முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கள்ளக்குறிச்சி விஷச்சாராயச் சாவு 67 அலட்சியம் குறித்து கோகுல்தாஸ் விசாரணை ஆணையம் அறிக்கை தாக்கல்

கள்ளக்குறிச்சி விஷச்சாராயச் சாவு 67  அலட்சியம் குறித்து கோகுல்தாஸ் விசாரணை ஆணையம் அறிக்கை !,

"மெத்தனால் கசிவைத் தடுக்கத் தவறிய அதிகாரிகளே இந்த சராய சாவுக்கு காரணம்" - 12 பேர் மீது துறை ரீதியான விசாரணைக்கு பரிந்துரை; கல்வராயன் மலையில் தனி மதுவிலக்கு படை அமைக்கவும் பரிந்துரை!

சென்னை, 2024-ஆம் ஆண்டு ஜூன் மாதம் கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலை கருணாபுரத்தில் நிகழ்ந்த கொடூர கள்ளச்சாராய சம்பவத்தில் 67 பேர் உயிரிழந்த நிலையில், ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி பி. கோகுல்தாஸ் தலைமையில் திமுக ஆட்சியில் அமைக்கப்பட்ட ஒருநபர் ஆணையத்தின் இறுதி அறிக்கை இன்று செப்டம்பர் .8 சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. காவல்துறை, மதுவிலக்கு மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளின் அலட்சியமும், கடமை தவறிய போக்குமே இந்த உயிரிழப்புகளுக்கு முக்கியக் காரணம் என அந்த அறிக்கையில் கண்டறியப்பட்டுள்ளது



2024-ஆம் ஆண்டு ஜூன் 19 மற்றும் 20-ஆம் தேதிகளில், கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் மெத்தனால் கலந்த விஷ நச்சுச் சாராயத்தை அருந்தியதில் 67 பேர் உயிரிழந்தனர். மேலும் 161 பேர் பாதிக்கப்பட்டனர். இந்தச்சம்பவம் குறித்து விசாரிக்க அப்போதைய திமுக அரசு, ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி கோகுல்தாஸ் தலைமையில் ஒருநபர் ஆணையத்தை அமைத்தது. ஆணையம் 433 பேரிடம் விசாரணை நடத்தியதுடன், 69 சாட்சிகளின் வாக்குமூலங்களையும் பதிவு செய்துள்ளது. இந்த வழக்கு தற்போது உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் CBI விசாரணையில் உள்ளது.




 கள்ளச்சாராய விற்பனையாளர்களுக்கும் காவல்துறை அதிகாரிகளுக்கும் இடையே கேடான கூட்டணி இருந்ததை ஆணையம் தெளிவாகக் கண்டறிந்துள்ளது. மெத்தனாலின் சேமிப்பு, போக்குவரத்து மற்றும் விற்பனையைக் கண்காணிக்கும் அதிகாரிகள் தங்கள் கடமைகளில் விழிப்புடன் இருந்திருந்தால், இந்தக் கொடிய விஷ இரசாயனம் சென்னையிலிருந்து கள்ளக்குறிச்சி வரை பயணித்திருக்க முடியாது என்று அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. இத்துறையினர் மெத்தனால் பயன்பாட்டைக் கண்காணிக்கத் தவறியதால் இந்த சம்பவம் நிகழ்ந்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. காவல்துறை: கள்ளக்குறிச்சி, சங்கராபுரம் மற்றும் கச்சிராப்பாளையம் காவல் நிலையங்களில் பணியாற்றிய உதவி ஆய்வாளர்கள், ஆய்வாளர்கள் மற்றும் காவல் துணை கண்காணிப்பாளர்கள் மீது பொறுப்பு சாட்டப்பட்டுள்ளது. மேலும், திருக்கோவிலூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு அதிகாரிகளும் இதில் அடங்குவர்.

வருவாய்த்துறை கிராம உதவியாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர்கள் மற்றும் கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், கச்சிராப்பாளையம் வட்டங்களின் வட்டாட்சியர்கள் மீதும் பொறுப்பு சாட்டப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்திற்கு 12 அதிகாரிகள் பொறுப்பு என்று ஆணையம் கண்டறிந்து, அவர்கள் மீது துறை ரீதியான விசாரணை நடத்தப் பரிந்துரைத்துள்ளது.

