முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சிவகங்கை 2 நபர் கொலையில் நீதி கேட்டு 3 ஆம் நாள் தொடர்ந்து போராட்டம்

சிவகங்கையில் இரண்டு இளைஞர்கள் ஆள்மாறாட்டமாக கூலிப்படையால் வெட்டிக்கொலை செய்யப்பட்டதாக அறியும் சம்பவத்தைக் கண்டித்து,



இன்று 19 செப்டம்பர் 2026 மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மற்றும் ஊர் சமுதாய பொதுமக்கள் மூன்றாம் நாளாகத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். செப்டம்பர் 16 ஆம் தேதி அன்று சிவகங்கை அருகில் பையூர் கொடிக்காடு கண்மாய் பகுதியில் இரண்டு இளைஞர்களை விரட்டிப் படுகொலை செய்யப்பட்ட கொடூர சம்பவத்தை அடுத்து, குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்ய வலியுறுத்திப் பொதுமக்கள் தொடர் சாலை மறியல் மற்றும் முற்றுகைப் போராட்டங்களை நடத்தி வருவதைக் காண்கிறோம், கொலையில் தொடர்புடைய அனைவரையும் உடனடியாகக் கைது செய்ய வேண்டும், கொலைக்கான பின்னணியை முழுமையாக வெளிக்கொண்டு வர வேண்டும்,

வழக்கை சிபிசிஐடி (CB-CID) விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ரூபாய் 50 லட்சம் நிவாரணம் மற்றும் அரசு வேலை வழங்க வேண்டும் எனப் போராட்டக்காரர்கள் வலியுறுத்துகின்றனர்.தங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை உயிரிழந்தவர்களின் சடலங்களைப் பெற்றுக்கொள்ள மாட்டோம் என உறவினர்கள் தொடர்ந்து மறுத்து வருகின்றனர். இதற்கு முன்னதாக காளையார்கோவில் மற்றும் அரண்மனை வாசல் பகுதிகளில் மதுரை - தொண்டி நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்ட 500-க்கும் மேற்பட்டோரை காவல்துறை கைது செய்துள்ளனர். ஆட்சியர் அலுவலக முற்றுகைப் போராட்டத்தை ஒட்டி, அங்கு பலத்த காவல் பாதுகாப்பு போடப்பட்டு, தடுப்புகள் அமைக்கப்பட்டன. இந்த இரட்டைக் கொலை வழக்கு தொடர்பாக இதுவரை காவல்துறையினரால்10 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளனர்.






விசாரணை விபரம் முழுமையாக வெளிவரவில்லை கொலையுண்டவர்களின் உடல்கள் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன. ஆனால், கொலைக்கு காரணமான இன்னும் உள்ள அனைத்துக் குற்றவாளிகளையும் உடனடியாகக் கைது செய்ய வேண்டும், உண்மையான பின்னணியை வெளிப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி உறவினர்கள் உடல்களை வாங்க மறுத்து போராடுகின்றனர்.

போராட்டத்தின் 3-வது நாளான இன்று சனிக்கிழமை, உறவினர்களும் பொதுமக்களும் நீதி கேட்டு சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றதனால் அத்தப்பகுதியில் பெரும் பரபரப்பும் பதற்றமும் நிலவியது. போராட்டம் தீவிரமடைந்ததை அடுத்து, அசம்பாவிதங்களைத் தடுக்க மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் முக்கிய பகுதிகளில் காவல்துறையினர் இரும்புத் தடுப்புகளை அமைத்து பலத்த பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். முன்னதாக, நேற்று காளையார்கோவில் பகுதியில் மதுரை - தொண்டி நெடுஞ்சாலையில் நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். காவல்துறையினரின் அதிகாரப்பூர்வமற்ற சமரசப் பேச்சுவார்த்தையை போராட்டக்காரர்கள் ஏற்க மறுத்ததால்,






