முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

திமுகவின் ஊழலை சட்டப்பேரவை பதிலுரையில் ஆதாரங்களுடன் உரை வீச்சாக்கிய முதல்வர்

”பேசிப் பழகிய பொய்.. வாங்கிப் பழகிய கை.. போட்டுப் பழகிய பை.. இது தான் திமுக”... கவியரசர் கண்ணதாசனின் வரியை சுட்டிக்காட்டி தி.மு.க.வை சட்டமன்றப் பேரவையில் வெளுத்து வாங்கிய முதல்வர் சி. ஜோசப் விஜய் 




தான் பேசிய ஒருமணிநரம் அதாவது 60 நிமிடங்களில் 60 வருஷ கட்சி திமுகவின் லஞ்சம் லாவண்யம் ஊழல் முறைகேடு மற்றும் திருட்டுத் தனங்களை கண்கள் சிவக்க கோபத்துடன், ஆக்ரோஷமாகவே பட்டியலிட்ட முதல்வர் சர்க்காரியா கமிஷன் ஊழல் முதல் ஆம்ஸ்டராங்க் படுகொலை வழக்கு வரை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் இன்று 7 செப்டம்பர் 2026ஆம் தேதி காவல் துறை மற்றும் தீயணைப்புத் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்திற்கு  பதிலுரை வழங்கியுள்ளார். சட்டசபையில் எதிர்க்கட்சிகள் எழுப்பிய பல்வேறு புகார்கள், சட்டம்-ஒழுங்கு பிரச்சனைகள் மற்றும் விமர்சனங்களுக்குப் பதிலளிக்கும் வகையில் முதலமைச்சரின் இந்த உரை சிறப்பாகவே அமைந்திருந்தது.  அதில் கடந்த செப்டம்பர் 3-ஆம் தேதி காவல் துறை மற்றும் தீயணைப்புத் துறை மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெற்றதில் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்.உதயநிதி, முன்னாள் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி மற்றும் பல்வேறு கட்சித் தலைவர்கள் பங்கேற்றுப் பேசினர். 







3 நாட்கள் அரசு விடுமுறைக்குப் பிறகு இன்று கூடிய சட்டமன்றக் கூட்டத்தொடரில், எதிர்க்கட்சிகளின் அனைத்துக் கேள்விகளுக்கும் முதல்வர் விஜய் ஆவேசமாகவும் நேரடியாகவும் தனது பதிலுரையை வழங்கினார். திமுகவினரைப் பார்த்து அவர் காரசாரமாகப் பேசிய தருணங்கள் தற்பொழுது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளன, சமூக ஊடகங்களில் வைரலாகும் பேச்சு இந்த பதிலுரையின் போது முதல்வர்  அவையில் தனது தரப்பு நியாயங்களையும் அரசின் செயல்பாடுகளையும் மிகத் தீவிரமாக முன்வைத்தார். முன்னாள் ஆளுங்கட்சியான திமுக மற்றும் அதன் தலைவர்களை நோக்கி முதல்வர் சி. ஜோசப் விஜய் ஆவேசமான மற்றும் நேரடியான அரசியல் தாக்குதல்களைத் தொடுத்தார்.  1970-களின் சர்க்காரியா கமிஷன் அறிக்கை, வீராணம் ஏரி திட்ட 'ஊழல்' மற்றும் திமுகவினரின் ஊழல் நிதி வசூல் விவகாரங்களைக் குறிப்பிட்டு திமுகவை மிகக் கடுமையாகச் சாடினார். Dishonest Intention திமுகவின் செயல்பாடுகளை விமர்சித்த விஜய், "அவர்களது சாதனையே இந்த 'நேர்மையற்ற எண்ணம்' தான்" எனக் குறிப்பிட்டுப் பேசினார்.


