கடந்த திமுக ஆட்சியில் நடந்த டாஸ்மாக் ஊழல் முறைகேடு ED நடவடிக்கை அடிப்படையில் DVAC வழக்குப் பதிவு செய்து சோதனை
கடந்த திமுக ஆட்சியில் முன்னாள் மின்துறை மற்றும் மதுவிலக்குத் துறை அமைச்சரான
வி.செந்தில்பாலாஜி, டாஸ்மாக் நிறுவன முன்னாள் நிர்வாக இயக்குனர் எஸ்.விசாகன், முன்னாள் மூத்த மண்டல மேலாளர்கள் டி ராமதுரை முருகன், பி.பன்னீர் செல்வம், செந்தில் பாலாஜியின் பிஏ பாஸ்கர், அவரது கூட்டாளியான ரதீஷ் ராஜ், தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர் கார்த்திக், சண்முகவேல் ஆகியோர் மீது ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. கரூர் இரமேஷ்வரன்பட்டியிலுள்ள செந்தில் பாலாஜியின் பழைய வீட்டில்
தமிழ்நாடு ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை (DVAC) விஜிலென்ஸ் மற்றும் ஊழல் தடுப்பு இயக்குனரகம் சோதனை நடத்துகிறது. கரூர், சென்னை, கோயம்புத்தூர், ஈரோடு, திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட 41 இடங்களில் ஒரே நேரத்தில் சோதனை நடக்கிறது முன்னாள் அமைச்சர் வி. செந்தில் பாலாஜி, சில முன்னாள் டாஸ்மாக் அதிகாரிகள் மற்றும் மதுபான ஆலை உரிமையாளர்களுக்குச் சொந்தமான இடங்களில் சோதனை மேற்கொள்ளப்படுகிறது.
டாஸ்மாக் நிறுவனம் மதுபானக் கொள்முதல், டெண்டர் முறைகேடுகள் மற்றும் வரம்பு மீறிய நிதி முறைகேடுகள் குறித்த புகார்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. டாஸ்மாக் நிறுவனத்தில் நடைபெற்றதாகக் கூறப்படும் ரூபாய் 1,000 கோடிக்கும் அதிகமான ஊழல் தொடர்பாக, ஏற்கனவே அமலாக்கத்துறை (ED) மற்றும் தற்போது ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை (DVAC) தீவிர விசாரணை மற்றும் அதிரடி சோதனைகளை மேற்கொண்டு வருகின்றன.
ஏற்கனவே அமலாக்கத்துறையின் குற்றச்சாட்டுகள் மற்றும் நடவடிக்கைகள் படி ரூபாய் 1000 கோடி ஊழல் நடத்திய டாஸ்மாக் நிர்வாகம், பார் டெண்டர்கள், மற்றும் போக்குவரத்து ஒப்பந்தங்களில் ரூபாய் 1,000 கோடிக்கு மேல் நிதி முறைகேடுகள் மற்றும் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்துள்ளதாக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது. அப்போது திமுக ஆட்சி நடந்த நிலையில் மார்ச் மாதம் 2025-ஆம் ஆண்டில் சென்னை, கரூர் உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட இடங்களில்
அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி, முக்கிய ஆவணங்கள் மற்றும் சொத்துப் பத்திரங்களைப் பறிமுதல் செய்தது. மதுபான ஆலைகளிடம் இருந்து சட்டவிரோத கமிஷன் பெற்றது, பார் உரிமங்களை போலியான ஆவணங்கள் மூலம் வேண்டியவர்களுக்கு ஒதுக்கியது, மற்றும் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்பனை செய்தது போன்ற குற்றச்சாட்டுகளை அமலாக்கத்துறை பல முதல் தகவல் அறிக்கை அடிப்படையில் முன்வைத்தது. அதற்கு அமலாக்கத்துறையின் இந்த சோதனைகளுக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்குகளை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து, மத்திய முகமையின் விசாரணை நடைமுறைகளை உறுதிப்படுத்தியுள்ளது. ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையின் (DVAC) தற்போதைய அதிரடி நடவடிக்கை என்பது முன்பு அமலாக்கத்துறை திரட்டிய ஆதாரங்கள் மற்றும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில்,