 கள்ளச்சாராயத்தின் முக்கிய ஆதாரமாக உள்ளது தனியாக ஒரு மதுவிலக்கு அமலாக்கப் படை அமைக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மெத்தனாலின் சேமிப்பு, போக்குவரத்து மற்றும் பயன்பாட்டை கண்டிப்பாக ஒழுங்குபடுத்தும் வகையில் சட்டங்களில் திருத்தம் கொண்டு வர பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

 உயிரிழந்தவர்களின் குழந்தைகளுக்கு கல்வி, உணவு, தங்குமிடம் மற்றும் அரசு வேலை வாய்ப்புகள் வழங்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு பகுதி மற்றும் நிரந்தர இயலாமைக்கு ரூபாய் 2 லட்சம், முழு நிரந்தர இயலாமைக்கு ரூபாய் 5 லட்சம் கூடுதல் இழப்பீடு வழங்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சியில் தொழிற்சாலைகள் அமைத்து, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

 2023-இம் ஆண்டு விழுப்புரத்தில் கள்ளச்சாராய சம்பவம் நடந்தும், 2024-ஆம் ஆண்டு கள்ளக்குறிச்சியில் மீண்டும் அதே சோகம் நிகழ்ந்தது. காவல் நிலையத்திற்கு சில அடி தூரத்தில் கள்ளச்சாராய விற்பனை நடந்து கொண்டிருந்தது. இது வெறும் அலட்சியம் அல்ல; இது ஒரு அரசு மாவட்ட அமைப்பு நிர்வாக ரீதியான தோல்வி மெத்தனால் கசிவு, கள்ளச்சாராய விற்பனை, அதிகாரிகளின் கண்காணிப்பின்மை என ஒவ்வொரு கட்டத்திலும் தவறுகள் நிகழ்ந்துள்ளன. "கள்ளச்சாராய விற்பனையாளர்களுக்கும் காவல்துறைக்கும் இடையே கேடான கூட்டணி" என்று ஆணையம் கூறியிருப்பது, இந்த சம்பவத்தின் உண்மை முகத்தை வெளிப்படுத்துகிறது. 12 அதிகாரிகள் மீது விசாரணை பரிந்துரைக்கப்பட்டிருந்தாலும், இவர்கள் மீது உண்மையில் நடவடிக்கை எடுக்கப்படுமா? பழைய ஆணையங்கள் எல்லாம் அறிக்கைகளை மட்டும் தந்துவிட்டு முடிந்துவிட்டன. இந்த அறிக்கையும் அப்படித்தான் ஆகிவிடுமா? CBI விசாரணை நடந்து கொண்டிருக்கும் நிலையில், அதன் முடிவுகளும் முக்கியமானவை. இந்த சோகம் மீண்டும் நிகழாமல் தடுக்க, பரிந்துரைகள் அனைத்தும் முழுமையாக செயல்படுத்தப்பட வேண்டும்.

அறிக்கை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், சட்டமன்ற உறுப்பினர்கள் இது குறித்து விவாதிப்பார்கள். அரசு, அறிக்கையில் உள்ள பரிந்துரைகளின் அடிப்படையில், குற்றம்சாட்டப்பட்ட 12 அதிகாரிகள் மீது துறை ரீதியான விசாரணை நடத்த நடவடிக்கை எடுக்கும். CBI விசாரணை தொடர்ந்து நடைபெறும். கல்வராயன் மலைப் பகுதிகளில் தனி மதுவிலக்கு படை அமைக்கப்படலாம். இந்த சம்பவத்தில் இருந்து பாடம் கற்று, எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க புதிய சட்டங்கள் அல்லது விதிமுறைகள் கொண்டு வர வாய்ப்புள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பாண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார்கள் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும்   இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதம்  ஐந்தாம் தேதியில் துவக்கம். ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, சன்னதிகளில் வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்றிரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...