காவல்துறையினருக்கும் பொதுமக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. நிலைமையைக் கட்டுப்படுத்த காவலர்கள் லத்தி சார்ஜ் எனும் தடியடி நடத்திக் கலைத்தனர். சாலை மறியலில் ஈடுபட்டு பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்ததாகவும், கடைகளை அடைக்கக் கோரி கற்களை வீசியதாகவும் கூறி, பெண்கள் உட்பட 100-க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்களைக் காவல்துறையினர் அதிரடியாகக் கைதும் செய்தனர்.இன்று 3-வது நாளாக போராட்டம் தொடர்ந்து கொண்டிருப்பதால், குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரியும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு மற்றும் அரசு வேலை வழங்கக் கோரியும் மக்கள் தங்களின் போராட்டத்தை மேலும் வலுப்படுத்தி வருகின்றனர்.தமிழ்நாட்டில் ஒரேநாளில் 8 படுகொலைகள் நிகழ்ந்த செய்தி வருகிறது காளையார்கோவில் இரட்டை கொலை வழக்கில் பாதிக்கப்பட்ட குடும்பத்தோடு சிவகங்கை தொகுதி தவெக சட்டமன்ற உறுப்பினர் குழந்தை ராணி நாச்சியார் கூட்டத்தில் வந்து பேசிய போது மேலிடத்திலிருந்து என்னை வரக்கூடாது என்று அறிவுறுத்தினார்கள், அதையும் மீறித்தான் நான் இங்கு வந்துள்ளேன் என்று சொல்கிறார், அது மக்களுக்கு ஆச்சர்யம் கலந்த அதிர்ச்சி, நேற்று தடியடி நடத்தச் சொன்னவர்கள் யார் என்ற சந்தேகங்கள் எழும்பி கொண்டிருக்கிறது. மாவட்ட ஆட்சியர் அலுவலக வாசலில் மூன்றாவது நாளாக தொடர்ந்து வாசலில் போராடும் மக்களை, சிவகங்கை மாவட்ட ஆட்சியர் பாதிக்கப்பட்ட குடும்பத்தை நேரில் சந்தித்து அவர்களுக்கான முறையீட்டை நீதியை இதுவரை பெற்றுக் கொடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது தான் அந்த மக்கள் தரப்பு கூறுவது,




கிருஷ்ணகிரி அருகே டாஸ்மாக் மது விற்பனைக் குடி பார் உரிமையாளரால் இளைஞர் ஒருவர் கல்லால் அடித்துக் கொலையும், மதுரை ஜெய்ஹிந்த்புரத்தில் காவல் நிலையம் அருகிலேயே சரவணன் என்ற நபர் ஓட ஓட வெட்டிக் கொலையுமா, மதுரை மாவட்டம் மேலூர் அரசுப் பள்ளியின் அருகே செல்லத்துரை என்ற இளைஞர் வெட்டிப் படுகொலையும், சென்னை புறநகர் குன்றத்தூர் அருகே தண்டலத்தில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவரின் தலையில் கல்லைப் போட்டுக் கொலையும், தாம்பரத்தில் வெல்டர் ஒருவர் இரும்புக் கம்பியால் அடித்துக் கொலையும், கரூரில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ள சிறுமியின் உடல் உள்ளிட்ட ஒரே நாளில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 8 படுகொலைச் சம்பவங்கள் அரங்கேறியிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக
 பல்வேறு தரப்பு கவலைப்படும் நிலையில் 

தவெக ஆட்சிக்கு வந்த பிறகு அரங்கேறும் குற்றச் சம்பவங்களில் தொடர்புடைய குற்றவாளிகளைக் கைது செய்வதிலும், அவர்களுக்குத் தகுந்த தண்டனை பெற்றுத் தருவதிலும் ஏற்படும் காலதாமதமும், உளவுத்துறையில் ரகசியத் தகவல்கள் சேகரிக்க சரியான அனுகுமுறை இல்லாத நிலையும் அலட்சியமுமே இதுபோன்ற அடுத்தடுத்த குற்றச் சம்பவங்களுக்கு தூண்டுகோலாகவும், குற்றவாளிகள் சுதந்திரமாக நடமாடும் சூழல் ஏற்பட்டிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது

