முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மற்றும் அவரது சகோதரர் தொடர்பான இடங்களில் நடந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் பறிமுதல்
நகராட்சி நிர்வாகத் துறையின் டெண்டர் முறைகேடு காரணமாக திமுக முன்னாள் அமைச்சர் கே.என். நேரு சம்பந்தப்பட்ட இடங்கள் உள்ளிட்ட 30 இடங்களில் DVAC சோதனை !
முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவுக்கு தொடர்புள்ள 19 இடங்களும் அதில் அடக்கம், ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையினரின் அதிரடி சோதனையானது “ரூபாய் .1000 கோடி வேலைவாய்ப்பு முறைகேடு” சம்பந்தப்படடது,
“நகராட்சி நிர்வாகத் துறையில் 2,538 பேர் பணியமர்த்தலில் திமுக கட்சி நிதி வசூல் என்ற பெயரில் சட்டவிரோதமாகப் பணப்பரிமாற்றமானது திமுக முதன்மைச் செயலாளரும், எதிர்க்கட்சி துணைத் தலைவருமான கே.என்.நேரு அவரது சகோதரர் ரவிச்சந்திரன் தொடர்பான 19 இடங்களில் ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை (DVAC) திருச்சிராப்பள்ளி தில்லைநகர் இல்லத்தில் 10-க்கும் மேற்பட்ட விஜிலன்ஸ் அதிகாரிகள் சோதனை நடத்தினர்
இன்று 05.09.2026 காலை முதல் அதிரடி சோதனை நடத்தினர். நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் நடந்ததாகக் கூறப்படும் ரூபாய் .1000 கோடி மதிப்பிலான வேலைவாய்ப்பு முறைகேடு மற்றும் டெண்டர் ஒப்பந்தங்களில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பான புகார்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கே.என்.நேரு தொடர்புடைய அலுவலகங்கள். சென்னை: மயிலாப்பூர், அடையாறு, திருவான்மியூர், அண்ணாநகர், ஆர்.ஏ.புரம், ஆழ்வார்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நேரு மற்றும் அவரது சகோதரரின் இல்லங்கள் மற்றும் அலுவலகங்கள்.
கோயமுத்தூர் முறைகேட்டில் தொடர்புடையதாகக் கூறப்படும் உயர் அதிகாரிகளின் இல்லங்கள் மற்றும் அலுவலகங்கள் உள்ளிட்ட
மொத்தம் 19 இடங்களில் இந்த சோதனை நடைபெற்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கே.என்.நேரு, முந்தைய திமுக ஆட்சியில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் அமைச்சராகப் பதவி வகித்த காலத்தில்,2,538 பேரை பணியமர்த்துவதில் முறைகேடு நடந்ததாகவும், மேலும், திமுக அரசியல் கட்சி நிதி (பார்ட்டி ஃபண்ட்) வசூல் என்ற பெயரில், பல்வேறு நிறுவனங்களை மிரட்டி சட்டவிரோத முறையில் பணப்பரிமாற்றங்களில் ஈடுபட்டதாகவும் எழுந்துள்ள இந்தக் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில்,ஊழல் நடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை ஏற்கனவே ஊழல் தடுப்புச் சட்டம், 1988-ன் பிரிவு 7(c) மற்றும் பாரதிய நியாய சன்ஹிதா (BNS) தொடர்பான பிரிவுகளின் கீழ் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்து விசாரணையும் நடத்தி வருகிறது.
அதில் இன்று காலை 7 மணியளவில், நான்கு வாகனங்களில் வந்த ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள், திருச்சிராப்பள்ளி தில்லைநகரில் உள்ள கே.என்.நேருவின் இல்லத்திற்கு வந்த போது கே. என்.நேரு லால்குடியில் இருந்ததால், அதிகாரிகள் அவர் வரும் வரை காத்திருந்து, பின்னர் சோதனையைத் தொடங்கினர். இந்த சோதனை தொடர்பான தகவல் பரவியதும், திமுகவின் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்ட திமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் கே. என்.நேருவின் இல்லத்தின் முன்பாக குவிந்தனர். இதனால் அப்பகுதியில் பலத்த காவல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கே.என்.நேரு மற்றும் அவரது சகோதரர் தொடர்பான இடங்களில் ஏற்கனவே வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறை (ED) அதிகாரிகள் டெண்டர் முறைகேடுகள் தொடர்பாக சோதனை நடத்தியிருந்தனர். அதனைத் தொடர்ந்து, தற்போது ஊழல் தடுப்புக் கண்காணிபபு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையம் இந்த சோதனையை மேற்கொண்டது. சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில், எதிர்க்கட்சி துணைத் தலைவர் கே.என்.நேரு தொடர்புடைய இடங்களில் நடக்கும் இந்த சோதனை, ஊழலுக்கு உரியது தமிழக அரசியலில் பேசும் நிலை ஏற்படுத்தியுள்ளது.
