தமிழ்நாடு அரசு சார்பில் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு அஸ்ஸாம் மாநிலத்திலிருந்து 'துர்கா' என்ற 5 வயது பெண் யானை கொண்டுவரப்பட்டு,
சதுர்த்தி தினமான இன்று காலை கோயிலில் ஒப்படைக்கப்பட்டது. 'துர்கா' என்ற 5 வயது (பெண் யானையைக் குறிக்கும் சொல். பிடி, அதவை, வடவை, கரிணி,அத்தினி,) கொண்டுவரப்பட்டு, இன்று காலை கோயிலில் ஒப்படைக்கப்பட்டது. அஸ்ஸாமிலிருந்து தமிழ்நாடு கோவில்களுக்கு 5 வளர்ப்பு யானைகளைக் கொண்டு வருவதற்கான அனுமதியை அஸ்ஸாம் மற்றும் தமிழ்நாடு வனத்துறையினர் வழங்கினர்.
மாநிலங்களுக்கு இடையேயான இந்த யானைகள் இடமாற்றத்திற்குத் தேவையான தடையின்மைச் சான்றிதழ் (NOC) மற்றும் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன தமிழ்நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட அந்த 5 யானைகளான துர்கா 5 வயது பெண் யானை, மதுரை ஸ்ரீ மீனாட்சி அம்மன் கோவிலுக்குக் கொண்டு வரப்படுகிறது. மற்றும் ஹிராலால், சிவா, ரூப்சிங், பிஜூலி, இந்த யானைகள் மதுரை ஸ்ரீ மீனாட்சி அம்மன் கோவில், ஸ்ரீ திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில், காஞ்சிபுரம் சங்கர மடம், மயிலாடுதுறை ஸ்ரீ வைத்தியநாத சுவாமி கோவில் மற்றும் இராமேஸ்வரம் ஸ்ரீ இராமநாதசுவாமி கோவில் ஆகிய ஆலயங்களுக்கு வழங்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டு.
சுமார் 3,000 கிலோமீட்டர் தூரப் பயணம் செய்த யானைகள் அஸ்ஸாம் மானஸ் தேசிய பூங்காவில் அண்மையில் 'பிரமிலா' மற்றும் 'பூர்ணிமா' ஆகிய இரண்டு மூத்த ரோந்து யானைகளுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு, புதிதாக 5 இளம் பயிற்சி பெற்ற யானைகள் (பீர்சிங், பிஜாய், பாபுல், ராஜா மற்றும் மோனாலிசா) வனத்துறைப் பணியில் இணைக்கப்பட்ட நிகழ்வும் நடந்தது. மதுரை ஸ்ரீ மீனாட்சி அம்மன் கோயிலுக்கு அஸ்ஸாம் மாநிலத்திலிருந்து 'துர்கா' என்ற 5 வயது பெண் யானை இன்று காலை (செப்டம்பர் 14, 2026) பத்திரமாகக் கொண்டு வரப்பட்டு ஒப்படைக்கப்பட்டது. விநாயகர் சதுர்த்தி தினமான இன்று இந்த துர்கா எனும் இளம் யானை கோயிலுக்கு புது வரவாக வந்திருப்பது குறிப்பிடத்தக்கது, தமிழ்நாடு அரசு சார்பில் அஸ்ஸாமில் இருந்து மொத்தம் 5 யானைகளில் முதலாவதாக 'துர்கா' மதுரைக்கு வந்து சேர்ந்துள்ளது. மற்ற 4 யானைகளும் திருவண்ணாமலை ஸ்ரீ அருணாசலேஸ்வரர் கோயில், காஞ்சிபுரம் மடம், மயிலாடுதுறை ஸ்ரீ வைத்தீஸ்வரன் கோயில் மற்றும் இராமேஸ்வரம் ஸ்ரீ இராமநாதசுவாமி கோயில் ஆகிய இடங்களுக்கு வழங்கப்பட உள்ளன தமிழ்நாடு வனத்துறையின் உரிய அனுமதியைப் (NOC) பெற்றே இந்த யானை