அவதூறாகப் பேசிய புகாரில் திமுக சார்ந்த எதிர் கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டு, விசாரணைக்காகத் தஞ்சாவூருக்கு அழைத்துச் செல்லப்பட்டார்,
உதயநிதி ஸ்டாலின் மீது தஞ்சாவூர் நகர் கிழக்கு காவல் துறையினர் எப்ஐஆர் பதிவு குற்ற எண். 287/2026-ல், பிஎன்எஸ் பிரிவு 196, 192, 352, 79, 296(பி), 61 மற்றும் 351(2) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். BNS 352: பொது அமைதியை சீர்குலைக்கும் வகையில் அல்லது குற்றம் செய்ய தூண்டும் நோக்கத்துடன் திட்டமிட்டே ஒருவரை அவமதிப்பது
BNS 79: கண்ணியத்துக்கும் மானத்துக்கும் பங்கம் விளைக்கும் வகையில் வார்த்தைகள், சைகைகள் அல்லது செயல்களில் ஈடுபடுதல் BNS 196: சமூக அமைதியையும் நல்லிணக்கத்தையும் குலைக்கும் செயல்
BNS 192: பொது அமைதியைக் குலைக்கும் வகையில், கலவரத்தை உண்டாக்கும் நோக்கத்தில் ஆத்திரமூட்டுவதுBNS 296(b): பொது இடங்களில் ஆபாசமான பாடல்களைப் பாடுதல் அல்லது ஆபாசமான வார்த்தைகளைப் பயன்படுத்துதல்
BNS 61: குற்றத்தைச் செய்வதற்காக 2 அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் இணைந்து ஈடுபடும் குற்றவியல் சதி
BNS 351(2): குற்ற நோக்கத்துடன் மிரட்டல் விடுவித்தல்; ஒருவருடைய நற்பெயருக்கு பங்கம் விளைவிப்பதாக மிரட்டுவது
தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம், 2002 - பிரிவு 4: பொது இடங்களில் பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்கொடுமை அல்லது தொல்லைகளைத் தடுத்தல், தகவல் தொழில்நுட்பச் சட்டம், 2000 - பிரிவு 67: மின்னணு வடிவத்தில்
ஆபாசமான தகவல்களை வெளியிடுதல் அல்லது பரப்புதல்
ஆகிய பிரிவுகளின் கீழ் உதயநிதி ஸ்டாலின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தஞ்சாவூரில் முதல்வர் சி. ஜோசப் விஜய் குறித்து அவதூறாகப் பேசியதற்காக திமுக இளைஞரணிச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவராக உள்ள உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டார்.
தஞ்சாவூரில் நேற்று ஆகஸ்ட் மாதம் 3-ஆம் தேதி திமுக சார்பில் பயிர்க் கடன்களைத் தள்ளுபடி செய்யக் கோரியும் மேகதாது அணை கட்டுவதைத் தடுக்கக் கோரியும் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் பேசிய உதயநிதி 2021-ஆம் ஆண்டிலிருந்து 2025 ஆம் ஆண்டு வரை அன்றைய முதலமைச்சரான திமுக தலைவர் மு. க.ஸ்டாலின், ஒவ்வொரு ஆண்டும் சரியாக ஜூன் மாதம் 12-ஆம் தேதியன்று மேட்டூர் அணையைத் தானே சென்று திறந்து வைத்திருக்கிறார். இன்னும் சொல்லப்போனால் சில ஆண்டுகளில் ஜூன் மாதம் 12-ஆம் தேதிக்கு முன்னதாகவே மேட்டூரிலிருந்து தண்ணீரைத் திறந்து விட்டுள்ளார். ஆனால் இந்த ஆண்டு என்ன நிலைமை?ஜூன் மாதம் முடிந்துவிட்டது, ஜூலை மாதமும் முடிந்துவிட்டது, இப்போது ஆகஸ்ட் மாதத்தில் இருக்கிறோம்; ஆனால் இன்னமும் தண்ணீர் வரவில்லை. இன்று வரை ஒரு சொட்டு தண்ணீர் கூட வரவில்லை. ( ஆனால் நேற்று காவிரி நீர் மேட்டூர் அணைக்கு வந்து விட்டது )
ஜூன் மாசத்துல 9.9 டி.எம்.சி தண்ணீர்… ஜூலை மாசத்துல 33 டி.எம்.சி தண்ணீர்… அப்படின்னு மொத்தம் 42 டி.எம்.சி தண்ணீர் நமக்கு வந்திருக்கணும். இன்னைக்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட வரவில்லை ஆனா இதைப்பத்தி எதிர்க்கக்கூடிய எதிர்க்கட்சி தலைவர் வாய் திறந்து பேசுறாரா? பேசுறது கிடையாது. அவருக்கு இருக்கக்கூடிய ஒரே எண்ணம்… திமுக-மேல என்ன பொய் வழக்கு போடலாம்? என்ன பொய் கேஸ் போடலாம்?
மேலும் இரட்டை அர்த்தம் கொண்ட அபத்தமான வாசகத்தை பேசிவிட்டு பின் நான் காவிரியைச் சொன்னேன். என உதயநிதி ஸ்டாலின் பேசிபுள்ளார். இது குற்றமாகும்.













கருத்துகள்