தமிழ்நாடு ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை (DVAC) தற்போது இந்த ஊழல் தொடர்பாக புதிய FIR பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளதன் படி 41 இடங்களில் சோதனை நடக்கிறது,முன்னாள் மதுவிலக்குத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, முன்னாள் டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர் விசாகன் ஐஏஎஸ் மற்றும் டாஸ்மாக் உயர் அலுவலர்கள் உள்ளிட்ட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 41 இடங்களில் தற்போது ஒரே நேரத்தில் அதிரடி சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.முக்கிய குற்றச்சாட்டுகள்:விதிகளை மீறி தனியார் நிறுவனங்களுக்கு மது விநியோக ஒப்பந்தங்கள் வழங்கியது.கோயம்பத்தூர் , திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் உரிமம் புதுப்பிக்கப்படாத பார்களை சட்டவிரோதமாக இயக்கி அரசுக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுத்தியது. குடித்த போத்தல்களான பழைய காலி பாட்டில்கள் கொள்முதல் மற்றும் அலுவலர்கள் பணி இடமாற்றங்களில் கோடிக்கணக்கில் லஞ்சம் வாங்கியது என பல முறைகேடு அரசின் தற்போதைய நிலைப்பாடுகளில் புதிய அரசு மற்றும் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான நிர்வாகம், டாஸ்மாக் வருவாய் முறைகேடுகளைத் தடுக்கவும் கணக்குகளை வெளிப்படைத்தன்மையுடன் கையாளவும் அலுவலர்களுக்கு கடுமையான உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது.
மேலும், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு அருகில் விதிகளை மீறி இயங்கி வந்த 717 மதுபானக் கடைகளும் மூடப்பட்டுள்ளன. இந்த நிலையில் மன்னார்குடி அருகிலுள்ள கர்ணாவூரில் அமைந்துள்ள முன்னால் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலுவுக்குச் சொந்தமான மதுபான ஆலையில் . ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை டிஎஸ்பி சித்ரா தலைமையில் 10-க்கும் மேற்பட்ட குழுவினர் வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்தல் தொடர்பான வழக்கில் தொடர்புடைய சில மதுபான ஆலைகளில் ஆவணங்கள் மற்றும் நிதிப் பரிவர்த்தனைகளைச் சரிபார்க்கும் பணி.பாதுகாப்பு: சோதனையை ஒட்டி அப்பகுதியில் திமுகவினர் கூடியதால் மன்னார்குடி நகரக் காவல்துறையினர் குவிக்கப்பட்டுப் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வழக்கில் சில மதுபான உற்பத்தி நிறுவனங்களின் பெயர்களும் சேர்க்கப்பட்டுள்ளன.
அந்த அடிப்படையில், மன்னார்குடியில் உள்ள டி.ஆர்.பாலுவுக்குச் சொந்தமான மதுபான ஆலையிலும் இந்தச் சோதனை நடைபெற்று வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சோதனையின் போது, மதுபான ஆலையில் பயன்படுத்தப்பட்ட முக்கிய ஆவணங்கள், நிதிப் பரிவர்த்தனைகள் தொடர்பான கோப்புகள் மற்றும் வழக்கு விசாரணைக்குத் தேவையான பிற ஆதாரங்களை அதிகாரிகள் சேகரித்து வருவதாக கூறப்படுகிறது.சென்னை இராதாகிருஷ்ணன் சாலையிலுள்ள
தனியார் மாரீஷ் ஹோட்டலில் தங்கியிருந்த செந்தில் பாலாஜியிடம், ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையின் கூடுதல் கண்காணிப்பாளர் யுவராஜ் தலைமையிலான அதிகாரிகள் காலை முதல் விசாரணை நடத்தி சுமார் மூன்று மணி நேரம் நடைபெற்ற விசாரணைக்குப் பிறகு அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டனர். விசாரணையின் போது சில முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும், அதிகாரிகள் ஒரு பெட்டியுடன் அங்கிருந்து வெளியேறியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.























கருத்துகள்