முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அரசியல் ராஜதந்திர வழியில் இசக்கி சுப்பையா நடத்திய சட்டப் போராட்டம்

ஏற்கனவே ராஜினாமா செய்து தவெகவில் இணைந்த முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினரான இசக்கி சுப்பையா,



தனது சடடமன்றத் தொகுதி உறுப்பினர் பதவியை ராஜினாமாவைத் திரும்பப் பெறக் கோரி தமிழ்நாடு சட்டமன்றப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகரிடம் கடிதம் மனுவாக அளித்துள்ளார். அம்பாசமுத்திரம் தொகுதி  சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர்,26,மே 2026 ஆம் தேதியிட்ட தனது ராஜினாமா கடிதத்தைத் திரும்பப் பெறுவதாகத் தெரிவித்துள்ளார் இடைத்தேர்தல் நடத்துவதில் ஏற்பட்டுள்ள சட்ட சிக்கல்கள் மற்றும் தாமதம் காரணமாக, தனது தொகுதி மக்கள் நீண்ட நாட்களாக மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல் கடுமையாகப் பாதிக்கப்படுவதால், பொது நலன் கருதி இந்த முடிவை எடுத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்திலும் அவர் கூடுதல் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். சட்டமன்றப்பேரவைச் செயலக வட்டாரங்களின்படி, ஒருமுறை ராஜினாமா கடிதம் ஏற்கப்பட்டு, தொகுதி காலி என அறிவிக்கப்பட்ட பிறகு அதைத் திரும்பப் பெற சட்டத்தில் எந்த ஒரு விதிமுறையும் இல்லை என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது : இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அமர்வு, இசக்கி சுப்பையாவின் கூடுதல் மனுவை நீதிமன்ற ஆவணங்களில் சேர்க்கவும், அவரது கோரிக்கையை ஏற்றுக்கொள்ளவும் அதிரடியாக மறுத்துவிட்டது. வாய்மொழி வாதங்கள் தொடங்கப்பட்ட பிறகு புதிய மனுக்களை ஏற்க முடியாது எனக் கூறிய நீதிபதிகள், இந்த விவகாரத்திற்கு இடைத்தேர்தல் மட்டுமே இறுதித் தீர்வு எனக் குறிப்பிட்டு, வழக்கின் தீர்ப்பைத் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்துள்ளனர்.இசக்கி சுப்பையாவின் இந்தத் திடீர் நகர்வு, இடைத்தேர்தலை விரைவுபடுத்த அல்லது அதில் ஏற்படும் சட்டச் சிக்கல்களை எதிர்கொள்ள எடுக்கப்பட்ட ஒரு அரசியல் ராஜதந்திரமாகவே பார்க்கப்படுகிறது. இவர் சில காலம் அதிமுகவில் சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சராக இருந்தவர், ராஜினாமா திரும்பப் பெறக் கோரியதற்கான காரணம் நீதிமன்ற வாதம் தான் ராஜினாமா செய்த பிறகு அம்பாசமுத்திரம் தொகுதி மக்கள் நீண்ட நாட்களாக மக்கள் பிரதிநிதி இல்லாமல் தவிப்பதாகவும், தொகுதிப் பணிகள் முடங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதிமுக தொடர்ந்த வழக்கினால் இடைத்தேர்தல் நடத்துவதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வருகிறது. இதனால், இந்த வழக்கு முடியும் வரை தன்னை மீண்டும் எம்.எல்.ஏ.வாக பணியாற்ற அனுமதிக்க வேண்டும் என அவர் கோரியுள்ளார். இசக்கி சுப்பையா உள்ளிட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்தபோது, அதிமுக தரப்பில் அவர்களை "கட்சித் தாவல் தடைச் சட்டத்தின்" கீழ் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என சபாநாயகரிடம் வலியுறுத்தப்பட்டது. சபாநாயகர் தகுதிநீக்க நடவடிக்கை எடுப்பதற்கு முன்பாகவே இவர்களின் ராஜினாமாவை ஏற்றுக் கொண்டார். இதை எதிர்த்து அதிமுக நீதிமன்றம் சென்றது. தகுதிநீக்க வழக்கு நீதிமன்றத்தில் இழுபறியாக நீண்ட காலம் நீடிப்பதால், தேர்தல் ஆணையத்தால் இடைத்தேர்தலை உடனடியாக அறிவிக்க முடியாத சூழல் நிலவுகிறது. எனவே, "நான் ராஜினாமாவை வாபஸ் பெறத் தயார், ஆனால் சட்டம் அனுமதிக்கவில்லை" என்ற நிலையை உருவாக்குவதன் மூலம் இடைத்தேர்தலை நோக்கிய நகர்வை விரைவுபடுத்தவோ அல்லது மக்கள் மத்தியில் தங்களுக்குச் சாதகமான அலையை உருவாக்கவோ இந்த முயற்சியை மேற்கொண்டதாக அரசியல் அறிந்த அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன. ஒருமுறை முறைப்படி அளிக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் ராஜினாமா கடிதம் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிறகு, அதை மீண்டும் திரும்பப் பெற சட்டசபை விதிகளில் எந்தவொரு இடமும் இல்லை என்று சட்டப் பேரவை செயலகம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் இசக்கி சுப்பையா தாக்கல் செய்த கூடுதல் மனுவை ஏற்றுக்கொள்ள தலைமை நீதிபதி அமர்வு முழுமையாக மறுத்துவிட்டது. வழக்கு ஏற்கனவே இறுதி வாதங்களை எட்டிவிட்டதால் புதிய மனுக்களைச் சேர்க்க முடியாது என நீதிபதிகள் மறுத்துவிட்டனர். இந்த விவகாரத்திற்கு இடைத்தேர்தல் மட்டுமே ஒரே தீர்வு என்றும், ராஜினாமாவை வாபஸ் பெற முடியாது என்றும் சபாநாயகர் மற்றும் நீதிமன்றத் தரப்பில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.சுருக்கமாகக் கூறின், சட்டப் போராட்டங்களால் தவெக-வில் இணைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இடைத்தேர்தல் தள்ளிப்போவது அரசியல் ரீதியாகத் பின்னடைவாகக் கருதப்படுவதால், அந்த முட்டுக்கட்டையை உடைக்க இசக்கி சுப்பையா சட்டத்தின் வழி "ராஜினாமாவை திரும்பப் பெறும்" அஸ்திரத்தை உயர் நீதிமன்றமும் சட்டசபை செயலகமும் நிராகரித்துள்ளன. இனி தேர்தல் நீதிமன்றம் விரைவில் வழங்கும் தீர்ப்பு முடிவு செய்யும்,
இராஜினாமாவைத் திரும்பப் பெற இசக்கி சுப்பையா கடிதம்..!
ராஜினாமாவை திரும்பப் பெறும் விதி இல்லை - பேரவைச் செயலாளர் அலுவலகம்..
இடைத்தேர்தல் மட்டுமே தீர்வு - பேரவைச் செயலாளர் அலுவலகம்..
சபாநாயகர் தரப்பிலிருந்து நாளை இசக்கி சுப்பையாவிற்கு பதில் கடிதம்..

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பாண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார்கள் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும்   இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதம்  ஐந்தாம் தேதியில் துவக்கம். ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, சன்னதிகளில் வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்றிரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...