சமூகவிரோதிகளின் நடமாட்டத்தை முன்கூட்டியே கண்காணித்து, குற்றங்கள் நடைபெறாமல் தடுக்கவேண்டிய காவல்துறையினர் தங்களது அடிப்படைப் பொறுப்பை உணராமல் அலட்சியமாகச் செயல்படுகின்றனரா ? அல்லது அவர்களின் செயல்பாட்டுகா கைகள் கட்டப்பட்டுள்ளதா? என்று பொதுமக்கள் போராடடங்கள் மூலம் கேள்வி எழுப்புகின்றனர்.

அதேநேரத்தில், தமிழகத்தின் அமைதியைச் சீர்குலைத்து, பதற்றமான சூழலை அதிகரிக்கும் இதுபோன்ற படுகொலைச் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்லும் சூழலில், காவல்துறையைத் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ள முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் சட்டம் ஒழுங்கைச் சீர்செய்ய தினம் தோறும் அரங்கேறும் குற்றச் சம்பவங்களை தடுப்பதற்கான ஆக்கபூர்வ நடவடிக்கையை மேற்கொள்வதோடு, அரங்கேறிய படுகொலைச் சம்பவங்களில் தொடர்புடைய குற்றவாளிகளை விரைந்து கைது செய்து, விரைவு நீதிமன்றம் மூலம் கடுமையான தண்டனை பெற்றுத் தருவதோடு, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்திடத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் எனக் காவல்துறையையும், தவெக அரசையும் வலியுறுத்தும் பல்வேறு கட்சித் தலைவர்கள் கோரிக்கை வைக்கினறனர், கடந்த 30 ஆண்டுகளுககு முன் தகவல் தொடர்பு சாதணங்கள், விஞ்ஞான வளர்ச்சி இல்லாத போது அரசு உளவுத்துறை IS மற்றும் CID சார்ந்த பணிகளில் உள்ளவர்கள் மக்கள் கூடும் சில இடங்களில் தேனீர் கடைகளில் சமூக நலன் காக்க முயலும் நடுநிலையாளர்கள், புலனாய்வு செய்தியாளர்கள், மற்றும் பகுதி முககிய பிரமுகர்களிடம் பழகி புழங்கி வேறுபாடு இல்லாமல் இருந்து கண்டறியும் நிலை இருந்தது அது தற்போது அறவே இல்லை, அணைத்தும் மாறிய காரணம் தான் குற்றங்கள் அதிகரிக்கும் நிலை, ஆகவே மக்கள் விரும்பி வாக்களித்த தலெக அரசு இதில் அறிவார்ந்த நபர்களை உறுவாக்கி விஞ்ஞானப்பூர்வ நடவடிக்கை எடுத்தால் மட்டுமே குற்றங்கள் குறையும், நாளைக்கு நடபபது என்ன என்பதை உளவுத்துறை அறியாமல் குற்றம் நடந்த பின் கணடறிவது, கண்கெட்ட பின் நடக்கும் சூரிய நமஸ்காரம் போன்றது, சுவர்கள் உள்ள போதே சித்திரம் வரைவதே முக்கியம், ஆட்சி அதிகாரம் மக்களுக்கானதே, அவர்கள் நிம்மதியான வாழ்வியலுக்கே, ஜனநாயக நாட்டில்"ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும்தேர்ந்துசெய் வஃதே முறை." (திருக்குறள்: 541) "வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்ப்வைத்தூறு போலக் கெடும்." (திருக்குறள்: 435) "கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்களைகட் டதனோடு நேர்." (திருக்குறள்: 550) "கடிதோச்சி மெல்ல எறிக நெடிதாக்கம்நீங்காமை வேண்டு பவர்." (திருக்குறள்: 562) அதுவே பொதுநீதி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பாண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார்கள் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும்   இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதம்  ஐந்தாம் தேதியில் துவக்கம். ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, சன்னதிகளில் வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்றிரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...