவுபடுத்துதல், மாற்று தகராறு தீர்வு (ADR) முறைகளை ஊக்குவித்தல் ஆகியவை வழக்குத் தேக்கத்தை குறைப்பதில் முக்கிய பங்காற்றும் அம்சங்களாகும் எனத் தகவல்   இந்த நிலையில் நாள்தோறும் 30-40 வழக்கறிஞர்கள் மீது கிரிமினல் வழக்குகள் வருவதாக - நீதிபதி அதிர்ச்சி; பார் கவுன்சில் ஆய்வுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

'குற்றவியல் பின்னணியில் வழக்கறிஞர்கள் பார் சங்க தலைவர்களாக ஆவது கவலைக்குறியது என' - நீதிபதி பாரத சக்கரவர்த்தி கண்டனம்; பார் கவுன்சில்களுக்கு ஆகஸ்ட் 24 ஆம் தேதி வரை கெடு!

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி டி. பாரத சக்கரவர்த்தி, தினமும் 30 முதல் 40 வழக்கறிஞர்கள் மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதனையடுத்து, இந்திய பார் கவுன்சில் (BCI) மற்றும் தமிழ்நாடு-புதுச்சேரி பார் கவுன்சில் (BCTNP) ஆகியவை, வழக்கறிஞர்கள் மற்றும் சட்டப் பட்டதாரிகள் மீதான கிரிமினல் வழக்குகள் குறித்து விரிவான ஆய்வு நடத்த வேண்டுமென்று உத்தரவிட்டுள்ளார். 'நீதித்துறையின் நம்பகத்தன்மையே கேள்விக்குறியாகும்' என்று கவலை தெரிவித்துள்ளவர், இந்தப் பிரச்சனைக்கு உரிய விதிமுறைகள் மற்றும் கொள்கைகளை வகுக்க பார் கவுன்சில்களுக்கு ஆகஸ்ட் மாதம் 24 ஆம் தேதி வரை அவகாசம் வழங்கியுள்ளார்.

கிரிமினல் வழக்குகளை ரத்து செய்யும் பொறுப்பில் உள்ள நீதிபதி பாரத சக்கரவர்த்தி, தனது அன்றாடப் பணியின் போது, நடைமுறையில் உள்ள வழக்கறிஞர்கள் மற்றும் சட்டப் பட்டதாரிகள் மீது ஏராளமான கிரிமினல் வழக்குகள் நிலுவையில் இருப்பதைக் கண்டறிந்துள்ளார். 'கிட்டத்தட்ட ஒவ்வொரு வேலை நாளிலும் 30 முதல் 40 கிரிமினல் வழக்குகள் வழக்கறிஞர்களை உள்ளடக்கியதாக இருப்பதை நீதிமன்றம் கவனித்துள்ளது' என்று அவர் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார். மேலும், பல்வேறு பார் சங்கங்களின் பொறுப்பான பதவிகளில் இருப்பவர்கள் கிரிமினல் வழக்குகளில் சிக்கியுள்ளனர் என்பதும் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. 'கிரிமினல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்படும் சில வழக்கறிஞர்கள் இறுதியில் பார் சங்கங்களின் பொறுப்பாளர்களாக மற்றும் தலைவர்களாக மாறுவதும் கவனிக்கப்பட்டுள்ளது' என்று நீதிபதி கூறினார்.

வழக்கறிஞர் பி. ஜெகதீஸ்வரன் என்பவர் தனக்கு எதிரான FIR-ஐ ரத்து செய்யக் கோரிய மனுவை  விசாரித்த போது, இந்தப் பிரச்சனையின் தீவிரத்தை உணர்ந்த நீதிபதி, பின்வரும் முக்கிய நடவடிக்கைகளை எடுத்துள்ளார், பார் கவுன்சில்களை சுயமாக (suo motu) எதிர்மனுதாரர்களாக இணைத்து, அவர்களின் கருத்துக்களைக் கேட்டறிந்தார். இந்தப் பிரச்சனை ஒரு கட்டத்தை எட்டியுள்ளது' என்று கூறி, நம்பகமான ஆய்வாளர்களை நியமித்து, வழக்கறிஞர்கள் மற்றும் சட்டப் பட்டதாரிகள் மீதான கிரிமினல் வழக்குகள் குறித்து அனுபவ ஆதாரங்களைச் சேகரிக்க பார் கவுன்சில்களுக்கு உத்தரவிட்டார்.

"இந்த ஆய்வின் முடிவுகள், பார் கவுன்சில்கள் பதிவு, உறுப்பினர் சேர்க்கை மற்றும் பார் சங்க பதவிகளுக்கான தகுதிகள் குறித்து புதிய விதிமுறைகள் மற்றும் கொள்கைகளை உருவாக்க உதவும்" என்று நீதிபதி தெளிவுபடுத்தினார்.

