இந்தியத் தேர்தல் ஆணையம் (ECI), சென்னை வேளச்சேரி தொகுதியின் முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ-வான ஜே.எம்.எச். அசன் மவுலானா தேர்தலில் போட்டியிட 3 ஆண்டுகள் தடை விதித்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
2021 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலின் போது, தனது தேர்தல் செலவுக் கணக்குகளை முறையாகவும் உண்மையாகவும் தாக்கல் செய்யாத காரணத்தால் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951-ன் பிரிவு 10A-ன் கீழ் தேர்தல் ஆணையம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. அசன் மவுலானா தனது தேர்தல் செலவாக ரூபாய் 17,03,548 மட்டுமே கணக்கு காட்டியிருந்தார். ஆனால், தேர்தல் ஆணையத்தின் விசாரணையில் அவர் நாளிதழ்களில் கொடுத்த விளம்பரங்களுக்காக சுமார் ரூபாய் 32,05,915 செலவிட்டது கண்டறியப்பட்டது. இதன் மூலம் அவரது மொத்த செலவு ரூபாய் 49 லட்சத்தைத் தாண்டியது, இது அப்போதைய தேர்தல் செலவு உச்சவரம்பான ரூபாய் 30.80 லட்சத்தை விட அதிகமாகும். இந்தத் தடையின் காரணமாக, ஆகஸ்ட் 2026 முதல் அடுத்த 3 ஆண்டுகளுக்கு அவர் நாடாளுமன்ற (மக்களவை/மாநிலங்களவை) அல்லது மாநிலச் சட்டமன்றத் தேர்தல்களில் (சட்டப்பேரவை/சட்ட மேலவை) வேட்பாளராகப் போட்டியிட முடியாது.தேர்தல் செலவுக் கணக்கில் முறைகேடு: காங்கிரஸ் கட்சியை சேர்ந்த வேளச்சேரி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தகுதி நீக்கம் செய்து தேர்தல் ஆணையம் அதிரடி
2021ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் வேளச்சேரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற திரு. அசன் மௌலானா, JMH அவர்களின் தேர்தல் செலவுக் கணக்கில் கணிசமான தொகை குறைத்து காட்டப்பட்டதாகக் கூறி, இந்திய தேர்தல் ஆணையம் அவரை 3 ஆண்டுகளுக்கு தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவு 19.08.2026 அன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு தமிழ்நாடு அரசு அரசிதழின் 28.08.2026 தேதியிட்ட Extraordinary Gazette-ல் வெளியிடப்பட்டுள்ளது.
ரூபாய் 32.05 லட்சம் செலவு குறைத்து காட்டப்பட்டதாக குற்றச்சாட்டு
2021 தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர், ஆசான் மௌலானா தனது தேர்தல் செலவுக் கணக்கில் ரூபாய் 17,03,548 செலவு செய்ததாக தேர்தல் அதிகாரியிடம் தாக்கல் செய்திருந்தார்.
ஆனால், தேர்தல் செலவுக் கணக்கை ஆய்வு செய்த மாவட்ட தேர்தல் அதிகாரி, விளம்பரங்களுக்கான செலவில் ரூபாய் 32,05,915 அளவுக்கு குறைத்து காட்டப்பட்டிருப்பதாக முடிவு செய்தார்.
27.03.2021 மற்றும் 28.03.2021 ஆகிய தேதிகளில் 10 செய்தித்தாள்களில் வெளியிடப்பட்ட விளம்பரங்களுக்கான செலவு ரூபாய் 31,53,975 எனவும், 03.04.2021 அன்று வெளியான மற்றொரு விளம்பரத்திற்கான செலவு ரூபாய் 51,940 எனவும் தேர்தல் கண்காணிப்பு குழுக்கள் மதிப்பிட்டன.
இதனை வேட்பாளரின் தேர்தல் செலவுக் கணக்கில் சேர்க்க வேண்டும் என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.
விளம்பரங்களுக்கான செலவுகள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியால் சுயமாக மேற்கொள்ளப்பட்டவை என்றும், தமக்கு அவற்றில் எந்த அதிகாரப்பூர்வ தொடர்பும் இல்லை என்றும் ஆசான் மௌலானா தேர்தல் அதிகாரியிடம் விளக்கம் அளித்திருந்தார்.
எனினும், தேர்தல் செலவுகளை வேட்பாளரின் கணக்கில் சேர்க்க வேண்டிய சட்டப்பூர்வ விதிமுறைகள் மற்றும் தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்களை பரிசீலித்த தேர்தல் ஆணையம், அவரது விளக்கம் ஏற்கத்தக்கதல்ல எனக் கருதியது.
Representation of the People Act, 1951-ன் Sections 77 மற்றும் 78 ஆகியவற்றின் கீழ் வேட்பாளர் தனது தேர்தல் செலவினங்களுக்கான முறையான கணக்கை பராமரித்து, சட்டப்படி குறிப்பிட்ட காலத்திற்குள் தாக்கல் செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையம் சுட்டிக்காட்டியது.
மேலும், தேர்தல் செலவுக் கணக்கில் கணிசமான தொகையை வெளிப்படுத்தாமல் இருப்பது வெறும் நடைமுறை தவறு அல்ல; தேர்தல் செலவுகளில் வெளிப்படைத்தன்மை, பொறுப்புணர்வு மற்றும் சமமான போட்டி ஆகியவற்றை பாதிக்கும் முக்கியமான விதிமுறை மீறல் என ஆணையம் குறிப்பிட்டுள்ளது,
இதன் அடிப்படையில், Representation of the People Act, 1951-ன் Section 10A-ஐ, Sections 77 மற்றும் 78 உடன் இணைத்து, இந்திய தேர்தல் ஆணையம் ஆசான் மௌலானாவை 19.08.2026 முதல் 3 ஆண்டுகளுக்கு,
நாடாளுமன்றத்தின் எந்த அவையிலும் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கும்,
மாநில சட்டப்பேரவை அல்லது சட்ட மேலவையில் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கும்
இந்த உத்தரவு Election Commission of India சார்பில் Senior Deputy Election Commissioner Dr. Pawn Kumar Sharma பிறப்பித்தார்
Section 10A, Representation of the People Act, 1951 — தேர்தல் செலவுக் கணக்கை முறையாக தாக்கல் செய்யத் தவறியதற்கான தகுதி நீக்கம்







கருத்துகள்