முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பாஜகவிலிருந்து கருப்பு முருகானந்தம் நீக்கம் கட்சிக்கு இழப்பு தொண்டர்கள் வருத்தம்,

பாஜகவின் மாநிலப் பொதுச்செயலாளரும் காவிரி டெல்டா பகுதி மாவட்டங்களின் பொறுப்பாளருமான முத்துப்பேட்டை கருப்பு முருகானந்தம் செயல்பட்டு வந்தார்.


சங்கப்பணி, கட்சிப்பணி என நாகபடடினம், திருவாரூர், தஞ்சாவூர் மயிலாடுதுறை, திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை என மணடலத்தின் பாஜகவை நீண்ட காலம் வழிநடத்தும் தலைவராகவே அகமுடையார் தேவர் சமூகத்தின் பாஜக முகமாக விளங்கினார் கர்நாடகாவிலிருந்து தமிழ்நாட்டிற்கு வந்த பாரதிய ஜனதா கட்சியின் பெண் ஒருவர் 2024-ஆம் ஆண்டு முதல் திருச்சிராப்பள்ளியில் வசித்து வருகிறார். இந்த நிலையில், பா.ஜ.க மாநிலப் பொதுச் செயலாளர் கருப்பு எம்.முருகானந்தம் தன்னை உடல் ரீதியாக தாக்கியதாகவும், மனரீதியாக துன்புறுத்தியதாகவும், தனது மிரட்டல் விடுவதாகவும் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்குமாறும் கோரி கட்சியின் தேசியத் தலைமையிடம் புகார் அளித்துள்ளார். கட்சியில் ஏற்கனவே இருந்த ஆளுமை நிறைந்த ஒரு தலைவர் கரு. நாகராஜன் சிவகங்கை மாவட்டம் சென்னையில் வசித்தவர் இதே போல ஒரு குற்றச்சாட்டு காரணமாக வெளியறறப்பட்டு, தற்போது வி த லீடர்ஸ் அமைப்பின் பொதுச்செயலாளர் ஆகச் செயல்படுகிறார்,

 







தற்போது 
அதே சமயம் கருப்பு முருகானந்தம் மீதான புகாரில் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், விசாரணை முடியும் வரை கருப்பு எம் முருகானந்தத்தை இடைநீக்கம் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி, பா.ஜ.க கட்சியின் தேசியத் தலைவர் நிதின் நபின், தேசியப் பொதுச் செயலாளர் (அமைப்பு) பி.எல். சந்தோஷ், மாநிலப் பொறுப்பாளர் அரவிந்த் மேனன், மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் பிற மூத்த தலைவர்களிடம் அதிகாரப்பூர்வமான புகாரை அளித்ததாக கூறப்படுகிறது. அதன் நகலும் வெளிவந்த நிலையில் இந்நிலையில் கருப்பு முருகானந்தம் கட்சிப் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து பாஜக மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொதுச் செயலாளர் M.முருகானந்தம் கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்ததால் கட்சியின் பொறுப்பில் இருந்து உடனடியாக விடுவிக்கப்படுகிறார்” என தெரிவித்துள்ளார்.


கர்நாடகாவிலிருந்து திருச்சிராப்பள்ளிக்கு மாறிய பயணம் அது, 

கட்சியின் தேசியத் தலைவர்கள் மற்றும் மாநிலப் பொறுப்பாளர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள அந்த புகார் கடிதத்தில், டாக்டர் திவ்யா சேஷாத்ரி தனது அரசியல் மற்றும் தனிப்பட்ட பின்னணி குறித்து விரிவாகவே குறிப்பிட்டுள்ளார்:

 இவர் ஏற்கனவே கர்நாடக மாநில பாஜகவில் பிற்படுத்தப்பட்டோர் பிரிவின் செயலாளராகப் பொறுப்பு வகித்து வந்துள்ளார்.


 இரண்டு மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்குத் தாயாக இருக்கும் அவர், தனது குடும்பச் சூழல் காரணமாகவும் அரசியல் ரீதியான தொடர்பு காரணமாகவும் கருப்பு முருகானந்தத்தின் மீது தீவிர நம்பிக்கை வைத்திருந்துளதாகவும் திவ்யா சேஷாத்ரியைத் திருமணம் செய்துகொள்வதாகக் கருப்பு முருகானந்தம் உறுதி அளித்துள்ளதாகவம் அத்துடன், குழந்தைகள் படிக்கும் பள்ளி ஆவணங்களில் தனது பெயரைப் பாதுகாவலராகப் (Guardian) பதிவு செய்ததுடன், குழந்தைகளையும் தன்னை 'டாடி' என்று அழைக்க வைத்துள்ளார். எனவும்,  2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வாங்கித் தருவதாகவும் அவர் உறுதியளித்ததாகக் கூறப்படுகிறது.




இந்த வாக்குறுதிகளை முழுமையாக நம்பிய திவ்யா சேஷாத்ரி, கர்நாடக மாநிலத்தில் தனக்கு இருந்த மரியாதைக்குரிய கட்சிப் பொறுப்பையும் பெங்களூருவில் இருந்த இல்லத்தையும் விட்டு விலகி, 2024-ஆம் ஆண்டு முதல் திருச்சிராப்பள்ளியில் குடியேறி வசித்து வருவதாகவும் பேசப்படும் நிலையில்,  பாஜகவின் நல்ல ஆளுமைகளை வெளியேற்ற சிலர் காரணமானால் அது பாஜவுக்கே இழப்பு,


தற்போது பாஜகாவில் உள்ள தேத்தாகுடி ஜீவஜோதி, தூத்துக்குடி சசிக்கலாபுஷ்பா, மதுரை கரகாட்டம் பரமேஸ்வரி ஆகியோரை வைத்து கொள்கை சார்ந்த கட்சி முடிவுகள் சாத்தியமா என்பதே பாஜகவின் நீண்ட கால உண்மைத் தொண்டர்களைச் சிந்திக்க வைத்துள்ளது,  கருப்பு முருகானந்தம் தற்போது வேறு அரசியல் நகர்வுக்கு தயாராகவே இந்தப் புகார் மூலம் வெளியேற்றப்பட்டதாவே மக்கள் மத்தியில் பேச்சாகும், அவர் புகார் அளித்த நபரின் மீது உண்மைத்தனமை குறித்து பலமான விசாரணை நடத்த வேணடிய நிலைமை தான் சரியான தீர்வு, 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பாண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார்கள் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும்   இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதம்  ஐந்தாம் தேதியில் துவக்கம். ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, சன்னதிகளில் வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்றிரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...