பார் கவுன்சில்கள் தங்களது கருத்துக்களை ஆகஸ்ட் மாதம் 24 ஆம் தேதி , 2026-க்குள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

 நீதிமன்றத்திலேயே நாள்தோறும் 30-40 வழக்கறிஞர்கள் மீது கிரிமினல் வழக்குகள் விசாரணைக்கு வருவது, சட்டத் துறையின் உள்ளார்ந்த சீரழிவைக் காட்டும் கண்ணாடியாகும். 'நீதியின் காவலர்கள்' என்று அழைக்கப்படும் வழக்கறிஞர்களே குற்றவாளிகளாக மாறும் போது, பொதுமக்களின் நீதி நம்பிக்கை எங்கே போகும்? குறிப்பாக, கிரிமினல் வழக்குகளில் சிக்கியவர்கள் பார் சங்கங்களின் தலைவர்களாக ஆவது மிகவும் ஆபத்தான போக்கு. இது, சட்ட அமைப்பின் மீதான மக்களின் நம்பிக்கையை முற்றிலுமாக அழித்துவிடும். என்பது நீதிபதி பாரத சக்கரவர்த்தியின் இந்த தலையீடு மிகவும் அவசியமானது. ஆனால், பார் கவுன்சில்கள் இந்த ஆய்வை உண்மையான நோக்கத்துடன் மேற்கொள்கின்றனவா, அல்லது அதனை மேலோட்டமாக கடந்து செல்கின்றனவா என்பதை கண்காணிக்க வேண்டும். கிரிமினல் பின்னணி உள்ளவர்களை வழக்கறிஞர் பதிவு செய்வதிலும், பார் சங்க பதவிகளில் இருந்து தடுப்பதிலும் கடுமையான விதிமுறைகள் தேவை இந்த உத்தரவு, எதிர்காலத்தில் சட்டப் பணியின் தரத்தை உயர்த்தும் ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும்.

இந்த உத்தரவின் பேரில், பார் கவுன்சில்கள் விரைந்து ஆய்வு நடத்தி, ஆகஸ்ட் 24-க்குள் தங்கள் கருத்துக்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும். அதன்பின், நீதிமன்றம் மேலும் வழிகாட்டுதல்களை வெளியிடும். இதன் மூலம், வழக்கறிஞர் பதிவு, பார் சங்க பதவிகள் மற்றும் ஒழுக்காற்று விதிமுறைகளில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த வழக்கு, நாடு முழுவதும் உள்ள பார் கவுன்சில்களுக்கு ஒரு முன்னுதாரணமாக அமையும்.        அதேபோல் மற்றொரு வழக்கு பொது மக்களை போல வழக்கறிஞர்களும் சுங்க கட்டணம் செலுத்த வேண்டும் என உத்தரவு,


திருச்சிராப்பள்ளி -சென்னை தேசிய நெடுஞ்சாலையை வழக்கறிஞர்களுக்காக சுங்கக் கட்டணமில்லாததாக மாற்றக் கோரி போராட்டம் நடத்திய வழக்கறிஞர்கள் மீதான குற்றவியல் நடவடிக்கைகளை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. அந்த ஆர்ப்பாட்டம், போராடுவதற்கான அவர்களின் ஜனநாயக உரிமையைப் பயன்படுத்திய செயல் என்றும், அது எந்தவொரு குற்றவியல் குற்றத்தின் கூறுகளையும் ஈர்க்கவில்லை என்றும்

 மனுதாரர்கள் வழக்கறிஞர்களாக இருப்பதால் மட்டுமே, அவர்களைத் தனிப்பட்ட நிலையில் வைக்க முடியாது. பொதுமக்களிடமிருந்து சட்டப்பூர்வமாக ஒரு சுங்கம் வசூலிக்கப்படும் போது, ​​அதை வழக்கறிஞர்களும் செலுத்த வேண்டும்” என்று தீர்ப்பளித்தது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

திருப்புத்தூர் வேட்பாளருக்கு விதித்த உயர் நீதிமன்றத் தடையை விலக்கிய உச்சநீதிமன்றம்

ஒரு வாக்கில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் திருப்பத்தூர் தொகுதி சட்டமனற உறுப்பினர் சீனிவாச சேதுபதிக்கு எதிராக தோல்வியடைந்த தி.மு.க வேட்பாளர் முன்னால் அமைச்சர் கே. ஆர். பெரியகருப்பன் தொடர்ந்த சென்னை உயர் நீதிமன்ற வழக்கில் சட்டமன்றத்தில் நடக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பில் த.வெ.க. எம்.எல்.ஏ பங்கேற்கக் கூடாது என்று உயர்நீதிமன்ற உத்தரவுக்கு நேற்று உச்ச நீதிமன்றம் உடனடியாகத் தடை. விதித்தது,  திருப்பத்தூர் திமுக வேட்பாளர் கே. ஆர்.பெரிய கருப்பனுக்கு ஒரு உண்மை தற்போது புரிந்திருக்கும் அது கண்ணைக் கட்ட வைத்த தேர்தல் ஆணையத்தின் சிறப்பான வாதம் தான், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை மே மாதம் 4 ஆம் தேதி காரைக்குடியில் நடந்த நிலையில் ஏமாற்றி வெற்றி பெற நினைத்து மாலையில் திமுகவினர் அராஜகம் செய்ய நினைத்த நிலையில் அதே தொகுதியில் பாஜகவின் கூட்டணிக் கட்சி சார்பாக போட்டியிட்ட தென்னிந்திய பார்வேடு பிளாக் கட்சியின் வேட்பாளர் கே. சி. திருமாறன் ஜி களமிறங்கி கடைசி வரை தவெக வேட்பாளர் அருகில் இருந்து திமுகவினரின் கடைசி நேர முறைகேடுகளுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்பட...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலயக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...