சிவகங்கை இரட்டைக் கொலையில் 5 நபர்கள் கைது, நடந்தது என்ன?
சிவகங்கை அருகே இரண்டு இளைஞர்களை விரட்டி வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 5 நபர்களை காவல்துறையினர் கைது செய்தனர். இந்த இரட்டைக் கொலை வழக்கின் விவரங்கள் வருமாறு: கொல்லப்பட்டு உயிரிழந்தவர்கள்: தெய்வேந்திரன் (வயது 27): சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் தாலுகா குருந்தனிவாரியேந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர். கோயமுத்தூரில் கார் வாடகைத் தொழில் செய்து வந்தார். பூப்பாண்டி (வயது 25): சிவகங்கை மாவட்டம், சிறுவேலங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர். இவரது நண்பர் தெய்வேந்திரன் சமீபத்தில் புதிய மாருதி எர்டிகா காரை வாங்கியிருந்தார். அதை சர்வீஸ் செய்துவிட்டு, நண்பர் பூப்பாண்டியுடன் சிவகங்கை - காளையார்கோவில் செல்லும் சாலையில் உள்ள பழமலைநகர் - கொடிக்காடு கண்மாய் பகுதிக்குச் சென்று காரை நிறுத்திவிட்டு மது குடித்துளளனர். அப்போது இருசக்கர வாகனங்களில் பயங்கரமான ஆயுதங்களுடன் வந்த ஒரு கும்பல் இவர்களைச் சூழ்ந்தததும். ஆபத்தை உணர்ந்து இருவரும் கண்மாய்க்குள் ஓடினர். ஆனால், அந்தக் கும்பல் அவர்களை விரட்டிச் சென்று சரமாரியாக வெட்டியதில் தலை மற்றும் உடலில் பலத்த காயமடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், தெய்வேந்திரனின் புதிய காரையும் அந்தக் கும்பல் அடித்து நொறுக்கி விட்டு தப்பியோடியது. வழிப்போக்கில் பார்தவர்கள் தகவல் அளித்து இருவரும் வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவத்தில், காவல்துறை வந்து பின் விசாரணை மூலம் ஐவரைக் கைது செய்தனர்.
இருசக்கர வாகனங்களில் ஆயுதங்களுடன் வந்த, 15 பேர் கும்பல், அவர்களை வெட்டிக் கொலை செய்ததுள்ள பரபரப்பு சம்பவமாக உள்ளதால் ஐவர் கைதான நிலையில்
காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் அமலஅட்வின் தலைமையில், ஐந்து தனிப்படையினர் விசாரித்து, பில்லுார் பாலமுருகன்,(வயது 24), தனராஜ்,(வயது 19), சந்தோஷ், (வயது 19(, மாத்துார் சதீஷ்குமார், (வயது25), அழுபிள்ளைதாங்கி காளீஸ்வரன், (வயது 23), உள்ளிட்ட, ஐந்து நபர்களைக் கைது செய்தனர். இறந்த
தெய்வேந்திரன், பூப்பாண்டியின் உடல்களை அவர்களது உறவினர்கள் வாங்க மறுத்து, சிவகங்கை அரண்மனை வாசலில், நேற்று காலை முதல் மதியம் வரை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால், மதுரை -- தொண்டி சாலையில், போக்குவரத்துக்கள் பாதிக்கப்பட்டது. மறியலில் ஈடுபட்டவர்களிடம், கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர் பிரான்சிஸ், பேச்சுவார்த்தை நடத்தி கலையச் செய்தார்.
விசாரணை தொடரந்து நடக்கிறது.


கருத்துகள்