குடிப்பகத்துப் பணியாளரை உயர்த்தி, படிப்பகத்துப் பணியாளரை வீழ்த்துகிறதா! அரசின் சம்பள அறிவிப்பு -அலசல் ஆய்வுக் கட்டுரை
குடிப்பகத்துப் பணியாளரை உயர்த்தி, படிப்பகத்துப் பணியாளரை வீழ்த்துகிறதா! அரசின் சம்பள அறிவிப்பு !?, -அலசல் ஆய்வுக் கட்டுரை,.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2026-27ஆம் ஆண்டிற்கான மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை மானியக் கோரிக்கை (Demand No. 37) மீதான விவாதமும் கொள்கை விளக்கக் குறிப்புத் தாக்கல் செய்த ஆகஸ்ட் 31, 2026 அன்று இத்துறைக்கான புதிய அறிவிப்புகள் மற்றும் கொள்கை முடிவுகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் கே. விக்னேஷ் சட்டப்பேரவையில் வெளியிட்டதில்.
கள்ளச்சாராய ஒழிப்பு மற்றும் மறுவாழ்வு திட்டங்கள் கள்ளச்சாராய உற்பத்தியை முழுமையாக ஒழிப்பதற்காகவும், போலி மதுபானப் புழக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்காகவும் பல்வேறு உத்திகள் அறிவிக்கப்பட்டுள்ளன, கள்ளச்சாராயத் தொழிலை கைவிட்டு, திருந்தி வாழும் முன்னாள் குற்றவாளிகளின் பொருளாதார மறுவாழ்விற்கான தனிநபர் நிதியுதவித் தொகை இந்த ஆண்டு இரண்டு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளதாகவும், கள்ளச்சாராய நடமாட்டத்தைக் கண்காணிக்கவும் தடுக்கவும் காவல் மற்றும் ஆயத்தீர்வை துறைகளில் அதிநவீன தொழில்நுட்ப வசதிகள் மற்றும் வாகனங்கள் மேம்படுத்தவும். டாஸ்மாக் (TASMAC) ஊழியர்கள் நலம் மற்றும் சீர்திருத்தங்கள் டாஸ்மாக் கடைகளின் கட்டமைப்பு மற்றும் பணியாளர்களின் நலன் சார்ந்து முக்கிய விவாதங்களும் அறிவிப்புகளும் மேற்கொள்ளப்பட்டதில் டாஸ்மாக் கடைப் பணியாளர்களுக்கு கடந்த 100 நாட்களில் 2-வது முறையாக ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இது கல்வித்துறை உதவி பேராசிரியர்களின் ஊதியத்திற்கு நிகரானதாகவே பார்க்கப்படுகிறது, சாராயக் கடைகளை அரசாங்கம் நடத்தாமல் தனியார் நடத்தினால் இந்த செலவு மிச்சம், மற்றும் ஊழல் நடக்காது, மதுப் பாட்டில்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட (MRP) கூடுதலாகப் பணம் வசூலிக்கும் ஊழியர்கள் மீது பணிநீக்கம் உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகள் பாயும் எனவு அமைச்சர் எச்சரித்துள்ளார். கடந்த காலங்களில் கடைகளுக்கான மின்சாரக் கட்டணம் மற்றும் இதர பராமரிப்புப் பணிகளுக்குப் போதிய நிதி ஒதுக்கப்படாத காரணத்தினால் ஏற்பட்ட சிக்கல்களைக் களைய, இந்த பட்ஜெட்டில் தனியாக நிதி ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளன.3. நிதி ஒதுக்கீடு மற்றும் வருவாய் திட்டங்களில் உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறைக்கு ஒட்டுமொத்தமாக ரூபாய் 17,290 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.போலி மதுபான விற்பனையைத் தடுக்கவும், முறையான வரி வசூலை உறுதி செய்யவும் மதுபானப் பாட்டில்களில் பயன்படுத்தப்படும் பாலியஸ்டர் அடிப்படையிலான ஹோலோகிராம் ஆயத்தீர்வை வில்லைகள் 3 ஆண்டுகளுக்கு கொள்முதல் செய்ய புதிய ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டுள்ளன. என்பதே அரசின் அளிவிப்பு
