முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தவெக அரசின் முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதி அமைச்சர் மரிய வில்சன்

தமிழ்நாடு நிதி அமைச்சர் மரிய வில்சன் இன்று தவெக அரசின் முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார்,




தேர்தல் அறிக்கை 6 சிலிண்டர்கள், வீட்டுக்கு ரேஷன் பொருள் பேருந்தில் எல்லோருக்கும் இலவசம் இன்னும் பல அறிவிப்புகளை  தவிர்த்துத் தான் நிதிநிலை காரணம் எனச் சொல்கின்றார்கள் எனபதால் பின்னர் எதிர்பார்க்க வேண்டும்




அரசு எவ்வளவு கடன் வாங்குகிறது எவ்வளவு செலவிடுகிறது என்பததை எல்லாம் அறிந்து கொள்ளும் நேரமிது அது போக கடந்த திராவிடக் கட்சி ஆட்சி  ஊழல் பட்ஜெட்டிலிருந்து இது எப்படி வேறுபடுகின்றது என்பதைக் காட்டும் நிகழ்விது









அது போக காங்கிரஸ்,, கம்யூனிஸ்டுகள், விசிக கூட்டு மந்திரி சபை என்பதால் வழக்கமாக எந்த பட்ஜெட் என்றாலும் காரசாரமில்லை எனச் சொல்லும் சில கும்பல்களின் கூடாட்சியில் அவியல் எப்படி இருக்கின்றது என்பதையும் பார்க்கவேண்டும், வெள்ளை அறிக்கை வெளியிட்ட பின்னர் வரும் முதல் நிதிநிலை அறிக்கை.




இலவச மடிக்கணினி, திருமண நிதி உதவி, மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கும் திட்டம், திறன் மேம்பாட்டுத் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் அனைத்தும் கடந்த அதிமுக, திமுக அரசுகளின் திட்டங்களின் தொடர்ச்சியே தவிர, இந்த அரசின் புதிய சிந்தனையை வெளிப்படுத்தும் வகையில் எந்தவிதமான புதுமையும் இடம்பெறவில்லை. என்ற குறை இருக்கிறது, 








தமிழ்நாட்டின் நிதிநிலை ஏற்கனவே கடுமையான சவால்களை எதிர்கொண்டு வருகிறது. கடன் சுமை அதிகரித்து வரும் இந்தச் சூழலில், மாநிலத்தின் வருவாயை உயர்த்துவதற்கான வலுவான பொருளாதாரத் திட்டங்கள், தொழில் முதலீட்டை ஈர்க்கும் நடவடிக்கைகள், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் சீர்திருத்தங்கள் ஆகியவற்றிற்கு இந்த பட்ஜெட்டில் போதிய முக்கியத்துவம் வழங்கப்படவில்லை, 









இதனால் எதிர்கால தலைமுறையின் மீது கூடுதல் நிதிச்சுமையை ஏற்படுத்தும் வகையிலான தவெக அரசின் நிதி நிர்வாக அணுகுமுறை தமிழகத்தின் வளர்ச்சிக்கு உகந்ததாக அமையாது என்மது நிதி வல்லுனர் கருத்து நிதி நிலை அறிக்கை ஊழல் ஒழிப்பு திட்டம் மற்றும் லோக் ஆயுக்தா சிர்திருத்தம் எதுவும் வரவில்லை, என்பது பலருக்கு வருத்தம், தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் வாழ்த்துகளுடன், தமிழ்நாடு அரசின் 2026–2027 ஆம் ஆண்டிற்கான திருத்திய முதல் நிதிநிலை அறிக்கையை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில்  நிதியமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்தார் 








முதல்வர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசின் முதலாவது பட்ஜெட் தொடர்பான விரிவான பார்வை இதில் பார்க்கலாம்

ரூபாய் .50 கோடியில் 10 ஒலிம்பிக் சிறப்பு மையங்கள் அமைவது சிறப்பு,

தொழிலாளர் நலனுக்கு ரூபாய் .2022 கோடி ஒதுக்கப்படும் எனவும் 

AI துறைக்கு முக்கியத்துவம் வழங்கப்படும்; 5 லட்சம் மாணவர்களுக்கு பயிற்சி வழங்கப்படும்.










