முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மதுரை ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் மஹா கும்பாபிஷேக விழா கோலாகலம்

அகிலம் முழுதும் பிரசித்தி பெற்ற மதுரை ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் மஹா கும்பாபிஷேக விழா 17 ஆண்டுகளுக்குப் பிறகு கோலாகலமாக நடைபெற்றது.

விழாவில் அழைப்பிதழ் விநியோகம் தொடங்கி பக்தர்களுக்கான அனுமதி வரை பல்வேறு விவகாரங்களில் பக்தர்கள் ஆன்மீக அன்பர்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்பு எழுந்தது. குறிப்பாக கும்பாபிஷேகத்தில் அரசியல் வி.ஐ.பி. கலாச்சாரம் மற்றும் பொதுமக்கள், பக்தர்கள்,  அலைக்கழிக்கப்பட்ட விவகாரம் கடும் விமர்சனத்தைக் கிளப்பியுள்ளது. பொதுமக்களை உள்ளே செல்ல முடியாமல் தடுத்ததும், புனித நீருக்கு பதிலாகக் குடிநீரைக் காவலர்கள் மூலம் தெளித்தது பாதைகளை முழுமையாக அடைத்தது, அனுமதிச்சீட்டுகளை கட்சிக்காரர்களுக்கு அதிகமாக வழங்கியது ஆன்மீக அரசியல் கட்சியின் தலைவர்கள் உதாசீனப் படுத்திய நிகழ்வு மற்றும் ஆன்மீக நம்பிக்கை இல்லாத பல நாத்தீகவாதிகளை அனுமதித்தது, கோவி அறங்காவலர்களை புறக்கணித்தது என அடுக்கடுக்கான புகார்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.இது குறித்து முன்னாள் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தனது முகநூல் பதிவில், இந்தக் குளறுபடிகளுக்குத் தமிழக வெற்றிக் கழக அரசே முக்கியக் காரணம் எனக் குற்றம் சாட்டியுள்ளார்.



அவர் தனது முகநூல் பதிவில், “இன்றைய முழு கும்பாபிஷேக விழாவும், அறங்காவலர்களின் எந்தவொரு ஆலோசனையையும் கருத்தில் கொள்ளாமல், தற்போதைய தவெக அரசின் அறநிலையத்துறை அதிகாரிகளால் நேரடியாக நடத்தப்பட்டுள்ளது. இது தமிழ்நாடு இந்து சமய அறநிலையச் சட்டங்கள் மற்றும் விதிகளுக்கும், சென்னை உயர்நீதிமன்றத்தின் பல தீர்ப்புகளுக்கும் முற்றிலும் முரணாகச் செய்யப்பட்டுள்ளது.மேலும் இன்று நடந்த கும்பாபிஷேக நிகழ்வில் பங்கேற்க போதிய அனுமதி மற்றும் வசதிகள் கிடைக்கவில்லை என பக்தர்கள் பலர் வருத்தம் தெரிவிக்கும் பல சமூக ஊடகப் பதிவுகள் இன்று காலை எனக்கு வந்துள்ளன. பொதுவாக இதுபோன்ற நிகழ்ச்சிகளில் சில குறைகள் எந்த ஆட்சியிலும் நடந்திருக்கக் கூடியது தான். ஆனால் இன்றைய பிரச்சினைக்கு முக்கியக் காரணம், முந்தைய நிகழ்வுகளில் அனுபவமுள்ள அறங்காவலர்களைத் திட்டமிடலில் இருந்து முற்றிலுமாக ஒதுக்கி வைத்ததே ஆகும். இதுபோன்ற நிகழ்வுகளில் முன்அனுபவம் இல்லாத அதிகாரிகளைக் கொண்டு விழாவை நடத்த ஏற்பாடுகளைச் செய்துள்ளனர். அதனால் இன்று பக்தர்களின் குறைபாடுகளுக்குத் தற்போதைய அரசே முழுப் பொறுப்பேற்க வேண்டும்.






