தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடரில் நேற்று 3 செப்டம்பர் 2026 அன்று நடைபெற்ற காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில், முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் துறைசார்ந்த பல்வேறு முக்கிய நலத்திட்டங்கள் மற்றும் நவீனமயமாக்கல் அறிவிப்புகளை வெளியிட்டார்.
முக்கிய நலத்திட்டங்கள் & நிதியுதவியில் ரூபாய் 1 கோடி இழப்பீடு: பணியின் போது துணிச்சலுடன் செயல்பட்டு உயிரிழக்கும் காவலர்களின் குடும்பத்திற்கு வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகை ரூபாய் 1 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. பணிக்காலத்தில் இயல்பாக இறக்கும் காவலர்களின் குடும்பங்களுக்கான கருணைத் தொகை (Ex-gratia) ரூபாய் 20 லட்சத்திலிருந்து ரூபாய் 30 லட்சமாக உயர்வு. காவல் நிலையங்கள் மற்றும் சிறப்புப் பிரிவுகளுக்கான சில்லறை செலவின நிதி கணிசமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. காவல்துறையின் பணியிடங்களை நிரப்பும் வகையில் விரைவில் 10,000 அதில் பாதி மகளிர் புதிய காவலர்கள் நியமிக்கப்படுவார்கள்.நவீனமயமாக்கல் & உள்கட்டமைப்பு ரூபாய் 212 கோடி நவீனமயமாக்கல்: செயற்கை நுண்ணறிவு (AI), அதிநவீன டிஜிட்டல் தடையவியல் மற்றும் நிகழ்நேர கண்காணிப்பு அமைப்புகளுடன் காவல்துறை நவீனமயமாக்கப்படும். ரூபாய் 200 கோடியில் வாகனங்கள்: காவல்துறையின் செயல்பாட்டுத் திறனை மற்றும் ரோந்துப் பணிகளை மேம்படுத்தப் புதிய வாகனங்கள் வாங்கப்படும். வண்டலூரில் உள்ள தமிழ்நாடு காவல் அகாடமியில் ரூபாய் 23 கோடி மதிப்பில் பன்னோக்கு உள்விளையாட்டு அரங்கம் அமைக்கப்படும். சேலம் மற்றும் விழுப்புரம் தடய அறிவியல் ஆய்வகங்களில் ரூபாய் 14 கோடி செலவில் புதிய மரபணு ஆய்வுப் பிரிவுகள் நிறுவப்படும்.போதைப்பொருள் ஒழிப்புப் பரிசுபோதைப்பொருள் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்கும் 50 கிராமங்களைத் தேர்வு செய்து, கிராமம் ஒன்றுக்கு தலா ரூபாய் 10 லட்சம் வீதம் பரிசு வழங்கப்படும். தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் நேற்று (3.9.2026) தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், தமிழை சென்னை உயர்நீதிமன்றத்தின் முதன்மையான நீதிமன்ற மொழியாக அங்கீகரிக்க வேண்டுமென்றும்,
உயர்நீதிமன்றத்தில் வழங்கப்படும் தீர்ப்புரைகள், தீர்ப்பாணைகள் மற்றும் நீதிமன்ற உத்தரவுகள் அனைத்தும் தமிழில் வழங்கும் கட்டமைப்பை உருவாக்க வேண்டுமென்றும், அரசியலமைப்புச் சட்ட Article 348(2) மற்றும் ஆட்சி மொழிகள் சட்டம், 1963, பிரிவு 7 ஆகியவற்றின் கீழ் மாநில ஆளுநர் அவர்களால் அனுப்பப்படும் முன்மொழிவுகளின் மீது தேவையான அனைத்து சட்ட நடவடிக்கைகளையும் உடனடியாக மேற்கொள்ள வேண்டுமென்றும் ஒன்றிய அரசை வலியுறுத்தி அரசினர் தனித் தீர்மானத்தை முன்மொழிந்து உரையாற்றினார்.சென்னையில் ரூபாய் .1,200 கோடி மதிப்பீட்டில் 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் நவீன வசதிகளுடன் கூடிய புதிய ஒருங்கிணைந்த தலைமைச் செயலகம் மற்றும் சட்டப்பேரவை வளாகம் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் ஜோசப் விஜய் செப்டம்பர் 3, 2026 அன்று சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ் அறிவித்துள்ளார். அடுத்த 100 ஆண்டுகளின் நிர்வாகத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் உலகத் தரத்திலான உள்கட்டமைப்புடன் இது உருவாக்கப்பட உள்ளது.சுமார் 20 லட்சம் சதுர அடி.நோக்கம்: அடுத்த 100 ஆண்டுகளின் நிர்வாகத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் உலகத் தரத்திலான உள்கட்டமைப்புடன் இது உருவாக்கப்பட உள்ளது.புதிய வளாகத்தில் சட்டப்பேரவை, முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் பல்வேறு துறைகளின் அலுவலகங்கள் ஒரே இடத்தில் இயங்கும் வகையில் நவீன வசதிகள் அமைக்கப்படும்.
தற்போது தலைமைச் செயலகம் இயங்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க புனித ஜார்ஜ் கோட்டை வளாகம் சுமார் 107 ஏக்கர் பரப்பளவு கொண்டது.இதில் தமிழ்நாடு அரசின் பயன்பாட்டுக்கு சுமார் 4 ஏக்கர் நிலம் மட்டுமே உள்ளதாகவும், மீதமுள்ள பகுதிகள் இந்தியப் பாதுகாப்புத் துறை மற்றும் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளதால் வளாகத்தை விரிவுபடுத்துவதில் சிரமம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளதுபுதிய தலைமைச் செயலகம் மற்றும் சட்டப்பேரவை வளாகத்தை அமைப்பதற்காக சென்னையில் 3 இடங்கள் பரிசீலிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.
சென்னை சர்தார் பட்டேல் சாலையில் ஆளுநர் மாளிகை அருகே உள்ள கிண்டி நெடுஞ்சாலைத்துறை ஆராய்ச்சி நிலைய வளாகம், பட்டினப்பாக்கம், நந்தம்பாக்கம்
ஆகிய 3 இடங்களில் புதிய தலைமைச் செயலகத்தை அமைப்பது தொடர்பாக முதல்வர் ஆலோசனை நடத்தி வருகிறார் என கூறப்படுகிறது.







கருத்துகள்