உலகம் முழுவதும் வாழும் இந்திய ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ‘இராமாயணா’ திரைப்படத்தின் டிரெய்லர் நேற்று முன்தினம் ஜூலை.மாதம் 30 ஆம் தேதி) அதிகாலை 4.15 மணிக்கு பிரம்ம முகூர்த்தத்தில் வெளியாகி உள்ளது.
நிதேஷ் திவாரி இயக்கத்தில், ரன்பீர் கபூர், சாய் பல்லவி மற்றும் யஷ் நடிப்பில் உருவாகியுள்ள இராமாயணா: பகுதி 1 திரைப்படம் 2026 தீபாவளி அன்று உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகும் திரைப்படத்தின் பிரம்மாண்டமான ட்ரெய்லர் ஜூலை 30, 2026 அன்று வெளியாகி மக்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.
முன்னர் டிரெய்லர் ஜூலை 24 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், சில காரணங்களால் தேதி தள்ளி வைக்கப்பட்டு தற்பொழுது வெளியாகியது. ரமேஷ் திவாரி இயக்கத்தில், இராமராக ரன்பீர் கபூர், சீதையாக சாய் பல்லவி, மற்றும் இராவணனாக யஷ் நடித்துள்ள இதிகாசப் படம் இராமாயணா. ஹனுமன் கதாபாத்திரத்தில் சன்னி தியோல் நடித்துள்ளார்.
ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் ஹான்ஸ் ஜிம்மர் இணைந்து இப்படத்திற்கு இசையமைத்துள்ளனர். இரண்டு பாகங்களாக உருவாகும் இந்த இதிகாசத் திரைப்படத்தின் முதல் பாகம், 2026 தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகத் திட்டமிடப்பட்டுள்ளது..09 நிமிடங்கள் நீளமுள்ள இந்த டிரெய்லர், ஆரம்பம் முதல் இறுதி வரை விறுவிறுப்பாகவே உள்ளது.
மூன்று உலகங்களுக்கும் தானே அரசன் என்று பெருமையுடன் அறிவித்துக்கொள்ளும் இலங்கை இராவணனின் (யாஷ்) உரையாடலுடன் டிரெய்லர் தொடங்குகிறது.
இராமரின் (ரன்பீர்) குழந்தைப் பருவம், அசுரர்களுடனான போர்கள் மற்றும் சீதையுடனான திருமணம் போன்ற காட்சிகள் இதில் காட்டப்பட்டுள்ளன.
அதன்பிறகு, 14 வருட வனவாசம், சீதாராமன் லட்சுமணனுடன் வனத்திற்குச் செல்வது, மற்றும் இராவணன் சீதையைக் கடத்துவது போன்ற முக்கியக் காட்சிகளுடன் இந்த டிரெய்லர் கதையின் மீதான ஆர்வத்தை அதிகரித்தது.
குறிப்பாக, விஷுவல் எபெக்ட்ஸ் மற்றும் பின்னணி இசை ஆகியவை படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.


கருத்துகள்