ஸ். உதயநிதிக்குப் பதில்: பேரவையில் காரசாரமான விவாதங்களின் போது ஸ்.உதயநிதியை நோக்கி, "தினசரி செய்தித்தாள்களைப் படித்திருந்தால் இது உங்களுக்குத் தெரிந்திருக்கும்" என்று முதல்வர் கொடுத்த நக்கல் கலந்த பதிலடி சமூக ஊடகங்களில் வைரலாகிறது. சட்டம்-ஒழுங்கு மற்றும் நிர்வாக உறுதிமொழி சட்டத்தின் முன் அனைவரும் சமம்: மாநிலத்தில் குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும், எவ்வளவு பெரிய பொறுப்பில் இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை பாயும் என எச்சரித்தார், ஒரு மாநிலத்தின் அமைதியான சூழலில்தான் ஒட்டுமொத்த முன்னேற்றமும் அடங்கியுள்ளது என்பதை வலியுறுத்தினார். மக்களின் வரிப்பணம் மக்களின் நலனுக்காக மட்டுமே பயன்படுத்தப்படும் என்றும், தனது நிர்வாகத்தில் எந்தவித ஊழலும் சகித்துக் கொள்ளப்படாது என்றும் உறுதியளித்தார். முதலமைச்சர்  தனது தயாரித்து வைக்கப்பட்ட உரையைத் தாண்டி,

திமுகவின் வாரிசு அரசியல் மற்றும் கடந்த கால முறைகேடுகளைப் பட்டியல் போட்டுப் பேசியதால் அவையில் பெரும் கூச்சல் குழப்பம் நிலவியது. இதனால் ஆத்திரமடைந்த திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் பேரவைத் தலைவரை முற்றுகையிட்டு முழக்கங்களை எழுப்பியதோடு தர்ணாவிலும் ஈடுபட்டனர். ஆனால் தனது கடமையை சரியாக உரையில் நிறைவு செய்தார் முதல்வர்,கடந்த காலத் திமுக ஆட்சியில் நடந்த ஊழல் மீதான சர்க்காரியா கமிஷன் விசாரணை அறிக்கையில் கணட விபரம் :-

50 ஆண்டுகளுக்குப் பிறகு, சர்க்காரியா கமிஷன் ஊழல் இன்று மீண்டும் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையையும், அதை நேரலையில் பார்த்த மக்களையும் உண்மையில் உலுக்கியது.

கடந்த காலத் திமுக செய்த ஊழல் தொடர்பான சர்க்காரியா கமிஷன்,.



 1970களில  காலஞ்சென்ற கலைஞர் மு. கருணாநிதியின் திமுக ஆட்சியின் போது ஊழல் முறைகேடுகள் நடந்தன. அதற்கு எதிராக அந்த ஊழலை விசாரிக்குமாறு வேண்டி மத்திய அரசிடம் காலஞ்சென்ற எம்ஜிஆர் 04 நவம்பர் 1972 ஆம் தேதியில் ஒரு மனுக் கொடுத்தார்! அதையொட்டி இந்தியக்கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் காலஞ்சென்ற எம். கல்யாணசுந்தரம்  6 -நவம்பர் 1972 ஆம் தேதியில் கொடுத்த மனு மற்றும் 


20 -டிசம்பர் -1972  ஆம் தேதியில்  கொடுத்த மனுக்கள் பிறகு நாஞ்சில் கி.மனோகரன்  வேலூர் ஜி.விஸ்வநாதன் ஆகியோர்  01 -டிசம்பர் - 1975 ஆம் தேதியில் கொடுத்த மனுக்களில் கலைஞர் மு. கருணாநிதி உள்ளிட்ட அவரது அமைச்சரவை அமைச்சர்களான இரா நெடுஞ்செழியன்,  ப உ.சண்முகம், அன்பில் தர்மலிங்கம் செ.மாதவன்,  சாதிக்பாட்ஷா, ஓ பி ராமன்,  சி பா ஆதித்தனார், ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டு இந்த மனுக்கள் வழங்கப்பட்டது!  இந்த வழக்கை ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி சர்க்காரியா அவர்கள் தலைமையில் பிரதமர் இந்திரா காந்தி அரசு ஒரு குழு அமைத்து 3 -பிப்ரவரி -1976 ஆம் தேதியில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்ப்பட்டதன் அறிக்கை தான் இங்கு கொடுக்கப்பட்டிருக்கிறது! இதன் மீதான விசாரணை சென்னையிலும் உதகமண்டலத்லிலும் நடைபெற்றது! ஏறத்தாழ 86 நாட்கள் இந்த வழக்கை சர்க்காரியா அவர்கள் தலைமையில் உள்ள கமிஷன் புலன் விசாரணை செய்தார். இந்தக் குற்றச்சாட்டுத் தொடர்பாக பல்வேறு தரப்பினரிடம்  விசாரணைகள்  செய்து இந்த அறிக்கையை அரசாங்கத்திடம் சமர்ப்பித்தார்! 




