ஏற்கனவே ராஜினாமா செய்து தவெகவில் இணைந்த முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினரான இசக்கி சுப்பையா,
தனது சடடமன்றத் தொகுதி உறுப்பினர் பதவியை ராஜினாமாவைத் திரும்பப் பெறக் கோரி தமிழ்நாடு சட்டமன்றப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகரிடம் கடிதம் மனுவாக அளித்துள்ளார். அம்பாசமுத்திரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர்,26,மே 2026 ஆம் தேதியிட்ட தனது ராஜினாமா கடிதத்தைத் திரும்பப் பெறுவதாகத் தெரிவித்துள்ளார் இடைத்தேர்தல் நடத்துவதில் ஏற்பட்டுள்ள சட்ட சிக்கல்கள் மற்றும் தாமதம் காரணமாக, தனது தொகுதி மக்கள் நீண்ட நாட்களாக மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல் கடுமையாகப் பாதிக்கப்படுவதால், பொது நலன் கருதி இந்த முடிவை எடுத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்திலும் அவர் கூடுதல் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். சட்டமன்றப்பேரவைச் செயலக வட்டாரங்களின்படி, ஒருமுறை ராஜினாமா கடிதம் ஏற்கப்பட்டு, தொகுதி காலி என அறிவிக்கப்பட்ட பிறகு அதைத் திரும்பப் பெற சட்டத்தில் எந்த ஒரு விதிமுறையும் இல்லை என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது : இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அமர்வு, இசக்கி சுப்பையாவின் கூடுதல் மனுவை நீதிமன்ற ஆவணங்களில் சேர்க்கவும், அவரது கோரிக்கையை ஏற்றுக்கொள்ளவும் அதிரடியாக மறுத்துவிட்டது. வாய்மொழி வாதங்கள் தொடங்கப்பட்ட பிறகு புதிய மனுக்களை ஏற்க முடியாது எனக் கூறிய நீதிபதிகள், இந்த விவகாரத்திற்கு இடைத்தேர்தல் மட்டுமே இறுதித் தீர்வு எனக் குறிப்பிட்டு, வழக்கின் தீர்ப்பைத் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்துள்ளனர்.இசக்கி சுப்பையாவின் இந்தத் திடீர் நகர்வு, இடைத்தேர்தலை விரைவுபடுத்த அல்லது அதில் ஏற்படும் சட்டச் சிக்கல்களை எதிர்கொள்ள எடுக்கப்பட்ட ஒரு அரசியல் ராஜதந்திரமாகவே பார்க்கப்படுகிறது. இவர் சில காலம் அதிமுகவில் சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சராக இருந்தவர், ராஜினாமா திரும்பப் பெறக் கோரியதற்கான காரணம் நீதிமன்ற வாதம் தான் ராஜினாமா செய்த பிறகு அம்பாசமுத்திரம் தொகுதி மக்கள் நீண்ட நாட்களாக மக்கள் பிரதிநிதி இல்லாமல் தவிப்பதாகவும், தொகுதிப் பணிகள் முடங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதிமுக தொடர்ந்த வழக்கினால் இடைத்தேர்தல் நடத்துவதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வருகிறது. இதனால், இந்த வழக்கு முடியும் வரை தன்னை மீண்டும் எம்.எல்.ஏ.வாக பணியாற்ற அனுமதிக்க வேண்டும் என அவர் கோரியுள்ளார். இசக்கி சுப்பையா உள்ளிட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்தபோது, அதிமுக தரப்பில் அவர்களை "கட்சித் தாவல் தடைச் சட்டத்தின்" கீழ் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என சபாநாயகரிடம் வலியுறுத்தப்பட்டது. சபாநாயகர் தகுதிநீக்க நடவடிக்கை எடுப்பதற்கு முன்பாகவே இவர்களின் ராஜினாமாவை ஏற்றுக் கொண்டார். இதை எதிர்த்து அதிமுக நீதிமன்றம் சென்றது. தகுதிநீக்க வழக்கு நீதிமன்றத்தில் இழுபறியாக நீண்ட காலம் நீடிப்பதால், தேர்தல் ஆணையத்தால் இடைத்தேர்தலை உடனடியாக அறிவிக்க முடியாத சூழல் நிலவுகிறது. எனவே, "நான் ராஜினாமாவை வாபஸ் பெறத் தயார், ஆனால் சட்டம் அனுமதிக்கவில்லை" என்ற நிலையை உருவாக்குவதன் மூலம் இடைத்தேர்தலை நோக்கிய நகர்வை விரைவுபடுத்தவோ அல்லது மக்கள் மத்தியில் தங்களுக்குச் சாதகமான அலையை உருவாக்கவோ இந்த முயற்சியை மேற்கொண்டதாக அரசியல் அறிந்த அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன. ஒருமுறை முறைப்படி அளிக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் ராஜினாமா கடிதம் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிறகு, அதை மீண்டும் திரும்பப் பெற சட்டசபை விதிகளில் எந்தவொரு இடமும் இல்லை என்று சட்டப் பேரவை செயலகம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் இசக்கி சுப்பையா தாக்கல் செய்த கூடுதல் மனுவை ஏற்றுக்கொள்ள தலைமை நீதிபதி அமர்வு முழுமையாக மறுத்துவிட்டது. வழக்கு ஏற்கனவே இறுதி வாதங்களை எட்டிவிட்டதால் புதிய மனுக்களைச் சேர்க்க முடியாது என நீதிபதிகள் மறுத்துவிட்டனர். இந்த விவகாரத்திற்கு இடைத்தேர்தல் மட்டுமே ஒரே தீர்வு என்றும், ராஜினாமாவை வாபஸ் பெற முடியாது என்றும் சபாநாயகர் மற்றும் நீதிமன்றத் தரப்பில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.சுருக்கமாகக் கூறின், சட்டப் போராட்டங்களால் தவெக-வில் இணைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இடைத்தேர்தல் தள்ளிப்போவது அரசியல் ரீதியாகத் பின்னடைவாகக் கருதப்படுவதால், அந்த முட்டுக்கட்டையை உடைக்க இசக்கி சுப்பையா சட்டத்தின் வழி "ராஜினாமாவை திரும்பப் பெறும்" அஸ்திரத்தை உயர் நீதிமன்றமும் சட்டசபை செயலகமும் நிராகரித்துள்ளன. இனி தேர்தல் நீதிமன்றம் விரைவில் வழங்கும் தீர்ப்பு முடிவு செய்யும்,இராஜினாமாவைத் திரும்பப் பெற இசக்கி சுப்பையா கடிதம்..!
ராஜினாமாவை திரும்பப் பெறும் விதி இல்லை - பேரவைச் செயலாளர் அலுவலகம்..
இடைத்தேர்தல் மட்டுமே தீர்வு - பேரவைச் செயலாளர் அலுவலகம்..
சபாநாயகர் தரப்பிலிருந்து நாளை இசக்கி சுப்பையாவிற்கு பதில் கடிதம்..



கருத்துகள்