நகராட்சி நிர்வாகத்துறை போன்ற முக்கிய துறையில் 2,538 பேரின் பணியமர்த்தலில் முறைகேடு நடந்ததாக எழுந்துள்ள புகார் மிகவும் தீவிரமானது. இது பொதுப்பணித் தேர்வுகளை புறக்கணித்து, அரசியல் செல்வாக்கின் பேரில் பணி நியமனம் நடந்திருக்கலாம் என்ற சந்தேகத்தை எழுப்புகிறது. DVAC-யின் இந்த சோதனை, அந்த முறைகேடுகளின் உண்மைத் தன்மையை வெளிக்கொணரும். அரசியல் கட்சி நிதி வசூல் என்ற பெயரில் நிறுவனங்களை மிரட்டி பணம் வாங்கியதாக எழுந்துள்ள புகார், அரசியல் கட்சிகளின் நிதி திரட்டும் முறைகள் குறித்த கேள்வியை எழுப்புகிறது. இது சட்டவிரோத பணப்பரிமாற்றமாக இருந்தால், அது மிகக் கடுமையான PMLA சட்டப்படி குற்றமாகும். கே.என்.நேரு, தற்போது எதிர்க்கட்சி துணைத் தலைவராக உள்ளார். சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், அவர் மீதான இந்த சோதனை அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தது. இது ஆளுங்கட்சியின் ஊழல் ஒழிப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக பார்க்கப்படுகிறது. நேருவின் இல்லத்தின் முன் திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் குவிந்தனர். இது, கட்சி தலைவர்கள் மீதான அவர்களின் ஆதரவையும், அதே நேரத்தில் சட்டத்தின் மீதான அவர்களின் பார்வையையும் காட்டுகிறது. சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை உணர வேண்டும். இந்த சோதனை, கடந்த கால ஊழல் புகார்கள் மீது தற்போதைய அரசு எவ்வளவு தீவிரமாக செயல்படுகிறது என்பதைக் காட்டுகிறது. இதன் மூலம், எதிர்காலத்தில் இதே போன்ற முறைகேடுகள் நிகழாமல் தடுக்கப்படும். ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும்
லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள், சோதனையின் போது கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மற்றும் டிஜிட்டல் சாதனங்களை ஆய்வு செய்து, மேலதிக விசாரணையை தொடர்வார்கள். தேவைப்பட்டால், கே.என்.நேரு மற்றும் அவரது சகோதரர் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தப்படும். இந்த வழக்கில் புதிய ஆதாரங்கள் கிடைத்தால், குற்றப்பிரிவுகள் சேர்க்கப்படலாம் அல்லது புதிய நபர்கள் கைது செய்யப்படலாம். இந்த விசாரணை
முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடு, அலுவலகத்திலும் சோதனை நடைபெற்ற நிலையில் DVAC தனது அதிகாரப்பூர்வ செய்தி அறிவிப்பை வெளியிட்டுள்ளது
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் நடைபெற்ற பல்வேறு டெண்டர்களில் முறைகேடுகள் நடந்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில், லஞ்ச ஒழிப்புத்துறை (DVAC) வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.
DVAC தலைமையக குற்ற எண் 7/2026-ல், IPC-யின் 120B, 406, 409, 420 ஆகிய பிரிவுகள், BNS, 2023-ன் தொடர்புடைய பிரிவுகள் மற்றும் ஊழல் தடுப்புச் சட்டம், 1988-ன் 7, 7A, 8, 9, 12, 13(2) r/w 13(1)(a) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
30 இடங்களில் சோதனை விசாரணையின் ஒரு பகுதியாக, 05.09.2026 அன்று சென்னை, கோயம்புத்தூர், திருச்சிராப்பள்ளி, ஈரோடு மற்றும் திருப்பூர் ஆகிய இடங்களில் மொத்தம் 30 இடங்களில் DVAC அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இந்த சோதனைகளின்போது, டெண்டர்களில் நடைபெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பான 241 முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலும், முறைகேடுகள் தொடர்பாக மின்னணு ஆதாரங்களும் (Electronic Evidence) கைப்பற்றப்பட்டுள்ளதாக DVAC தெரிவித்துள்ளது.
விசாரணை தொடர்ந்து நடைபெறுகிறது கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மற்றும் மின்னணு ஆதாரங்களின் அடிப்படையில் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. வழக்கு தற்போது விசாரணை நிலையில் இருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறை வெளியிட்டுள்ள தகவல் தெரிவித்துள்ளது.



கருத்துகள்