அன்றைய இந்த விசாரணையில் மூத்த வழக்கறிஞர்கள் சாந்தி பூஷன், கோவிந்த சுவாமிநாதன், ஆர் டி பந்த்ரே, டாக்டர் ஒ எஸ் சிட்டேல், எஃப் எஸ் நாரிமன்,  ஜி.ராமசாமி  செல்வம், போன்றோர் குற்றம் சாட்டப்பட்ட பிரதிவாதிகள் அதாவது எதிராளிகள் சார்பில் ஆஜரானார்கள். மனுதாரர்கள் சார்பாக சென்னை என.சி.ராகவாச்சாரி கே டி பால்பாண்டியன் வி பி ராமன் என் டி.வானமாமலை போன்ற மூத்த வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டிய வாதிகளான மனுதாரர்கள் சார்பில் ஆஜரானார்கள். விசாரணைக் கமிஷன் சார்பில் வழக்கறிஞராக எம் எல் நந்தா ஜி லட்சுமண ரெட்டி போன்ற மூத்த வழக்கறிஞர்கள் ஆஜரானார்கள். 1976 ஆம் ஆண்டு கலைஞர் மு. கருணாநிதி தலைமையிலான அன்றைய தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு எதிரான ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோக குற்றச்சாட்டுகளை விசாரிக்க மத்திய அரசால் நியமிக்கப்பட்ட ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க ஒருநபர் விசாரணைக் குழு 1971 ஆம் ஆண்டு முதல் 1976 ஆம் ஆண்டு வரை வரலாற்றை உற்று நோக்கினால் 1976 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அவசரகால நிலை எனும் மிசா காலத்தில் 356 வது பிரிவின் கீழ் திமுக முதல்வர் மு கருணாநிதியின் முதலமைச்சர் பதவி நீக்கம் செய்யப்பட்ட பிறகு அமைக்கப்பட்டது. நீதிபதி எஸ். சர்க்காரியா தலைமையிலான உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி, பிற்காலத்தில் (1983 ஆம் ஆண்டு மத்திய-மாநில உறவுகள் ஆணையத்தில் இருந்து வேறுபட்டவர்), குழு பல ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரித்தது. கமிஷன் அறிக்கை, கலைஞர் மு. கருணாநிதி மற்றும் அவரது அமைச்சரவைச் சகாக்கள் சிலருக்கு எதிராக பல ஊழல் குற்றச்சாட்டுகள் மற்றும் உத்தியோகப்பூர்வ பதவியைத் தவறாகப் பயன்படுத்தியதாகக் கண்டறிந்தது, இது நம்பகமானதாகக் கருதப்பட்ட ஆதாரங்களை மேற்கோள் காட்டிய நிலையில், தான் தற்போது தமிழ்நாடு முதல்வர் தவெக தலைவர் சி. ஜோசப் விஜய் குற்றம் சுமத்தி சட்டமன்றப் பேரவையில் ஆதாரங்களுடன் சிறப்பாகவே பேசினார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பாண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார்கள் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும்   இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதம்  ஐந்தாம் தேதியில் துவக்கம். ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, சன்னதிகளில் வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்றிரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...