தங்கள் உடலையும், தங்கள் குடும்பத்தினரின் நிம்மதியைக் கெடுத்து, அரசுக்கு வருமானமளிக்கும், குடிகார குடிமகன்களே,
பொதுமக்களே, பாட்டிலுக்கு 10 ரூபாய் பாட்டு ஆனால் தற்போது அரசே மது விற்பனையை அதிகரிக்க ஊழியர்களுக்கு கூடுதல் ஊதியம் வழங்கி ஊக்கம் தருகிறது இது மக்கள் அழிவுக்கு அரசு தரும் வெகுமதி, போதை ஒழிக்க, மது விற்பணை என்பது கண்கள் விற்று சித்திரம் வாங்கும் நிலை அன்றி வேறில்லை,
இதோ நமது நண்பர், சமூக சேவகர் G தேவராஜன் மதுக்கடைகளில் மதுபாட்டிலுக்கு இரசீது கொடுக்கவில்லை என்பதற்காகவும், பாட்டிலுக்கு 10 ரூபாய் சட்டத்திற்கு முரணாக வசூல் செய்ததற்கு, 37 டாஸ்மாக் கடைகள் உட்பட ENFORCEMENT DIRECTORTORATE ஆகிய துறைகளுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து, இனிமேல் டாஸ்மாக ஊழியர்கள் மதுபாட்டிலுக்கு இரசீது கொடுக்கவில்லை என்றாலும், பாட்டிலுக்கு 10 ரூபாய் சட்டத்திற்கு முரணாக வசூல் செய்தாலும் , உரிய காவல் நிலையத்தில் புகார் அளிக்கலாம் என்ற உத்தரவைப் பெற்றுள்ளார். அரசு தான் மதுவை படிப்படியாக ஒழிக்க முன்வரவேண்டும் அதற்கு தேவை ஊழியர்கள் ஊதிய உயர்வு அல்ல, இதுவே மக்களை மகிழ்ச்சி அடைய வைக்கும், மேலும் தமிழ்நாடு அரசின் மானியக் கோரிக்கை எண் 20 என்பது உயர்கல்வித் துறை இந்த நிதியாண்டின் பட்ஜெட் கூட்டத்தொடரிலும் இந்த மானியக் கோரிக்கையின் கீழ் உயர்கல்வித் துறைக்கான நிதி ஒதுக்கீடுகளும், புதிய திட்டங்களுக்கான முக்கிய அறிவிப்புகளும் சட்டப்பேரவையில் வெளியிட்ட தவெக கூட்டணி அமைச்சரவையின் காங்கிரஸ் அமைச்சர் விஸ்வநாதன் சமீபத்திய 2026-2027 ஆம் நிதியாண்டுக்கான உயர்கல்வித் துறை மானியக் கோரிக்கை எண் 20-ன் கீழ் அறிவிக்கப்பட்ட முக்கிய அம்சங்களாக நிதி ஒதுக்கீடு மற்றும் முக்கிய திட்டங்கள்
ஒட்டுமொத்த ஒதுக்கீடு: 2026-27 நிதியாண்டிற்கான பட்ஜெட்டில் உயர்கல்வித் துறைக்காக ரூபாய் 8,393 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.வெற்றி மடிக்கணினி திட்டம் கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்குவதற்காக ரூபாய் 2,000 கோடி பிரத்யேகமாக ஒதுக்கப்பட்டுள்ளது. வரவேற்கலாம், உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு ரூபாய் 20 லட்சம் வரை பிணையற்ற கல்விக்கடன் வழங்க இத்திட்டம் செயல்படுத்தப்படும்.இரண்டு ஏக்கருக்கும் குறைவாக விவசாய நிலம் வைத்துள்ள விவசாயக் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள், அரசுக் கல்லூரிகள் மற்றும் அரசுப் பல்கலைக்கழகங்களில் படிக்கும் பட்சத்தில் அவர்களுக்கு முழு கல்விக் கட்டண விலக்கு அளிக்கப்படும். மாநில அரசுப் பல்கலைக்கழகங்களுக்கு ரூபாய் 1,807 கோடி மானியமாக வழங்கப்படவுள்ளது. தமிழ்நாடு மாணவர் விடுதிகள் மற்றும் உள்கட்டமைப்பு கழகம் (TNHSC) மூலம் ரூபாய் 3,200 கோடி செலவில் 1 லட்சம் படுக்கை வசதிகள் கொண்ட 200 நவீன ஒருங்கிணைந்த விடுதிகள் கட்டப்படும். மதுரையில் 300 மாணவர்கள் சேர்க்கை வசதியுடன் புதிய அரசு சட்டக் கல்லூரி அமைக்கப்படும். அரசு கலை மற்றும் அறிவியல், பொறியியல் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலியாக உள்ள 6,000 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் மூன்று கட்டங்களாக நிரப்பப்படும்.
