தமிழ்நாடு தொழில் எளிதாக்கல் (திருத்த) மசோதாவை சட்டமன்றத்தில் இன்று அறிமுகப்படுத்தி நிறைவேற்றினார் அமைச்சர் கீர்த்தனா,
தமிழ்நாடு தொழில் எளிதாக்கல் (திருத்த) மசோதாவை தமிழக சட்டமன்றத்தில் தொழில்துறை அமைச்சர் இன்று 2 செப்டம்பர் 2026 ஆம் தேதி முறைப்படி அறிமுகப்படுத்திய நிலையில் அவையில் நிறைவேறியது, மாநிலத்தில் புதிய தொழில்களைத் தொடங்குவதற்கும், அவற்றுக்கான உரிமங்களைப் பெறுவதற்கும் நிலவும் காலதாமதத்தைக் குறைத்து, "தொழில் செய்வதை எளிதாக்கும்" நடைமுறைகளை மேலும் வலுப்படுத்துவதே இந்த திருத்த மசோதாவின் முக்கிய நோக்கம்
ஏற்கனவே தமிழ்நாட்டில் புதிய நிறுவனங்கள் மற்றும் தொழில்கள் தொடங்குவதற்கான அனுமதிகள் 21 நாட்களுக்குள் வழங்கப்பட்டு வரும் நிலையில், இந்த புதிய சட்டத்திருத்தம் ஆன்லைன் மற்றும் ஒற்றைச் சாளர முறையை மேலும் மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக பட்டாசு ஆலைகள் உள்ளிட்ட தொழிற்சாலைகளுக்கு உரிமம், மற்றும் மீண்டும் புதுப்பித்தல் அனுமதிகள் பெற நீண்ட காலம் எடுத்துக் கொள்வதால் ஏற்படும் விதிமீறல்களைத் தடுக்கவும், மொபைல் செயலி மற்றும் ஆன்லைன் மூலமாக உரிமங்களை எளிதாகப் பெறவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த சட்டமன்றக் கூட்டத்தொடரில், முந்தைய ஆட்சிக்காலங்களில் உரிமங்கள் வழங்கப்பட்டதில் நிலவிய முறைகேடுகள் மற்றும் லஞ்சப் புகார்கள் குறித்து அமைச்சர் கீர்த்தனா பேசியது அவையில் எதிர்க்கட்சியினரின் கடுமையான எதிர்ப்பையும் விவாதத்தையும் கிளப்பியது,. இந்த நிலையில்
தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் ச. கீர்த்தனா இந்த திருத்த மசோதாவைச் சட்டப்பேரவையில் தாக்கல் செய்து நிறைவேறியது, தொழில் நிறுவனங்கள் தொடங்க அனுமதி பெறுவதையும் உரிமம் வழங்கும் நடைமுறைகளையும் மேலும் எளிதாக்குவது இதன் நோக்கமாகும். மாநிலத்தில் முதலீடுகளை ஈர்ப்பதற்கும், நிர்வாகச் செயல்பாடுகளை விரைவுபடுத்துவதற்கும் இந்த மசோதா உதவியாக இருக்கும்.தி.மு.க., ஆட்சி குறித்து, அமைச்சர் கீர்த்தனா பேசியதற்கு, தி.மு.க., சட்டமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்புத் தெரிவித்ததை தொடர்ந்து, அவர் பேசியது சபை குறிப்பிலிருந்து நீக்கப்பட்டது. சட்டசபையில், அமைச்சர் பட்டாசு தொழிற்சாலை தொடங்க அனுமதி பெற மூன்று ஆண்டுகள், புதுப்பித்தலுக்கு ஓராண்டு ஆகிறது. இதனால், பல தொழிற்சாலைகள் விதிகளை மீறி செயல்படுகின்றன. இது போன்ற விதிமீறல்களால், 89 சதவீத விபத்துக்கள் நடக்கின்றன. ஆனாலும், சிவகாசியில் ஒரு தீயணைப்பு நிலையம் மட்டுமே உள்ளது. தற்போது இரண்டாவது தீயணைப்பு நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அத்துடன், 2000 ஆம் ஆண்டில், 100 படுக்கையுடன் கூடிய