திமுக அரசின் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வீட்டில் சோதனை நடக்கும் போதே மத்தியக் குற்றப் பிரிவுக் காவல்துறை அறிக்கையில்
சொல்லப்படுவது யாதெனில் “தனியார் பள்ளி நிர்வாகங்களிடம் நிரந்தர அங்கீகாரம் (Permanent Recognition), பள்ளி தர உயர்வு (Upgradation), DTCP அனுமதி மற்றும் இதர அரசு அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி பணம் வசூலித்து மோசடி செய்ததாக Federation of Associations of Private School In Tamil Nadu- இளங்கோவன் என்பவர் சென்னை பெருநகரக் காவல்துறை ஆணையாளரிடம் அளித்த புகாரில், சென்னை மத்தியக் குற்றப்பிரிவில் வழக்குப் பதிவு செய்ததில் தொடர்புடைய P.T.அரசகுமார் என்ற நபரை 27.06.2026 ஆம் தேதியன்று கைது செய்து நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டு,
பின் குண்டர் தடுப்புச் சட்டக் காவலில் வைக்கப்பட்டார். மேலும், இவ்வழக்கில் தொடர்புடைய 2 நபர்கள் கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டனர். இவ்வழக்கு தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு காவல்துறைக் குழுவினர் தமிழ்நாடு முழுவதும் விரிவான முறையில் விசாரணை மேற்கொண்டு, இதுவரை, 250-க்கும் மேற்பட்ட நபர்களிடம் விசாரணை செய்யப்பட்டு, மாநில பள்ளிக் கல்வித்துறை மற்றும் பல்வேறு அலுவலகங்களைச் சேர்ந்த பல அரசு அலுவலர்களையுமா விசாரணை செய்து, அதன் தொடர்புடைய அரசு அலுவலகம் சம்பந்தப்பட்ட ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. இதுவரை, 177 பணம் லஞ்சம் கொடுத்து பாதிக்கப்பட்ட தனியார் பள்ளிகளிடம் பல கோடி ரூபாய் தொகை லஞ்சமாக வசூலிக்கப்பட்டு நம்பிக்கை மோசடி செய்ததாக முதற்கட்டமாக தெரியவந்தது. (ஆக இதில் இருவரும் குற்றவாளிகளே!) மேலும் புகார்கள் தொடர்ந்து பெறப்பட்டு, நிதி மோசடி தொடர்பான விசாரணையின் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் மற்றும் தொடர்புடைய நபர்களின் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்குகள் கண்டறியப்பட்டு முடக்கப்பட்டுள்ளன.
இவற்றில் A1 நபர் ஆன பி. பி.டி.அரசகுமார் மற்றும் அவரது குடும்பத்தினர் தொடர்புடைய 20 வங்கிக் கணக்குகள் மற்றும் A2 நபரான தலைமறைவுக் குற்றம் சட்டப்பட்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முத்துக்குமாருடன் தொடர்புடைய 29 வங்கிக் கணக்குகளில் நிதிப் பரிவர்த்தனைகள் அதன் தொடர்பான சரிபார்ப்பு விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், அவர்களது குடியிருப்புகள், அலுவலகங்கள், பள்ளி வளாகங்கள் மற்றும் பள்ளிக் கல்வித்துறை இயக்குநரகம் அமைந்துள்ள DPI வளாகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பல கட்டங்களாக மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் போது, குற்றச்செயலுடன் தொடர்புடைய ஆவணங்கள், தனியார் பள்ளிகள் தொடர்பான பதிவுகள், அரசு அலுவலகங்களுக்கு அளிக்கப்பட்ட மனுக்கள் மற்றும் பிரதிநிதித்துவ ஆவணங்கள், நிதி தொடர்பான பதிவுகள், கைபேசிகள், கணினிகள், ஹார்டு டிஸ்க்குகள் மற்றும் இதர டிஜிட்டல் மற்றும் மின்னணு ஆதாரங்கள் விசாரணைக்காக கைப்பற்றப்பட்டு, தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட ஒவ்வொரு நபரின் பங்கு, நிதிப் பரிவர்த்தனைகள், ஆவணங்கள் மற்றும் டிஜிட்டல் ஆதாரங்களுக்கிடையிலான தொடர்புகள் ஆகியவை பெருமாநகர சென்னை காவல்துறையின் மத்திய குற்றப்பிரிவினால் சேகரிக்கப்பட்டுள்ள ஆதாரங்களின் அடிப்படையில் தொடர்ந்து விசாரணை செய்யப்பட்டு வருகின்றன.