ரூபாய் .150 கோடியில் 20,000 இளைஞர்களுக்கு வெற்றி திறன் பயிற்சி திட்டம்,

25,000 வாகன மெக்கானிக்குகளை உருவாக்க ரூபாய் 3 கோடியில் திட்டம்,

5 புதிய தொழிற் பயிற்சி நிலையங்கள் அமைக்கப்படும்.

உயர் கல்வித் துறைக்கு ரூபாய் 8393 கோடி ஒதுக்கீடு










300 மானவர்களுடன் மதுரையில் சிறப்பு அரசு சட்டக் கல்லூரி அமைக்கப்படும், முக்கிய நிதி விவரங்கள் மொத்த வருவாய் வரவு: ரூபாய் 3,44,575 கோடி.மாநிலத்தின் சொந்த வருவாய் பங்கு: மொத்த வருவாயில் 74.67 சதவீதம் .மத்திய அரசுப் பங்கு மற்றும் மானியங்கள்: 25.33 சதவீதம் மொத்த செலவினம் ரூபாய் 4,67,264 கோடி.மூலதனச் செலவு ரூபாய் 59,562 கோடி.நிதிப் பற்றாக்குறை  மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GSDP) 3 சதவீதமாகக் குறைக்க இலக்கு.மாநிலத்தின் மொத்தக் கடன்: பொதுத்துறை நிறுவனங்களின் கடன்களையும் சேர்த்து ரூபாய் 13.18 லட்சம் கோடி என வெள்ளை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது பள்ளி மற்றும் உயர் கல்வித் துறை பள்ளிக் கல்வி மேம்பாட்டிற்காக இந்த பட்ஜெட்டில் மிக முக்கியத்துவம் வாய்ந்த பெரும் நிதி ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுளது,  ரூபாய் 44,527 கோடி.உயர் கல்வித் துறை ஒதுக்கீடு: ரூபாய் 8,393 கோடி.வெற்றி லேப்டாப் திட்டம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்க ரூபாய் 2,000 கோடி.புதிய பயணம், புதிய வேகம் திட்டம்: 5.3 லட்சம் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஹெல்மெட் மற்றும் தண்ணீர் பாட்டிலுடன் கூடிய புது வகை மிதிவண்டிகள் வழங்க ரூபாய் 277 கோடி.பள்ளி, 3,734 அரசுப் பள்ளிகளை நவீனமயமாக்க ரூபாய் 300 கோடி (மொத்த திட்ட மதிப்பு ரூபாய் 2,132 கோடி சூப்பர் கிளீன், முதற்கட்டமாக 10,000 பள்ளிகளில் தூய்மை மற்றும் பாதுகாப்பை உறுதி செய்ய ரூபாய் 139 கோடி.கற்றலில் முதலிடம் தமிழ்நாடு திட்டம்: பள்ளிப் பாடத்திட்ட சீர்திருத்தங்களுக்காக ரூபாய் 25 கோடி.பெருந்தலைவர் காமராசர் மாதிரிப் பள்ளிகள்: 9 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான நவீன குடியிருப்புப் பள்ளிகளின் உள்கட்டமைப்பிற்கு ரூபாய் 125 கோடி. மதுரையில் 300 மாணவர்கள் சேர்க்கை வசதியுடன் புதிய சட்டக் கல்லூரி, வேளாண்மை மற்றும் இதர துறை ஒதுக்கீடுகள் முக்கிய மக்கள் நலத் திட்டங்கள் மற்றும் உள்கட்டமைப்புக்கான தற்காலிகத் துறைவாரி ஒதுக்கீடுகள்:நகர்ப்புற வளர்ச்சி: ரூபாய் 35,773 கோடி.ஊரக வளர்ச்சித் துறை: ரூபாய் 28,687 கோடி.மக்கள் நல்வாழ்வு (சுகாதாரம்): ரூபாய் 22,090 கோடி.

