கைலாஷ் யாத்திரை காணாமல் போன ஓய்வு நீதிபதியைக் கன்டறியும் நிலை அறிக்கை 8 நாளில் தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு
உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு டில்லி தமிழ் வழக்குரைஞா்கள் சங்கம் முன்னர் அனுப்பியுள்ள கடிதத்தில் ஓய்வுபெற்ற நீதிபதி வி. சிவஞானம்
இந்திய நீதித்துறையில் ஏறக்குறைய 34 ஆண்டுகள் நீடித்த ஒரு சிறப்பான பணியைக் கொண்டிருந்தாா். 23 ஜூலை 2025 ஆம் தேதி முதல் உச்ச நீதிமன்றத்தால் மூத்த வழக்குரைஞராக நியமிக்கப்பட்டாா்.
தற்போது அவர் தமிழ் யாத்ரீகா்கள் குழுவின் ஒரு பகுதியாக நேபாளத்தில் பயணம் செய்து கொண்டிருந்த பேருந்தில் எடுக்கப்பட்ட ஒரு குழுப் புகைப்படம், அவா் அக்குழுவுடன் இருந்ததை உறுதி செய்கிறது. 26 ஆகஸ்ட் 2026 அன்று அதிகாலை வேளையில், அவா் தனது மனைவிக்கு செல்லுலர் வாட்ஸ்அப் அழைப்பு விடுத்தாா், அதன் பிறகு வேறு எந்தத் தொடா்பும் ஏற்படவில்லை. திமுரேயில் உள்ள நேபாள ஆயுதப் பாதுகாப்புப் படை எல்லைச் சாவடிக்கு அருகே மீட்கப்பட்ட, மற்றொரு பேருந்தில் பயணித்தவா்கள், நீதிபதி சிவஞானத்தின் பேருந்து தங்களது பேருந்திலிருந்து சுமாா் 100-200 மீட்டா் தொலைவில் மட்டுமே இருந்ததாக அவரது குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளனா்.
எனவே, அவரது பாதுகாப்பு மற்றும் இருப்பிடம் குறித்து அவரது குடும்பத்தினரும் எங்கள் சங்கமும் மிகுந்த கவலை கொண்டுள்ளனா். ஓய்வுபெற்ற நீதிபதி வி.சிவஞானத்தை கண்டறிந்து, அவரது பாதுகாப்பு மற்றும் இருப்பிடத்தை உறுதிசெய்து, அவா் பாதுகாப்பாக இந்தியா திரும்புவதற்கு வழிவகை செய்ய, வேண்டுகோளை இந்திய அரசுக்கும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் அனுப்பி வைக்குமாறும், சாத்தியமான மற்றும் உடனடியான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
இதே கோரிக்கையுடன் தமிழ்நாடு அரசின் வெளிநாடு வாழ் தமிழா்கள் நலவாழ்வு மற்றும் புனா்வாழ்வு ஆணையா் ஆா். சதீஷ், ஐ.ஏ.எஸ்.க்கும் டில்லி தமிழ் வழக்குரைஞா்கள் சங்கம் கடிதம் எழுதியுள்ளது. அதேபோல் நேபாளத்தில் பயணம் செய்த Infosys CEO-வைத் தொடர்பு கொள்ள முடியவில்லை; தேடும் முயற்சியில் நிறுவனம் ஈடுபட்டுள்ளது, சென்னை உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதியும், தற்போதைய உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞருமான நீதிபதி வீ. சிவஞானம் நேபாளத்தின் ரசுவா பகுதியில் ஆன்மீகப் பயணம் மேற்கொண்டிருந்தபோது அரும் காணாமல் போயுள்ளார். லக்ஸ் கோபிசெட்டி இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனமான இன்ஃபோசிஸின் அமெரிக்கத் துணை நிறுவனமான 'இன்ஃபோசிஸ் பப்ளிக் சர்வீசஸ்' சிஇஓ ஆவார். நேபாள-திபெத் எல்லைப் பகுதிக்கு தனிப்பட்ட முறையில் சுற்றுலா சென்றிருந்தவர், வெள்ளப் பாதிப்புக்குப் பின் தொடர்புகொள்ள முடியாமல் காணாமல் போயுள்ளார். இவரைத் தேடும் பணியில் இன்ஃபோசிஸ் நிறுவனம் அரசு நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது.
சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதியரசர் வி. சிவஞானம் அவர்கள், நேபாளத்தில் ஏற்பட்ட கடுமையான வெள்ளம் மற்றும் நிலச்சரிவைத் தொடர்ந்து ஆகஸ்ட் 26 முதல் காணாமல் போயுள்ளார். அவர் தமிழ் பக்தர்கள் குழுவுடன் நேபாளம் சென்றிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் 34 ஆண்டுகள் நீதித்துறையில் பணியாற்றிய
நீதியரசர் வீ.சிவஞானத்தை பாதுகாப்பாக கண்டுபிடித்து மீட்க மெட்ராஸ் பார் அசோசியேஷன் (MBA) முக்கியமான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
MBA தலைவர் வி.ஆர். கமலநாதன் மற்றும் செயலாளர் ஜெ. போத்திராஜ் ஆகியோர், இந்திய தலைமை நீதிபதி நீதியரசர் சூர்யகாந்த், பிரதமர் அலுவலகம் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சகத்துக்கு கடிதம் எழுதி, தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை அவசரமாகவும் தீவிரமாகவும் மேற்கொள்ள கோரியுள்ளனர்.
இந்திய மற்றும் நேபாள அதிகாரிகளுக்கிடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்தி, கிடைக்கக்கூடிய அனைத்து தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளையும் பயன்படுத்தி, நீதிபதி வீ.சிவஞானத்தை பாதுகாப்பாக இந்தியாவிற்கு வரவைக்க வேண்டும் என்றும் MBA வலியுறுத்தியுள்ளது.
நேபாள வெள்ளத்தில் மாயமான 85 தமிழ் யாத்ரீகர்கள் - மத்திய, மாநில அரசுகளிடம் நிலை அறிக்கை கோரி உயர் நீதிமன்றம் உத்தரவு!
ஓய்வுபெற்ற நீதிபதி சிவஞானம் உள்ளிட்டோர் மீட்புக்காக காத்திருக்க; 220 பேர் மீட்கப்பட்டு சொந்த ஊர்களுக்கு அனுப்பப்பட்ட நிலையில், 85 பேர் தொடர்பு இல்லாமல் உள்ளனர்; குடும்பத்தினர் காத்மாண்டுக்கு அரசு செலவில் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்
நேபாளத்தில் ஏற்பட்ட பயங்கர மின்னல் வெள்ளப் பெருக்கில் சிக்கி மாயமான 85 தமிழ் யாத்ரீகர்களை மீட்கும் முயற்சிகள் குறித்து, மத்திய மற்றும் மாநில அரசுகள் நிலை அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள் முருகன் ஆகியோர் அடங்கிய முதல் அமர்வு, திண்டுக்கல் வழக்கறிஞர் ஏ.எஃப். பர்வேஷ் முஷ்ரஃப் தாக்கல் செய்த பொதுநல மனு அடிப்படையில் இந்த உத்தரவைப் பிறப்பித்தது.
நேபாள-திபெத் எல்லையில் கடந்த ஆகஸ்ட் 26-ஆம் தேதி ஏற்பட்ட பயங்கர மின்னல் வெள்ளப் பெருக்கில், கைலாஷ் மானசரோவர் புனித யாத்திரையில் ஈடுபட்டிருந்த தமிழக யாத்ரீகர்கள் சிக்கிக் கொண்டனர். தமிழக அரசு தரப்பில், 305 பேர் நேபாளத்திற்கு பயணம் மேற்கொண்டதாகவும், இதுவரை 220 பேர் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து வரப்பட்டதாகவும், 85 பேர் இன்னும் தொடர்பு இல்லாமல் உள்ளதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மனு, மதுரை கிளையில் தாக்கல் செய்யப்பட்டு, பின்னர் சென்னை முதல் அமர்வுக்கு மாற்றப்பட்டது. விசாரணையின் போது, தமிழ்நாடு அரசு தரப்பில் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணன் ஆஜராகி,
305 யாத்ரீகர்களில் 220 பேர் மீட்கப்பட்டு அவர்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். மீதமுள்ள 85 பேரை மீட்கும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. மாயமான யாத்ரீகர்களின் குடும்பத்தினர், அரசு செலவில் காத்மாண்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு இல்ல அதிகாரிகள், இந்தியத் தூதரகம் மற்றும் நேபாள அதிகாரிகளுடன் இணைந்து மீட்புப் பணிகளை ஒருங்கிணைத்து வருகின்றனர்.
சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி வி. சிவஞானம் இந்த வெள்ளத்தில் மாயமானவர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆகஸ்ட் 26 அன்று அவரது மனைவியுடன் கடைசியாக பேசிய அவர், அதன்பின்னர் தொடர்பு இல்லாமல் போயுள்ளார்.
தமிழகத்தில் இருந்து நேபாளத்திற்கு பயணம் மேற்கொண்டவர்களில் முக்கியமாக இரண்டு குழுக்கள் உள்ளன:
57 பேர் (54 தமிழகம் + 3 புதுச்சேரி) - இவர்களில் 21 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
49 பேர் - இவர்களில் எவருடனும் இதுவரை தொடர்பு இல்லை.
மொத்தம் 106 பேர் (103 தமிழகம் + 3 புதுச்சேரி) இந்த இரண்டு குழுக்களில் பயணம் மேற்கொண்டனர்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், மத்திய மற்றும் மாநில அரசுகள், மீட்புப் பணிகள் குறித்து விரிவான நிலை அறிக்கையை சமர்ப்பிக்க உத்தரவிட்டுள்ளனர். மேலும், மாயமான யாத்ரீகர்களை கண்டுபிடிக்கும் முயற்சிகளை தீவிரப்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 85 தமிழ் யாத்ரீகர்கள் இன்னும் மாயமாகியுள்ள நிலையில், நீதிமன்றம் தலையிட்டு நிலை அறிக்கை கோரியுள்ளது. இது, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஒரு நம்பிக்கை. ஆனால், அதிகாரப்பூர்வ பட்டியல்கள் இல்லாததால், மாயமானவர்களின் எண்ணிக்கை குறித்த குழப்பம் தொடர்கிறது. ஓய்வுபெற்ற நீதிபதி வி. சிவஞானம் உள்ளிட்டோர் மீட்புக்காக காத்திருக்கும் நிலையில், மீட்புப் பணிகள் மேலும் தீவிரப்படுத்தப்பட வேண்டும். குடும்பத்தினர் காத்மாண்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இது ஒரு நல்ல நடவடிக்கை. ஆனால், உண்மையான மீட்பு மட்டுமே அவர்களின் துயரத்தை போக்கும். கும்பகோணம் சூப்பர் யாத்திரா குழுவில் 21 பேர் மீட்கப்பட்டுள்ளனர். ஆனால், மகாதேவ் கைலாஷ் யாத்திரா குழுவில் இருந்து யாரும் மீட்கப்படவில்லை. இந்த குழுவினரின் நிலை குறித்து அரசு தீவிர கவனம் செலுத்த வேண்டும். 8 நாட்களில் நிலை அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்ற உத்தரவு, நீதிமன்றம் இந்த விஷயத்தை தீவிரமாக எடுத்துக்கொள்கிறது என்பதை காட்டுகிறது. மீட்புப் பணிகள் குறித்த வெளிப்படையான தகவல்கள் வெளியாக வேண்டும்.
8 நாட்களுக்குள், மத்திய மற்றும் மாநில அரசுகள் மீட்புப் பணிகள் குறித்த நிலை அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும். மேலும், மாயமான 85 பேரை கண்டுபிடிக்கும் முயற்சிகள் தொடரும். இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணை, அந்த அறிக்கையின் அடிப்படையில் நடைபெறும். என அறிவித்தது,







கருத்துகள்