இவ்வழக்கின் விசாரணையின் தொடர்ச்சியாக, சாட்சிகளின் வாக்கு மூலங்கள், ஆவணங்கள், மின்னணு ஆதாரங்கள் மற்றும் அரசு ஆவணங்களின் அடிப்படையில், அப்போதைய பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக இருந்த அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ஊழல் மற்றும் நம்பிக்கை மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டு, இவர் மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அவருக்கு சொந்தமாக சென்னை மற்றும் திருச்சிராப்பள்ளியிலுள்ள மொத்தம் 4 இடங்களிலும், இவரது உதவியாளரான வாலாடி கார்த்திக் என்பவருக்குச் சொந்தமான சென்னை மற்றும் திருச்சிராப்பள்ளி ஆகிய 2 இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது” என விரிவான அறிக்கையை வெளியிட்டுள்ளார்கள்.. தனியார் பள்ளி நிர்வாகங்களிடம் அரசு அனுமதி பெற்று தருவதாக மோசடி - மத்திய குற்றப்பிரிவு குழுவினர் அதிரடி சோதனை என்பது
தனியார் பள்ளி நிர்வாகங்களுக்கு அரசு அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி பணம் பெற்று மோசடி செய்த வழக்கில், இதுவரை 3 நபர்கள் கைது செய்யப்பட்டு, மத்திய குற்றப்பிரிவு காவல் குழுவினரால் தமிழ்நாடு முழுவதும் விரிவான விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில் லஞ்சம் கொடுத்து அனுமதி வாங்க முயன்ற நபரும் லஞ்சம் பெற்ற இடைத்தரகர் மற்றும் வாங்கி அனுமதிக்கு உறுதியளித்த அமைச்சர் என அணைவருமே ஊழல் நபர்கள் தான் எல்லோர் மீதும் நடவடிக்கை பாய்ந்தால் அவர்களுக்கு ஜனநாயகத்தில் மக்களின் மீது பயம் வரும்,
இதுவரை 250-க்கும் மேற்பட்ட நபர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு, சாட்சிகளின் வாக்குமூலங்கள் மற்றும் ஆவணங்களின் அடிப்படையில், அப்போதைய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக,
தற்போது காவல்துறை தீவிரமாகத் தேடும் A2 முத்துக்குமார், அன்பில் மகேஷி பொய்யாமொழியின் பள்ளித் தோழர். 2011-ஆம் ஆண்டில் தேமுதிக வில் விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது இவர் விருத்தாசலம் தொகுதி தேமுதிக சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். பின் திமுகவில் சேர்ந்து அன்பில் மகேஷு பொய்யாமொழிக்கு மிகவும் நெருக்கமானவராக இருந்தார். பி.டி அரசகுமார் நடத்தி வந்த சங்கத்தின் பொருளாளராவார் இவரைப் பிடிக்க லுக் அவுட் நோட்டீஸும் வெளியிடட .மத்தியக் குற்றப்பிரிவு காவல்துறை, அன்பில் மகேஷ் பொய்யாமொழி வீட்டில் சோதனை நடக்கிறது காவல்துறை வட்டாரங்களில் விசாரித்த போது “பி. டி.அரசகுமாரைக் கைது செய்து குண்டாஸ் போட்டதால் ஜெயிலில் இருக்கும் அரசகுமார் ஏகப்பட்ட முறைகேடு விஷயங்களை வாக்குமூலமாகவே பதிவில் கொடுத்திருக்கிறார்.. அதில் தான் தனியார் பள்ளிகளடம்பணத்தை வசூலித்து அதை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முத்துக்குமார், அன்பில் மகேஷ் பொய்யாமொழி மனைவியிடம் கொடுத்துள்ளேன் என அரசகுமார் வாக்குமூலத்தில் சொல்லி இருக்கிறார் எனத் தகவல் ..இந்த வழக்கில் மிகவும் முக்கியமான நபர் முத்துக்குமார்.. இவரைக் கைது செய்ய லுக் அவுட் நோட்டஸ் கொடுத்து மும்பையில் பதுங்கி இருக்கிற உறுதியான தகவல் கிடைத்ததனால முத்துக்குமார் எந்த நேரத்திலும் கைது செய்யப்பட்டு சென்னைக்கு கொண்டுவரப்படுவார்.
முத்துக்குமாருக்கு எதிரான நடவடிக்கை துவங்கியதால் இப்போது அன்பில் மகேஷ் பொய்யாமொழி வீட்டுக்குள்ளும் சிசிபி- மத்தியக் குற்றப் பிரிவு காவல்துறை சோதனைக்குப் போன நிலையில் வழக்கில் முத்துக்குமார் தரப்போகும் வாக்குமூலங்கள் மிகவும் அதிர்ச்சியாகவே இருக்கும்” எனக் கூறும் அவர்கள் .அன்பில் மகேஷ் எந்த நேரத்திலும் கைது செய்யப்படுவாருன்னு தகவல் பரவுகிறது,







கருத்துகள்