அதேவேளையில், இன்று கும்பாபிஷேகம் நடந்த மீனாட்சி அம்மன் கோயிலில் தீ விபத்தால் சேதமடைந்த வீர வசந்தராயர் மண்டபத்தைச் சீரமைத்தது உட்பட -இந்தத் தனித்துவமான திருப்பணிகளைச் செய்ய கடந்த மூன்று ஆண்டுகளாக எடுக்கப்பட்ட 95 சதவீதத்திற்கும் அதிகமான மாபெரும் முயற்சிகள், 2021 முதல் 2026 வரையிலான முந்தைய ஆட்சிக் காலத்தில்தான் மேற்கொள்ளப்பட்டன என்பதையும் நான் சுட்டிக்காட்டக் கடமைப்பட்டுள்ளேன்" எனத் தெரிவித்துள்ளார். அந்தவகையில்  கடந்த ஆட்சிக் காலத்தில் 95 சதவீதப் பணிகள் முடிவடைந்திருந்த நிலையில், அனுபவம் மிக்க அறங்காவலர்களைத் திட்டமிடலில் இருந்து முற்றிலுமாக ஒதுக்கி வைத்ததே இன்றைய குளறுபடிகளுக்கு முக்கியக் காரணம் என்று பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் கூறியிருப்பது கவனம் ஈர்த்துள்ளது. பக்தர்களால் கோபுரத்தைக் கூட காண முடியவில்லை என்றால், இது யாருக்கான கும்பாபிஷேக விழா? மக்களுக்கானதா? அல்லது, இந்த அமைச்சரின் உற்றார் உறவினர் மற்றும் சுற்றத்துக்காருக்கானதா? VIP முறை இல்லை என்று சொல்லும் ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர், ② L VIPs மட்டும் வழி உள்ள கும்பாபிஷேக விழாவை என்னவென்று சொல்வார்?எதிர்பார்த்ததை விட குறைந்த அளவில் பக்தர்கள் வந்ததும், மிக அடிப்படையான விஷயங்களைக் கூட செய்து வைக்க இயலாத நிலையில் தான் இந்த அரசு இருக்கிறது என்பதை மக்களே தெரிவித்துவிட்டார்கள்.



இப்படி ஒரு அலங்கோலத்தை அரங்கேற்றிவிட்டு, அதனை சாதனையாக பேசுவதற்கு அமைச்சருக்கு கொஞ்சம் கூட வெட்கமாக இல்லையா? நீங்கள் ஆச்சரியக்குறிகளாக இருப்பதற்காக எதற்காக பக்தர்கள் பாதிக்கப்பட வேண்டும்?“மதுரை மீனாக்ஷி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்” :- அதிகாரிகள் செய்ய வேண்டிய வேலையை அமைச்சர்கள் செய்ய வேண்டிய அவசியமில்லை. அறங்காவலர்களின் உரிமைகளை அமைச்சர்கள் தட்டிப் பறிக்க கூடாது. ஹிந்து அறநிலையத்துறை என்பது கோவில்களின் நிர்வாகம் செயலிழந்தால், அதை சரி செய்ய வேண்டிய கண்காணிப்பு அமைப்பேயன்றி நிர்வாகத்தை தனதாக்கிக் கொள்ளும் உரிமையாளர்கள் அதிகாரம் கிடையாது. என பாஜகவின் மூத்த தலைவர்கள் கூறுகிற நிலை 

‘அரசே ஆலயத்தை விட்டு வெளியேறு’  என அதன் மாநில செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி கூறியுள்ளார்,  இந்திய அரசியலமைப்புச் சட்டம் (பிரிவுகள் 25 மற்றும் 26) வழங்கும் மத சுதந்திரத்தின்படி, அரசாங்கம் கோயில்களின் 'மதச்சார்பற்ற' நிர்வாகப் பணிகளை (Secular Administration) மட்டுமே ஒழுங்குபடுத்த முடியும்; ஆன்மீக மற்றும் வழிபாட்டு உரிமைகளில் நேரடியாகத் தலையிட முடியாது.எனவே, ஹிந்து சமய அறநிலையத்துறை என்பது ஆலயங்களின் சொத்துக்களைப் பாதுகாக்கும் ஒரு காவலனாக (Trustee மற்றும் Custodian) ஆக இருக்க வேண்டுமே தவிர, அதிலிருந்து அரசு வருமானம் ஈட்ட முற்படக் கூடாது என்ற சட்ட வல்லுநர்களின் கருத்து சட்டப்படியும், நீதிமன்றத் தீர்ப்புகளின்படியும் முற்றிலும் உண்மையானதாகும்.தமிழ்நாடு ஹிந்து சமய அறநிலையத்துறை (HR&CE) சட்டம், 1959 ன் முதன்மையான நோக்கம் கோயில்களைப் பாதுகாப்பதும், அவற்றின் நிர்வாகத்தை முறைப்படுத்துவதும், கோயில் சொத்துக்கள் மற்றும் வருவாயைத் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுப்பதும் ஆகும். இது அரசு வருவாய் ஈட்டுவதற்கான ஒரு வழிமுறை அல்ல.இந்தச் சட்டத்தின் முக்கிய அம்சங்கள் மற்றும் நீதிமன்றத் தீர்ப்புகளின்படி இதன் செயல்பாடுகள்: நிர்வாக முறைப்படுத்தல் மட்டுமே, உரிமை அல்ல, இத்துறை கோயில்களின் அன்றாட நிர்வாகம், கணக்கு வழக்குகளைப் பராமரித்தல் மற்றும் கோயில் நிலங்களைப் பாதுகாக்கும் பணிகளை மட்டுமே செய்கிறது.