  












நெடுஞ்சாலைகள் துறை: ரூபாய் 21,132 கோடி ஒதுக்கீடு .செய்யப்பட்டுள்து,     இந்து சமய அறநிலையத்துறைக்கு ரூபாய் .708 கோடி நிதி ஒதுக்கீடு. அடுத்த ஐந்து ஆண்டுகளில் 3,000 திருக்கோயில்களுக்கு திருப்பணிகள் மற்றும் குடமுழுக்கு நடத்தப்படும் எனவும்,அறநிலையத்துறை வளர்ச்சிக்கும் பராமரிப்புக்கும் ரூபாய் .708 கோடி ஒதுக்கீடு. 1000 ஆண்டுகள் பழமையான 213 கோயில்கள் புனரமைக்கப்படும்.  அடுத்த 5 ஆண்டுகளில் மொத்தம் 3,000 கோயில்கள் புதுப்பிக்கப்படும்.  250 கோயில் குளங்கள் மற்றும் 75 தேர்கள் சீரமைக்கப்படும்.  ஆனால் ஆலயத்தில் வரும் செலவினங்கள் மட்டுமே இவை ஆலயத்தில் வரும் வருவாய் விபரங்கள் குறித்து தெளிவு படுத்த வில்லை  தவெக அரசு தாக்கல் செய்த முதல் பட்ஜெட் என்பது, 
 அதிமுகவைக் கைப்பற்ற ஜெயலலிதா கொள்கை முரனாக 2021-ல் அதிமுகவை கொள்கை ரீதியாக தோற்கடித்தார் எடப்பாடி கே.பழனிச்சாமி.











2026-ல் ஊழல் ஒரே குடும்பத் திராவிடக் கட்சிகளிடமிருந்து காப்பாற்ற உதயமான புதிய தவெகவிற்கு வாக்களித்து வெற்றி பெற வைத்திருக்கிறார்கள், அரசியல் ஏதுமறியாப் பிள்ளைகள்,  இளைஞர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர்.ஊழல் ஒழிப்பு ஏட்டளவில் தான் உள்ளது, 

சீர்மிகு தமிழ்நாட்டைச் சிதைத்து விட்டு ஊழலால் தூக்கி எறியப்பட்டு விட்டது திமுக. தற்போது தவெக நிதிநிலை அறிக்கை என்பது முழுக்க சிறுபான்மையினரின் மற்றும் பட்டியல் சமூக வளர்ச்சி, மற்றும் வாக்களித்த பெண்கள் மற்றும் மாணவர்கள் திட்டங்களுக்கு மட்டுமே முன்னுறிமை தருகிறது நிதிநிலை அறிக்கை. என்பதே உண்மை.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...

சோழப் பேரரசி வானதி எழுப்பிய மூவர் கோவில்

முதலாம் இராஜேந்திர சோழரின் தாய்  வானவன் மாதேவி எனும் அரசி வானதி, சோழர்களின் வரலாற்றில் பெரும் புகழ் மாமன்னர் அருள்மொழித் தேவன் எனும் இராஜராஜசோழச் சக்கரவர்த்தி மீது இணையில்லாத காதல் மங்கை கொடும்பாளூர் இளவரசி வானதியை "பொன்னியின் செல்வன்" கதை படித்த யாரும் மறக்க முடியாது. சோழர் கடற்படையின் பரப்பை இலங்கை வரை  சென்று வென்று வந்த வரலாற்று நிகழ்வுகளின் மூலம் குறுநில மன்னர்கள் அல்லது வேளிர்  துணை நின்றார்கள் அதில் ஈழத்துப் பட்டம்  வென்ற கொடும்பாளூர் வேளிர் மகளான வானதி இளம் வயதிலேயே தாய் தந்தையை இழந்தவர். கொடும்பாளூர் சிற்றரசன் அதாவது வேளிர் சோழ சாம்ராஜ்யத்தின் சேனாதிபதி யாகவும் இருந்த சிறிய தந்தை குறுநில மன்னர் பூதி விக்ரமகேசரியால் வளர்க்கப்பட்டவர் தான் வானவன் மாதேவி எனும் அரசி வானதி. கொடும்பாளூர் பிறந்து திருக்கோவிலூரை பின்னர் ஆண்ட மலையமானின் மகள்  “மேலும் வானவன்மாதேவி மன்னர் ராஜராஜ சோழர் மறைந்த உடன் பிரிவாற்றாமல் உடன்கட்டை ஏறி தன் உயிரை மாய்த்துக் கொண்டாள். இதை திருவாலங்காட்டுச் செப்பேடுகள் மூலம் அறியலாம் ஈழத்தில் நடைபெற்ற யுத்தத்திற்காக கொடும்பாளூர்  வேளிர் கடல...