இந்தியத் தேர்தல் ஆணையம் நாடு முழுவதும் காலியாக உள்ள 5 சட்டமன்றத் தொகுதிகள் மற்றும் 1 நாடாளுமன்றத் தொகுதி என மொத்தம் 6 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்
அறிவிப்பை வெளியிட்டுள்ளதன்படி, 6 அக்டோபர் 2026 அன்று வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. தமிழ்நாட்டில் காலியாக உள்ள 7 சட்டமன்றத் தொகுதிகளில், நீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் இல்லாத மதுராந்தகம் தனி மற்றும் தாராபுரம் தனி ஆகிய 2 தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய தேர்தல் (அட்டவணை): தேர்தல் அறிவிப்பாணை மற்றும் வேட்புமனுத் தாக்கல் ஆரம்பம் செப்டம்பர் 9, 2026 வேட்புமனுத் தாக்கல் செய்ய கடைசி நாள் செப்டம்பர் 17, 2026 வேட்புமனுக்கள் பரிசீலனை செப்டம்பர் 18, 2026 வேட்புமனுக்களைத் திரும்பப் பெற கடைசி நாள் செப்டம்பர் 19, 2026 வாக்குப்பதிவு நடைபெறும் நாள் அக்டோபர் 6, 2026 வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 9, 2026 இடைத்தேர்தல் நடக்கும் பிற தொகுதிகள்: பாண்டிச்சேரி யூனியன் பிரதேசம் தட்டாஞ்சாவடி சட்டமன்றத் தொகுதி மற்றும் மேற்கு வங்கம்: ரெஜினா Block மற்றும் நந்திகிராம் சட்டமன்றத் தொகுதிகள் அஸ்ஸாம்: நகோன் நாடாளுமன்றத் தொகுதி தமிழ்நாட்டில் காலியாக உள்ள எஞ்சிய 5 சட்டமன்றத் தொகுதிகளான திருச்சிராப்பள்ளி கிழக்கு, கரூர், விராலிமலை, பெருந்துறை மற்றும் அம்பாசமுத்திரம் தேர்தல் வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், அவற்றுக்கு தற்போது இடைத்தேர்தல் அறிவிக்கப்படவில்லை என இந்தியத் தேர்தல் ஆணையம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு 7 சட்டப்பேரவைத் தொகுதிகள் காலி — 2 தொகுதிகளுக்கு மட்டுமே தற்போது இடைத்தேர்தல் அவை இரண்டும் மேற்கு கொங்கு மண்டலம், மற்றும் வடக்கு மண்டலத்தில் அமைந்துள்ள தனித் தொகுதி ஆகும்,
நீதிமன்ற வழக்குகள் காரணமாக 5 தொகுதிகளுக்கு தேர்தல் அறிவிப்பு இல்லை
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு 7 தொகுதிகள் காலியாகியுள்ள நிலையில், அவற்றில் மதுராந்தகம் (தனி) மற்றும் தாராபுரம் (தனி) ஆகிய 2 தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தலை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
35 – மதுராந்தகம் (SC), 101 – தாராபுரம் (SC)
இந்த 2 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 6, 2026 அன்று நடைபெறும். வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 9, 2026 அன்று நடைபெறும்
மேலும், இடைத்தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் EVM மற்றும் VVPAT பயன்படுத்தப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மதுராந்தகம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் மரகதம் குமரவேல் மற்றும் தாராபுரம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் சத்தியபாமா ஆகியோர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்ததை அடுத்து இந்தத் தொகுதிகள் காலியாகின. தற்போது தேர்தல் அறிவிக்கப்படடுள்ள நிலையில் இனி அரசியல் கடசிகளின் நகர்வுகள் துவங்கும்.










கருத்துகள்