கோயிலோ அல்லது அதன் சொத்துக்களோ அரசுக்குச் சொந்தமானவை அல்ல; அவை அந்தந்தக் கோயில் தெய்வங்களுக்கே (Deity) தேவஸ்தானத்திற்குச் சொந்தமானவை. கோயில் வருவாய் கோயிலுக்கே கோயில்கள் மூலம் பெறப்படும் உண்டியல் காணிக்கை, இதர கட்டணங்கள், மற்றும் நில வாடகை ஏலம், குத்தகை போன்ற அனைத்து வருவாய்களும் அந்தந்தக் கோயில்களின் வங்கிக் கணக்குகளிலேயே வைக்கப்படுகின்றன.இந்த நிதி, கோயிலின் தினசரி வழிபாடுகள், திருவிழாக்கள், திருப்பணிகள் (புனரமைத்தல்), மற்றும் ஊழியர்களின் ஊதியத்திற்கு மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.ஒரு கோயிலின் உபரி நிதியை, அரசின் பொதுவான திட்டங்களுக்கோ அல்லது வேறு மதப் பணிகளுக்கோ பயன்படுத்தச் சட்டத்தில் இடமில்லை. (இருப்பினும், நிதியற்ற பிற ஏழைகளின் ஹிந்துக் கோயில்களின் திருப்பணிகளுக்குச் சட்ட விதிமுறைகளின்படி உதவ முடியும்).







நிர்வாகக் கட்டணம் (Administrative Fee) கோயில்களை நிர்வகிக்கும் ஊழியர்களின் ஊதியம் மற்றும் நிர்வாகச் செலவுகளுக்காக, கோயிலின் மொத்த வருவாயில் ஒரு குறிப்பிட்ட சிறிய சதவீதம் (சட்டப்படி அதிகபட்சம் 12 சதவீதம் வரை) நிர்வாகக் கட்டணமாகத் துறைக்குச் செலுத்தப்படுகிறது. இது அரசிடமிருந்து தனியாக நிதி பெறாமல், நிர்வாகத்தைச் சுயமாக நடத்த மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. இந்திய உச்ச நீதிமன்றம் மற்றும் சென்னை உயர் நீதிமன்றம் பல்வேறு தீர்ப்புகளில், "அரசு ஒரு தர்மகர்த்தாவைப் போல (Trustee) கோயிலைப் பராமரிக்க வேண்டுமே தவிர, அதன் வருவாயை அரசுப் பணிகளுக்கோ அல்லது மதச்சார்பற்ற காரியங்களுக்கோ பயன்படுத்தக் கூடாது" என்று தெளிவுபடுத்தியுள்ளன.சுருக்கமாகக் கூறின், இந்தச் சட்டம் கோயில்களின் வழிபாட்டு மரபுகளைக் காக்கவும், சொத்துக்கள் ஆக்கிரமிக்கப்படுவதைத் தடுக்கவும் உருவாக்கப்பட்ட ஒரு பாதுகாப்பு அரணாகும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பாண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார்கள் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும்   இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதம்  ஐந்தாம் தேதியில் துவக்கம். ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, சன்னதிகளில் வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்றிரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...