முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பாங்கிபூர் தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் வென்ற பி. கே எனும் பிரசாந்த் கிஷோர்

பிரசாந்த் கிஷோர்  இந்திய அரசியலின் மிக முக்கியமான முன்னாள் தேர்தல் வியூக வகுப்பாளரும், தற்போதைய தீவிர


அரசியல்வாதியும் மற்றும் ஜன் சூராஜ் கட்சியின்  நிறுவனர் பேச்சுவழக்கில் 'பிகே' PK என அழைக்கப்படுபவர், ஆகஸ்ட் 2026-ல் நடைபெற்ற பிகார் மாநில பாங்கிபூர் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில்  வெற்றி பெற்று, முதன்முறையாகச் சட்டமன்ற உறுப்பினராகத்  தேர்வானார். 1995 ஆம் ஆண்டு முதல் பாரதிய ஜனதா கட்சியின்  கோட்டையாகக் கருதப்பட்ட பாங்கிபூர் தொகுதியில், ஜன் சூராஜ் கட்சி சார்பில் போட்டியிட்ட பிரசாந்த் கிஷோர், 64,151 வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றுள்ளார். அவர் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜகவின் நீரஜ் குமாரை விட 19,324 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றுள்ளார். இது ஜன் சூராஜ் கட்சியின் முதல் வெற்றி: கடந்த 2025 ஆம் ஆண்டு பிஹார் மாநில சட்டமன்றத் தேர்தலில் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாத ஜன் சூராஜ் கட்சிக்கு, பிரசாந்த் கிஷோரின் இந்த வெற்றி ஒரு திருப்புமுனையாகவும் அக்கட்சியின் முதல் தேர்தல் வெற்றியாகவும் அமைந்தது. பிஹார் முழுவதும் சுமார் 3,000 கி.மீ தூரம் "ஜன் சூராஜ் பாதயாத்திரை" மேற்கொண்ட பின் அக்டோபர் மாதம் 2, ஆம் தேதி 2024 ஆம் ஆண்டில் அரசியல் கட்சியாக முறைப்படி அறிவித்தார். தேர்தல் வியூக வகுப்பாளராகப் (2014 ஆம் ஆண்டு முதல் - 2021ஆம் ஆண்டு வரை )நேரடி அரசியலில் இறங்குவதற்கு முன்பு, இந்தியாவின் பல்வேறு முன்னணி அரசியல் கட்சிகள் மற்றும் தலைவர்களின் தேர்தல் வெற்றிக்கு பின்னணியில் இருந்து வியூகங்களை வகுத்துக் கொடுத்து புகழ்பெற்றார்.  2014 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் நரேந்திர மோடி தலைமையிலான பாஜகவின் 'சாய் பே சர்ச்சா' போன்ற புகழ்பெற்ற பிரச்சாரங்களை வடிவமைத்து அக்கட்சி ஆட்சியைப் பிடிக்க உதவினார்.  பிஹாரில் ஜேடியு-ஆர்ஜேடி  கூட்டணிக்கு வியூகம் அமைத்து நிதிஷ் குமார் மீண்டும் முதலமைச்சராகப் பணியாற்ற வழி செய்தார். தமிழ்நாட்டில் 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம்  பத்தாண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஆட்சியைப் பிடிக்க இவரது வியூகங்கள் முக்கியப் பங்காற்றின.ஆந்திரப் பிரதேசத்தில் ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டி, டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால்,  மற்றும் மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி, ஆகியோரின் பிரம்மாண்ட வெற்றிகளுக்குப் பின்னால் பிகே-வின் தேர்தல் வியூகங்கள் இருந்தன.2021 ஆம் ஆண்டு தேர்தல்களுக்குப் பிறகு, இனிமேல் தேர்தல் வியூக வகுப்பாளராகச் செயல்படப் போவதில்லை என்றும், மக்கள் நலனுக்காக நேரடியாகப் பணியாற்றப் போவதாகவும் கூறி அந்தப் பணியில் இருந்து அதிகாரப்பூர்வமாக ஓய்வு பெற்றார்.  மார்ச் 20, 1977 ஆம் தேதி அன்று பிஹார் மாநிலத்தின் ரோஹ்தாஸ் மாவட்டத்தில் பிறந்து,  லக்னோ பல்கலைக்கழகத்தில் பயின்றவர், ஐக்கிய நாடுகள் சபையின் (UNICEF) கீழ் பொதுச் சுகாதாரத் திட்டங்கள ஆப்பிரிக்கா மற்றும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் சமூகக் கொள்கைத் தலைவராகப் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.தற்போது பிகார் சட்டமன்ற உறுப்பினராகத் தனது புதிய அரசியல் பயணத்தைத் தொடங்கியுள்ள பிரசாந்த் கிஷோர்பாங்கிபூர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்றிருக்கும், 'ஜன் சுராஜ்' அமைப்பின் தலைவர் பிரசாந்த் கிஷோர் கூறுகையில்,

 "சம்ராட் சௌத்ரியின் குணாதிசயமும் நற்பெயரும் ஏற்கனவே பொதுவெளியில் அறியப்பட்டவை. குற்றப் பின்னணி கொண்ட ஒருவரை பீஹாரின் முதலமைச்சராக நியமித்தால், மாநிலம் முன்னேற முடியாது. எங்கள் போராட்டம் எந்தவொரு தனிநபருக்கும் எதிரானதல்ல. பாஜக மற்றும் என்டிஏ  கூட்டணிக்குத் தேவையான பெரும்பான்மை பலம் உள்ளது; எனவே, முதலமைச்சர் அந்தக் கூட்டணியிலிருந்தே தேர்ந்தெடுக்கப்படுவார். 

