முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அமைச்சர் CTR நிர்மல் குமார் குறித்து எம்பி ஆ. ராஜா செய்த அவதூறுக்கு எதிர்ப்பு மற்றும் மிசா குறித்த உணமை கூறும் அறிக்கை நிலையும்

தமிழ்நாடு சட்டப்பேரவையில் மிசா சட்டத்தின் கீழ் திமுக தலைவர் ஸ்டாலின் கைது செய்யபடவில்லை என்பது குறித்து அமைச்சர் CTR நிர்மல்குமார் பேசியதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, செப்டம்பர் 12-ஆம் தேதி பல்வேறு வருவாய் மாவட்டங்களில் திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.



சென்னை சைதாப்பேட்டையில் நடைபெற்ற போராட்டத்தில் திமுக நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, முன்னாள் மாநில அமைச்சர் ம.சுப்பிரமணியன், நாடாளுமன்ற மக்ஙளவை உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அப்போது ஆ.ராசா பேசிய கருத்துகள் அரசியல் கட்சிகள் மற்றும் சமுதாய அமைப்புகள் மத்தியில் கடுமையான சர்ச்சையை உறுவாக்கியதுடன், மாற்றுக் கட்சியினர் மற்றும் அவர்கள் தனிப்பட்ட குடும்பத்தினரைத் தரக்குறைவாக சாடியதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், மற்றும் திமுக நாடாளுமன்ற கட்சித்தலைவர் கனிமொழி கருணாநிதி உள்ளிட்டவர்கள் மற்றும் தோழமைக்கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்,


அதற்கு 
ஆ.ராசா சர்ச்சை பேச்சுக்கு விளக்கமளித்து அவரது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “தியாகத்தில் விளைந்த ஒரு தலைவனின் ‘அடையாளத்தை’ - உண்மை’யை வேண்டுமென்றே திட்டமிட்டு உள்நோக்கத்தோடு மீண்டும் மீண்டும் ‘பொய்’ என்று கொச்சைப்படுத்தி ‘ஏளனம்’ செய்ததால் ஏற்பட்ட ‘வலியை’ உணர்த்த ஏளனம் செய்தவரின் ‘அடையாளத்தை’ ‘உண்மையை’ உணர்ச்சி உந்துதலில் கேள்விக்குள்ளாக்கியதில் எனக்கும் வருத்தம்தான். என் வார்த்தைகளைத் திரும்பப் பெறுவதில் எனக்குத் தயக்கமில்லை. நீங்கள் திருந்தாவிட்டால் திருத்தப்படுவீர்கள்” என்று வருத்தத்தை வருத்தமில்லாது தெரிவித்துள்ளார்,  






இந்தச் சர்ச்சை தீவிரமடைந்த சூழலில், திமுக துணைப் பொதுச்செயலாளரும் தூத்துக்குடி மக்களவை உறுப்பினருமான கனிமொழி தனது எக்ஸ் பக்கத்தில் எந்தவித கூடுதல் விளக்கமுமின்றி பின்வரும் திருக்குறளைப் பதிவிட்டுள்ளார், ஆக அதுவே கடியாது கடிந்து கூறுவது, இங்கு ஒரு உண்மை அறிவநு அவசியம் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி  தலைமையிலான காங்கிரஸ் கட்சி அரசாங்கம் தான் ஷா கமிஷன் அறிக்கை பொதுவெளியில் இருந்தும் சுழற்சியில் இருந்தும் காணாமல் போனதற்கு முதன்மைக் காரணமாகும்.  பின்னணி மற்றும் முழுமையான விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன: அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது,   1975–1977 ஆம் ஆண்டு காலத்தில் இந்தியாவில் அமல்படுத்தப்பட்ட அவசரநிலையான Emergency சட்டம் அத்துமீறல்கள் மற்றும் அதிகார துஷ்பிரயோகங்களை விசாரிக்க, 1977-ஆம் ஆண்டில்  அப்போதைய ஆளும் ஜனதா கட்சியின் பிரதமர் மொரார்ஜி தேசாய் அரசு நீதிபதி ஜே. சி. ஷா தலைமையில் ஒரு விசாரணை ஆணையத்தை அமைத்தது. இந்த ஆணையம் 1978-ஆம் ஆணடில் தனது விரிவான அறிக்கையை மூன்று தொகுதிகளாக அரசிடம் சமர்ப்பித்தது.


ஜனதா கட்சி அரசு பிரதமர் சரண்சிங் தலமையிலான ரசு கவிழ்ந்த பிறகு, 1980-ஆம் ஆணடில் இந்திரா காந்தி மீண்டும் பிரதமராகப் பொறுப்பேற்று ஆட்சிக்கு வந்தவுடன், அவசரநிலை கால அத்துமீறல்களை விவரிக்கும் இந்த ஷா கமிஷன் அறிக்கையின் அனைத்து நகல்களையும் சந்தையிலிருந்தும், அரசு அலுவலகங்கள் மற்றும் நூலகங்களிலிருந்தும் திரும்பப் பெற்று அழிக்குமாறு உத்தரவிட்டார். இதனால் இந்த அறிக்கை இந்தியாவில் பொதுமக்களின் பார்வைக்குக் கிடைக்காமல் முற்றிலும் மறைந்து போனது.






காங்கிரஸ் அரசின் தவறு, இந்தியாவில் அனைத்து நகல்களும் அழிக்கப்பட்டதாகக் கருதப்பட்ட நிலையில், ஜனதா கடசியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. செழியன் தனது சொந்த நூலகத்தில் இந்த அறிக்கையின் மூன்று தொகுதிகளையும் பத்திரமாகப் பாதுகாத்து வைத்திருந்தார். அவர் 2010 ஆம் ஆண்டில், "Shah Commission Report - Lost and Regained" என்ற புத்தக வடிவில் இந்த அறிக்கையை மீண்டும் பதிப்பித்து வெளியிட்டார். மேலும், இந்த அறிக்கையின் மற்றொரு நகல் ஆஸ்திரேலிய தேசிய நூலகமான National Library of Australiya ல் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்ததும் பின்னர் தெரியவந்தது. தற்போது எளிதாக கிடைக்கும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பாண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார்கள் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும்   இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதம்  ஐந்தாம் தேதியில் துவக்கம். ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, சன்னதிகளில் வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்றிரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...