கொண்டுவரப்பட்டுள்ளது, யானையை ஏற்பதற்கு முன்பாக, மதுரை ஸ்ரீ மீனாட்சி அம்மன் கோயில் வளாகத்தில் உள்ள மண் குளியல், நீர்க் குளியல் மற்றும் யானை நடைபயிற்சி மேற்கொள்வதற்கான இடவசதிகள் ஆகியவை குறித்து வனத்துறை அதிகாரிகள் குழு விரிவாக ஆய்வு செய்து உறுதி செய்துள்ளது ஒரு ஆவயத்தில் யானை வந்து சேர இன்று காலத்தில் 9 கோடி வரை தேவை அப்போது தான் அதற்கு தகுந்த வசதிகள் செய்து தர இயலும், மதுரை ஸ்ரீ மீனாட்சி அம்மன் கோயில் யானையான பார்வதிக்கு வயதான நிலயில் அண்மைக் காலமாக கண் பாதிப்பு மற்றும் உடல்நலக் குறைவுகள் ஏற்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது இந்த புதிய இளம் பெண் யானை துர்கா கோயிலுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த திமுக ஆட்சியில் இரண்டு கோவில் யானைகள் கவனக்குறைவு மற்றும் பராமரிப்பு சரியில்லாத நிலையில் காரணமாகவே இறந்து போனது அதனால் அடுத்த தேர்தல் ஆட்சியை இழந்தது ஒரு உண்மை சம்பவம்:
குன்றக்குடி ஸ்ரீ சண்முகநாதர் கோவில் யானை சுப்புலெட்சுமி. 1971-ல் ஆத்தங்குடியை காடப்ப செட்டியார் எனும் பக்தர் ஒருவர் கோவிலுக்கு தானமாக கொடுத்தது. 53 வயது ஆகி, 50 ஆண்டுகளுக்கும் மேலாக பக்தர்களுக்கு ஆசி வழங்கி வந்தது.
12 செப்டம்பர் 2024 அன்று நள்ளிரவு, அது தங்கியிருந்த தகரக் கொட்டகையில் மின்கசிவாலோ அல்ல அங்கிருந்த விளக்காலோ இரவில் பாகன் அருகில் இல்லாமல் கால்கள் கட்டப்பட்டு தப்பிக்க வழியில்லாமல் தீப்பிடித்தது. 30 சதவீதம் தீக்காயத்துடன் துடித்து, 13-ஆம் தேதி அதிகாலை 2 மணிக்கு உயிரிழந்தது. அந்த சோகம் இன்றும் பக்தர்கள் மனதில் நீங்காத நினைவாக இருக்கிறது.
சுப்புலெட்சுமியின் நினைவாக ஒரு யானை வேண்டும்! குன்றக்குடி பக்தர்களின் கண்ணீர் கோரிக்கை
தீயில் கருகி இறந்தது வெறும் யானை அல்ல, குன்றக்குடி முருகன் ஆலயத்தில் மக்கள் நேசித்த குழந்தை!
1971 முதல் 2024 வரை, 53 ஆண்டுகள் குன்றக்குடி ஸ்ரீ சண்முகநாதரின் சன்னதியில் நின்று, லட்சக்கணக்கான பக்தர்களுக்கு தும்பிக்கையால் ஆசி வழங்கியவள் சுப்புலெட்சுமி. தீயில் துடித்து இறந்த போது, குன்றக்குடி பகுதியே அழுதது.
அரசுக்கு ஒரு வேண்டுகோள்:
சுப்புலெட்சுமியின் நினைவாக, அரசு ஒரு யானையை வழங்கி, தமிழ்நாடு வளர்ப்பு யானைகள் பராமரிப்பு விதிகள் 2011-ன் படி, பாதுகாப்பான, விசாலமான, தீப்பாதுகாப்புடன் கூடிய இருப்பிடத்தில் பராமரித்தால் வனத்துறை உதவியால் சிறப்பாக இருக்கும். அது சுப்புலெட்சுமிக்கு செய்யும் உண்மையான அஞ்சலியாக இருக்கும்.
சுப்புலெட்சுமியின் ஆத்மா சாந்தியடைய, அரசு நடவடிக்கை எடுக்குமா? என்பது இப்போதைய கோரிக்கை.






கருத்துகள்