மருத்துவமனை அமைக்கப்படும் என்ற அறிவிப்பு, இன்னும் அறிவிப்பாகவே உள்ளது. பட்டாசு தொழிற்சாலைகளுக்கான அனுமதியை எளிதாக்கும் வகையில், 'ஆன்லைன்' முறையில் உரிமம் பெற, மொபைல் செயலி உருவாக்கப்பட்டு வருகிறது. அதேபோல, அதிக கெமிக்கல் சேர்த்து, பட்டாசு தயாரிப்பதை கண்காணிக்க, பரிசோதனை மையம் உருவாக்கப்படும். அப்பகுதி மக்களுக்காக தோல் வங்கி ஏற்படுத்தப்படும். இவ்வாறு அவர் பேசினார். அத்துடன், தி.மு.க., ஆட்சியில் என்ன நடந்தது என அவர் கூற, அதற்கு தி.மு.க., வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து, அமளியில் ஈடுபட்டனர். மேலும், அமைச்சர் கீர்த்தனா குறிப்பிட்டதை போல, த.வெ.க., ஆட்சியிலும் நடந்துள்ளதாக, தி.மு.க., முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு குறிப்பிட்டார். இருவரின் பேச்சும், சபை குறிப்பில் இருந்து நீக்கப்படுவதாக, சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் அறிவித்தார்தமிழ்நாடு வணிக எளிதாக்குதல் (திருத்த) மசோதா, 2026 (Tamil Nadu Business Facilitation (Amendment) Bill), தொழில்கள் மற்றும் முதலீடுகளுக்கான பல்வேறு அரசு அனுமதிகளை (Clearances) வழங்குவதற்கான கால வரம்பு அதிகபட்சமாக 21 நாட்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாநில சட்டங்களின் கீழ் கால வரம்பு குறிப்பிடப்படாத அல்லது 21 நாட்களுக்கு மேல் உள்ள அனுமதிகள் அனைத்தும் இனி 21 நாட்களுக்குள் வழங்கப்பட வேண்டும் (பொது மற்றும் உள்ளூர் விடுமுறை நாட்கள் இதில் கணக்கிடப்படாது). தமிழ்நாட்டில் அதிக மதிப்புள்ள மற்றும் மூலோபாய முதலீடுகளை (Strategic Investments) ஒருங்கிணைத்து கண்காணிக்க "தமிழ்நாடு முதலீட்டு ஊக்குவிப்பு ஆணையம்" (Tamil Nadu Investment Promotion Commission) அமைக்கப்படும். இந்த புதிய உயர் மட்ட ஆணையத்தின் தலைவராக மாநில தலைமைச் செயலாளர் (Chief Secretary) செயல்படுவார். தொழில் துறைச் செயலாளர் இதன் உறுப்பினர்-செயலராக இருப்பார். ரூபாய் 200 கோடி அல்லது அதற்கு மேற்பட்ட மூலதன முதலீடுகள், 5,000 அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் திட்டங்கள், மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்களின் முதலீடுகளை இந்த ஆணையம் நேரடியாகக் கண்காணிக்கும். சிப்காட் (SIPCOT), டிட்கோ (TIDCO), சிட்கோ (SIDCO) போன்ற அரசு முகமைகளால் தொழில்களுக்காக ஒதுக்கப்பட்டு, இன்னும் மேம்படுத்தப்படாமல் உள்ள நிலங்களின் பயன்பாடு குறித்து இந்த ஆணையம் ஆய்வு செய்யும். இந்த ஆணையம் பிறப்பிக்கும் உத்தரவுகள் மற்றும் வழிகாட்டுதல்கள் அனைத்தும் மாநிலத்தின் ஒற்றைச்சாளர குழுக்கள் (Single-window committees) மற்றும் துறை சார்ந்த நோடல் முகமைகளைக் கட்டுப்படுத்தும்..







கருத்துகள்