கௌரவ விரிவுரையாளர்கள் ஊதிய உயர்வாக அரசு கல்லூரிகளில் பணியாற்றும் 8,000 கௌரவ விரிவுரையாளர்களின் ஊதியம் ரூபாய் 30,000-லிருந்து ரூபாய் 35,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.பாலிடெக்னிக் கல்லூரி கௌரவ விரிவுரையாளர்களின் ஊதியம் ரூபாய் 25,000-லிருந்து ரூபாய் 30,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.இது குறித்து டாஸ்மாக் பணியாளர்கள் மற்றும் உதவி பேராசிரியர்கள் ஊதியம் குறித்து ஒரு ஒப்பீடுகளை இங்கு காணலாம், இந்த நிலையில் ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) மேம்பாடு: உயர்கல்வி நிறுவனங்களுக்கான நியமனங்களை தடையின்றி நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் தரம் உயர்த்தப்படும்.சமூக நலன் மற்றும் உள்ளடக்கிய உயர்கல்வி நிறுவனங்களில் சேரும் 50 திருநங்கைகளுக்கு தலா ரூபாய் 2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும். கௌரவ விரிவுரையாளர் சம்பளமும் டாஸ்மாக் ஊழியர்கள் சம்பளமும் ஒரு ஒப்பீடு முக்கிய வேறுபாடுகள் மற்றும் சலுகைகளானது
கல்வித் தகுதியில் கௌரவ விரிவுரையாளர்கள் Ph.D, NET அல்லது SET போன்ற மிக உயரிய கல்வித் தகுதிகளையும், பேராசிரியருக்கான தகுதிகளையும் பெற்றவர்கள். டாஸ்மாக் ஊழியர்கள் பள்ளி மற்றும் பட்டப்படிப்பு தகுதிகளைக் கொண்டவர்கள். கௌரவ விரிவுரையாளர்களுக்கு கல்வி ஆண்டின் 11 மாதங்களுக்கு மட்டுமே தொகுப்பூதியம் வழங்கப்படுகிறது (மே மாத விடுமுறைக்குச் சம்பளம் இல்லை).
ஆனால், டாஸ்மாக் ஊழியர்களுக்கு வருடத்தின் 12 மாதங்களும் முழுச் சம்பளம் உண்டு. கூடுதல் சலுகைகள் (டாஸ்மாக் ஊழியர்களுக்கு): ஆகஸ்ட் 31, 2026 அன்று அறிவிக்கப்பட்ட புதிய அறிவிப்பின்படி, டாஸ்மாக் ஊழியர்களுக்கு மாதச் சம்பளத்துடன் சேர்த்துப் பின்வரும் சலுகைகளும் வழங்கப்படுகின்றன:
ரூபாய் 20,000 பண்டிகை முன்பணம்.ஆண்டுக்கு 3 சீருடைகள் மற்றும் தையல் கூலி (₹6,000).வாரத்திற்கு ஒரு நாள் விடுமுறை மற்றும் 8 மணி நேர வேலை சுழற்சி. தகுதியுடைய 250 ஊழியர்களுக்கு அரசுத் துறைகளில் இளநிலை உதவியாளர் (Junior Assistant) பணி உயர்வு. என பல சலுகை கௌரவ விரிவுரையாளர்களின் கோரிக்கையில் தங்களுக்குப் பல்கலைக்கழக மானியக் குழுவின் (UGC Norms) பரிந்துரைப்படி குறைந்தபட்சம் ரூபாய் 50,000 முதல் ரூபாய் 57,500 வரை சம்பளம் வழங்க வேண்டும் என்றும், 12 மாதங்களுக்கும் சம்பளம் வழங்க வேண்டும் என்றும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் ஆசிரியர்களின் TET தகுதி தொடர்பான வழக்கு: TET தேர்வு முடிவுகள் வெளியாகும் வரை 2026–27-ஆம் ஆண்டிற்கான இடமாற்றக் கலந்தாய்வை நடத்த இடைக்காலத் தடை – பதவி உயர்வு பட்டியலை இறுதி செய்ய TET முடிவுகள் முக்கியம் – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு வழக்கு எண்கள்: W.P.Nos.25577, 26295, 25637, 25644, 25647, 25648, 25650, 25667, 25668, 25674, 25675, 25697 & 25700 of 2026 மற்றும் தொடர்புடைய W.M.P. வழக்குகள் வரிசையாக வருகிறது, இதைத் தீர்வு செய்ய வேண்டியது அரசு கடமையாகும்.






































கருத்துகள்