நாங்கள் ஒரே ஒரு கோரிக்கையை மட்டுமே முன்வைக்கிறோம். பீஹார் மக்களும், குறிப்பாக பங்கிபூர் மக்களும், பிரதமர் நரேந்திர மோடியிடம் ஒரு வேண்டுகோளை விடுக்கின்றனர்: 

பீஹாரின் முதலமைச்சராகத் திறமையான மற்றும் நேர்மையான ஒருவரை நியமிக்க வேண்டும். அப்போதுதான் பீஹார் மக்கள் தாங்கள் பீகாரைச் சேர்ந்தவர்கள் என்பதில் பெருமிதம் கொள்ள முடியும்; அத்துடன், எங்கள் குழந்தைகளுக்குத் தரமான கல்வியும் வேலைவாய்ப்பும் கிடைக்க வழிவகுக்கும்".

இந்த பிஹார் இடைத் தேர்தல் தோல்வி நிறைய கேள்விகளை எழுப்புகிறது. இதற்கு முன்னர் நடந்த பிஹார் சட்டசபை தேர்தலில் பிரஷாந்த் கிஷோர் தோல்வியடைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த தொகுதியில்தான் பாஜக தேசிய தலைவர் நிதின் நபின் தொடர்ச்சியாக வெற்றி பெற்ற தொகுதி.

சுமார் 35 ஆண்டுகளாக, தற்போது பாஜகவின் தேசியத் தலைவராக உள்ள நிதின் நபின், பாங்கிபூர் தொகுதியுடன் பிரிக்க முடியாத வகையில் பிணைந்திருந்தார். அவருக்கு முன்னதாக, இத்தொகுதி அவரது தந்தையும் மூத்த பாஜக தலைவருமான நபின் கிஷோர் பிரசாத் சின்ஹாவுடன் தொடர்புடையதாக இருந்தது. இத்தொகுதி வெறும் ஒரு பாஜக இடமாக மட்டுமல்லாமல், பாட்னாவின் மையப்பகுதியில் அக்கட்சியின் நகர்ப்புற ஆதிக்கத்தைப் பிரதிபலிக்கும் ஒரு குடும்பக் கோட்டையாகவும் திகழ்ந்தது.

தற்போது முதன் முறையாக பாஜக இந்த தொகுதியில் தோல்வியடைந்துள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...

சோழப் பேரரசி வானதி எழுப்பிய மூவர் கோவில்

முதலாம் இராஜேந்திர சோழரின் தாய்  வானவன் மாதேவி எனும் அரசி வானதி, சோழர்களின் வரலாற்றில் பெரும் புகழ் மாமன்னர் அருள்மொழித் தேவன் எனும் இராஜராஜசோழச் சக்கரவர்த்தி மீது இணையில்லாத காதல் மங்கை கொடும்பாளூர் இளவரசி வானதியை "பொன்னியின் செல்வன்" கதை படித்த யாரும் மறக்க முடியாது. சோழர் கடற்படையின் பரப்பை இலங்கை வரை  சென்று வென்று வந்த வரலாற்று நிகழ்வுகளின் மூலம் குறுநில மன்னர்கள் அல்லது வேளிர்  துணை நின்றார்கள் அதில் ஈழத்துப் பட்டம்  வென்ற கொடும்பாளூர் வேளிர் மகளான வானதி இளம் வயதிலேயே தாய் தந்தையை இழந்தவர். கொடும்பாளூர் சிற்றரசன் அதாவது வேளிர் சோழ சாம்ராஜ்யத்தின் சேனாதிபதி யாகவும் இருந்த சிறிய தந்தை குறுநில மன்னர் பூதி விக்ரமகேசரியால் வளர்க்கப்பட்டவர் தான் வானவன் மாதேவி எனும் அரசி வானதி. கொடும்பாளூர் பிறந்து திருக்கோவிலூரை பின்னர் ஆண்ட மலையமானின் மகள்  “மேலும் வானவன்மாதேவி மன்னர் ராஜராஜ சோழர் மறைந்த உடன் பிரிவாற்றாமல் உடன்கட்டை ஏறி தன் உயிரை மாய்த்துக் கொண்டாள். இதை திருவாலங்காட்டுச் செப்பேடுகள் மூலம் அறியலாம் ஈழத்தில் நடைபெற்ற யுத்தத்திற்காக கொடும்பாளூர்  வேளிர் கடல...